*விருப்ப மரணம்(தற்கொலை)*
தன் உயிரே தானே மாய்த்துக் கொள்ளும் ஜாதகர்களின் கிரக அமைப்பு
தன் உயிரே தானே மாய்த்துக் கொள்ளும் முடிவு எடுப்பது *லக்னம்* ஆகும்.
லக்னம் நமக்கு தலைமைச் செயலகம் இருக்கிறது. லக்னம் ஒரு முடிவை சட்டென்று எடுத்து செயல்பட வைக்கிறது. விருப்பம் மரணத்திற்கு லக்னம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.
லக்னம் பலவீனம் அடைந்தால் லக்னத்திற்கு இயற்கை சுபர்களின் பார்வை கிடைக்காது போனால்
லக்னத்திற்கு அசுபர்களின் பார்வை/சேர்க்கை கிடைத்துவிட்டால்
லக்னத்திற்கு இருபுறமும் பாவ கிரகங்கள் நின்று இருந்தால்
லக்னம் பலவீனமாகி பலமிழந்து போகும்.
அதனால் ஜாதகர் தைரியம் இல்லாமல் எதனையும் தீர்க்கமாக ஆலோசிக்காமல் பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் தவறான முடிவுக்கு சென்று விடுவார்.
1. *லக்னத்தில்* செவ்வாய், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய கிரகங்கள் நின்று இருப்பதும்
2. *லக்னம்* செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும்
3. *லக்னம்* பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்று இருப்பதும்
4. *லக்னம்* ராசி சந்தியில் இடம் பெறுவதும் (ராசியின் தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் இருப்பது)
*லக்னத்தை* பலமிழக்கச் செய்துவிடும்.
மேற்கண்ட அமைப்புகளில் லக்னம் இருப்பின் சற்று *விருப்ப மரணம்* புரியும் எண்ணத்திற்கு வந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்வார்கள்.
*விருப்ப மரணத்திற்கு* துணை புரியும் கிரகநிலை
1. *லக்னாதிபதி*
லக்னாதிபதி பகை நீசம் பெறுவது
லக்னாதிபதி பகை கிரகங்களுடன் இருப்பது
லக்னாதிபதி பலம் இல்லாமல் போவது
1.லக்னாதிபதியானவர் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்திருப்பது
2.லக்னாதிபதி பாதகாதிபதியுடன் சேர்ந்திருப்பது
3.லக்னாதிபதி 6,8,12 ஆமிடத்தில் மறைவு பெற்று இருப்பது.
*பாவம்*
*3 ஆம் பாவம்*
இந்த பாவம் மனப்போக்கு, மனம் எடுக்கும் முடிவு, தைரியம், வீரியம், முயற்சி, வெற்றி, இளைய சகோதரம், அண்டை அயலார் ஆகியவற்றை குறிக்கும்.
இந்த பாவத்தில் சனி ராகு கேது மாந்தி இருப்பது, பகை கிரகங்கள் இருப்பது
மனம் பலவீனம் அடைந்து விடும் அதன் காரணமாக தற்கொலைக்கு அடித்தளம் இட்டுவிடும்.
தற்கொலைக்கு மூல முதற் காரணம் மனம் தான்.
மூன்றாம் பாவம் பலம் இழந்தால் மனம் அழிந்து விடும் கெட்டுவிடும் மன தைரியம் குறைந்து விடும் மனம் இறந்து போகிறது.
தற்கொலைக்கு முன் மனம்தான் முதலில் இறந்து விடுகிறது.
அதன்பின் உடல் இறக்கிறது.
மூன்றாம் பாவம் மற்றும் மூன்றாம் அதிபதி கெட்டு போய் இருந்தால் விருப்பம் மரணத்திற்கு மனம் தூண்டி விடுகிறது.
*3.தசா புக்தி*
தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும்
அற்ப ஆயுளை முடித்துக் கொண்டு உலக வாழ்வில் இருந்து விடுவித்துக் கொள்ளவும் மனம், எண்ணம் ஒப்புதல் அளிக்கும் அளவிற்கு ஜாதகத்தில் கெட்ட கிரக தசா புத்திகள் நடப்பில் இருக்க வேண்டும்.
*கெட்ட கிரக தசா புத்திகள்*
நடப்பு திசாநாதன் லக்னத்திற்கு பாதகமானவராக இருக்க வேண்டும்.
பாதக திசா புக்தி நடப்பில் இருக்க வேண்டும்
லக்னத்தில் நின்ற செவ்வாய் சனி ராகு கேது நின்று இவர்களுடன் மாந்தி சேர்ந்த திசா புக்தி காலத்தில் தற்கொலை செய்யும் எண்ணம் வரும்.
மாந்தியோடு சேர்ந்த எந்த கிரக திசா புக்தியும் நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்ய தோன்றும்.
