Wednesday, April 29, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் - 39* 30/04/2020 வியாழன்

*விக்கிரமாதித்தன் கதைகள் - 39*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

 நீதிவேந்தன் கதை - 2

அந்த அந்தணன் நேரே அரண்மனைக்கு வந்தான். தனக்கு நேர்ந்ததை அங்கு முறையிட்டான். மன்னனுக்குச் சினம் வந்தது. இளவரசன் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நினைப்பதா?

அரசன் ஸீவிசாரன் நீதி தவறாத வேந்தன். உடனே ஆணைபிறப்பித்தான்.

" அமைச்சரே இளவரசனை நாடு கடத்துங்கள். ..”

"மன்னா, சற்று பொறுங்கள். இளவரசரை நாடு கடத்தலாமா?”

“அமைச்சரே, எதையும் ஆராயாமல் அவன் அடித்ததால் இளவரசன் என்று அவனைச் சொல்ல முடியுமா? அரசு ஆளும் தகுதி இழந்தவனாகிறான். அறிவுடைய ஒருவன் நஞ்சை உண்பதோ, பாம்புகளுடன் பழகுவதோ கிடையாது. முனிவர்களையும் அந்தணர்களையும் புத்திசாலிகளையும் பகைத்துக் கொள்ள மாட்டான்.

முனிவரின் சாபத்தினால்தான் பரமசிவனுக்குப் பூலோகத்தில் உருவ வழிபாடு இல்லை. எவ்வளவு பெரிய நிலைக்கு நாம் சென்றாலும் பெரியாரை நிந்திக்கலாமா? அவர்களுடைய கோபத்தீ எதிராளியைப் பொசுக்கிவிடும். 

அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். அப்படிப்பட்ட அந்தணன் ஒருவரை அவமரியாதை செய்த ஜயகோனன் கையைத் துண்டாக்குங்கள்” என்றான். அரசன்.

இதுவரை அமைதி காத்த அந்த அந்தணர்  மன்னரிடம் விரைந்து வந்து, "மன்னா, இளவரசனைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.இனிமேல் என்னிடம் நடந்து கொண்டது போல வேறு யாரிடமும் நடந்து கொள்ள மட்டான்.” என்றார்.

அரசன் உடனே, “இளவரசனை விட்டுவிடுங்கள்" என்று கட்டளையிட்டான்.

வேதாளம் கதையை நிறுத்திவிட்டு விக்கிரமாதித்தனிடம் புதிர் போட்டது.

"விக்கிரமாதித்தா, இருவருள் யார் சிறந்தவர்? மன்னனா? அந்தணனா?”

“சந்தேகமில்லாமல், அரசனே சிறந்தவன். நீதிக்காகத் தன் மகனுக்குத் தண்டனை விதித்த அரசனே !

விக்கிரமாதித்தனின் சரியான விடையால் வேதாளம் மறுபடி முருங்கை மரத்தில் ஏறித் தொங்கியது.

*************இன்னும் வரும்

No comments:

Post a Comment