Monday, March 29, 2021

 மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),. எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி.


மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.


நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.


2. சந்தஸ்


சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.


3. தேவதை


தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதா

நியாசம்.


4. பீஜம்


மிகச் சிறிய ஆலம்விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்துக்குப் பீஜம் என்பா்.


இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்கு வந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா். பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.


5. சக்தி


அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.


6. கீலகம்


சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.


மந்திரங்களின் ஆற்றல்


மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம். பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது.


இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா். இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம்

என்று குறிப்பிட்டனா்.


மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா்.


இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்: காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்: சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள்.


ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.


மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை. விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations) நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.


ஒவ்வொரு ராகத்துக்கும் ராக தேவதைகள் உண்டு என்று இசை நூல்கள் கூறுகின்றன.


அக்பரின் சபையில் தான்சேன் என்ற இசைமேதை இருந்தார். இரவு நேரத்திற்குரிய ஒரு ராகத்தைப் பாடுமாறு அரசா் கட்டளை இட்டாராம். அப்போது தான்சேன் ஒரு மந்திரத்தை உச்சரித்தவுடன் அரண்மனையின் எல்லாப் பக்கங்களிலும் இருள் கவ்வியதாம். சில மந்திர உச்சாடனங்களின் மூலம் இயற்கையையே வசப்படுத்தலாம் என்று தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.


இறையருளைப் பெற


இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய

வழி முறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.


மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள். எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை 1. தூல வடிவம் 2. சூக்கும வடிவம் 3. அதி சூக்கும வடிவம். அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம். முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு.


எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.


மந்திரங்கள் – அதி தேவதைகள்


உலகில் உள்ள பொருள்களை இருவகை 1. அசையும் பொருள் 2. அசையாப்பொருள். அசைபவை உயிர்கள். அசையாதவை ஜடப் பொருள்கள். இவ்வாறுள்ள எல்லாப் பொருள்களையும் இடமாகக் கொண்டு அவற்றை இயக்கி வைக்கிற அதி தேவதைகள் உண்டு. அந்த அதிதேவதைக்கு மந்திரங்கள் உண்டு. மந்திரங்களால் ஆகாத காரியம் இல்லை. இம்மந்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது ஸ்ரீ வித்யை என்கிறது லலிதா சகஸ்ர நாமம். பெண் தெய்வங்கட்குரிய மந்தரங்களை ஸ்ரீ வித்யை என்பா். ஆண் தெய்வங்கட்குரிய மந்திரங்களை மந்திரம் என்றே குறிப்பிடுவா்.


மந்திரமும் விதையும்


ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு தெய்வத்தின் சொரூபம் ஆகும். ஒவ்வொரு மந்திரத்திலும் உயிர்ச் சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அவை விதைகளைப் போன்றவை. விதை முளைத்துப் பலன் தர வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தேவையல்லவா?


ஒரு விதை முளைத்துப் பலன் கொடுக்க வேண்டுமானால் 1. உரிய காலம் வேண்டும். 2. உரிய நிலம் வேண்டும். 3. பக்குவப்பட்ட விதையாக இருக்க வேண்டும். 4. பழக்கப்பட்டவன் விதைக்க வேண்டும். 5. நல்ல கைராசி

வேண்டும். 6. விதை முளைக்கும் போது கூடவே களைகள் தோன்றும். அவற்றைக் களைய வேண்டும். 7. ஆடு மாடுகள் மனிதா்கள் போன்ற உயிர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். 8. நீா் பாய்ச்சி உரம் போட வேண்டும். 9. நன்கு விளைந்ததும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும்.


அதுபோலவே மந்திரங்களையும் உரிய காலத்தில் ஜெபிக்க வேண்டும். அவை மனத்தில் பதியும்படி மனநிலை அமைய வேண்டும். ஒரு குருவின் மூலமாகப் பெற வேண்டும். சந்தேகம் போக வேண்டும். அவ்வப்போது குருவைத் தரிசித்து மந்திர ஜெபத்துக்கு வலுவை ஊட்டிக் கொள்ள வேண்டும். மந்திரம் பலன்தர ஆரம்பிக்கும்போது அகங்காரம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


மந்திர உபாசனை


எவன் ஒருவன் 14 வருடம் ஒரு குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வருகிறானோ அவனுக்கு அந்த மந்திரம் நிச்சயமாகப் பலன் கொடுக்கும். எனக்கு மந்திரம் பலிக்கவில்லை, பலன் தரவில்லை என்று மந்திர ஜெபத்தை விட்டு விடுபவா்கள் பாவிகள். மந்திரம் பலிப்பதுபோலப் பலித்து ஆளையும் கீழே தள்ளிவிடும்.


இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு நம்பிக்கையோடும், முயற்சியோடும் பக்தியோடும் உபாசிக்கிறவனே நல்ல உபாசகன்.


பலவகை மந்திரங்கள்


சில மந்திரங்கள் காய்களாக இருக்கிற நிலையில் பலன் தரும். சில பழுத்த பின் பலன் தரும். சில விதையாக இருக்கிற நிலையில் பலன் தரும். முட்செடி போன்ற மந்திரங்கள் உண்டு. தீமை தரும் மந்திரங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலான மந்திரம் ஸ்ரீ வித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை மந்திரம். அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, ஸ்ரீவித்யை என் ஆறு வகைப்படும். ஓா் எழுத்துக் கொண்ட புவனேஸ்வரியின் பீஜ மந்திரம் உடையது ஏகாட்சரி, மூன்று பீஜ

மந்திரங்கள் கொண்ட வாலையின் மந்திரம் திரியட்சரி. சித்தா்கள் உபாசித்து உயா்வடையக் காரணமான மந்திரம் இது.


ஒன்பதாவது எழுத்துடைய அந்தரியின் மந்திரம் நவாட்சரி


15 பீஜங்கள் உடைய புவனாபதியின் மந்திரம் பஞ்சதசாட்சரி. ஸ்ரீம் என்னும் பீஜத்தை முதலில் கொண்ட 16 எழுத்து மந்திரம் சோடசி. 28 பீஜம் கொண்ட மந்திரம் மகா சோடசாட்சரி. 27 பீஜம் உள்ள மந்திரம் ஸ்ரீ பராவித்தை எனப்படும். சோடசி மந்திர உபாசனை செய்தவா் பகவான் இராமகிருஷ்ணா்.