திசா நாதன் 6, 8, 12ல் நின்று திசா நடத்தக்கூடாது.
திசா நாதன் பகை நீசம் பெற்றும் திசா நடத்தக்கூடாது.
திசா நாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6, 8, 12 பாவாதிபதிகளுடன் சேர்க்கை இருக்கக் கூடாது.
இதுபோல கிரக அமைப்புகள் கொண்ட தசா புத்திகள் நடப்பில் இருந்தால் ஏதோ ஒரு வித மனக் காரணத்திற்காக தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலை எண்ணம் வந்துவிடும்.
ஜாதகத்தில் லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆம் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.
சந்திரனை *மனோகாரகன்* ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது. லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும்.
சூரியனும் பலமாக இருந்தால் தற்கொலை எண்ணம் தடுக்கப்படும்.
அதேபோல கிரகங்களின் கூட்டணி வலிமையாக இருந்து சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் தற்கொலை எண்ணம் ஏற்படாது.
*அஷ்டமாதிபதி அமர்ந்த நிலை*
பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். 8ஆம் இடத்தில் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களையும் நஷ்டங்களை ஏற்படுத்தும்.
லக்னத்துக்கு 8ல் செவ்வாய் இருந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும்.
புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும்.
சுக்கிரன் வந்தால் கோழை மனதோடு,தற்கொலைக்குத் தூண்டும்.
எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
*ராகு கேது*
சந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன்.
சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது.
கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன். ராகு கேது பாம்பு கிரகங்கள். சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.
*விஷம் குடித்து தற்கொலை*
சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கவுரவக் குறைபாடு ஏற்படுகிறது.
புதனுடன் ராகு சேர்ந்து வலுவில்லாத நிலையில் இருக்கும் ஜாதகக் காரகர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள்.
சிலர் விஷ ஊசி போட்டும் உயரமான மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
புதனோடு கேது சேர்ந்திருக்கும் ஜாதகக் காரகர்கள் ரசாயனங்களை குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள். பொட்டாசியம் சயனைடு, தூக்கமாத்திரை குடித்தும் தற்கொலை கொள்வார்கள்.
*ஆயுள்காரகன் புத்திநாதன்*
*சனி ஆயுள்காரகன்*
ஒருவரின் ஆயுளை தீர்மானிப்பவர் சனிதான்.
ஒருவரின் மரணம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்பவரும் சனிதான்.
சனியோடு புதன் சேர்ந்து வலிமையற்ற நிலையில் இருந்தால் வண்டி வாகனங்களில் மோதி தற்கொலை செய்து கொள்வார்.
ஓடும் கார் அல்லது பேருந்தில் விழுந்தும், ரயிலில் விழுந்தும் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வார்கள்.
*செவ்வாயுடன் சேரும் புதன்*
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்திருந்தால் தீக்குளித்து தற்கொலை செய்வார்களாம்.
கையை, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டும் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டும் தற்கொலை செய்து கொள்வார்கள்.
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், மின்சார சாதனங்களாலும் தற்கொலை செய்து கொள்வார்களாம்.
*ஜீவ சமாதி நிலை*
புதனோடு கூட்டணி சேரும் சுக்கிரன் வலிமை குன்றியிருந்தால் அமைதியான முறையில் தற்கொலை செய்து கொள்வார்கள்.
மாத்திரையை போட்டுக்கொண்டு அமைதியாக படுத்துக்கொள்வார்கள்.
அதே போல புதனோடு குரு சேர்ந்து வலிமை குன்றியிருந்தால் அவர்கள் ஜீவ சமாதி நிலையில் அமைதியாக மரணத்தை தழுவுவார்கள்.
கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தால் தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை. இல்லாவிட்டால் கோடி கோடியாக பணம் இருந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் கூட நொடியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
*சூரிய நமஸ்காரம்*
சூரிய நமஸ்காரம் பண்ணுங்கள்.
ஜாதகத்தில் கிரகங்கள் வலிமையற்ற நிலையில் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யலாம்.
மிருத்யுஞ்ச ஹோமம் செய்யலாம்.
ருத்ர ஹோமம் செய்யலாம்.
விஷ்ணு சகஸ்ராநாமம் படிக்கலாம்.
சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு.
அதேபோல புதனால் பாதிப்பு இருந்தால் அதையும் சூரிய பகவான் சரி செய்வார்.
அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர்களுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும்.
எனவே சூரியனை தினசரியும் வணங்குங்கள் ஆவணி ஞாயிறு விரதம் அற்புதமானது.
*பரிகாரம்*
மேற்கண்ட கிரக நிலைகள் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகர் தனி மேல் இருப்பதை தவிர்த்து பலரது துணையோடு கலகலப்பாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment