Thursday, July 27, 2023

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்? *

 *ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்?  என்பது பற்றிய பகிர்வுகள்*



ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம் ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக பார்க்கலாம்.


 “பூலோகம் செழிப்பாக இருந்து, இயங்குவதற்குக் காரணமே சூரியனின் ஒளிக்கதிர்கள்தான். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் விழும் நேரத்திலிருந்துதான் நாள் துவங்குகிறது என்பதை நாம் கணக்கில் கொண்டுள்ளோம். இந்த ஒரு நாளிலேயே “உஷக்காலம்’ என்று கூறப்படும் காலைப் பொழுது ஆரம்பம். அதாவது சூரிய உதயம் முதல் பகல் பன்னிரண்டு மணி வரை “பூர்வாங்கம்’ எனப்படும். பன்னிரண்டு மணிக்கு மேல் (உச்சிப் பொழுது முதல்) சூரியன் மறையும் கணக்கு.


“பூர்வாங்கம்’ என்பது ஏற்றத்தைக் குறிக்கும். “அபராணம்’ என்பது இறக்கத்தைக் குறிக்கும். இதேபோலத்தான், ஒரு வருடத்தில், தை மாதப் பிறப்பு முதல் ஆனி மாத முடிவு வரை “உத்தராயணம்’ என்றும், ஆடிமாதப் பிறப்பு முதல் மார்கழி மாத முடிவு வரை “தட்சிணாயனம்’ என்றும் கூறப்படுகிறது. சூரியனின் சக்தியானது உத்தராயணத்தில் “பாசிடிவ் சார்ஜ்’ஜினைத் தருகிறது. தாமதகுணமான “நெகடிவ் சார்ஜி’ னை தட்சிணாயனத்தில் கொடுக்கிறது.


இது ஆடி மாதப் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆடி மாதம் அந்தக் காலத்தில் மிக முக்கியமான மாதமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்நாட்களில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்து கொண்டிருந்தது. “ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.


ஆடியில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் ஒருவருக்கு, பயிர் அறுவடை கார்த்திகை மற்றும் தை மாதத்தில் உண்டாகும். அந்தச் சமயத்தில்தான் கையில் பணமும் வர வாய்ப்பு இருக்கும். அதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.


அதனால்தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே ஒழிய, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. ஆடி மாதம் முழுவதுமே விசேஷம் தான். ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரிப்பர். போக சம்பிரதாயம் என்பது தை மாதம் முதல் ஆனி வரை உள்ள காலம்.


யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை. போக சம்பிரதாயக் காலத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலம். யோக சம்பிரதாயம் என்பது தபஸ், யாகம், யக்ஞம், பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யக்கூடிய காலம். யோக காலத்தில் முதல் மாதம் ஆடி என்பதால் தெய்வீகப் பண்டிகைகள் அதிகம்.


 ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று மாதம் முழுவதுமே விசேஷமாக உள்ளது. ஆடி மாதத்தில் சந்திரன் சொந்ந வீட்டில் இருக்கிறார்.


 அந்த சொந்த க்ஷேத்திரத்தில், சூரியனுடன் சம்பந்தம் ஏற்படும் பொழுது, அதற்கு விசேஷம் அதிகம் உண்டு. இந்த ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் உள்ள தெய்வீக ரகசியம்

 🐘🐘🐘 யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் உள்ள தெய்வீக ரகசியம் என்ன?...



தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது.


உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.


மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசமும் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில்  மாறிக்கொண்டே இருக்கும்.


சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர்.


பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும்  நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு  முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும்.


வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும்  சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.


இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை நம் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் நமக்கு மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கிறது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Monday, July 24, 2023

பஞ்ச பாத்திரம்

 'பஞ்ச பத்ர பாத்திரம்'



இல்லங்களில் பூஜையின் 

பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற 

பாத்திரத்தை பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.


அதன் இயற் பெயர் 

'பஞ்ச பத்ர பாத்திரம்' 

என்பதாகும்.


அதாவது ஐவகை 

பத்திரங்களை(இலைகள்) 

நீரில் இட்டு, 

அந்நீரை குறிப்பிட்ட ஒரு 

பாத்திரத்தில் விட்டு, 

“உத்திரிணி “ என்ற சிறு 

கரண்டியால் நீரை எடுத்து 

பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர்.


துளசி, 

அருகு, 

வேம்பு, 

வில்வம், 

வன்னி 

ஆகிய 5 இலைகளே பஞ்ச 

பத்திரங்கள்.

இந்த பத்திரங்களும் நீரும் 

விடப்படும் பாத்திரம் 

'பஞ்ச பத்ர பாத்திரம்'.


இதுவே காலப்போக்கில் மருவி 

“பஞ்ச பாத்திரம் “ என்றானது.


இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை. 


இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

Thursday, July 20, 2023


 **சர்வ மங்கலங்களும் தரும் மாவிளக்கு வழிபாடு**!


மாவிளக்கு வழிபாடு என்பது இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று


.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது..


இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன


அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள்.


நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.


இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.


மாவிளக்கு தத்துவம்


காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது.


அரிசி[அன்னம்] பிராணமயம்.அன்னம் பிரம்ம ஸ்வரூபமேயாகும்.உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே.


வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை. மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.


அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோ ம்.ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்க ளை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார்.


அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவேமாவிளக்கு ஏற்றுகிறோம்.


நம்மையே விளக்காகவும்,மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது.அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு 1 முறையா வது செய்ய வேண்டும்.


வீட்டில் மாவிளக்கு போடுதல்!


பெரும்பாலான வீடுகளில் ஆடி,தை வெள்ளிக்கிழமை களில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.


புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு.கோவில்க ளில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.


மாவிளக்கு செய்வது எப்படி


1.மாவிளக்கு ஒரு கிலோ அரிசி என்றால் அதனை களைந்து விட்டு ஒரு துணியில் பரப்பி விட்டு காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது மிக்ஸி அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம், வெல்லத்தை துருவி அல்லது தூள் துளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும்.


அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசறி விட்டு உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம்.  ஒரளவு பெரிய உருண்டையாக தான் உருட்டுவார்கள்.


உருண்டையின் மேல் எலுமிச்சை பழத்தை அழுத்தினால் சிறிது குழிப்போல அச்சு பதியும். குழியின் ஓரத்தில்  குங்குமம் பொட்டு வைத்து நெய் விளக்கு கேற்றி வைக்கவும்.


விளக்குப்  முன்பு கோலம் போட்டு ஒரு வாழை இலை விரிக்கவும். வெள்ளியில் பேசின் மாதிரி ஏதாவது பாத்திரம் இருந்தால் (இல்லைனா,இலையில்) அதில் இந்த மாவை கைகளினாலே உருண்டையாக திரட்டவும்.


நான்குபுரமும் சந்தனம், குங்குமம் பொட்டு வக்கவும். நடுவில் ஒரு பெரிய கிண்ணம் அளவுக்கு ஒரு குழி பண்ணி அது நிறைய நெய் ஊற்றவும். நாலு பக்கமும் திரியின் நுனி வரும்படி போடவும்.


அப்படி இல்லைனா பஞ்சு ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி நுனியில் கூர்ப்பாக திரித்து நெய்யின் நடுவில் வத்து நல்ல நேரம் பார்த்து விளக்கு ஏற்றவும் குறைந்தது 2 மணி நேரங்களாவது மாவிளக்கு எரியனும்.


அந்த நேரம் நீங்கள் விளக்கு முன்பு உக்காந்து ஸ்லோகங்களோ பாராயணங்களோ சொல்லிண்டு இருக்கலாம். வெத்திலை பாக்கு, பழம் தேன்காய் உடைத்து நைவேத்யம் செய்யனும். மாவிளக்கு எல்லாருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.


வாழ்க வளமுடன்!

Saturday, July 15, 2023

யார் காதல் மன்னன் ?



 

காதல் மன்னன் யார்?

 

புன்னகை பூக்கும். பூ முகம் மலரும்!!

காதல் கொள்ளும். கவிதை சொல்லும்!!

ஆனந்தம் பொங்கும் அலைபாயும் நெஞ்சம்!!

காதல் மன்னன் யார்?

              

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw_rSFN1JXtnws1HauIDq9ei9Jiis99JWC61Zgaze7DOSPrnqfP29q_hlJtLusP0Kmi1LRJvFcNUV2wXmScUDmUy1LzLvicdcu0lcqi5cbdy0PheelnDCCz1y2Vz7ztqxh3aSj-ay86w3B/s320/Gemini_Ganesan.jpg

           

 

மலர்ந்த முகமும் வசீகரிக்கும் கண்களும் பார்த்த உடனேயே ஒருவர்  அவர்பால் ஈர்க்கப்படுகிறார் என்றால் எப்படி?

அவரது அமைதியான தோற்றமும், இனிமையான பேச்சும் மேலும் அவரிடம் மனம் செல்கிறது. எதனால்?

ஜாதகரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா?

முடியும். 

 

ஒருவரது  ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதி சுக்ரன் வீடுகளான ரிஷபம், துலாமில் அமைந்தாலும்,

எந்த லக்னமாயினும்  லக்னாதிபதியோடு சுக்ரன்  இணைந்திருந்தாலும்,

லக்னாதிபதியை சுக்ரன் பார்த்தாலும்

அந்த ஜாதகர் மேற்சொன்னவாறு இருப்பார். மேலும் மங்கையர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் மன்னன் ஆகவும் திகழ்வார். கலாரசிகராகவும் இருப்பார்.

                                      

அவ்வகையில் கலைத்துறையில் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பழம்பெரும் நடிகர் திரு. ஜெமினிகணேசன் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயோடு சுக்ரன் இணைந்திருந்ததாலும், அவர்கள் இருவரும் லக்னத்துக்கு 2ல் அமைந்தாலும், இவருக்கு இனிய பேச்சும்,வசீகரத் தோற்றமும் அமைந்தது.

 

 11ல் இருந்த சனி வலுவாக இருந்ததால் ஜனவசியமும் ஏற்பட்டது. திரையுலகில் சிறந்து விளங்கியதோடு மக்களால் அன்பாக காதல்மன்னன் என்றும் அழைக்கப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

கே

 

ஜெமினிகணேசன்

         இராசி

சந்

வி

   செ சு                                       

ல சூ

ரா பு

சனி

          

சந்

சு

(பு)

 

 

 

       அம்சம்

 

கே  சூ

சனி

ரா

    செ                                        

 

வி

 

      

                                                                                                                                    

                     

                                                                                                                                

           *******************************************************************************************

 

 

 

திரு. என்.டி.ராமராவ் அவர்களின் ஜாதகம்

 

 

அடுத்து  கலைத்துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்கிய பழம்பெரும் நடிகர் திரு. என்.டி.ராமராவ் அவர்களின் ஜாதகம் ஆகும்.

 


 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEGypVYBJ0HsT6D_jQu2_ZBQV_-v14uGYVjggbUMePSHNwuI5yfnk7EHDkJgIxRoA0WLEoVUjQ_pNQoz-eV9vXK364sBBc3EGKcJ2Vt62GB-oPrVqOE_Y0wRRKIILyEokcOQwYVh6at4EX/s1600/images+%252853%2529.jpg

 

 

 

 

  சந்  வி  

 

சூ பு  கே

 

 

 

 

       அம்சம்

 

சனி

 

சுக்

                                          

செ  ரா

 

 

 

சுக்

சூ பு

செ

கே

 

28/5/1923 திங்கள்

         இராசி

4.45 p.m.   சுவாதி

ரா

                                          

  வி சந்

சனி

 

 

 

 

 











 

 

 

 

இவரது ஜாதகத்தில் சுக்ரன் வீடான துலாமில் லக்னம் அமைந்ததும், லக்னாதிபதி சுக்ரன் 7ஆம் வீட்டில் அமைந்து  லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பாகும்.

