Tuesday, February 27, 2024

ராகுவிற்கும் கேதுவிற்கும் என்ன வித்தியாசம்?

 ராகுவிற்கும் கேதுவிற்கும் 

என்ன வித்தியாசம்? 

யார் கெட்டவர்.?

யார் நல்லவர்.?



ராகு கேது பல வேறுபாடுகளை கொண்ட ஒரே உடலைக் கொண்ட இரு வேறு கிரகம் என்றாலும்....

ராகு கேதுவின் இடையே

ஒரே ஒரு ஒற்றுமை  உள்ளது,...

பாவ கிரகங்களான இருவரும் வக்கிரகதியிலேயே இயங்கும்.

ராகு கிழக்கு முனை என்றால் 

கேது மேற்கு முனையாக

ஒன்றுக்கொன்று எதிரானவையாகவே இயங்கும்.


எனவே, 


ராகு சாதகமாக இருந்தால், 

கேது பாதகமானதாகவும்.


கேது சாதகமாக இருந்தால், 

ராகு தீங்காகவும் மாறிவிடுவார்கள்.


உதாரணமாக.....


ராகு 3, 6 , 11வது வீட்டில் நன்மை தருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த வீடுகளில் ராகு இருக்கும்போதெல்லாம் கேது தானாகவே தோஷம் அடைவார்

அதாவது தீங்கை விளைவிப்பார்.


உதாரணமாக-:


ராகு 3ம் வீட்டில் இருந்தால் கேது தானாகவே 9ம் வீட்டில் இருக்கும். 


3 ஆம் வீட்டில் ராகு சாதனை மற்றும் தைரியத்திற்கு நல்லது தான்...

ஆனால்.....

பாக்கியஸ்தனமான ஒன்பதாம் வீட்டில் அமரும் கேதுவினால் ஜாதகருக்கு கிடைக்கக்கூடிய பாக்கியங்கள் அதிர்ஷ்டத்திற்கு கொடுப்பினைகளுக்கு

நல்லதல்ல.


மேலும் உதாரணமாக...

ருன ரோக சத்ரு ஸ்தானம் எனும்

6 ஆம் வீட்டில் ராகு இருந்தால்

கடன் நோய் எதிரியை வெல்வார் எனவும் ஆகவே இது நல்லதுதான் என உறுதியாக சொன்னாலும்


ராகு சுப பலத்துடன் இல்லையெனில்..


12 இல் இருக்கும் கேதுவினால்

கடன் நோய் எதிரிகளால்

சட்ட சிக்கல்கள், இடைவிடாத கவலைகள், சக்திவாய்ந்த எதிரிகள்   

கொடுக்கும் துன்பத்தினால் ஜாதகருக்கு அதீத தீங்குகளை விளைவிக்கும்.


இதேபோல...................!!!!!

11 ஆம் வீட்டில் ராகு பணம் சம்பாதிப்பதற்கு நல்லது, 

ஆனால்....

பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் கேது இருப்பது..

பூர்விகம்,உறவுகள், கல்வி,வாரிசுகள், போன்ற விஷயங்களுக்கு நல்லதல்ல.


மேலும், 

ஜாதகத்தில்...

கேது எங்கு அமர்ந்தாலும், 

முந்தைய பிறவியில் பூர்வீகத்திலுல்ல 

வீடு, சுகம் சார்ந்த விஷயங்கள் ஜாதகர் வாழ்ந்த வாழ்க்கையை குறிக்கிறது..


மேலும்,

ஜாதகத்தில்...

ராகு எங்கு அமர்ந்திருந்தாலும், 

அது,,, இந்த பிறவியில் அவர் வசிக்க வேண்டிய , அடைய வேண்டிய

வாழ்க்கை விஷயங்களை குறிக்கிறது. 


பொதுவாக..

இவை இரண்டும்...

மிகவும் சக்தி மிகுந்த 

நிழல் கிரகங்களாக இருந்தாலும்..

இதன் மூலம்....

