Sunday, October 21, 2018

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களை அறிவோம்!!!21/10/2018ஞாயிறு

பள்ளியறை பூஜையின் மகத்துவங்களை அறிவோம்!!

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்திலும் ஊடுருவி நிற்பது சதாசிவம் என்ற அருணாச்சலேஸ்வரரே!

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் சிவலிங்க வழிபாடு இருந்து வந்தது;தற்போது நமது பாரத நாடு,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கப்பூர்,நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் மட்டும் வழக்கத்தில் இருக்கின்றது;தாய்லாந்து,வியட்நாம்,கொரியாவில் வேறு பெயர்களில் சிவலிங்க வழிபாடு இருந்து வருகின்றது;

நமது தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 பழமையான ஆலயங்களில் 27,000 சிவாலயங்கள் ஆகும்;200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும்,அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது;தற்போது மிகவும் அருகிக் கொண்டிருக்கின்றது;

தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எல்லாம் பள்ளியறை பூஜை நடைபெறவில்லையோ அந்த ஊர்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள் பெருமளவு குறைந்துவிட்டார்கள்;

சேக்கிழார் மன்றம்,உழவாரப் பணி மன்றங்கள்,திருநாவுக்கரசர் அடியார்கள்,அப்பர் சங்கம்,சுந்தரர் திருப்பணிக் குழு என்ற பெயர்களில் பலவிதமான சிவனடியார்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றார்கள்;அவரவர் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் பள்ளியறை பூஜையைத் துவங்கிட முயற்சி செய்வது அவசரம்;அவசியம்;

பல சிவாலயங்களில் பள்ளியறையே இல்லை;அதை உடனடியாக கட்டிட முயற்சிப்பது அவசியம்;பள்ளியறைப் பூஜைக்கு சிவபாத பூஜை என்று ஒரு பெயர் உண்டு;

பள்ளியறை பூஜை செய்யும் முறை:

இரவுக் கால பூஜை சிவாலயத்தில் நிறைவு ஆனப் பின்னர்,ஈசனுடைய திருப்பாதத்திற்கு அரிய அலங்காரம் செய்ய வேண்டும்;அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வரவேண்டும்;முடிவாக,ஒரு தனியறையில் ஊஞ்சல் போன்ற திருப் படுக்கையில் ஈசனையும்,அம்பாளையும் (விஷ்ணு ஆலயத்தில் பெருமாளையும் தாயாரையும்) அமர வைத்து,உரிய தெய்வீகப் பாடல்கள் (சிவாலயம் எனில் பதிகம்,விஷ்ணு ஆலயம் எனில் ப்ரபந்தம்) பாடி தூபம்,தீபம் காட்டி அந்த அறையை மூடிவிடுவதுதான்;

பள்ளியறை பூஜைக்கு ஈசனையும்,அம்பாளையும் பல்லக்கில் வைத்து வலம் வரும் போது,நாதஸ்வரம்,சங்கு,உடுக்கை,பேரிகை,துந்துபி,மத்தளம் மற்றும் திருக்கையிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்சவாத்தியங்கள் இசைக்க வேண்டும்;

இவைகளை யார் ஒருவர் சம்பளம் வாங்காமல் ஒரு பிறவி முழுவதும் இசைக்கின்றார்களோ,அவர்களே சிவலோகம் என்று அழைக்கப்படும் திருக்கையிலாயத்தில் இசைக்கும் கணங்களாக பொறுப்பேற்கின்றார்கள்;

ஒவ்வொரு தினமும் ஒரு சில நல்ல செயல்களையாவது செய்தோம் என்ற மன நிறைவு உடன் காலதேவனாகிய மஹாகால பைரவப் பெருமானுக்கு நாம் செய்யும் முறையான வழிபாட்டு தின நிறைவுதான் இந்த பள்ளியறை பூஜை!

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும் போது,சிவபுராணம்,பதிகங்கள் பாடி வரவேண்டும்;இதைத் தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம்;

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ,அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும்,பல மாடிக்கட்டிடங்களுக்குச் சொந்தக் காரர்களாகவும்,பல ஆயிரம்கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகவும் மாறுவார்கள்;

பள்ளியறை பூஜைக்கு பூக்கள்,பூச்சரங்கள்,நிவேதனம் செய்து தருபவர்கள் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கக் காரணமாக இருக்கும்;

பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு அருமையான வாரிசுகள் இப்பிறவியிலேயே கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய்,மின் விளக்கு தானம் செய்பவர்களுக்கு பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தை அடுத்த பிறவியில் பெறுவார்கள்;

ஆயில்யம்,கேட்டை,மூலம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கைத் துணை அமையும்;எனவே,இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;

பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும்,காணாமல் போய் பல ஆண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை அறியவும்,அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள்,பால்,நைவேத்தியம் போன்றவைகளை வாங்கித் தரவேண்டும்;


பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிகமான சம்பளம் தரும் வேலையில் சேருவர்;அவர்களது மகனும்,மகளும் மற்றும் பேரன் பேத்திகள் அதிக சம்பளம் தரும் வேலையில் இருப்பார்கள்;குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இப்படிப்பட்ட பலன் கிட்டும்;