லக்னத்தில் குருவும், சந்திரனும் அமைந்து  லக்னாதிபதிப் பார்ப்பதும் அருமையான அமைப்பாகும்.

 

லக்னத்தில் குரு அமைந்தது தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட ஜாதகம் என்பர். அத்தோடு சந்திரன் இணைவு என்பது சந்திரபிம்பத்தைப் போன்ற முகப்பொலிவையும் தோற்றத்தையும் குறிப்பதாகும்.என்.டி.ராமராவ் அவர்களின் முகத்தோற்றம் ஒப்பனையில் தெய்வீகப்பொலிவைக் காட்டியதற்கு இதுவே காரணம். அதனாலேயே அவர் கிருஷ்ணர் வேடம் தரித்தாலே நிஜகிருஷ்ணராகவே மாறிவிடுகிறார்.

 

கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் அவர் கிருஷ்ணராகவே வாழ்ந்துகொண்டிருந்தார். மக்களின் மனங்களில் உண்மையில் அவர் காதல்மன்னனாகவே  வாழ்ந்தார்.

 

11மிடத்து ராகுபகவான் அதை செம்மையாக செய்தார். 5லிருந்த கேதுவும் அரச யோகத்தைத் தந்து அரசியலில் வெற்றியைத் தேடித் தந்தார். ஆந்திர அரசின் முதல்வராகவும் விளங்கினார்.

 

***************************************************************************************************

 

உண்மையான காதல் மன்னன் யார்?

 

வேடம் தரித்து நடித்ததாலேயே இவர்கள் இவ்வளவு பேரும் புகழும் பெற்றார்கள் என்றால்……

 

உண்மையான காதல் மன்னன்  யாராவது இருந்திருப்பார் அல்லவா?

 

அவர் யார்?

 

ஆமாம், இருந்தார். அவர்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.             


               



                            

   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheyzXHgFdp_P1v6yiIOoP3jq9EgWD8aCKerbu-tu2vCKPhftNNespgFOLEuutYCTBjZhdu89SwWGIhJGF6lAk4yDFhPcseIwYvufway3wtVuGpoNO5zKBxmz2kmozf0e05DDzMVKLgIghC/s320/IMG_20180619_164103.JPG

 

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெனனம் ரிப ராசி , 

 

ரிப லக்னத்தில் பிறந்து இருக்கிறார். இதுவும் சுக்ரன் வீடு. 

 

அவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார். 

 

லக்னத்திலேயே சந்திரன்.

 

லக்னாதிபதி சுக்கிரன் , 12 - ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறார். மேலும் பாவி ராகுவும் கூடவே நிற்கிறான். 

 

4க்குரியவன் சூரியன் ஆட்சிபலத்தோடு  8ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து உள்ளார்.

 

மேலும் பாக்கியாதிபதி சனி பகவான் 7மிடத்திலிருந்து லக்னத்தை பார்ப்பதாலும் லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்றதாலும் லக்னாதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் அழகுக்கு பஞ்சமில்லாமல் தெய்வீக உருவம் பெற்றார். 

 

அதே சமயம் சனியின் பார்வையால் கருத்த மேனியும் லக்னத்தில் சந்திரன் உச்சமாகி இருப்பதால் அமைதியான வசீகரத் தோற்றமும் பெற்றார். 

 

                                   2 - ம் இடத்து அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றான். ஆகையால் அறிவுக்கு ஒரு குறையும் இல்லை.  என்றும் சிரித்த முகமும் இளமையான தோற்றமும் கொண்டவராக இருந்தார்.

உத்தவரை குருவாக அடைந்து அனைத்து வேதமும் அறிந்தவராக இருந்தார்.  