ஒருவருடைய ஜாதகத்தில்

கர்மாவின் முக்கிய தாக்கத்தையும்

அதன் மூலம் இவர்களின் அளப்பரிய சக்தியையும் காணமுடியும்.


மேலும்...

ராகுவிற்கும் கேதுவிற்கும் உள்ள இன்னும் ஒரு வித்தியாசம்

கேது சட்டப்பூர்வ வழியில் செல்வத்தையும் வெற்றியையும் தருகிறார்.

ராகு தருவது சட்டவிரோதமாகவும் நியாயமற்றதாகவும் இருக்கலாம்.

மேலும் இவை முற்றிலும்

காரகத்துவ ரீதியாக சொல்லப்படுபவை.


இதற்குக் காரணம்...

கேது கொடுத்தால் செவ்வாய் போல வேகமாக கொடுப்பார்.

கேது கெடுத்தால் குருவைப் போல பக்குவமாக புரிய வைத்து ஞானத்தை கொடுத்து தண்டிப்பார்.


ராகு தண்டித்தால் சனியைப் போல

குரூரமாக தண்டிப்பார்.

ராகு கொடுத்தால் சுகபோக வாழ்வை அள்ளித் தருவார்.


இன்னும் ஒரு வகையில் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால்..


கேது கெடுத்தால் ஞானமாவது மிஞ்சும்

ராகு கெடுத்தால் கோவனமும் மிஞ்சாது.

எனவே, 

ஒரு ஜாதகத்தில்

குரு வலுவாக இருந்தால், கேதுவின் பலன்கள் சாதகமாகவும், 

சனி வலுவாக இருந்தால் ராகுவின் பலன்கள் சாதகமாக இருக்கும்.

____________________________________________

உங்கள்

ஜாதகத்தில் உள்ள கிரக அடைவு யோகம், நடப்பு தசா புக்தி பலன்.

விசேஷ வழிபாடு,பரிகாரங்கள் போன்ற

உங்கள் ஜாதக 

நிலைப்பாட்டை அறிய 

ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட மையம் பொள்ளாச்சி 

99657 28932 & 94437 28932

Saturday, February 24, 2024

*சுபிட்சமான வாழ்க்கை யாருக்கு அமையும்?*

 *சுபிட்சமான வாழ்க்கை யாருக்கு அமையும்?* 



ஒருவரது ஜாதகத்தில்,

1, 5, 9 க்குடைய  கிரகங்கள்...அசுபர் சோ்க்கை இல்லாமல்.

மறைவு பெறாமல்.

நீச்சம் அடையாமல்.

வக்ரம் அடையாமல்.

அஸ்தங்கம் ஆகாமல்..

கிரகணம் அடையாமல்.!!


ஆட்சியாக சுப பலத்தோடு இருந்தால்.?


குலதெய்வ அருள்.

முன்னோர்கள் ஆசிர்வாதம்.

குடும்பத்தினருடைய ஆதரவு.

உறவினர்களுடைய ஆதரவு.

போன்றவை.,

இருக்கும் என்பதனால்

இவருடைய வாழ்வு 

லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

தெய்வ அருள் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் என்பதனால்

எந்த ஒரு விஷயத்திற்கும்

பெரிய அளவில் முயற்சி செய்யாமலேயே சகல விஷயங்களிலும் 

வெற்றிகளும்

அதன் மூலம் சௌபாக்கியங்களும் கிடைக்கும்.


1,5,9 க்குடைய கிரகங்களில்  ஏதாவது ஒரு கிரகமாவது 

சுப பலத்தோடு 

ஆட்சி ,உச்சம், நட்பு போன்ற வலுவான நிலைகளில் 

அல்லது 

சுப பாவகத்தில் ,

சுபா் பாா்வையில் அமா்ந்திட ஜாதகருடைய வாழ்க்கைக்கு தேவையான நடுத்தரமான வசதிகளையாவது செய்து கொடுத்திடும்.

Thursday, February 22, 2024

நாமும் நமது கர்மாவும்* இப்பிறவியினுடைய நோக்கம் என்ன?

