சித்தர் போற்றி! சிவம் போற்றி!
நவநாயகர் போற்றி! வாலையே போற்றி!
குருவே துணை!
இன்று நரசிம்மர் ஜெயந்தி
குடவறைக் கோயில்களில் பிரசித்தி
பெற்றது நாமக்கல் நரசிம்மசாமி கோயில். ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்ட இந்த
கோயில், கிபி.7ம் நூற்றாண்டில்
ஆதியேந்திர குணசீலன் என்ற பல்லவமன்னரால் சீரமைக்கப்பட்டது என்று இங்குள்ள
கல்வெட்டுக்குறிப்புகள் கூறுகின்றன. இரணியனின் கொடுமைகளில் இருந்து பிரகலாதனை
காப்பதற்கு மகாவிஷ்ணு எடுத்தது தான் நரசிம்மஅவதாரம். இரண்யவதத்திற்கு பிறகு
உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால்
சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம
வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலய குளத்தில்
நின்று தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலய குளத்தை
கண்டதும், தனது
தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார்.
தாகம் தீர்த்த அனுமாரால்
சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. அப்படியே அந்த
இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்த நரசிம்மருக்காக கட்டப்பட்டது தான், இந்த அற்புத
குடவறைக் கோயில் என்கின்றது தலவரலாறு. பாறையில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ள
நரசிம்மர், சிம்மாசனத்தின்
மீது அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக
அருள்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின்
கூர்மையும் நுட்பத்துடன் தென்படுகிறது. திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர்
ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நாமகிரித்
தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவற்றின் ஒரு
சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களைப்
பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரமாக உள்ளது. நாமக்கல் மலைக்கோட்டையை
மகாவிஷ்ணுவின் கோட்டை என்கின்றனர் பக்தர்கள்.
மலையின்
கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே
வரதராஜராகவும், மலையின்
மேல் நரசிம்மராகவும் காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும்
இங்கு பூஜிக்கப்படுவதால், இந்த
தலத்தை மும்மூர்த்தி தலம் என்று அழைக்கின்றனர். மூர்த்திகளுக்கும் நரசிம்மர்
சன்னதியில் மூன்று காலப்பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று
நரசிம்மர் ஜெயந்தி என்பதால் இவரை வழிபட்டால் உடனடியாகத் தோன்றி
அருள்புரிவார். அதனாலேயே நாளை என்பதே இவரிடத்தில் இல்லை என்றோர் வாக்கும்
உண்டு. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும் என்பதால்.
தீராத கடன், பிணி, எதிரிகளின் தொந்தரவு
ஆகியவை தீர இவரை வழிபடலாம்.
வழக்குகளில் தொய்வு, பில்லி சூன்யம்,
காரியத்தடை ஆகியவற்றில் வெற்றி பெறலாம்.
பானகம், நீர் மோர், பழங்கள், வெற்றிலை ஆகியவை வைத்து இவரை வழிபட்டால் பூரண அருள். பெறலாம்.
நரசிம்மர் காயத்திரி
ஓம் வஜ்ர நகாய வித்மஹே!
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி!
தந்நோ ந்ருஸிம்ஹ ப்ரசோதயாத்!!
No comments:
Post a Comment