வணக்கம் நண்பர்களே இன்றைய தினம் இன்று முதல் ஜோதிடத்தில் அதிமுக்கியமான பிரசன்னத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். பிரசன்னம் மிகத்துல்லியமான பலன்களை உடனடியாக காட்டக்கூடிய ஒரு அமைப்பு.
பிரசன்னம் பலவகையான முறைகளில் தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அதில் தேவ பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், ஆருட பிரசன்னம்,
சோழி பிரசன்னம்,
ஸ்வர்ண பிரசன்னம், தாம்பூல பிரசன்னம்,
கேபி பிரசன்னம் என்று பிரசன்னங்கள் பல வகையில் நடைமுறையில் இருந்து வருகின்றன. மேற்கண்ட பிரசன்னங்கள் அனைத்துமே காரணப் பெயர்களாக அமைந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
சோழிகளை பயன்படுத்தி பார்ப்பதால் சோழி பிரசன்னம் என்று அதற்குப் பெயர். இவ்வாறாக ஜாமத்தை பயன்படுத்தி பார்ப்பதற்கு *ஜாமக்கோள் பிரசன்னம்* என்று பெயர்.
*பிரசன்னம்* என்ற வடமொழி சொல்லுக்கு *கேள்வி* என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு *பிரசன்ன* என்று கூறுவர்.
ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் ஜோதிடர் முன் வரும்போது கேள்வி எழுப்பும் நேரத்தைக் கொண்டு அப்போதைய ஜாமக்கோள்களின் நிலையை கணித்து பலன் கூறும் புராதன முறையாகும்.
இந்த ஜோதிட சூட்சுமத்திற்கு *பிரசன்னம்* என்று பெயர்.
பிரசன்னத்தின் சிறப்பு யாதெனில் பிரசன்னம் போடும்போதே கேள்வியும் அதற்கான பதிலும் உடனே கிடைத்துவிடும். எந்த ஒரு கேள்விக்கும் தீர்வு இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும்.
அந்த கேள்வி நடக்குமா? நடக்காதா? என்பதை *வெட்டு ஒன்று துண்டு இரண்டு* என்ற வகையிலே நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் நெத்தியடி போல் பதில் மிகத் துல்லியமாக கொடுக்கப்பட்டிருக்கும். அது நமக்கு நலமா? தீதா? என்பது கேள்வியைப் பொருத்து *ஜாம கிரகங்கள்* முடிவு செய்துவிடும்.
பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்வின் அனைத்து பலன்கள் பார்ப்பது போல இல்லாமல்..... ஒரு கேள்வி கேட்கும்பொழுது அந்த வேளையில் இருக்கும் ஜாமகிரகங்களை வைத்து ஜாதகம் பார்ப்பது தான் இங்கே பிரசன்ன ஜோதிடம் என்பதாகும்.
தமிழ்நாட்டில்
பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். *கேரள ஜோதிடம்* புகழ் பெற்று இருப்பதற்கு காரணம் *அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்.* அதற்கு தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது.
*துல்லியம்* என்று சொல்வதற்கு விளக்கம். உதாரணம் ஒன்று கூறுகிறேன்.
ஒருவர் எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா?எனக் கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும்.
ஆனால் எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. அதற்கு பிரசன்ன ரீதியாகத்தான் பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட மிக சக்திவாய்ந்த பிரசன்ன ஜோதிடம் தெய்வசக்தியுடன் இணைந்தால் அப்படி பார்க்கும்போது அதற்கு பெயர் *தேவப்பிரசன்னம்* ஆகும். அந்த வகையில் இங்கு நாம் ஜாமக்கோள் பிரசன்னம் பார்த்து அதன்மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிகத் துல்லியமான பதில் கூறும் பல பிரசன்னங்களை பார்க்க இருக்கிறோம்.
ஜோதிடத்தில் பல நுட்பமான அற்புதமான விஷயங்களை இந்த பிரசன்னம் மூலம் அன்பர்கள் அறிந்து பயன்பெற வேண்டுமாய் பயன்பெறும் பொருட்டு உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல சித்தர்கள் போற்றும் அன்னை வாலைத்தாய் அருளோடு உங்கள் முன் *தினமும் ஒரு பிரசன்னம்* என்று இந்த பகுதியில் கொடுக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
என்றும் அன்புடன்,
*ஸ்ரீமால் சிந்தைகூரியன்*
No comments:
Post a Comment