Monday, June 17, 2019

மழையே! மழையே!வா!வா! 17/06/2019 திங்கள்

நீ வருவாய் என!

தமிழ்நாட்டுக்கு மழை வருமா!

நீரின்றி அமையாது உலகு என்பர் திருவள்ளுவர். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ நீர்  அத்தியாவசியம்.
அந்த நீரை வான்மேகங்களே மழையாக பொழிந்து பூமியை வளப்படுத்துகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் மழைக்கு உரிய கிரகம் சுக்கிரன்.இவர் ஜூனில் ரிசபத்தில் ஆட்சி பெறும் காலம் தென் மேற்கு பருவமழை காலமாகவும்,அக்டோபரில் துலாமில் ஆட்சி பெறும் காலம் வடகிழக்கு பருவமழை காலமாகவும் இருக்கிறது!

இப்போது சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். வழக்கம்போல தென்மேற்கு பருவ மழையும் ஆரம்பித்துவிட்டது.

நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் இந்த மாதம் 24 ல் கடகத்தில் நீசமாகி பலம் இழக்கிறார் இதனால் சுட்டெறிக்கும் வெயில் குறையும்!

இதன் பிறகு மழை பொழிவு ஆங்காங்கே அதிகரிக்கும்!

மழை நன்றாக பொழிய சூரியன்,சுக்கிரன்,புதன் ஒன்றாக இருக்க வேண்டும்.

29 தேதி இந்த மூன்று கிரகங்களும் ஒன்று சேர்கின்றன.. இந்த காலகட்டங்களில் தமிழகத்தில்  மழை பொழிவு அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

மழையே! வருக!வருக! என இறைவனை வேண்டுவோம்.

நீ வருவாய் என!

No comments:

Post a Comment