*நாமும் நமது கர்மாவும்*
இப்பிறவியினுடைய நோக்கம் என்ன?
இந்து தர்ம சாஸ்திரத்தில் *கர்மாவுக்கு* பிரதான இடம் உண்டு.
அந்த வகையில் முன் ஜென்மத்தில் நாம் அனுபவித்த பாக்கியுள்ள செயல்பாடுகளை மீண்டும் செய்து முடிப்பதற்காக கொடுக்கப்பட்ட இந்த பிறவியில் நமது கர்மா என்பது என்ன? நமது இப்பிறவியினுடைய நோக்கம் என்ன? என்பதை எடுத்துக்காட்டுவது ஒன்பது கோள்களிலே ராகுவும் கேதுவும் முதன்மை இடத்தை வகிக்கின்றன.
அதனை எப்படி நாம் தெரிந்து கொள்வது? என்பது தான் இந்த பதிவு.
*ராகு*
இப்பிறவியில் அனுபவிக்க
வேண்டிய செயல்களை உணர்த்துவது.
நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த பிறவியில் ஜாதகர் அனுபவிக்க உள்ளார்.
ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் அது சம்பந்தப்பட்ட விஷயம் எவ்வளவு கொடுத்தாலும் அந்த ஆசை தீராது.
*கேது*
இப்பிறவியில்
செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவது.
💐கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம்.
நன்றி
*ரிஷி*
No comments:
Post a Comment