ஸ்ரீவித்யை உபாசகா்கள்


சக்தியின் ஸ்ரீவித்யை மந்திரங்களை உபாசித்து அருள் பெற்றவா்கள் உண்டு. இராமன், பலராமன், இலக்குவன், பரதன், சூரியன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரமன், திருமால், சிவன், கணபதி, கந்தன், மன்மதன், நந்தி, மனு, உலோபா முத்திரை, அகத்தியா், துா்வாசா், சநகாதி முனிவா்கள், திருமூலா் இவா்களெல்லாம் ஸ்ரீவித்யை மந்திரம் ஜெபித்து உயா்நிலை அடைந்தவா்களே ஆதிபராசக்தியின் அருள்பெற்று உயா்ந்தவா்களே!


தாடகையைக் கொல்ல இராமனுக்கு விசுவாமித்திரா் உபதேசம் கொடுத்த மந்திரம் பாலா மந்திரம். அதனை “வாலை மந்திரம்” என்பா். சித்தா்களின் உபாசனைத் தெய்வம் வாலையே ஆவாள்.


ஸ்ரீவித்யை போல சிறந்த இன்னொரு மந்திரம் உண்டு. அசபா காயத்ரி என்று பெயா். அது ஹம்சம், ஸோஹம் என்று இரண்டு வகை.


அசபை, அசபா, காயத்ரி, அம்ச மந்திரம், அங்குச மந்திரம், ஜீவ மந்திரம் எனப் பலபெயா் இதற்குண்டு.


இதனைப் பயபக்தியுடன் ஜெபித்தால் இறந்தவா்களை எழுப்பலாம். நினைத்த எல்லாம் கைகூடும். முத்தி கிடைக்கும் கரநியாசம் அங்க நியாசம், அதற்கான முத்திரைகள் என விதிமுறைகளோடு ஜெபித்தால் பலன் உண்டு.


தெய்வமாகலாம்


ஒரு நிலைக்கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு எந்தக் கோலத்தில் நிற்கிறோமோ அந்தக் கோலத்தையே கண்ணாடி காட்டும். அதுபோல

ஒருவன் எந்தத் தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபம் செய்கிறானோ அந்த மந்திரத்திற்குரிய அதி தேவதையாகவே அவன் ஆகிவிடுகிறான். என்பது மந்திர சாத்திர விதி. அந்நிலையில் அவன் மந்திர ஆன்மாவாகி விடுகிறான் என்பது விதி. “மன ஒருமையோடு என் மந்திரங்களைப் படிக்கிறபோது நீயும் சக்தி மயமாய் ஆகிறாய் மகனே!” – என்பது நம் அன்னையின் அருள்வாக்கு. பறவை, விலங்கு, மரம் முதலிய அசையும் பொருள், அசையாப் பொருள் ஆகிய அனைத்துக்கும் மந்திரம் உண்டு. அதி தேவதைகள் உண்டு.


மந்திரங்களும் – பலன்களும்


மந்திரங்களின் துணையால் உலகியல் இன்பங்களிலிருந்தும், உலகக் கவா்ச்சியிலிருந்தும் விடுபட்டு முக்தியையும் பெறலாம். உலகியல் பொருள்களையும், இன்பங்களையும் அடையலாம்.


மந்திரத்தால் இங்கிருந்தபடியே தேவா்களையும் அழைக்கலாம். வசீகரம் முதலிய சக்திகளையும் பெறலாம். மந்திரத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். உடம்பிலே பஞ்ச பூதங்களை வெல்லும் ஆற்றல் வாய்ந்த மையங்கள் உண்டு. மந்திர சித்தி பெற்றவன் கூடுவிட்டுக் கூடு பாயலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கலாம். நினைத்த இடத்திற்குப் போகலாம். வரலாம். மற்றவா்கள் கண்ணுக்குத் தெரியாமலே உலாவலாம். தேவா் உலகமும் சென்று வரலாம். ஏன்? ஒருவா்க்கு மரணத்தையும் உண்டாக்கலாம்.


மகாலட்சுமி மந்திரம் என ஒன்று உண்டு. இம்மந்திரம் செல்வத்தை அள்ளிக் கொடுப்பது. ஆனால் எல்லோர்க்கும் பலன் தருவது இல்லை.


வறுமையில் வாடிய வித்யாரண்யா் இம்மந்திர ஜெபத்தால் வறுமையைப் போக்கிக் கொள்ள மகாலட்சுமி உபாசனையை மேற்கொண்டார். இறுதியில் மகாலட்சுமி அவருக்குக் காட்சி கொடுத்தாள். இந்தப் பிறவியில் உனக்குச் செல்வம் அளிக்க முடியாது. உன் பிராரத்துவ வினை இது. என்றாளாம். உடனே வித்யாரண்யா், பிறவியிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழி

ஒன்றை மேற்கொண்டார். சந்நியாசம் வாங்கிக் கொண்டால் புதுப்பிறவி எடுப்பதற்குச் சமம். ஆகவே சந்நியாசம் பெற்றுக் கொண்டார்.


மந்திர ஜெபத்துக்கான பலனை மகாலட்சுமி கொடுத்தாக வேண்டும் அல்லவா? உடனே அளவற்ற செல்வத்தை அள்ளிக் கொடுத்துவிட்டாள்.


வித்யாரண்யருக்கு இப்போது புதிய தரும சங்கடம் வந்து விட்டது.


சந்நியாசியாகி விட்டபிறகு பணத்தைத் தொடக்கூடாது. அடி தாயே! இந்தச் செல்வத்தை வைத்து சந்நியாசியாகிவிட்ட நான் என்ன செய்யப்போகிறேன் என்றாராம். என்ன செய்வாயோ…… தெரியாது. உனக்குக் கொடுத்து கொடுத்ததுதான் என்றாளாம் மகாலட்சுமி.


வேறுவழியின்றி இந்து சாம்ராஜ்யத்தை – விஜய நகரப் பேரரசை நிறுவுவதற்காக அரிகரா் என்ற அரசா்கட்கு அந்தச் செல்வத்தை அப்படியே கொடுத்து விட்டாராம்.


நினைத்த காரியத்தில் வெற்றியைக் கொடுப்பது வராகி மந்திரம். ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீமைகளை வலுவிழக்கச் செய்வது அஸ்வாரூடா மந்திரம்.


கா்ண பிசாசினி என்ற தேவதைக்குதிய மந்திரம் உண்டு. இம்மந்திர ஜெபம் சித்தியானால் அந்த உபாசகன் மற்றவா்கள் வாழ்வில் நடந்தவை நடக்க இருப்பவை, ஆகிய சம்பவங்களைத் தெரிந்து சொல்ல முடியும்.


ஆவஹந்தி தேவதை என்ற ஒரு தேவதை உண்டு. அவள் மந்திரததை உள்ளன்போடு ஜெபித்து வந்தால் ஒரு குடும்பத்தைப் பசியில்லாமல் காப்பாற்றும். “ஆவஹந்தியும் அடுப்பிலே நெருப்பும் இருந்தால் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை” என்பது கேரள நாட்டுப் பழமொழி.


தேள்கடி, பாம்புக்கடி, விஷம் இறக்க மந்திரம் உண்டு. எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க மந்திரம் உண்டு. வீட்டில் உள்ள கெட்ட தேவதைகளை விரட்ட மந்திரம் உண்டு. வீடு, தோட்டங்களில் திருடுகள் நடக்காமல் தடுக்க மந்திரம் உண்டு. நல்லது செய்யவும் மந்திரம் உண்டு. கெட்டது செய்யவும் மந்திரம் உண்டு.


எல்லா

மந்திரமும் எல்லோர்க்கும் பலித்து விடுவதில்லை. ஏன்?


தாமிரப் பாத்திரத்தில் தயிரை எடுத்துச் சென்றால் தயிர் கெட்டுப் போகும். சாக்கு மூட்டையில் தண்ணீரை முகா்ந்து கொண்டு செல்ல முடியாது. அது போலத்தான் மந்திரங்களும்!


அதன் குணத்துக்கேற்ற தன்மை படைத்தவா்கள் யாரோ அவா்களால் தான் பலன் பெற முடியும். இது தெரியாமால் தன் விருப்பப்படி மந்திரததைத் தேர்ந்தெடுத்து்ப பலன் காணாமல் பலா் தோற்று விடுகிறார்கள்.


உண்மையான உபாசகன் தன் உள்ளத்துக்கும் உடல் அமைப்புக்கும் மன நிலைக்கும் தக்கபடி ஒரு குருவிடமிருந்தே மந்திர உபதேசம் பெற வேண்டும்.


சிலருக்கு ஆண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். சிலருக்குப் பெண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். இவற்றையெல்லாம் தக்க குருமார்களிடமிருந்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும். இந்த மந்திரம் இவனுக்குப் பலன் தருமா என்று பார்த்தே குரு மந்திரம் சொல்வார். “சித்தாரி கோஷ்டம்” என்று அதற்குப் பெயா்.


குரு – மந்திரம் – இஷ்ட தெய்வம்


ஆன்ம முன்னேற்றம் பெற விரும்பும் ஒருவனுக்கு வலுவான அடித்தளம் மூன்று தேவை. 1. இஷ்ட தெய்வம் 2. மந்திரம் 3. குரு


ஒருவனது மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒரு இஷ்ட தெய்வத்தைத் தோ்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தெய்வத்திற்குதிய மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து உரிய முறையில் பூசை செய்து வர வேண்டும். ஒரு குருவின் தயவு வேண்டும். விவரம் தெரிந்தவா்கள் ஒரு குருவின் மூலம் இஷ்ட தெய்வம், அதற்கான மந்திரம் கேட்டறிந்து பூசை செய்து பலன் அடைவார்கள்.


இதுபோன்ற நுட்பமெல்லாம் தெரியாமல் நாம் கிடப்பதால்தான் அன்னை “நீங்களெல்லாம் ஆன்மித்தில் அனாதைகள்” என்கிறாள். தன் பக்தனுக்கு வலுவான அடித்தளங்களைப் போட்டுக் கொடுத்திருக்கிறாள். ஆதிபராசக்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்ட தன்

பக்தனுக்கு அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்திருக்கிறாள். 108, 1008 மந்திரங்களை வழங்கியிருக்கிறாள். இந்த மூன்றையும் வலுவாகப் பற்றிக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். அது அவரவா் பக்தி சிரத்தையைப் பொறுத்தது. முயற்சியைப் பொறுத்தது.


தெய்வம்: குரு: மந்திரம்:


உன் இஷ்ட தெய்வத்தை வெறும் கல்லாகப் பார்க்காதே! உன் குருவைச் சாதாரண மனிதனாக எண்ணாதே! மந்திரங்களை வெறும் வார்த்தைகள் தானே என்று நினைக்காதே! என்று தந்திர சாத்திரங்கள் அறிவுரை கூறி எச்சரிக்கின்றன.


மந்திரங்கள் நால்வகை


1) ஒரு அட்சரம் உள்ள மந்திரம் பிண்டம் எனப்படும். அட்சரம் என்பது எழுத்து. 2) இரண்டு அட்சரம் கொண்டவை கர்தரீ. கத்திரி போன்ற இருமுனை உள்ளவை கர்தரீ. 3) மூன்று முதல் ஒன்பது வரை அட்சரங்கள் கொண்டவை பீஜம் எனப்படும். 4) 10 முதல் 20 வரை அட்சரங்கள் கொண்டவை மந்திரங்கள். 5) 20 க்கும் மேற்பட்ட அட்சரங்களை உடையவை மாலா மந்திரம். லலிதா சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. இவை மாலா மந்திரம் என்ற பிரிவில் அடங்கும்.


புரச் சரணம்


பெண் தெய்வங்கட்குரிய மந்திரங்கள் வித்யை எனப்படும். அது பலன் கொடுப்பதற்குப் புரச்சரணம் முதலிய வழிபாட்டு முறைகளைக் கையாள வேண்டும். புர – என்றால் முன்னதாக என்று பொருள். சரணம் என்றால் செய்ய வேண்டியவை என்று பொருள். ஒரு குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெற்றதும், உபாசகன் தான் தனித்து வழிபாடு செய்வதற்கு முன் மந்திர சித்தி பெறச் செய்யும் சடங்குகள் புரச்சரணம் எனப்படும். புரச்சரணம் என்றால் லட்சம் தடவை, கோடி தடவை உச்சரித்து உரு ஏற்றுதல் என்றும் கூறப்படுகிறது. மந்திரங்கள் சித்தி பெற விரும்புகிறவன் மந்திரத்தில் உள்ள அட்சரங்களைக் கணக்கிட்டு அவ்வளவு லட்சம் மந்திர ஜபம் புரிய

வேண்டும்.


பாலா மந்திரம் 3 அட்சரங்களைக் கொண்டது. இந்த மந்திர உபதேசம் பெற்றவன் மந்திர சித்தி பெற 3 லட்சம் தடவை மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவ பஞ்சாட்சரி என்று ஒரு மந்திரம். அது ஐந்து அட்சரங்கள் கொண்டது. மந்திர சித்தி பெற விரும்புகிறவன் ஐந்து லட்சம் வரை ஜபம் செய்ய வேண்டும். மந்திர ஜப எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஓமம், ஏழை பிராமணா்க்கு அன்னதானம், தா்ப்பணம், மார்ஜனம் என்ற நான்கும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது புரச்சரணம் எனப்படும்.


நான்கு வகை மந்திரங்கள்


பலன் தருவதை ஒட்டி மந்திரங்கள் நால்வகைப்படும். அவை 1. சித்த மந்திரங்கள் 2. சுத்த மந்திரங்கள் 3. சாத்திய மந்திரங்கள் 4. சத்துரு மந்திரங்கள். புரச்சரணம் செய்வதால் அந்த மந்திரம் நினைத்த பலனைக் கொடுக்கும் அளவிற்குச் சித்தியாகிவிடும். குறிப்பிட்ட அளவு ஜபம் முதலியவற்றைச் செய்தால் சித்தியளிப்பவை உண்டு. அத்தகையவை சித்த மந்திரங்கள் எனப்படும்.


குறிப்பிட்ட அளவு ஜபம் செய்யாமலேயே குருவிடமிருந்து உபதேசம் பெற்றதும், ஜெபம் செய்ததும் சித்தி தரவல்ல மந்திரங்கள் உண்டு. அத்தகையவை சுரித்தம் எனப்படும்.


முன்பிறவிகளில் ஒருவன் மந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். மந்திர தேவதையிடம் தவறாக நடந்து கொண்டு அதற்கு எதிரியாகி இருக்கலாம். அத்தகையவன் இப்பிறவியில் மந்திர ஜபம் செய்யும்போது காப்பாற்ற வேண்டிய மந்திரம் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிக்கும். அத்தகைய மந்திரங்கட்கு அரிமந்திரம் அல்லது சத்துரு மந்திரம் என்று பெயா்.


மேற்கண்ட நான்கு வகை மந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டி ஜாதகம் பார்ப்பது போல கட்டகங்கள் போட்டு விடை காண்பது சித்தாரி கோஷ்டம் எனப்படும். அவ்வாறு சோதித்துப் பார்த்த பிறகே குரு சீடனுக்கு மந்திர உபதேசம் செய்வார். திருமணம்

நடப்பதற்கு முன்பு பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பொருத்தம் பார்ப்பதே சித்தாரி கோஷ்டம்.


சில மந்திரங்களுக்கு இவ்வாறு கோஷ்டம் பார்ப்பது இல்லை. ஓா் எழுத்து கொண்டவை, மூன்று எழுத்து கொண்டவை, மிருத்தியுஞ்சயம், காளி, சியாமளா, சண்டிகை, இராமன், ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, ராஜசியாமளா முதலிய மந்திரங்கட்கு இவ்விதி இல்லை. எப்போதும் யாவருக்கும் சித்தமான மந்திரங்கள் இவை.


பீஜ மந்திரங்கள்


மந்திரங்கள் என்பவை வெறும் சப்தங்கள் அல்ல. அந்தச் சப்தங்களிலிருந்துதான் படைப்பே தொடங்கியது என்கிறார்கள் ஞானிகள். ஓம் என்ற மந்திரத்திலிருந்தே பஞ்ச பூதங்கள் தோன்றின என்கிறார் திருமூலா்.


பிரபஞ்சம் தோன்றியது எப்படி?


ஆதிக்கும் ஆதியிலே வெட்ட வெளிகிய சூன்யம் பரவெளியெங்கும் பரமாத்மா அணுவுக்குள் அணுவாக இரண்டறக் கலந்து நீக்கமற நிறைந்து பரிபூரணமாக நின்றது.


அத்தகைய கோடானுகோடி அணுக் கூட்டங்கள் – இயற்கைச் சக்திகள் தன்னைத் தானே அதிவேகமாய்ச் சுழன்று ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய சுழற்சியின் அதிவேகத்தால் அணுக்கூட்டங்கள் ஒன்றை ஒன்று உராய்ந்த காரண காரியத்தினால் முதன் முதலாக ஓசை (நாதம்) உண்டாயிற்று. அதைத் தொடா்ந்து ஒளி (விந்து) உண்டாயிற்று. இதனையே பௌதிக விஞ்ஞானம் ஒலி (Sound) ஒளி (light) என்று பிரித்து ஆராய்ந்து கூறுகிறது.


இந்த நாத விந்து என்பனவற்றைச் சிவம் என்றும் சக்தி என்றும் கூறுவா். “நாத விந்து கலாதி நமோ! நம! என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.


இப்படி உண்டான நாத விந்துவிலிருந்து “அ” – “உ” – “ம” என்ற மூன்று மந்திர எழுத்து உண்டாகி ஓம் என்ற பிரணவம் ஆயிற்று. இந்தப் பிரணவத்திலிருந்தே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் தோன்றின. இப்பஞ்ச பூதக் கூட்டுறவிலிருந்து அந்தச் சக்தியிலிருந்து அண்ட – பகிரண்ட

சராசரங்களும், நவக்கிரகங்களும், கோடானுகோடி நட்சத்திரங்களும் மற்றும் சகலமும் தோன்றின.


இவைகளை அடக்கி, ஒழுக்கி, நடுநிலையிலிருந்து ஆட்சிபுரிய வேண்டிப் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்ற காரியங்களைப் பரமாத்மா மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் தத்துவ ஞானிகள்.


ஒலியும் – ஒளியும்


எனவே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூலகாரணம் ஒலியும் ஒளியுமே என்று தெரிகிறது. ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் என்று தெரிகிறது. அந்த ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் நம் உடம்புக்குள்ளேயே இருக்கின்றன. இந்த ஒளி மூலமாகவும ஒலி மூலமாகவும் கடவுளை எட்டிப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மந்திர உபாசனை! நாக உபாசனை! அந்த ஒலியின் மூலமாக அந்த அருள் ஒளியைத் தரிசித்து ஆனந்தமாகக் கிடக்கலாம். வள்ளலார் அப்படி ஒளியை அனுபவித்தவா்.


உலகப் பொருள் அனைத்திலும் ஒலியும் உண்டு, ஒளியும் உண்டு. ஒவ்வொரு பொருளும் மூலமான ஓா் ஒலியிலிருந்தே உற்பத்தியாயிற்று. அந்த மூல ஒலியை நுண் ஒலியை பீஜ மந்திரம் என்பார்கள். “முளை” மந்திரம் என்பார்கள்.


பஞ்ச பூதங்கள்


பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு


நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.


நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்


நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்


காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்


ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமை நிறம்


உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக்

கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு. எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும். உதாரணமாக ஸ் ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜ மந்திரம் க்ரீம் (Krim) என்பது காளிக்குரிய பீஜ மந்திரம். ஜம் (Aim) என்பது சரஸ்வதிக்குரிய பீஜ மந்திரம்.


நவக்கிரகங்கள் – பீஜ மந்திரங்கள்


நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை வருமாறு


சூரியன் க்ரீம் (Krim)


சந்திரன் ரீம் (Rim)


செவ்வாய் ஹ்ரீம் (Hrim)


புதன் ஸ் ரீம் (Srim)


வியாழன் ஔம் (Houm)


வெள்ளி கிலீம் (Klim)


சனி ஐம் (Aim)


ராகு ஹ்ரௌம் (Hraum)


கேது சௌம் (Soum)


வடமொழி எழுத்துக்களில் ஒவ்வொரு உயிரெழுத்தும் தனித்தனியே எல்லா மெய்யெழுத்துக்களுடன் கூடினால் எத்தனை சப்தங்கள் உண்டோ அத்தனை பீஜ மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தை உச்சரிப்பதால் ஒரு குறிப்பிட்ட வேகமுள்ள சலனம் உண்டாகி உடலின் பாகங்களில் ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஓம், ஹ்ராம் (Hram) ஹ்ரீம் (Hrim) ஹ்ரூம் (Hrum) ஹ்ரைம் (Hraim) ஹ்ரௌம் (Hraum) ஹ்ர (Hra) என்ற பீஜ மந்திரங்களைப் பார்ப்போம்.


“ஓம்” வெட்ட வெளியில் பிறந்த முதல் ஒலி. இதுவே மற்ற சப்தங்கள் அனைத்துக்கும் தாய் – ஒலியின் பிறப்பிடம் இதுவே. இப்பிரணவம் உலகத்தின் உள் தத்துவத்தைத் தன்னுள்ளே அடக்கியிருக்கிறது.


“ஹ” (Rha) என்ற ஒலி இருதயப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் உண்டாவதால் இருதயத்திற்குப் பலத்தைக் கொடுத்து அதிக ரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.


“ர” (Ra) என்ற ஒலி நாக்கின் நுனியால் நாக்கின் மேல் அண்ணத்தின் முன் பாகத்தைத்

தொடுவதால்தான் ஏற்படுகின்றது. இந்த “ர்” சப்தத்தினால் நாக்கு நுனியில் உள்ள நரம்பு முனைகள் மூலமாய் மூளையில் சலனத்தை ஏற்படுத்துகின்றன.


“ம்” – வாயை மூடிக் காற்றை வயிற்றிலிருந்து மூக்கு வழியாக வெளியிடுவதால் உண்டாகும் சப்தம். இது மூச்சுக் குழாயையும் மூக்குத் துவாரங்களையும் சுத்தப்படுத்துகிறது.


ஹ்ராம் (Hram) – இதிலுள்ள “ஆ” என்னும் உயிரெழுத்து விலா எலும்புகளை எழுப்பி உணவுக் குழாயைச் சுத்தப்படுத்துகிறது. இதன் சலனம் அனாகத சக்கரமாகிய இருதயத்தின் அருகிலிருந்து எழும்புகிறது.


ஹ்ரீம் (Hrim) – ஈ என்ற உயிரெழுத்தை உச்சரிப்பதால் கழுத்துப் பகுதியில் உள்ள சக்தி கேந்திரமான விசுத்தி சக்கரத்தில் சலனம் உண்டாகிறது. ஆதலால் இது தொண்டை, மூக்கு, வாய் முதலிய அவயவங்களுக்கு நன்மை பயக்கிறது. இதன் சக்தி கீழேயும் பரவி சுவாச உறுப்புக்களையும் ஜீரண உறுப்புக்களையும் சுத்தப்படுத்துகிறது.


ஹ்ரூம் (Hrum) – “ஊ” வின் சலனம் நாபிப் பகுதியில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் எழும்புவதால் ஈரல், குலை முதலிய உறுப்புக்களை ஊக்குவித்து சரிகின்ற தொந்தியையும் கரைக்க உதவுகிறது.


ஹ்ரைம் (Hraim) – “ஐ” சப்தம் தொப்புளுக்குக் கீழேயுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் சலன அலைகளை எழுப்புகிறது. இச் சலனம் சிறுநீரக உறுப்புகட்குப் புத்துணா்ச்சி அளித்து சிறுநீா் சுரப்பதை ஒழுங்கானதாகவும் சரியானதாகவும் செய்கிறது.


ஹ்ரௌம் (Hraum) – “ஒலி” – மூலாதார சக்தியால் எழுப்பப்படும் சலன அலைகளால் ஆனது. ஆதலால் அச்சக்கரத்திலிருந்து பிரியும் நரம்புகளால் வியாபிக்கப்பட்டிருக்கும் ஆசனம் முதலிய கீழ் உறுப்புக்களை வலுப்படுத்துகிறது.


ஹ்ர (Hra) – இதில் “அ” இருப்பதால் ஹ்ராம் என்ற பீஜத்தை ஒத்திருக்கின்றது. ஆதலால் இது இதயப் பகுதியான அனாகத சக்கரத்தைச் சலனப்படுத்துவதுடன் இல்லாமல் அடியில்

மூலாதாரத்திலிருந்து உச்சியிலுள்ள சகஸ்ராரம் வரை ஏழு கேந்திரங்களிலும் சரியான சலனத்தை எழுப்பி உடலின் எல்லா அவயவங்களையும் ஊக்குவிக்கிறது.


அஜபா மந்திரம்


இதற்கு ஹம்ஸ மந்திரம் என்ற பெயரும் உண்டு. மூக்கிலிருந்து செல்லும் காற்று “ஹம்” என்ற ஒலியோடு வெளியே செல்கிறது. அதே காற்று ஸம் என்ற ஒலியோடு உள் நுழைகிறது. நமது முயற்சி எதுவும் இல்லாமலேயே மூச்சு வாங்கும்போதும், மூச்சு விடும்போதும் இடைவிடாமல் இம் மந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹம்ஸம் – ஸோஹம் என்ற மந்திரங்கள் உண்டாகின்றன. இதற்கு அஜபா காயத்திரி என்று பெயா்.


மந்திர யோகம்


மந்திர ஜெபத்தின் மூலம் கடவுளை அடைவது மந்திர யோகம் எனப்படும். எப்போதும் அலை பாய்கின்ற மனத்தை அலையாமல் கொண்டு வந்து நிறுத்திப் பழகுவதற்கு மந்திர ஜபம் உதவுகின்றது. மனத்தை ஒருமுகப்படுத்தி மந்திர ஜெபம் செய்வதால் நம் மனம் என்கிற பாத்திரம் சுத்தமாகிக்கொண்டே வரும்.


மந்திர ஜெபம் செய்வதால் பூா்வ ஜென்ம வாசனைகள் என்ற எண்ணப் பதிவுகள் தேய்கின்றன. அதனால் பாவங்கள் குறைகின்றன. மனம் ஒன்றிய மந்திர ஜெபத்தால் அந்த மந்திரத்துக்குரிய தெய்வங்களின் காட்சியும் கிடைக்கலாம். மந்திர ஒலி அதிர்வுகள் நம் உடம்பில் உள்ள 72000 நாடி நரம்புகளில் சில சலனங்களை உண்டாக்குகின்றன.


மந்திரத்திற்குரிய தேவதையின் உதவி சாதகனுக்குக் கிடைக்கிறது. அவன் உடம்பில் குண்டலினி சக்தி கிளா்ந்து எழுகிறது. அதன் மூலம் சில சக்திகள் அவனுக்குக் கிடைக்கின்றன.


பூா்வ ஜென்ம வாசனையால் அழுக்குப்படிந்த ஒருவன் உடம்பும், மனமும், ஆத்மாவும் சுத்தமாகி வருகின்றன. முதலில் உள்ளுடம்பில் சில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலேயே உண்டாகின்றன. பின் உள்ளுடம்பு மந்திர உடம்பாக மாறுகிறது.


நன்றி ; குருமுனி


Saturday, March 13, 2021

மகிமை மிகு மஹா சிவராத்திரி: விரத முறையும், அதன் பலன்களும்*

 


*💢🟣🟣🟣💢மகிமை மிகு மஹா சிவராத்திரி: விரத முறையும், அதன் பலன்களும்*


*♦️♦️இன்று மஹா சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லாவகை நலனையும் ஒருசேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.*


*♦️♦️'சிவ' என்ற சொல் 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப்பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.*


*♦️♦️ஒருமுறை கயிலையில் விளையாட்டாக, எம்பெருமானது திருவிழிகளைத் தம் திருக்கரங்கள் கொண்டு மூடினார் உமாதேவியார். அகில உலகமும் இருண்டது. இக்குற்றத்திற்குப் பிரயச்சித்தமாக, ஆகம விதிகளின்படி, சிவனாரை, உமாதேவியார் வழிபட்ட தினமே மஹா சிவராத்திரி.*


*♦️♦️தேவர்களும் அசுரர்க‌ளும், பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உலகைக் காக்க வேண்டி சிவனார் அருந்தினார். உடனே, அருகிருந்த உமாதேவியார், தம் திருக்கரத்தினால், சிவனாரின் கழுத்தை பிடித்து, விஷத்தை எம்பெருமானின் திருக்கழுத்திலேயே நிறுத்தினார். அகில உலகத்துக்கும் அன்னையான அம்பிகை, எம்பெருமானை மட்டும் காக்க வேண்டியா அவ்வாறு செய்தார்?, எம்பெருமான் இவ்வுலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்.*


*♦️♦️ஈரேழு பதினாலு உலகங்களும் எம்பெருமானின் திருவுருவே. எம்பெருமானுக்குள்ளேயே அனைத்து ஜீவராசிகளும் வாசம் செய்கின்றன. ஆகவே ஆருயிர்களுக்கெல்லாம் அன்னையான அம்பிகை அவ்வாறு செய்தார். அதனாலேயே, எம்பெருமானுக்கு 'திருநீலகண்டன்' என்ற திருநாமம் உண்டாகியது. இந்த இறைலீலை நிகழ்ந்த தினமே சிவராத்திரி. அன்றைய தினத்தில் தேவாதி தேவர்களும் எம்பெருமானைப் பூஜித்து வழிபட்டனர்.*


*♦️♦️சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூசனையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.*


*♦️♦️தன்னை அறியாமல் செய்த பூசனைக்கு இவ்வளவு பலன் என்றால், நமக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.....*


*♦️♦️சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப்  பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும்.*


*♦️♦️மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால்  பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.*


*♦️♦️சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்திராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திர பூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்திராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிந்து, இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்திராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.*


*♦️♦️மறுநாள் காலை தீபாராதணை செய்து விரதம் நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர்பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.*


*⭕⭕சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்*


*♦️♦️யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைப்பிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைப்பிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.*


*♦️♦️ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.*


*♦️♦️அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் இட்டு, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.*


*♦️♦️நாமும் இந்த மகிமை மிகு சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து, சிவனாரின் திருநாமம் ஓதி நலங்கள் பல பெறுவோமாக..*


*♦️♦️ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய.....!*

Wednesday, March 10, 2021


 *🚩🔯சிவராத்திரியன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தபொருளை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.✡🚩*


• 🔯மேஷம் - வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.