 *நாமும் நமது கர்மாவும்* 

இப்பிறவியினுடைய நோக்கம் என்ன?

இந்து தர்ம சாஸ்திரத்தில் *கர்மாவுக்கு* பிரதான இடம் உண்டு.

அந்த வகையில் முன் ஜென்மத்தில் நாம் அனுபவித்த பாக்கியுள்ள செயல்பாடுகளை மீண்டும் செய்து முடிப்பதற்காக கொடுக்கப்பட்ட இந்த பிறவியில் நமது கர்மா என்பது என்ன? நமது இப்பிறவியினுடைய நோக்கம் என்ன? என்பதை எடுத்துக்காட்டுவது ஒன்பது கோள்களிலே ராகுவும் கேதுவும் முதன்மை இடத்தை வகிக்கின்றன.

அதனை எப்படி நாம் தெரிந்து கொள்வது? என்பது தான் இந்த பதிவு.



 *ராகு* 

இப்பிறவியில் அனுபவிக்க 

 வேண்டிய செயல்களை உணர்த்துவது.


நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த பிறவியில் ஜாதகர் அனுபவிக்க உள்ளார்.


ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் அது சம்பந்தப்பட்ட விஷயம் எவ்வளவு கொடுத்தாலும் அந்த ஆசை தீராது.



 *கேது* 

இப்பிறவியில்

செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவது.


💐கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில்  கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம்.


நன்றி

 *ரிஷி*

Monday, February 19, 2024

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

 ஜோதிடப்படி ,உங்கள் குழந்தைகள், 10வது படித்து முடித்தவுடன்,படிப்பில் *எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் எதிர்காலம்  பிரகாசமாக அமையும் ?* 


(ஜோதிட ரீதியான வழிகாட்டல்.)



 பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கிவிட்டன.


 மேற்படிப்பை தேர்ந்தெடுக்க கூடிய அமைப்பை, பத்தாம் வகுப்பில் மதிப்பெண்ணே தீர்மானிக்கும்.


 எல்லோரும் டாக்டராக வேண்டும் ,இன்ஜினியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், எல்லோருக்கும், அந்தப் பிராப்தம் கிடைக்குமா? என்றால் இல்லை என்பது தான் உண்மை.


 பத்தாவது படிக்கும் காலத்திற்கு முன்பாகவே, ஒரு குழந்தை எந்த துறையில் , ஈடுபாட்டுடன் படிக்கிறது என்பதை ஆராய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.


 கணிதமே வராத மாணவரை இன்ஜினியராக சொல்வதும், அறிவியலே வராத மாணவரை டாக்டராக சொல்வதும் கொடுமைதான்.


சரி,


 லக்ன, ராசிகளுக்கு  சில பொது பண்புகள் உண்டு. அந்த பொது பண்புகள்  ஜாதகருக்கு தூக்கலாக இருக்கும்.


 புதனின் லக்ன,ராசிகளான *மிதுனம் ,கன்னி லக்கனங்களுக்கு* பத்தாம் இடத்தோடு, புதன் தொடர்பு கொள்ளும் போது ,கணிதத் துறை கம்ப்யூட்டர் அறிவியல், எழுத்துத் துறை, அக்கவுண்டண்ட் சார்ந்த துறைகள் ,ஆடிட்டிங் துறை சிறப்பான அளவில் வளர்ச்சியை தரும்.


 *மேஷ, விருச்சிக லக்ன* ராசி காரர்களுக்கு, மருத்துவம், மருத்துவம்சார்ந்த துறைகள், சிவில் இன்ஜினியரிங் சார்ந்த துறைகள், கேட்டரிங்,போலிஸ், விவசாய படிப்புகளில்  அதிகமான ஈடுபாடு இருக்கும்.


 *கடக லக்ன ராசியை* பொருத்தவரை நீர் மேலாண்மை, மரைன் இன்ஜினியரிங், மீன்பிடித் தொழில்,ஆழ்கடல் ஆராய்ச்சி, இது சார்ந்த துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பது நல்லது.


