Monday, March 16, 2020




ஸ்ரீபிரம்மரிஷி  ஜோதிட மையம்
அலுவலகம்



எமது அலுவலக முகப்புத் தோற்றம்


அலுவலக முகவரி 

வடக்கிபாளையம் ரோடு,
R.பொன்னாபுரம் பிரிவு பஸ் ஸ்டாப்,
பொள்ளாச்சி 642 002


Facebook மற்றும் வெப்சைட்‌‌ முகவரி
              பிரம்மரிஷி ஜோதிட மையம்
      www.brammarishijothidam.blogspot.com


Sunday, March 15, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 37*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை -7*

சீடன் வேடத்திலிருந்த இளவரசன் வஜ்ரமகுடன், “என்னுடைய குரு இதை இன்ன விலைக்கு விற்று வரச் சொன்னார். மற்றபடி எனக்கொன்றும் தெரியாது.” என்றான்.

தலைமைக் காவலர் அவனுடன் வந்து குருநாதரைப் பார்த்து அந்த மாலை பற்றிய விவரங்களைக் கேட்டார்.
" நான் ஒரு சந்நியாசி. ஊர் ஊராகச் செல்பவன். நேற்று இரவு இங்கு வந்தேன். நடு இரவில் பேய் பிடித்த பெண்ணொருத்தி, ஆண் குழந்தை ஒன்றை எடுத்து வந்தாள். அந்தக் குழந்தையை அருகிலுள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றாள். என் ஞான திருஷ்டியால் அக்குழந்தை இந்த நாட்டின் இளவரசன் என்பதை அறிந்து அவளைத் தடுக்க ஓடினேன். அவளோ என்னைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள். கந்தர் குழந்தையை என்ன செய்தாளோ. அவளுடன் சண்டையிட்டதில் அவள் கழுத்திலிருந்த முத்து மாலை என் கையோடு வந்துவிட்டது. மாலையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? விற்றால் வழிச்செலவுக்கு ஆகும் என்பதால் விற்று வரச் சொன்னேன். சண்டையிட்டதில் என் சூலாயுதத்தால் அவளது இடுப்பில் கீறல் ஏற்பட்டது. அதை வைத்து அடையாளம் காணலாம்." என்று அவர் நம்பும்படியாகச் சொன்னான்.

தலைமைக் காவலர் யோசித்தார்.

‘மாலை பத்மாவதியுடையது. அப்படியென்றால் அவளுக்குத்தான் பேய் பிடித்திருக்கிறதா? முதலில் அவள் இருப்பில் இந்தச் சந்நியாசி சொன்ன சூலாயுதக் குறி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அது உண்மையாயின் அரசரிடம் சென்று தெரிவிக்க வேண்டும்.’

அவருடைய வேலைக்காரக் கிழவி ஒருத்தியை விட்டு பத்மாவதியைச் சோதித்து பார்க்க அனுப்பினான். அவளும் போய் விட்டு வந்து சூலாயுதக் இருப்பதாகச் சொன்னாள். இந்தச் செய்தியைத் தலைமைக் காவலர் மன்னனிடம் சொன்னார். மன்னனும், தந்தச் சிற்பி சங்கிராம வர்த்தனரின் மகள் பத்மாவதி தான் பேய் பிடித்தவள் என்ற முடிவுக்கு வந்தான். அவள் தான் தன் மகனைக் கொன்றவள் என்ற முடிவுக்கு வந்தான். அவளை என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக அரசன், சந்நியாசியைச் சந்தித்தான். சந்நியாசியின் ஆலோசனைப்படி பத்மாவதியை ஊருக்குள் வரக்கூடாது என்று நடுக்காட்டில் விட்டுவிட்டு வரச் செய்தான்.

தனித்துடைப்பட்ட பத்மாவதி தன் விதியையும் பெற்றோரையும் நினைத்து அழுது கொண்டிருந்தாள். அனைவரும் சென்ற பிறகு தங்கள் வேடங்களைக் களைந்து விட்டு வஜ்ரமகுடனும் புத்திசரீரனும் பத்மாவதியைச் சந்தித்து நடந்தவற்றைக் விளக்கினர். அவளும் அவர்களுடன் வரச் சம்மதித்துக் கிளம்பினாள். இளவரசனைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஆனால் அவளது தந்தையும் தாயும் மகளைப் பிரிந்த சோகம் தாளாமல் ஒருவர் பின் ஒருவராய் இறந்து போயினர்.

வேதாளம் முதல் கதையைச் சொல்லி முடித்தது.

"ஆயினும் விக்கிரமாதித்தா எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதை நீதான் தீர்த்து வைக்க வேண்டும் ?".

Monday, March 9, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 36*



*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை -6*

நாய் செத்ததைப் பார்த்ததும் இராஜகுமாரன் திகைத்தான்! மந்திரி குமாரன் நகைத்தான்.

"புத்தி சரீரா ! எதனால் இப்படி ஆகிவிட்டது?"

