Wednesday, August 23, 2023

*உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?*

 24-8-2023


 *உச்சம் பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்?* 


கீழே உள்ள அனைத்தும் பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க. உங்கள் ஜாதகத்தோடு இணைத்துப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.


1. ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் செல்வந்தர். மேன்மையான குணம் உடையவர். வீரம் மிக்கவர்.


2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால் நல்ல உணவு, உடை, ஆபர்ணங்களை உடையவராக இருப்பார்.


3.செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், பகட்டானவராக, வீரம் மிக்கவராக, வேறு ஊரில் வசிப்பவராக இருப்பார்.


4. புதன் உச்சம் பெற்று இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.


5.குரு உச்சம் பெற்று இருந்தால், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.


6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் உடையவராக இருப்பார்.


7. சனி உச்சம் பெற்று இருந்தால், அரசியலில் தலைமை பதவியும்,  அரசு கெளரவ பதவியும், தொழிலாளர்கள் தலைவராகவும் இருப்பார். மேலும் நாட்டில் விளையும் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களால் நன்மை பெறுபவராகவும் இருப்பார்.


என்றும் அன்புடன்

நிலவில் இந்தியா உதயம் 23/08/2023 புதன் கிழமை




 Chandrayan-3 successfully landed on moon. Congratulations and salute to the real heroes of our nation.



Thursday, August 17, 2023

*ரதி மன்மதன் யார்?*

 *ரதி மன்மதன் யார்?* 



எந்த ஒரு ஜாதகத்திலும் ஏழாம் பாவகமும் ,ஏழாம் பாவகத்து அதிபதியும் கெடாமல் இருந்து , உங்களுடைய லக்னத்திற்கு, திரிகோண லக்னமாக, மனைவி லக்னம் அமைந்து, சுக்கிரன் கெடாமல் நல்ல நிலையில் இருந்தால், *80 வயதிலும், 20 வயது இளைஞனை போல் காதல்  தன் துணை மீது இருக்கும்.* 


 சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில், கெடாமல் இருந்தாலே, காதல் ரசம்  ஊற்றெடுக்கும்.

Wednesday, August 16, 2023

யோகங்கள் _ ருச்சகா யோகம்!




Astrology யோகங்கள்

ருச்சகா யோகம்!

Ruchaga Yogam

----------------------------------

செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.

செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் 

உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்

கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

------------------------------------------------------

அகராதி பேர்வழி (புத்தி சிகாமணி!:)


”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”

“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

-------------------------------------------------------

என்ன பலன்?


ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்

----------------------------

அன்புடன்


Tuesday, August 15, 2023

*கிரக பரிகாரம்* புதன்


 *கிரக பரிகாரம்* 


 ஜாதகத்தில் ஒரு கிரகம் பலவீனமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு ஒருவருக்கு *படிப்பு* சரியாக வரவில்லை.


 ஜாதகத்தில் *புதன்* பலவீனமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். புதனின் காரகத்துவமான *பச்சைப்பயிறு* பாயாசம் வைத்து ஜாதகருக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும். 


நெற்றியில் ஒரு பச்சை பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். 


பச்சை ஆடைகளை உடுத்த வேண்டும். ரொம்பவும் பலவீனமாக இருந்தால் மேற்கண்டவற்றோடு புதனின் தசா ஆண்டுகளான 17.


 ஜாதகர் ஒரு குதிரைக்கு 17 வாரங்கள் புதன்கிழமை புதன் ஓரையில் அந்தக் குதிரை விரும்பி சாப்பிடும் பொருளை ஜாதகர் தன் கை தொட்டு கொடுக்க வேண்டும். 


இதுவே அந்த கிரகத்தைப் பலப்படுத்த பரிகாரம். இதேபோல் மற்ற கிரகங்களுக்கும் அதனை பலப்படுத்த அதன் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை புதனுக்கு கூறியது போல செய்ய வேண்டும்.

பாதபூஜை




 🕉 

*எதற்காக பாதபூஜை?*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பாதபூஜை*

*செய்யும்போது ஒருவரின் அனைத்து பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*அஸ்வ மேத யாகத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பித்ரு தோஷம் விலகும் என்பது ஐதீகமாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰


*மேலும், பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்ய பரிபூரண ஆசி கிட்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*யாருக்கு பாதபூஜை*

*பாத பூஜையானது பெற்றோர்கள், பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளவர்கள், குருக்கள், மகான்கள் ஆகியோருக்கு செய்யும் புண்ணிய செயலாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*வணங்கும் முறையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறுவார்கள்*

*அந்த வரிசையில் பெற்றோர்களுக்கு முதலில் பாதபூஜை செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*இன்றும் சிலர் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்வதை சம்பிரதாயமாக கொண்டுள்ளனர்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*பாதபூஜை செய்வது எப்படி*

*பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, ஆடி பௌர்ணமி (குரு பூர்ணிமா) போன்றவை பாத பூஜை செய்ய உகந்த நாட்களாக கூறப்படுகிறது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பாதபூஜை* *பெறுபவரின்* *கால்களை ஒரு* *தாம்பாளத்தில் வைத்து, மஞ்சள் நீரால் கால்களை கழுவி சந்தனம், குங்குமமிட்டு தூய பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பின்னர், தீபங்களால் ஆராதனை மீண்டும் சந்தனம், குங்குமம் வைத்து புஷ்பங்களால் ஆராதிக்க வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*அவர்களின் கால் அபிஷேக நீரை தலையில் தெளித்து கொண்டு எஞ்சிய நீரை யார் காலடியும் படாத ஓரிடத்தில் ஊற்றி விடுவது நல்லது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*பாதபூஜை பெறுபவர்* *மனமானது தூய* *உள்ளத்துடன் கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*முக்கிய குறிப்பு : நீங்கள் பாத பூஜை செய்பவரை கடவுளுக்கு நிகராக நினைக்கும் பட்சத்தில் பாத பூஜை செய்யலாம். அவ்வாறில்லையெனில், பாதபூஜை செய்வதைத் தவிர்ப்பது நல்லது*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Saturday, August 12, 2023

*ஜோதிடப் பார்வை* புதிர் முடிச்சும்* *முடிச்சவிழப்பும்*

 


12/08, 1:04 pm *ஜோதிடப் பார்வை* 

*மாத்தி யோசி*

*துப்பு துலக்குதல்* 


 *புதிர் முடிச்சும்*

*முடிச்சவிழப்பும்* 


 *நிகழ்வு* 

இரவு வேளை

ஒரு காட்டின் வழியே தாய் ஒருத்தி மிகுந்த பதற்றத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். அவருக்கு கிடைத்த செய்தி அப்படி.

 *தனது மகன் பலமாக தாக்கப்பட்டு இரத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுதான் செய்தி*


தாயின் மனம் தனது மகனை எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில் பரிதவிப்பு.


உடன் வந்தாரோ அறிமுகம் இல்லாதவர். தான் வழிமாறி அழைத்து செல்லப்படுவதாக உணர்கிறார்.


மனம் பரபரப்பு அடைகிறது.எப்படியோ அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு திக்கு தெரியாமல் ஓடுகிறார்.


நடுநிசி. 

அந்த இருட்டில் வனப்பகுதியில் மிகவும் பயம் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வழி அறியாது மிக விரைவாக ஓடுகிறார்.


அடிபட்டு கிடக்கும் மகனை எப்படி அடைவது?

தனக்கு ஏற்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து எப்படி தப்பிப்பது? என்ற சிந்தனையோடு ஓடுகிறார்.


ஆனால் சில நிமிடங்களில் முகமறியா நபர்களால் சூழப்பட்டு கொடூரமான முறையில் கத்தியால்  தாக்கப்பட்டு  அவர்  கொலை செய்யப்படுகிறார்.இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போகிறார். 


மறுநாள்

அந்த பெண்மணி  ஏதோ கொடிய வனவிலங்கால் தாக்கப்பட்டு இறந்து போனார் என்று வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டது.


: *ஜோதிட பார்வை*

 *மாத்தி யோசி*


*துப்பு துலக்குதல்* 

 *முடிச்சு அவிழ்ப்பு* 


விதி மதி கதி


 *விதி* 

கொடுப்பினை நாம் வாங்கி வந்த வரம் 

 *கதி*

 நாம் அடையவிருக்கும் பலன்(நல்ல/தீய)

 *மதி*

 நிகழ்வில் சிக்கிக்கொள்ளல்/தப்பித்துக் கொள்ளல்.



*ஜோதிட பார்வை* என்ன சொல்கிறது?