• 🔯ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.


• 🔯மிதுனம் - சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.


• 🔯கடகம் - சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.


• 🔯சிம்மம் - பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.


•🔯 கன்னி - இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.


•🔯 துலாம் - பசும் பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.


• 🔯விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்.


• 🔯தனுசு - இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.


 🔯மகரம் - இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்.


🔯கும்பம் - இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷகம் செய்ய வேண்டும்.


🔯மீனம் - குங்குமப்பூ பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

🌹🙏 ஜெய் ஹனுமன்

ஜோதிடம் - ஜாமக்கோள் பிரசன்னம் வரையறை

 ஜோதிடம் - ஜாமக்கோள் பிரசன்னம் வரையறை 




வேத ஜோதிடம் என்பது பாரம்பரிய முறை

பிரசன்னம் என்பது ஜோதிடத்தின் ஓர் அங்கம்.

பொதுவாக ஜனன கால ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவது ஆகும். 

இந்த ஜனன கால ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக, அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றியும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.


ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புகளில் குழப்பம் உள்ளவர்களுக்கும், பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஜாதகமே இல்லை என்றாலும் வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சினைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியில் இந்த பிரசன்ன முறை மூலமாக மிக எளிதாக தீர்வு காண முடியும்.


ஏன் சில நேரங்களில் ஜாதகம் உள்ளவர்களுக்கும் கூட இந்த பிரசன்ன முறை என்பது இன்றியமையாததாக ஆகின்றது.


அது எப்படி என்று பார்ப்போம்.. உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் ஜோதிடரிடம் சென்று, தான் இருக்கும் வேலையை விட்டு சொந்த தொழிலில் இறங்கலாமா? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம்.


ஜோதிடத்தில் 6-ம் பாவம் என்பது உத்தியோகத்தையும், 7-ம் பாவம் என்பது சொந்தத் தொழிலையும் குறிக்கும். இவ்விரு பாவங்களில் எது 2, 4, 6, 10 போன்ற புறம் சார்ந்த பாவங்களை அல்லது புறத்தை கெடுக்காத பாவங்களை தொடர்பு கொண்டு வலுவான அமைப்பில் இருக்கின்றதோ அது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதே சிறந்ததாகும்.

ஒரு வேளை விதியின்படி இவ்விரு பாவங்களும் சம வலுவுடன் இருந்து, மதி என்கிற நடப்பு தசாநாதன் இவ்விரு பாவங்களில் ஏதாவது ஒன்றை பார்க்கவில்லை எனில், இவ்விரண்டில் எதை செய்தாலும் பெரிய வித்தியாசம் வராது என்பதே இங்கு அர்த்தமாகும். 

அதுதான்.....

ஆனால் ஜோதிடர் இதை ஆதாரமாகக் கொண்டு உத்தியோகம் அல்லது சொந்தத் தொழில் இவற்றில் எதை செய்தாலும் உனக்கு நன்மையே என்று கூறும் பொழுது, ஜாதகர் மேலும் குழப்பமடையக்கூடும். ஆதலால் இவ்விரண்டில் எதை செய்யலாம் என்று உறுதியாக கூறினால் தான் ஜாதகரின் சந்தேகம் தீரும்படியாக இருக்கும்.


இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரசன்னம் மூலமாக, மேற்கூறிய இரண்டில் எதை செய்தால் அதீத நன்மை என்பதை, உறுதியாக கூறிவிடலாம். ஆக ஜாதகம் உள்ளவர்களுக்கும் இது போன்ற சமயங்களில் பிரசன்னம் அவசியமாகின்றது.


மிக மிக குறுகிய கால இடைவெளியில் அரங்கேறும் சம்பவங்களையும், ஒரே நாளில் அரங்கேறும் சம்பவங் களையும் ஜனன ஜாதகத்தில் உள்ள விதி மற்றும் மதியை கொண்டு நிர்ணயம் செய்வது என்பது சற்று கடினமான காரியம் ஆகும்.

ஆனால் பிரசன்ன ஜோதிடத்தில் இது எளிது.

 



 குறிப்பாக... ‘இன்று நடைபெற இருக்கும் மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் நான் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்குமா?’, ‘

வங்கியில் விண்ணப்பித்த கடன் எப்போது ஒப்புதல் ஆகும்?’,

 ‘இன்று பள்ளியில் நடக்க இருக்கும் பேச்சு போட்டியில் நான் வெற்றி பெறுவேனா?’,

 ‘வெளியூர் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த ரெயில் டிக்கெட் காத்திருப்பு வரிசையில் இருந்து உறுதி செய்யப்படுமா?’,

 ‘இன்று எனது நண்பர் எத்தனை மணிக்கு என் வீட்டிற்கு வருவார்?’,


பிரிந்து சென்ற மனைவி திரும்பி வருவாளா?

 ‘திருடு போன அல்லது காணாமல் போன பணம், பொருள் திரும்ப கிடைக்குமா?’

எனது உடல் நலம் எப்போது சீராகும்?

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்குமா?

புதிய தொழிலில் மேலும் முதலீடு செய்தால் லாபம் வருமா?

 என்பது போன்ற ஜாதகரின் யதார்த்தமான கேள்விகள், 

இதுபோன்று இன்னும் நிறைய கேள்விகளுக்கு பிரசன்னம் மூலமாக மிக எளிதாகவும், துல்லியமாகவும் தீர்வு காண முடியும்.

Instant பலன் பார்க்க ஜாமக்கோள் பிரசன்னம்!

நீண்ட கால பலன்கள் தெரிந்து கொள்ள (ஜோதிடம்) தசா புக்தி காலங்கள். 



Monday, March 8, 2021

திருமண பிரசன்னம்



 ஜாமக்கோள் பிரசன்னத்தில் 

உதயம் ஆருடம் கவிப்பு என்ற மூன்று ஹீரோக்கள் உள்ளனர்.

இவர்கள்தான் கேள்விக்கான பதிலை எடுத்து உரைப்பவர்கள்.