"இளவரசே! என் புத்திசாலித்தனம் அவளுக்குப் புரிந்து போயிற்று! உங்கள் இருவரின் இரகசியம் என்னால் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறாள்! மேலும் உனது அன்பை முழுமையாக அவள் மட்டுமே பெற வேண்டும் என்று விரும்புகிறாள்! அதற்கு நான் இடைஞ்சல் என்று கருதியே கொல்லவும் துணிந்தாள்!”

"என்ன !”

"அவசரப்படாதே! அவளைச் சொல்லிக் குற்றமில்லை! அவளை அவள் உறவுகளிலிருந்தும் ஊரிலிருந்தும் பிரித்து அழைத்துச் செல்ல வேண்டும்! அப்போது நம்முடன் பழகுவாள்! எல்லாம் சரியாகிவிடும். அதற்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள்."

"நண்பா! புத்திசரீரன் என்ற பெயர் உனக்கு வெகு பொருத்தம்!”

வெளியே போயிருந்த பாட்டி அவசரமாய் உள்ளே வந்து இருவரிடமும் சொன்னாள், "இந்த ஊர் அரசனின் ஆண் குழந்தை செத்துப் போனதாம்.”

"இளவரசே, வஜ்ரமகுடா! இந்தச் செய்தியையும் நாம் பயன்படுத்திக் கொள்வோம்! இன்றிரவும் நீ எதுவும் அறியாத மாதிரி பத்மாவதி வீட்டுக்குச் செல். அவளுக்கு உணவில் இந்த மருந்தைக் கலந்து மயங்கச் செய்துவிடு. அவள் மதிமயங்கிக் கிடக்கும்போது அவள் இடுப்புப் பகுதியில் உன் நகங்களினால் அருகருகே மூன்று கீறல்களை இட்டு விடு. பிறகு அவளது நகைகளை அவிழ்த்துக்கொண்டு இங்கே வந்து விடு. அடுத்துச் செய்யவேண்டுவதை நான் பார்த்துக்கொள்கிறேன்."

வஜ்ரமகுடன், பத்மாவதியின் மாளிகைக்கு இரவு நேரத்தில் சென்றான். அவளுடன் இன்பமாகப் பேசிக் கிடந்தான். அவளுக்குத் தெரியாமல் அவள் உணவில் மயக்க மருந்தைக் கலந்து மயங்கச் செய்தான். பத்மாவதி மயங்கிச் சாய்ந்தாள். படுக்கையில் அவளைப் படுக்க வைத்து, சூலாயுதத்தால் கோடு போட்டாற் போல, அவள் இடுப்பில் நகத்தால் மூன்று கோடு இழுத்தான். அவளது நகைகளை அவிழ்த்துக்கொண்டு புத்திசரீரனிடம் வந்து கொடுத்தான்.

புத்திசரீரன் இனி என்ன செய்ய வேண்டும் எனத் திட்டம் இட்டு, அதனை வஜ்ரமகுடனுக்கு விளக்கினான். மறுநாள் திட்டத்தைச் செயல்படுத்தினர்.

அமைச்சர் மகன் புத்திசரீரன் முனிவரைப் போல வேடம் தரித்து ஊருக்கு வெளியில் அமர்ந்து கொண்டான். இராஜகுமாரன் வஜ்ரமகுடன் அவனது சீடனைப் போல வேடம் தரித்தான். பத்மாவதியின் நகைகளுள் முத்துமாலை ஒன்றை எடுத்துக்கொண்டு நகரின் கடைவீதிக்கு வந்தான் சீடனாக வேடமிட்ட இளவரசன். முத்துமாலையை எல்லாரும் பார்க்கும்படியாகத் தூக்கிப் பிடித்தபடி விலை பேசினான். விலை கேட்டவர்களுக்கு அவர்கள் வாங்க முடியாத கூடுதல் விலையைச் சொன்னான். அரண்மனைக் காவலர்கள் சிலர் அந்த வழியாக, பத்மாவதியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நகையைத் தேடி வந்தனர். இளவரசன் மீது சந்தேகம் வரவே அவனைப் பிடித்துத் தலைமைக் காவலரிடம் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தலைமைக்காவலர் இளவரசனிடம், "மரியாதையாகச் சொல்! பார்த்தால் சந்நியாசி மாதிரி இருக்கிறாய்! இந்த முத்துமாலை உனக்கு எப்படிக் கிடைத்தது?

*ஹரி

Monday, March 2, 2020

 நமது குலதெய்வத்தை அனைவரும் தவறாமல்  கைதொழுது வரவேண்டும்.

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது.
3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.
4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.
5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.
8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.
9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.
12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.
13). குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
14). அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
15). எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
16). ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.
17). குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
18). குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.
19). இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.
20). குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
21). குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.
22). வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
23). தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
24). குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பது.
25). குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.
26). குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.
27). குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது.
28). குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
29). குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.
30). துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்.
31). நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.
32). குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் இருங்கள்.
33). ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.
34). குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. [ ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.
35). குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.
36). குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
37). குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால் தான் "குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது" என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது.
38). நாம் நம் குலதெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள்[இன்னல்கள்] யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
39). உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
40). நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
41). மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள்.
குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள்.
42). குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது.
43). எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கை அமையாது.
44). குலதெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது.
45). பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள்,குலதெய்வங்கள் ஆகாது.
46). இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான்.
47). மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
48). நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
49). குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர்.
50). உங்களின் குலதெய்வம் அசைவம் வைத்து படைக்கும் குலதெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள். நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம்.
51). பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.
52). குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை.
53). ஆண்டியை அரசனாக்குவதும் அரசனை ஆண்டி ஆக்குவதும் நம் குலதெய்வமே.
54). அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.
55). குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல் காத்து நிற்கும்.
56). குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.
                                                               தாயே துணை!
                                                             🚩🚩🚩💐💐💐🙏🙏🙏🦌🦌

