Sunday, March 15, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 37*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை -7*

சீடன் வேடத்திலிருந்த இளவரசன் வஜ்ரமகுடன், “என்னுடைய குரு இதை இன்ன விலைக்கு விற்று வரச் சொன்னார். மற்றபடி எனக்கொன்றும் தெரியாது.” என்றான்.

தலைமைக் காவலர் அவனுடன் வந்து குருநாதரைப் பார்த்து அந்த மாலை பற்றிய விவரங்களைக் கேட்டார்.
" நான் ஒரு சந்நியாசி. ஊர் ஊராகச் செல்பவன். நேற்று இரவு இங்கு வந்தேன். நடு இரவில் பேய் பிடித்த பெண்ணொருத்தி, ஆண் குழந்தை ஒன்றை எடுத்து வந்தாள். அந்தக் குழந்தையை அருகிலுள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றாள். என் ஞான திருஷ்டியால் அக்குழந்தை இந்த நாட்டின் இளவரசன் என்பதை அறிந்து அவளைத் தடுக்க ஓடினேன். அவளோ என்னைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள். கந்தர் குழந்தையை என்ன செய்தாளோ. அவளுடன் சண்டையிட்டதில் அவள் கழுத்திலிருந்த முத்து மாலை என் கையோடு வந்துவிட்டது. மாலையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? விற்றால் வழிச்செலவுக்கு ஆகும் என்பதால் விற்று வரச் சொன்னேன். சண்டையிட்டதில் என் சூலாயுதத்தால் அவளது இடுப்பில் கீறல் ஏற்பட்டது. அதை வைத்து அடையாளம் காணலாம்." என்று அவர் நம்பும்படியாகச் சொன்னான்.

தலைமைக் காவலர் யோசித்தார்.

‘மாலை பத்மாவதியுடையது. அப்படியென்றால் அவளுக்குத்தான் பேய் பிடித்திருக்கிறதா? முதலில் அவள் இருப்பில் இந்தச் சந்நியாசி சொன்ன சூலாயுதக் குறி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அது உண்மையாயின் அரசரிடம் சென்று தெரிவிக்க வேண்டும்.’

அவருடைய வேலைக்காரக் கிழவி ஒருத்தியை விட்டு பத்மாவதியைச் சோதித்து பார்க்க அனுப்பினான். அவளும் போய் விட்டு வந்து சூலாயுதக் இருப்பதாகச் சொன்னாள். இந்தச் செய்தியைத் தலைமைக் காவலர் மன்னனிடம் சொன்னார். மன்னனும், தந்தச் சிற்பி சங்கிராம வர்த்தனரின் மகள் பத்மாவதி தான் பேய் பிடித்தவள் என்ற முடிவுக்கு வந்தான். அவள் தான் தன் மகனைக் கொன்றவள் என்ற முடிவுக்கு வந்தான். அவளை என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக அரசன், சந்நியாசியைச் சந்தித்தான். சந்நியாசியின் ஆலோசனைப்படி பத்மாவதியை ஊருக்குள் வரக்கூடாது என்று நடுக்காட்டில் விட்டுவிட்டு வரச் செய்தான்.

தனித்துடைப்பட்ட பத்மாவதி தன் விதியையும் பெற்றோரையும் நினைத்து அழுது கொண்டிருந்தாள். அனைவரும் சென்ற பிறகு தங்கள் வேடங்களைக் களைந்து விட்டு வஜ்ரமகுடனும் புத்திசரீரனும் பத்மாவதியைச் சந்தித்து நடந்தவற்றைக் விளக்கினர். அவளும் அவர்களுடன் வரச் சம்மதித்துக் கிளம்பினாள். இளவரசனைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஆனால் அவளது தந்தையும் தாயும் மகளைப் பிரிந்த சோகம் தாளாமல் ஒருவர் பின் ஒருவராய் இறந்து போயினர்.

வேதாளம் முதல் கதையைச் சொல்லி முடித்தது.

"ஆயினும் விக்கிரமாதித்தா எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதை நீதான் தீர்த்து வைக்க வேண்டும் ?".

No comments:

Post a Comment