ஜாம கிரகங்கள்  8.

ஜோதிடத்தில் உள்ள நவ கோள்களில் ராகு கேதுவை ஒன்றாக இணைத்து *பாம்பு* என பிரசன்னத்தில் அழைப்பர்.


மற்ற ஏழு கிரகங்களும் ஜாமக்கோள் பிரசன்னத்தில் பாம்பைப் போலவே இடமிருந்து வலமாக சுற்றி வருவார்கள்.


இங்கு திருமணப் பிரசன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கேள்வி: எனது மகளின் திருமணம் எப்படி நடக்கும்?

 பதில்:

 மேஷ உதயம் உதயத்தை நோக்கி சூரியன் வருகை

துலாம் ஆருடம்

இந்த பிரசன்னத்தில் உதயத்தை நோக்கி சூரியன் வருவதால்  அந்தஸ்தான இடத்தில் திருமணம் நடைபெறும். தந்தையின் சொத்தில் திருமணம் சிறப்பாக நடத்தப்படும்.

ஜாமக்கோள் பிரசன்னம்

 வணக்கம் நண்பர்களே இன்றைய தினம் இன்று முதல் ஜோதிடத்தில் அதிமுக்கியமான பிரசன்னத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். பிரசன்னம் மிகத்துல்லியமான பலன்களை உடனடியாக காட்டக்கூடிய ஒரு அமைப்பு. 


பிரசன்னம் பலவகையான முறைகளில் தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


அதில் தேவ பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், ஆருட பிரசன்னம், 

சோழி பிரசன்னம்,

ஸ்வர்ண பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், 

கேபி பிரசன்னம் என்று பிரசன்னங்கள் பல வகையில் நடைமுறையில் இருந்து வருகின்றன. மேற்கண்ட பிரசன்னங்கள்   அனைத்துமே காரணப் பெயர்களாக அமைந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.


 சோழிகளை பயன்படுத்தி பார்ப்பதால் சோழி பிரசன்னம் என்று அதற்குப் பெயர். இவ்வாறாக ஜாமத்தை பயன்படுத்தி பார்ப்பதற்கு *ஜாமக்கோள் பிரசன்னம்* என்று பெயர்.


 *பிரசன்னம்* என்ற வடமொழி சொல்லுக்கு *கேள்வி* என அர்த்தம். விடை தெரிய முற்படும் கேள்விக்கு *பிரசன்ன* என்று கூறுவர். 


ஒருவர் தன் வாழ்வில் குழப்பத்துடன் ஜோதிடர் முன் வரும்போது கேள்வி எழுப்பும் நேரத்தைக் கொண்டு அப்போதைய ஜாமக்கோள்களின் நிலையை கணித்து பலன் கூறும்  புராதன முறையாகும்.

இந்த ஜோதிட சூட்சுமத்திற்கு  *பிரசன்னம்* என்று பெயர்.



 பிரசன்னத்தின் சிறப்பு யாதெனில் பிரசன்னம் போடும்போதே கேள்வியும் அதற்கான பதிலும் உடனே கிடைத்துவிடும். எந்த ஒரு கேள்விக்கும் தீர்வு இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும். 


அந்த கேள்வி நடக்குமா? நடக்காதா?  என்பதை *வெட்டு ஒன்று துண்டு இரண்டு* என்ற வகையிலே நெத்திப்பொட்டில்  அடித்தாற்போல் நெத்தியடி போல் பதில் மிகத் துல்லியமாக கொடுக்கப்பட்டிருக்கும். அது நமக்கு  நலமா? தீதா? என்பது  கேள்வியைப் பொருத்து *ஜாம கிரகங்கள்* முடிவு செய்துவிடும்.


பிறந்த நேரம் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்வின் அனைத்து பலன்கள்  பார்ப்பது போல இல்லாமல்..... ஒரு கேள்வி கேட்கும்பொழுது அந்த வேளையில் இருக்கும் ஜாமகிரகங்களை வைத்து ஜாதகம் பார்ப்பது தான் இங்கே பிரசன்ன ஜோதிடம் என்பதாகும்.



தமிழ்நாட்டில்

பிரசன்ன ஜோதிடம் பல ஜோதிடர்களுக்கு தெரியாது. இதனால் ஜோதிடத்தில் முழுமை பெறாமல் இருக்கிறார்கள். *கேரள ஜோதிடம்* புகழ் பெற்று  இருப்பதற்கு காரணம் *அவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம் மட்டும் தான் தெரியும்.* அதற்கு தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

 பிரசன்ன ஜோதிடத்தின் துல்லியம் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் கிடையாது.


 *துல்லியம்* என்று சொல்வதற்கு  விளக்கம். உதாரணம் ஒன்று கூறுகிறேன்.

ஒருவர் எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா?எனக் கேட்டால் பிறப்பு ஜாதகம் போதும். 

ஆனால் எனக்கு பதவி உயர்வு உதவி மேலாளராகவா அல்லது கிளை மேலாளராகவா என கேட்டால் பிறப்பு ஜாதகம் வழி கூறாது. அதற்கு பிரசன்ன ரீதியாகத்தான் பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட மிக சக்திவாய்ந்த பிரசன்ன ஜோதிடம் தெய்வசக்தியுடன் இணைந்தால் அப்படி பார்க்கும்போது அதற்கு பெயர் *தேவப்பிரசன்னம்* ஆகும். அந்த வகையில் இங்கு நாம் ஜாமக்கோள் பிரசன்னம் பார்த்து அதன்மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிகத் துல்லியமான பதில் கூறும் பல பிரசன்னங்களை பார்க்க இருக்கிறோம்.

ஜோதிடத்தில் பல நுட்பமான அற்புதமான விஷயங்களை இந்த பிரசன்னம் மூலம் அன்பர்கள் அறிந்து பயன்பெற வேண்டுமாய் பயன்பெறும் பொருட்டு உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல சித்தர்கள் போற்றும் அன்னை வாலைத்தாய் அருளோடு உங்கள் முன் *தினமும் ஒரு பிரசன்னம்*  என்று இந்த பகுதியில் கொடுக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றி 

என்றும் அன்புடன், 

 *ஸ்ரீமால் சிந்தைகூரியன்*