*விக்கிரமாதித்தன் கதைகள் -40*
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*இரண்டாவது கதை*
*மந்தாரவதி கதை - 1*
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளத்தை வீழ்த்தி, அதைத் தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் பேசத் தொடங்கியது.
"பராக்கிரமசாலியான விக்கிரமாதித்த இந்த இருண்ட பொழுதில் உனது நடைப் பயணம் களைப்பாகாமல் இருக்க கதை சொல்லுகிறேன். கேள்.”
அக்னிஸ்வாமி என்ற அந்தணன் பிரம்மஸ்தலம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். யமுனை ஆற்றங்கரையில் உள்ள அழகான ஊர் அது. வேதம் படித்தவன், ஊரில் நல்ல பெயர் எடுத்தவனாகையால் வாழ்க்கை சுகமாகப் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த அழகுடைய மந்தாரவதி என்ற மகள் இருந்தாள். பல பேர் அவளை மணக்க முன் வந்தும் அக்னிஸ்வாமி அவர்களுள் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்தான். அந்த மூன்று பிராமண இளைஞர்களும் வேத விற்பன்னர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தனர். மூவரில் யாரை மருமகனாகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியவில்லை. மூவருமே தனித்தனியே மந்தாரவதியைப் பார்த்தார்கள். மூவருமே தனக்குத்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். அக்னிஸ்வாமியாலும் ஒரு முடிவுக்கு வரவியலவில்லை. இப்படியே நாள்கள் சென்றன.
திடீரென்று மந்தாரவதிக்குக் காய்ச்சல் நோய் வந்தது. எவ்வளவோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் அவளது காய்ச்சல் குறையவில்லை. அக்னி ஸ்வாமியுடன் அந்த மூன்று இளைஞர்களும் அவள் குணமாவதற்காகக் காத்துக்கிடந்தனர். ஆனால் நாளாக நாளாக மந்தாரவதியின் காய்ச்சல் குறையவில்லை. கண் திறக்காமலே உலகை விட்டு மறைந்தாள். அக்னிஸ்வாமியுடன் மூன்று இளைஞர்களும் அழுது தீர்த்தனர்.
மந்தாரவதியின் உடலை மயானத்தில் வைத்து எரித்தனர். முதல் இளைஞன் அங்கேயே அவளை எரித்த இடத்திலேயே குடிசை போட்டுத் தங்கினான். அவளது சாம்பலையே தனது படுக்கையாகக் கொண்டான். இரண்டாவது இளைஞன் அவளது அஸ்தியைக் கலசத்தில் எழுத்துக்கொண்டு கங்கையில் கரைத்து விடச் சென்றான். மூன்றாவது இளைஞன் காலியுடையணிந்து சன்னியாசி ஆனான். ஊர் ஊராகச் சென்று கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தான்.
அந்த சன்னியாசி இளைஞன் வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவரும்போது வஜ்ர லோகம் என்ற சிற்றுரை அடைந்தான். அந்த ஊரிலுள்ள அக்ரஹாரத்தில் ஒரு வீட்டின் முன் நின்று “பவதி பிட்சாந் தேஹி” என்று யாசகம் கேட்டான். அந்த வீட்டிலிருந்து வந்த பிராமணப் பெண் உணவு சமைத்துக் கொண்டிருப்பதாகவும், சற்று நேரம் பொறுத்தால் வேண்டிய மட்டும் உண்டுவிட்டுச் செல்லலாம் என்றும் கூறினாள். இவனும் சரியென்று அந்த வீட்டின் திண்ணையிலேயே தங்கினான்.
வீட்டின் உள்ளேயிருந்து சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது. எட்டி உள்ளே பார்த்தான். அந்தப் பெண் சமைத்துக்கொண்டிருந்தாள். அருகில் அவளுடைய குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்தது. அவள் குழந்தையைச் சமாதானப்படுத்தினாள். ஆனாலும் அது பிரவாதமாக அழுதவாறு இருந்தது. மறுபடி சமாதானப்படுத்த முயன்றாள். அக்குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. கோபம் தலைக்கேறிய அந்தப் பெண் குழந்தையைத் தூக்கு எரியும் அடுப்பினுள் செருகி விட்டாள்! குழந்தை எரிந்து சாம்பலானது!