பள்ளியறை பூஜைக்கு பால்,நைவேத்தியங்கள் செய்து கொடுப்பவர்களும்,பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர்,ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகள் இப்பிறவியிலும்,மறுபிறவியிலும் பிறப்பார்கள்;

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு,அதன் முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்தால்,சுகப்பிரசவம் ஏற்படும்;நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் அவர்களுக்கு வலியில்லாத பிரசவம் உண்டாகும்;குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும்;இப்படிப்பட்ட சிந்தனை உண்டானால்,அவர்களுக்கு பிரசவ வைராக்கியம் உருவாகுவற்குப் பதிலாக முக்தி வைராக்கியம் உண்டாகும்;

பள்ளியறை பூஜையிலும்,அதன் நிறைவுப்பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவார்கள்;பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்;


பள்ளியறை பூஜைக்கு எண்ணெய்,நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக்காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது;

அசுபதி நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜை சேவை செய்து வருவதால் பிரிந்த வாழ்க்கைத் துணை சேர்ந்துவிடுவர்;அல்லது காணாமல் போனவர்கள் வீடு திரும்பிவிடுவர்;
10.2.2019 அன்று மாலை 4.22 முதல் அசுபதி நட்சத்திரம் வர இருக்கின்றது;அன்று இரவு முழுவதும்இருப்பதால்,பள்ளியறை பூஜைக்குச் செல்லலாம்;இதே போல,10.3.2019 அன்றும் இருக்கின்றது;

மிருகசீரிடம் நட்சத்திரமும்,திங்கட்கிழமையும் இணைந்து இரவு 9 மணி வரையிலும் வர வேண்டும்;இந்த நாளில் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்;இப்படிக் கலந்து கொள்வதன் மூலமாக,கலந்து கொள்பவர்கள் தமது வாழ்நாளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் தெளிவாக சிந்தித்து முடிவு செய்யும் திறனை ஈசன் வழங்குவார்;மேலும்,முக்கியமான வரம் ஒன்றையும் (அவரவரது பூர்வ ஜன்ம புண்ணியத்திற்கு ஏற்றாற்போல) தருவார்;அது அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் போது அரிய வரமாக கைகொடுக்கும்;
1.10.2018 அன்று இம்மாதிரியான இணைப்பு வருகின்றது;

ஆயில்யம் நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் சேவை செய்தால் திருமணத்தடைகள் நீங்கிவிடும்;
25.12.2018 செவ்வாய் இரவு 7.48 முதல் ஆயில்யம் வர இருக்கின்றது;22.1.2019 அன்றும் வர இருக்கின்றது;

அஸ்தம் நட்சத்திரமும்,புதன் கிழமையும் இணைந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் சேவை செய்து வந்தால் செய்யும் வேலையில் (அரசுப்பணி,தனியார் வேலை) எல்லா விதமான தடைகளும் நீங்கி உயர் பதவிகளை அடைவர்;

அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் இணைந்து வரும் நாட்களில் பள்ளியறை பூஜையில் சேவைகள் செய்து வந்தால் எல்லாவிதமான சித்திகளும் கைகூடும்;

6.12.2018 அன்று வியாழன்+அனுஷம்+அமாவாசை மூன்றும் சேர்ந்து வர இருக்கின்றது;

உத்திராடம் நட்சத்திரமும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் நாட்களில் பள்ளியறைபூஜையில் சேவை செய்து வந்தால் பெண்ணுக்கு மாங்கல்ய பலம் வலுவடையும்;கணவனது நோய்கள் தீர்ந்துவிடும்;

29.3.2019 வெள்ளி மதியம் 3.51 முதல் உத்திராடம் நட்சத்திரம் வர இருக்கின்றது;

சதயம் நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்து வரும் போது  பள்ளியறை பூஜையில் சேவை செய்து வந்தால் சாதனை செய்யும் குழந்தை பிறக்கும்;
20.10.2018

இன்றைய கால கட்டத்தில் எந்த பூஜை செய்தால்,என்ன பலன் கிட்டும்? எந்தபரிகாரம் செய்தால் எது கிடைக்கும்? என்ற மனோபாவம் எல்லோரிடமும் வந்துவிட்டது;பொருளாதாரத் தன்னிறைவு எட்டினாலும்,ஆன்மீக விழிப்புணர்ச்சி அடையாத வரையிலும் இந்த மனப்பான்மை தொடரத்தான் செய்யும்;


பலனை எதிர்பார்த்து கோவிலுக்குச் சென்று வழிபாடு,பரிகாரம்,தானம்,பூஜைகள் செய்தால் அதற்கு உரிய பலன் கிடைக்கும்;அதே சமயம்,பிறவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிடும்;

வேண்டத்தக்கது அறிவாய் நீ அருணாச்சலேஸ்வரா!
வேண்டிட முழுவதும் தருவாய் நீ அண்ணாமலையானே!! என்று தினமும் பிரார்த்தனை செய்யப் பழக வேண்டியது நமது கடமைகளில் முதன்மையானது ஆகும்;

தினமும் நாம் சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்று வரும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்வோம்;இப்பிறவிக்கும்,மறுபிறவிக்கும் ஈசன் அருளைப் பெறுவோம்;

சித்தர்களின் தலைவரும்,நமது தமிழ் குருவுமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளால் இந்த கட்டுரையைத் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

                       வாழ்க          வளர்க.!

No comments:

Post a Comment