 

 

 

 

 

    

 சந்

 

 

         இராசி

சுக் ரா செ

கே

சூ வி

                                          

சனி

பு

          

கே

  சந்   

 

 

       அம்சம்

செ

பு

      வி                                      

ரா சனி

சுக்

சூ

 



 

 

 

 

 

 

 

 

 

மேலும் நாலாம் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சூரியனுடன் இருப்பதால் கல்வியில் மிக சிறப்பாக இருந்தார். 64 ஆயகலைகளையும் அறிந்தவர் என்று பெயர் எடுத்தார்.

கலாரசிகர்.

இசைப்பிரியர்.

2க்குரிய புதன் உச்சம். குழல் ஊதுவதில் விருப்பம்.

அவரது குழல் இசை தெய்வீக கானமாகத் திகழ்ந்தது. அவரது குழல் இசையைக் கேட்ட மனிதர்கள், கோபியர் தேவநிலயை எய்தினார். மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும், விலங்குகளும் கூட அவரது இசைக்கு வசமாயின.

 










https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilClVe5o3qfrKhbf64mNGECKYmKsGxTfCWDNxWQENXSi6mh4Z5CSTNp5clgUbTc-FAO9K1FrhntXpDiY-Pia5PM5ze_erlpiSnZV0rQRIID6JSW7MuTpbdVp175pkhXtN1qM-z9LeM0eKy/s320/img1140201020_1_1.jpg

 

லக்னாதிபதி சுக்கிரனும், மூன்றாம் அதிபதி சந்திரனும், பரிவர்த்தனை ஆகியும் உள்ளனர்.

 

ஏழாம் இடத்தில் சனி , ஏழுக்கு உடைய செவ்வாய் ஆறுக்கு உடைய சுக்கிரனுடன் சேர்ந்து மேலும் பாவி ராகுவுடனும் கூடி மூன்றாம் வீட்டில் நிற்பதாலும். அதனால் அவருக்கு பல மனைவி அமைந்தார்கள்.

 

               https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_lOxpW6dF3po1YVi3xUVX4Fw9SLEElUyosy7Wdsy0ft7ihVIWXfm_Cf4FK-5zYYMNl-SWx4mcQfIo5Lv4ch_JCvII0e2rW4XcE2rxui-vorqLkHVe8uyvJn8dRGvHkJyRCE1-L9RbScGY/s320/3148bb009c927f27aa2677aaaf490bc4_XL+-+Copy.jpg

 

சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி  இருந்ததாலும் லக்னத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறான்.

மூன்றில் செவ்வாய்  நீசமாகி இருக்கிறான். மேலும் வர்கோத்தம் பெற்றும் உள்ளார். ஆனாலும் அந்த வீட்டதிபதி சந்திரன் உச்சமாகியும் உள்ளதால் நீசபங்க இராஜயோகம் ஏற்பட்டு விட்டது.

ஆகவே கிருஷ்ணர் மிகவும் வீர தீர  மிக்கவராகவும் விளங்கினார்.அரசியல்ஞானம் மிக்கவராகவும் இருந்தார். யதுகுலத்திற்கே அரசராகவும் திகழ்ந்தார்.

 

இல்லறத்திலும் அரசியலிலும்,ஆன்மீகத்திலும் மிகச்சிறப்பாக வாழ்ந்த ஒரு தெய்வீகபுருஷர் ஸ்ரீகிருஷ்ணர். 
இவரது ஜெனனம் ஒரு அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்தது

 

இந்த நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி எழுதுவதில் மிக்க மகிழ்ச்சியும் இதை சாத்தியமாக்கிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் என்னுடைய நன்றி. 

 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheWZv_pAXo2fCt-uiZeSky51lhkTceu2xzkG_6TKvx0qTDalslYqFJ4Km8lAAt13uMRD2DZMcQliPHYAaRbjCUcnlLJUZd25AZzsGhkCb5K0R1YsRx5lYrYKs7hVXU6NogdpTahpDu5pb7/s1600/download.jpg

 

 

கிருஷ்ணார்ப்பணம்.