Monday, March 2, 2020

ராகு தசையில் செய்ய கூடாதது 3/3/2020 செவ்வாய்

ராகு தசையில் செய்ய கூடாதது


வீட்டில் நாகர் விக்கிரகம் வைத்து வழிபட கூடாது..
பாம்பு புத்துக்கு பால் ஊற்றுவது கூடாது..
ஜாதகம் ஒத்துழைத்தால் உக்கிர தெய்வ வழிபாடு செய்யலாம், குல தெய்வம் என்றால் வழிபடலாம், மற்றவர்கள் ஜாதகத்தை ஆராயமால் உக்கிர தெய்வ வழிபாடு கூடாது..
கருப்பு அல்லது கரு நீல வண்ணங்களை உபயோகிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்..
தொழில் அல்லது வேலையில் மாற்றம் தானாகவே அமைந்தால் ஏர்க்கலாம், ஜாதகர் சுயமாக முயற்சி செய்து மாற்றங்களை கொண்டுவர கூடாது..
வெளிநாடு செல்ல வாய்ப்பு தானாகவே அமைந்தால் ஏர்க்கலாம், சுற்றுலா அல்லது வேறு விஷயமாக வெளிநாட்டு பயணம் செய்ய வேண்டிய நிலை வந்தால் ஜோதிடரை ஆலோசித்து மேற்கொள்ளவும்..
பெண்கள் நெற்றியில் பாம்பு பொட்டு வைக்க கூடாது..
வீட்டில் பூஜை அறையில் விளக்கு எப்போதும் எரிவது நலம்..
இரவு 11 மணிக்கு மேல் பயணங்களை தவிர்ப்பது நலம்..

காடு மலை பிரதேசங்கள் செல்லும் போது அதிக கவனம் தேவை, இருட்டுவதற்க்குள் பயணத்தை முடிப்பது நலம்..
பெண்கள் விஷயத்தில் ஆண்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம்..
பெண்கள் ஆண்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நலம்..
ராகு தசை நடக்கும் நபர் தன் வாழ்வில் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும் கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், செய்யாமல் அடக்கி வாசிப்பது நலம்..
ராகு தசையில் உங்கள் வார்த்தையில் கவனம் தேவை..
ராகு தசை நடப்பில் உள்ளவர்கள் மது, புகைபிடிப்பதை தவிர்த்தல் நலம்..
வீட்டில் பூச்சி, எறும்பு, மற்றும் வேறு வகையான பறக்கும் பூச்சிகள் தொல்லை ஏற்பட்டால் ராகு வேலைசெய்கிறார் என்று அர்த்தம், ஜாதகத்தில் ராகு கெடுதல் செய்யும் நிலையில் இருப்பவர்கள் உடனடியாக இதை சரி செய்வது நலம்..
ராகு தசை நடப்பவர்கள், இரவில் வேலை மற்றும் தொழிலில் கொடுக்கல் வாங்கல்  வைத்து கொள்ளாமல் இருப்பது நலம்..
ராகு தசை நடப்பில் உள்ள போது பிச்சை இடுவதை நிறுத்துங்கள்..
வீட்டில் உள்ள பெரியவர்களை மரியாதை குறைவாக நடத்த கூடாது..
கர்ம காரியங்கள் செய்யாமல் இருக்க கூடாது..
உழைப்பவர்களுக்கு ஏற்ற ஊதியத்தை கொடுத்து விடவேண்டும், உழைப்பவர்களை ஏமாற்ற கூடாது, முக்கியமாக செருப்பு தைப்பவர், சாக்கடை அடைப்பு நீக்குபவர், தண்ணீர் தருபவர் இவர்களை..
இரவு நேர பணிக்கு செல்பவர்கள் மிகுந்த இருட்டாக இருக்கும் பகுதியில் பயணிக்க வேண்டாம், விளக்கு வெளிச்சம் உள்ள இடங்களே பாதுகாப்பு..
ராகு தசை நடப்பவர்கள் இரவில் நீண்ட நேரம் கண் விழிக்கும் நிலை ஏற்ப்படும், சிலருக்கு தூக்கம் வராது, அவர்கள் தொலைகாட்சி பார்ப்பதை தவிர்க்கவும்..

குறிப்பு: மேலே கூறியுள்ளவை பொதுவான பலன் ஜனன ஜாதகத்தில் ராகுவின் நிலை வைத்தே இதில் எவை பொருந்தும் என்பதை முடிவு செய்ய வேண்டும்..

ஓம் நம சிவாய..

No comments:

Post a Comment