🌹 முப்பெரும் தேவியருக்கான முன்னணிவிரதம் 🌹
நவராத்திரி வழிபாடு
நவராத்திரி கல்விக்கும் கலைக்கும் கலாசாரத்திற்கும் விருந்தோம்பலுக்கும் நட்புறவுகளின் நல்லிணக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது நவராத்திரி விழாவாகும்.
மனித குலம் மேம்பட
கல்வியும்
செயலாற்றலும்
செல்வமும்
அவசியமாகிறது.
வீரத்தையும் வெற்றி வாய்ப்புகளையும் வளர்ப்பதற்கு மலை மகளான துர்க்கா தேவி, செல்வத்தையும் சுகங்களையும் வழங்குவதற்கு திருமகளான ஸ்ரீலக்ஷ்மிதேவி, கல்வி கலைகளை அளிப்பதற்கு கலைமகளான ஸ்ரீ சரஸ்வதி தேவி,இவர்களை ஒன்பது நாட்களில் உள்ளம் ஒன்றி வழிபடுவதே நவராத்திரி விரதத்தின் மகத்துவமாகும்.
அமாவாசை திதி முடிந்து பிரதமையில் தான் நவராத்திரி விரதம் ஆரம்பமாகும். பிரதமம் என்றால் பிரதானமானது முதன்மையானது என்று அர்த்தம். பிரதமை என்றால் முதலாம் திதி இந்தப் பிரதமை யிலிருந்து நவராத்திரி பூஜையை ஆரம்பித்து வரிசையாக ஒன்பது நாட்களும் நவராத்திரி விரத பூஜைகளை நடத்தவேண்டும்
நவராத்திரி நாட்களில் பிரதமை - துவிதியை - திருதியை - ஆகிய மூன்று திதிகளும் துர்க்கா தேவிக்கு உரியவை
சிவப்பு நிறம், நீலநிற பூக்கள் உகந்தவை புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் இவை உகந்தவை சுண்டல் - பட்டாணி சுண்டல்செய்து வைத்து விநியோகிக்கலாம்.
சதுர்த்தி - பஞ்சமி - ஷஷ்டி - ஆகிய மூன்று திதிகளும் ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு உரியவை .
செந்தாமரை, செவ்வரளி, ரோஜா, செம்பருத்தி, கதம்ப பூக்கள் உகந்தவை சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், பாயசம், பஞ்சாமிர்தம் இவை உகந்தவை சுண்டல் - மொச்சை அல்லது கொண்டைக் கடலை சுண்டல் செய்து வைத்து விநியோகிக்கலாம்.
சப்தமி - அஷ்டமி - நவமி - ஆகிய மூன்று திதிகளும் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு உரியவை.
வெண் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூக்கள் உகந்தவை வெண் பொங்கல், பால்சாதம், தேங்காய் சாதம், பசும்பால் இவை உகந்தவை சுண்டல் - பச்சைப் பயறு சுண்டல்செய்து வைத்து விநியோகிக்கலாம்.
இந்த ஒன்பது நாட்களும் தொடர்ச்சியாக பூஜை செய்ய இயலாதவர்கள் அஷ்டமி அன்று மட்டும் பூஜித்து முழுப் பலனையும் பெறலாம். அன்று தான் தட்சனை அழிக்க காளி தேவி பிரத்யட்சமான நாளாகும் !
மலைமகள் திருமகள் கலைமகள் ஆகிய முப் பெரும் தேவிகளின் திருவருள் என்றும் எல்லோருக்கும் சிறந்து விளங்கி, சகல நன்மைகளும் மேன்மைகளும் அளிக்க வேண்டி உளமார இறைஞ்சுகிறோம்.🌹
நவராத்திரி வழிபாடு
நவராத்திரி கல்விக்கும் கலைக்கும் கலாசாரத்திற்கும் விருந்தோம்பலுக்கும் நட்புறவுகளின் நல்லிணக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது நவராத்திரி விழாவாகும்.
மனித குலம் மேம்பட
கல்வியும்
செயலாற்றலும்
செல்வமும்
அவசியமாகிறது.
வீரத்தையும் வெற்றி வாய்ப்புகளையும் வளர்ப்பதற்கு மலை மகளான துர்க்கா தேவி, செல்வத்தையும் சுகங்களையும் வழங்குவதற்கு திருமகளான ஸ்ரீலக்ஷ்மிதேவி, கல்வி கலைகளை அளிப்பதற்கு கலைமகளான ஸ்ரீ சரஸ்வதி தேவி,இவர்களை ஒன்பது நாட்களில் உள்ளம் ஒன்றி வழிபடுவதே நவராத்திரி விரதத்தின் மகத்துவமாகும்.
அமாவாசை திதி முடிந்து பிரதமையில் தான் நவராத்திரி விரதம் ஆரம்பமாகும். பிரதமம் என்றால் பிரதானமானது முதன்மையானது என்று அர்த்தம். பிரதமை என்றால் முதலாம் திதி இந்தப் பிரதமை யிலிருந்து நவராத்திரி பூஜையை ஆரம்பித்து வரிசையாக ஒன்பது நாட்களும் நவராத்திரி விரத பூஜைகளை நடத்தவேண்டும்
நவராத்திரி நாட்களில் பிரதமை - துவிதியை - திருதியை - ஆகிய மூன்று திதிகளும் துர்க்கா தேவிக்கு உரியவை
சிவப்பு நிறம், நீலநிற பூக்கள் உகந்தவை புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் இவை உகந்தவை சுண்டல் - பட்டாணி சுண்டல்செய்து வைத்து விநியோகிக்கலாம்.
சதுர்த்தி - பஞ்சமி - ஷஷ்டி - ஆகிய மூன்று திதிகளும் ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு உரியவை .
செந்தாமரை, செவ்வரளி, ரோஜா, செம்பருத்தி, கதம்ப பூக்கள் உகந்தவை சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், பாயசம், பஞ்சாமிர்தம் இவை உகந்தவை சுண்டல் - மொச்சை அல்லது கொண்டைக் கடலை சுண்டல் செய்து வைத்து விநியோகிக்கலாம்.
சப்தமி - அஷ்டமி - நவமி - ஆகிய மூன்று திதிகளும் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு உரியவை.
வெண் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூக்கள் உகந்தவை வெண் பொங்கல், பால்சாதம், தேங்காய் சாதம், பசும்பால் இவை உகந்தவை சுண்டல் - பச்சைப் பயறு சுண்டல்செய்து வைத்து விநியோகிக்கலாம்.
இந்த ஒன்பது நாட்களும் தொடர்ச்சியாக பூஜை செய்ய இயலாதவர்கள் அஷ்டமி அன்று மட்டும் பூஜித்து முழுப் பலனையும் பெறலாம். அன்று தான் தட்சனை அழிக்க காளி தேவி பிரத்யட்சமான நாளாகும் !
மலைமகள் திருமகள் கலைமகள் ஆகிய முப் பெரும் தேவிகளின் திருவருள் என்றும் எல்லோருக்கும் சிறந்து விளங்கி, சகல நன்மைகளும் மேன்மைகளும் அளிக்க வேண்டி உளமார இறைஞ்சுகிறோம்.🌹
No comments:
Post a Comment