*ஹரிகுமார்*
*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*
*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*
*வேதாளம் சொன்ன கதைகள்*
*இரண்டாவது கதை*
*மந்தாரவதி கதை - 1*
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளத்தை வீழ்த்தி, அதைத் தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் பேசத் தொடங்கியது.
"பராக்கிரமசாலியான விக்கிரமாதித்த இந்த இருண்ட பொழுதில் உனது நடைப் பயணம் களைப்பாகாமல் இருக்க கதை சொல்லுகிறேன். கேள்.”
அக்னிஸ்வாமி என்ற அந்தணன் பிரம்மஸ்தலம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். யமுனை ஆற்றங்கரையில் உள்ள அழகான ஊர் அது. வேதம் படித்தவன், ஊரில் நல்ல பெயர் எடுத்தவனாகையால் வாழ்க்கை சுகமாகப் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த அழகுடைய மந்தாரவதி என்ற மகள் இருந்தாள். பல பேர் அவளை மணக்க முன் வந்தும் அக்னிஸ்வாமி அவர்களுள் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்தான். அந்த மூன்று பிராமண இளைஞர்களும் வேத விற்பன்னர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தனர். மூவரில் யாரை மருமகனாகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியவில்லை. மூவருமே தனித்தனியே மந்தாரவதியைப் பார்த்தார்கள். மூவருமே தனக்குத்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். அக்னிஸ்வாமியாலும் ஒரு முடிவுக்கு வரவியலவில்லை. இப்படியே நாள்கள் சென்றன.
திடீரென்று மந்தாரவதிக்குக் காய்ச்சல் நோய் வந்தது. எவ்வளவோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் அவளது காய்ச்சல் குறையவில்லை. அக்னி ஸ்வாமியுடன் அந்த மூன்று இளைஞர்களும் அவள் குணமாவதற்காகக் காத்துக்கிடந்தனர். ஆனால் நாளாக நாளாக மந்தாரவதியின் காய்ச்சல் குறையவில்லை. கண் திறக்காமலே உலகை விட்டு மறைந்தாள். அக்னிஸ்வாமியுடன் மூன்று இளைஞர்களும் அழுது தீர்த்தனர்.
மந்தாரவதியின் உடலை மயானத்தில் வைத்து எரித்தனர். முதல் இளைஞன் அங்கேயே அவளை எரித்த இடத்திலேயே குடிசை போட்டுத் தங்கினான். அவளது சாம்பலையே தனது படுக்கையாகக் கொண்டான். இரண்டாவது இளைஞன் அவளது அஸ்தியைக் கலசத்தில் எழுத்துக்கொண்டு கங்கையில் கரைத்து விடச் சென்றான். மூன்றாவது இளைஞன் காலியுடையணிந்து சன்னியாசி ஆனான். ஊர் ஊராகச் சென்று கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தான்.
அந்த சன்னியாசி இளைஞன் வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவரும்போது வஜ்ர லோகம் என்ற சிற்றுரை அடைந்தான். அந்த ஊரிலுள்ள அக்ரஹாரத்தில் ஒரு வீட்டின் முன் நின்று “பவதி பிட்சாந் தேஹி” என்று யாசகம் கேட்டான். அந்த வீட்டிலிருந்து வந்த பிராமணப் பெண் உணவு சமைத்துக் கொண்டிருப்பதாகவும், சற்று நேரம் பொறுத்தால் வேண்டிய மட்டும் உண்டுவிட்டுச் செல்லலாம் என்றும் கூறினாள். இவனும் சரியென்று அந்த வீட்டின் திண்ணையிலேயே தங்கினான்.
வீட்டின் உள்ளேயிருந்து சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது. எட்டி உள்ளே பார்த்தான். அந்தப் பெண் சமைத்துக்கொண்டிருந்தாள். அருகில் அவளுடைய குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்தது. அவள் குழந்தையைச் சமாதானப்படுத்தினாள். ஆனாலும் அது பிரவாதமாக அழுதவாறு இருந்தது. மறுபடி சமாதானப்படுத்த முயன்றாள். அக்குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. கோபம் தலைக்கேறிய அந்தப் பெண் குழந்தையைத் தூக்கு எரியும் அடுப்பினுள் செருகி விட்டாள்! குழந்தை எரிந்து சாம்பலானது!
*ஹரிகுமார்*
No comments:
Post a Comment