 *சிம்ம லக்ன ராசியை* பொறுத்த வரை நிர்வாகத்துறை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.MBA , அரசியலமைப்பு சட்டம் சார்ந்த துறைகள்,  நிர்வாகப் படிப்புகள்  இவர்களுக்கு நல்ல ஏற்றத்தை தரும்.


 *ரிஷப, லக்ன ராசிகளை* பொருத்தவரை,fashion desining , சட்டப் படிப்புகள், அழகு கலை சார்ந்த படிப்புகள், சினிமாத்துறையில் போட்டோகிராபி , சைக்காலஜி துறைகள் இவர்களுக்கு ஏற்றமானதாக அமையும்.


 *தனுசு,மீன லக்னங்களை* பொறுத்தவரை, ஆடிட்டிங், லெக்சரர், ஆசிரியப்பணி வங்கிப் பணி நிதி நிறுவனம்,income tax சார்ந்த துறைகள், உபதேசம் செய்யக்கூடிய துறைகள் அனைத்தும் சிறப்பாக அமையும்.


 *மகர  கும்ப லக்னங்களை* பொறுத்தவரை மெக்கானிக்ல்,  பிரித்தெடுக்கும் எந்த உலோகம் மற்றும் திரவியத்துறைகளும்,

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், உடல் உழைப்பில் பிழைக்கக் கூடிய அனைத்து துறைகளும், இவர்களுக்கு ஏற்றமானதாக அமையும்.


 மேற்சொன்ன பலன்கள் பொதுப் பலனாக இருந்தாலும், மேற்சொன்ன லக்ன ராசிகளைப் பெற்றவர்களுக்கு அந்தத் துறைகளில் ஈடுபாடு அதிகமாகவே இருக்கும்..



 உதாரணமாக *விருச்சிக லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் திக்பலம் பெற்று தன்னுடைய நட்பு வீடான சூரியனுடைய வீட்டில் ,அமர்ந்து ,குரு பார்வையில் இருக்கும் பட்சத்தில், மருத்துவக் கனவு MBBS நனவாகும்.* 


 செவ்வாய் ஓரளவு வலு குறையும் பட்சத்தில், மருத்துவம் சார்ந்த துறைகளான பல் டாக்டர், பிசியோதெரபி, பார்மசி போன்றவை கைகூட பெறும்.அதை முன்னெடுப்பது நல்லது.


 *விருச்சிக லக்ன ராசி மாணவர்களை, புதன் எவ்விதத்திலும் வலுப்பறாத நிலையில், இன்ஜினியரிங் சேர்க்க முயற்சிப்பது மடமை.*

( மருத்துவக் கல்வியில், ஆர்வமில்லாத குழந்தையை, நீட் தேர்வுக்கு  முயற்சி செய்யத் சொல்வதெல்லாம் மடமை தான்.

காசுக்கு பிடித்த கேடு)


 இங்கு நாம் புரிந்து கொள்ளக் கூடிய  விஷயம்.


 *விருச்சிக லக்ன ராசிக்காரர்களுக்கு* டாக்டர் படிப்பு கிடைக்கவில்லை என்றால், அது சார்ந்த துறைகளை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பது தான் , படிப்பில் தடை இல்லாத அமைப்பை கொடுக்கும். படிப்பையும் எளிதாக படித்து முடிக்க இயலும்.


 இங்கு தொழில் ஸ்தான அமைப்புகளும், அப்போது நடக்கும் தசா புத்திகளும் கண்டிப்பாக ஆராயப்பட வேண்டும்.


 இயற்கையும், கடவுளும்  இங்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அமைப்பில், சில  ஆளுமைகளை கொடுத்தே  அனுப்பி வைக்கின்றன.


 அந்தத் துறையை நாம் தேர்ந்தெடுத்து  படித்து முன்னேறினால், அந்த துறையில் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.


 படிப்பது ஒரு துறையாக இருந்தாலும், ஜாதகத்தில் பத்தாம் அதிபதி சுப வலுடன் இருக்கும் பட்சத்தில், அந்தத் தொழில் ஜாதகருக்கு அமையும்.


 ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஓரளவு வலு குறையும் பட்சத்தில், தசாகளுக்ககு ஏற்றவாறு சிலருக்கு தொழில் அமையும்.


 இது அந்த ஜாதகத்தின் தனிப்பட்ட நிலை அறிந்து ஆராயப்பட வேண்டும்.


உனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக பணியாற்ற *வாழ்த்துக்கள்* 👍🤝💐

Tuesday, February 6, 2024

. 60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன

 _*60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா?*_



_சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம். 60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன அந்த வைபவத்தில் கலந்து கொள்வதன் அவசியம் என்ன_ 

 

_*அப்படிப் பட்டோர், தங்களுடைய பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடம் ஆசி வாங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் உறவினரின் திருமணத்திற்கே செல்ல தயங்குகின்றனர். அவர்கள் எப்படி 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்வார்கள்.*_


_ஒரு ஆணின் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாகச் சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என கண்டிருப்பார்கள். அவர்களின் ஆசி வாங்கும் போது நம் தலைமுறையும் செழிக்கும்_


_அப்படி திருமணத்தைச் செய்பவர்கள் ஆணின் தமிழ் பிறந்த தேதி  ஜென்ம நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டும்_ 


_*1.) 55ஆவது வயது ஆரம்பமாகும் போது பீம சாந்தி வைபவம் (Bhima Shanthi Vaibhavam)*_


_*2.) 60ஆவது வயது ஆரம்பமாகும் போது உக்ரரத சாந்தி வைபவம் (Ugra Ratha Shanthi Vaibhavam)*_


_*3.) 61ஆவது வயது ஆரம்பமாகும் போது ஷஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி வைபவம். (Sashtiapthapoorthi Vaibhavam)*_


_*4.) 70ஆவது வயது ஆரம்பமாகும் போது பீமரத சாந்தி வைபவம் (Bhima Ratha Shanthi Vaibhavam)*_


_*5.) 72ஆவது வயது ஆரம்பமாகும் போது ரத சாந்தி வைபவம் ( Ratha Shanthi Vaibhavam)*_


_*6.) 78ஆவது வயதில் ஆரம்பமாகும் போது விஜய சாந்தி வைபவம் (Vijaya Shanthi Vaibhavam)*_


_*7.) 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்ல நாளில் - சதாபிஷேகம் வைபவம் (Sathabhishekam Vaibhavam)*_


_*8.) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால் - ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) வைபவம் (kanakabhishekam Vaibhavam)*_


_*9.) 85ஆவது முதல் 90க்குள் - ம்ருத்யுஞ்ஜய சாந்தி வைபவம் (Mrutyunjaya Shanthi Vaibhavam)*_


_*10.) 100ஆவது வயதில் சுபதினத்தில் கொண்டாடப்படுவது பூர்ணாபிஷேகம் வைபவம் (poorabhishekam Vaibhavam)*_


_ஜென்ம நட்சத்திரத்தில் ஏன் கொண்டாட வேண்டும்?_

_ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் ஒவ்வொரு தனி குணம் உண்டு. ஒருவர் தன்னுடைய ஜென்ம நட்சத்திரத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினால், ஆத்ம காரகனான சூரிய பகவான், ஒருவரின் பிறந்த ஜாதக சூரியனைத் தொடுவதால், அவரின் ஆசி அந்த மாதம் முழுதும் கிடைக்கும்._


_*அதே போல் சந்திரன் ஜென்ம நட்சத்திரத்தில் நிற்கும். அதனால் அவரின் ஆசியும் கிடைக்கும். சூரியன் பித்ருகாரகனாகவும், சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருக்கின்றனர். நம் ஜென்ம நட்சத்திரத்தின் போது இருவரின் ஆசியும், நம் பெற்றோர்கள் நம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் குழந்தைக்கு கிடைக்கும். இதனால் அந்த குழந்தை நல்ல நிலையை அடைவான்.*_