ராகு தசையில் செய்ய கூடாதது 3/3/2020 செவ்வாய்

ராகு தசையில் செய்ய கூடாதது


வீட்டில் நாகர் விக்கிரகம் வைத்து வழிபட கூடாது..
பாம்பு புத்துக்கு பால் ஊற்றுவது கூடாது..
ஜாதகம் ஒத்துழைத்தால் உக்கிர தெய்வ வழிபாடு செய்யலாம், குல தெய்வம் என்றால் வழிபடலாம், மற்றவர்கள் ஜாதகத்தை ஆராயமால் உக்கிர தெய்வ வழிபாடு கூடாது..
கருப்பு அல்லது கரு நீல வண்ணங்களை உபயோகிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்..
தொழில் அல்லது வேலையில் மாற்றம் தானாகவே அமைந்தால் ஏர்க்கலாம், ஜாதகர் சுயமாக முயற்சி செய்து மாற்றங்களை கொண்டுவர கூடாது..
வெளிநாடு செல்ல வாய்ப்பு தானாகவே அமைந்தால் ஏர்க்கலாம், சுற்றுலா அல்லது வேறு விஷயமாக வெளிநாட்டு பயணம் செய்ய வேண்டிய நிலை வந்தால் ஜோதிடரை ஆலோசித்து மேற்கொள்ளவும்..
பெண்கள் நெற்றியில் பாம்பு பொட்டு வைக்க கூடாது..
வீட்டில் பூஜை அறையில் விளக்கு எப்போதும் எரிவது நலம்..
இரவு 11 மணிக்கு மேல் பயணங்களை தவிர்ப்பது நலம்..

காடு மலை பிரதேசங்கள் செல்லும் போது அதிக கவனம் தேவை, இருட்டுவதற்க்குள் பயணத்தை முடிப்பது நலம்..
பெண்கள் விஷயத்தில் ஆண்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம்..
பெண்கள் ஆண்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நலம்..
ராகு தசை நடக்கும் நபர் தன் வாழ்வில் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும் கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், செய்யாமல் அடக்கி வாசிப்பது நலம்..
ராகு தசையில் உங்கள் வார்த்தையில் கவனம் தேவை..
ராகு தசை நடப்பில் உள்ளவர்கள் மது, புகைபிடிப்பதை தவிர்த்தல் நலம்..
வீட்டில் பூச்சி, எறும்பு, மற்றும் வேறு வகையான பறக்கும் பூச்சிகள் தொல்லை ஏற்பட்டால் ராகு வேலைசெய்கிறார் என்று அர்த்தம், ஜாதகத்தில் ராகு கெடுதல் செய்யும் நிலையில் இருப்பவர்கள் உடனடியாக இதை சரி செய்வது நலம்..
ராகு தசை நடப்பவர்கள், இரவில் வேலை மற்றும் தொழிலில் கொடுக்கல் வாங்கல்  வைத்து கொள்ளாமல் இருப்பது நலம்..
ராகு தசை நடப்பில் உள்ள போது பிச்சை இடுவதை நிறுத்துங்கள்..
வீட்டில் உள்ள பெரியவர்களை மரியாதை குறைவாக நடத்த கூடாது..
கர்ம காரியங்கள் செய்யாமல் இருக்க கூடாது..
உழைப்பவர்களுக்கு ஏற்ற ஊதியத்தை கொடுத்து விடவேண்டும், உழைப்பவர்களை ஏமாற்ற கூடாது, முக்கியமாக செருப்பு தைப்பவர், சாக்கடை அடைப்பு நீக்குபவர், தண்ணீர் தருபவர் இவர்களை..
இரவு நேர பணிக்கு செல்பவர்கள் மிகுந்த இருட்டாக இருக்கும் பகுதியில் பயணிக்க வேண்டாம், விளக்கு வெளிச்சம் உள்ள இடங்களே பாதுகாப்பு..
ராகு தசை நடப்பவர்கள் இரவில் நீண்ட நேரம் கண் விழிக்கும் நிலை ஏற்ப்படும், சிலருக்கு தூக்கம் வராது, அவர்கள் தொலைகாட்சி பார்ப்பதை தவிர்க்கவும்..

குறிப்பு: மேலே கூறியுள்ளவை பொதுவான பலன் ஜனன ஜாதகத்தில் ராகுவின் நிலை வைத்தே இதில் எவை பொருந்தும் என்பதை முடிவு செய்ய வேண்டும்..

ஓம் நம சிவாய..