என்று *மாத்தி யோசிப்போமா?*


*துப்பு துலக்குதல்* 

 *முடிச்சு அவிழ்ப்பு* 


 *காட்டுப்பிரதேசம்*

 சிம்ம ராசி சூரியன் 


 *முகமறியா நபர்கள்/திருடர்கள்* ராகு/கேது


 *கத்தியால்/ஆயுதத்தால் தாக்குதல்*  செவ்வாய் சனி சேர்க்கை/பார்வை


 *நடுநிசி /இருட்டில்* சனி ராகு 


 *தவறான தகவல்* புதன் ராகு


 *பயணம், மனப்பதற்றம் பயம் கொள்ளல்*  பலமிழந்த சந்திரன் 


 *பாதை மாறுதல்/தவறுதல்* 

சுபர்களின் பார்வை இல்லாமல் போதல்.


இப்போது இவற்றை இணைத்துப் பாருங்கள்.

புரிந்து இருக்குமே!


 *புதிருக்கு முடிச்சு அவிழ்ந்ததா?*


       ............ மீண்டும் ஒரு புதிரில்


            ....... *தொடரும் புதிர


*ஆசான் உரை*

 *ஜம்பு மகரிஷி வாக்கியம்* 


8க்குரியவன்+செவ்வாய் இணைந்து 6 அல்லது 12ஆம் வீட்டில் இருந்தால் விரோதிகள்/கொடியவர்களது ஆயுதத்தால் மரணம் சம்பவிக்கும்.

8க்குரியவன் இராகு /கேதுவுடன் இணந்து 6/8 ஆமிடத்தில் இருந்தால் ஜாதகனின் ஆயுள் திருடர்களின் தாக்குதலினால் முடியும்.

உபய ராசிகளில் ஒன்று எட்டாம் இடமாக அமைய அந்த எட்டுக்குடையவன் சனியோடு இணைவு பெற்று சர ராசியில் அமர்ந்து இருந்தால் நெருக்கமான வனப்பிரதேசங்களில் ஜாதகனின் வாழ்நாள் முடிவடையும்.

[

Friday, August 11, 2023

சவாலே சமாளி




 *ஜோதிட பார்வை*

*மாத்தி யோசி* 


*பிரச்சினைகளை சவால்களாக மாற்றுங்கள்! வெற்றி காணலாம்!* 


“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...பிரச்சினை என்று சொன்னாலே  கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....

"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”


ஆம்..நிஜம்தானே..!


“காவல்காரன்” என்று ஒரு  படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது..


வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப்  பேச முடியவில்லை..


“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங்  கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...


ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்... “இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...

நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால்  தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்  , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...


பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...


படத்தின்   சில இடங்களில்  எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்..!.


“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.


"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்கின்றார்"


ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!

சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!


சந்திக்கத் தயாராவோம்..சவால்களை!


படித்ததில் பிடித்தது

அன்புடன்


 *ஜோதிடப் பார்வை*

 *மாத்தி யோசி* 


 *பிரச்சனை/சவால் 6ஆமிடம்* 


 *சவாலை தைரியமாக எதிர்கொள்ளல் 3ஆமிடம்* 


 *தன்னம்பிக்கை/மனோதிடம் 5ஆமிடம்* 


லக்னாதிபதி வலுவாய் இருக்கும் பட்சத்தில் 

துணிந்து  எந்தவொரு செயலையும் துணிச்சலாக காரியம் ஆற்றுபவர்க்கு வெற்றி நிச்சயம்

என்பதற்கு ஒரு உதாரணம் இது.

Monday, August 7, 2023

யோகங்கள்* *பத்ரா யோகம்*

 *யோகங்கள்* 

 *பத்ரா யோகம்* 





 *புதன்* - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.


புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.


 *இதற்கு என்ன பலன்?* 


ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்.

அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்!

அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்!

வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான்.

செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான்.

-------------------------------------------------

 *அகராதி பேர்வழி* 


”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”


“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

-------------------------------------------------


அன்புடன்,

ஆசிரியர்.

- : கன்னிகாதானம் : -

 - : கன்னிகாதானம் : - 




( இந்த கால ஆண்- பெண்பிள்ளைகள் சிலர் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி)



பிரமிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப் பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.


நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!


திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!


இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.


'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,

மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண.என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு 🙏🙏தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.


ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால்பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!


ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது... 


மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்....