குருவே
போற்றி! வாலைத்தாயே துணை
திருவே போற்றி!
ஆதிசங்கரர் ஜாதகம்
செ
|
சூ சு
பு
|
ரா
|
சந்
|
வி
|
இராசி
|
ல
|
|
சனி
|
கே
|
சுக்
ரா
|
சூ
|
||
அம்சம்
|
செ
|
||
சந்
|
சனி
பு
வி
|
கே
|
ல
|
இன்று ஸ்ரீசங்கர ஜெயந்தி.
வைசாக சுத்தம் வளர்பிறை பஞ்சமி திதியில்
திருவாதிரை நட்சத்திரம் கூடிய
நன்னாளில் கேரளாவில் உள்ள காலடி என்னும் சிற்றூரில் சிவகுரு-ஆர்யாம்பாள் என்கிற தம்பதியருக்கு மகனாக சங்கரர் அவதரித்தார்
. கேரளாவில் உள்ள வடக்குநாதர்
கோயிலுள்ள சிவனை வழிபட்டு வந்த குழந்தையில்லா இத்தம்பதியருக்கு சிவனின் அருளால்
ஒரு மகன் பிறக்க, அவனுக்கு சங்கரன் எனப் பெயர் சூட்டி
அழைத்தனர்.
இப்புண்ணிய பரத கண்டத்தில் ஸநாதன தர்மம் அந்நியர்களின் படையெடுப்பால் நசிந்து போய்க் கொண்டிருந்த காலக்கட்ட்த்தில்தான் கிட்டத்தட்ட 6ஆம் நூற்றண்டில் இவர் அவதரித்தார்.
ஆன்மீகத்தில் சிறந்து விளங்கி ஆத்ம சாதனை பல புரிந்து இறைவனைக் கண்டு தரிசித்த இவர், அத்வைத சித்தாந்தத்தை பரப்பி இந்து மதத்தின் ஆணிவேராக திகழ்ந்தவர்.
நசிந்து கிடந்த இந்து மதத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீர்படுத்தி மக்கள் எளிய முறையிலே இறைவழிபாட்டை செய்திட ஷண்மதத்தை ஸ்தாபித்தார்.
மக்கள் போற்றும் மகாஞானியாக விளங்கிய இவர், இந்தியாவில் 4 பெரிய மடங்களையும் தோற்றுவித்தார். அதில் காஞ்சிபுரத்தில் உள்ள மடம் காமகோடி பீடமாக அன்னை ஸ்ரீகாமாக்ஷியின் ஆக்ஞையினால் இவரை சர்வக்ஞராக அமர வைத்து அழகு பார்த்தது. 

அந்நாளில் நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் தெளிவுறக் கற்று பிரம்மசூத்திரத்திற்கு விளக்கவுரை எழுதினார். கனகதாரா ஸ்தோத்திரம், செளந்த்ர்ய லஹரி, பஜ கோவிந்தம் ஸுப்ரமண்ய புஜங்கம் போன்ற அதி அற்புதமான செய்யுட்களையும், பாடல்களையும் இயற்றினார். பல வேத விற்பன்னர்களை தேடிச் சென்று சமய வாதம் புரிந்து வெற்றியும் பெற்று அத்வைத சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்பி வந்தார். உலகமே போற்றும்வண்ணம் ஜகத்குருவாகவும் திகழ்ந்தார்.
அம்மகானது ஜாதகத்தை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.தொடரும்......
No comments:
Post a Comment