Saturday, April 28, 2018

இன்று நரசிம்மர் ஜெயந்தி 28/04/2018 சனிக்கிழமை


சித்தர் போற்றி!                                                                               சிவம் போற்றி!
நவநாயகர் போற்றி!                                                          வாலையே போற்றி!
                                                   குருவே துணை!
           
                                        இன்று நரசிம்மர் ஜெயந்தி
                                    
     
        குடவறைக் கோயில்களில் பிரசித்தி பெற்றது நாமக்கல் நரசிம்மசாமி கோயில். ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்ட இந்த கோயில், கிபி.7ம் நூற்றாண்டில் ஆதியேந்திர குணசீலன் என்ற பல்லவமன்னரால் சீரமைக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டுக்குறிப்புகள் கூறுகின்றன. இரணியனின் கொடுமைகளில் இருந்து பிரகலாதனை காப்பதற்கு மகாவிஷ்ணு எடுத்தது தான் நரசிம்மஅவதாரம். இரண்யவதத்திற்கு பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலய குளத்தில் நின்று தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலய குளத்தை கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார்.
      தாகம் தீர்த்த அனுமாரால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்த நரசிம்மருக்காக கட்டப்பட்டது தான், இந்த அற்புத குடவறைக் கோயில் என்கின்றது தலவரலாறு. பாறையில் பிரம்மாண்டமாக செதுக்கப்பட்டுள்ள நரசிம்மர், சிம்மாசனத்தின் மீது அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கும் நரசிம்மரின் வலதுகையில் இரணியனை வதம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் நுட்பத்துடன் தென்படுகிறது. திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களிலும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவற்றின் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரின் பாதங்களைப் பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரமாக உள்ளது. நாமக்கல் மலைக்கோட்டையை மகாவிஷ்ணுவின் கோட்டை என்கின்றனர் பக்தர்கள்.
                              

  மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே வரதராஜராகவும், மலையின் மேல் நரசிம்மராகவும் காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இங்கு பூஜிக்கப்படுவதால், இந்த தலத்தை மும்மூர்த்தி தலம் என்று அழைக்கின்றனர். மூர்த்திகளுக்கும் நரசிம்மர் சன்னதியில் மூன்று காலப்பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
        இன்று நரசிம்மர் ஜெயந்தி என்பதால் இவரை வழிபட்டால் உடனடியாகத் தோன்றி அருள்புரிவார். அதனாலேயே நாளை என்பதே இவரிடத்தில் இல்லை என்றோர் வாக்கும் உண்டு. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும் என்பதால்.
    தீராத கடன், பிணி, எதிரிகளின் தொந்தரவு ஆகியவை தீர இவரை வழிபடலாம்.
    வழக்குகளில் தொய்வு, பில்லி சூன்யம், காரியத்தடை ஆகியவற்றில் வெற்றி பெறலாம்.
     பானகம், நீர் மோர், பழங்கள், வெற்றிலை ஆகியவை வைத்து இவரை வழிபட்டால் பூரண அருள். பெறலாம்.

    நரசிம்மர் காயத்திரி
ஓம் வஜ்ர நகாய வித்மஹே!
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி!
தந்நோ ந்ருஸிம்ஹ ப்ரசோதயாத்!!

                       


Wednesday, April 25, 2018

ஆதிசங்கரர் ஜாதகம் --- ஆய்வு 26/05/2018 வியாழன்


குருவே போற்றி!        வாலைத்தாயே துணை        திருவே போற்றி!

                        ஆதிசங்கரர் ஜாதகம்

  
செ       
சூ சு
பு

ரா

சந்

வி


         இராசி




   
சனி                                      

கே


          
சுக் 
ரா

சூ



       அம்சம்

செ


   சந்                                         
சனி பு
வி
கே
         
                                                                        







    



              இன்று ஸ்ரீசங்கர ஜெயந்தி.
  வைசாக சுத்தம் வளர்பிறை பஞ்சமி திதியில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நன்னாளில் கேரளாவில் உள்ள காலடி என்னும் சிற்றூரில் சிவகுரு-ஆர்யாம்பாள் என்கிற தம்பதியருக்கு  மகனாக  சங்கரர் அவதரித்தார்
     . கேரளாவில் உள்ள வடக்குநாதர் கோயிலுள்ள சிவனை வழிபட்டு வந்த குழந்தையில்லா இத்தம்பதியருக்கு சிவனின் அருளால் ஒரு மகன் பிறக்க, அவனுக்கு சங்கரன் எனப் பெயர் சூட்டி அழைத்தனர்.
     இப்புண்ணிய பரத கண்டத்தில் ஸநாதன தர்மம் அந்நியர்களின் படையெடுப்பால் நசிந்து போய்க் கொண்டிருந்த காலக்கட்ட்த்தில்தான் கிட்டத்தட்ட 6ஆம் நூற்றண்டில் இவர் அவதரித்தார்.
      ஆன்மீகத்தில் சிறந்து விளங்கி  ஆத்ம சாதனை பல புரிந்து இறைவனைக் கண்டு தரிசித்த இவர், அத்வைத சித்தாந்தத்தை பரப்பி இந்து மதத்தின்  ஆணிவேராக திகழ்ந்தவர்.
      நசிந்து கிடந்த இந்து மதத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும்  சீர்படுத்தி மக்கள் எளிய முறையிலே இறைவழிபாட்டை செய்திட ஷண்மதத்தை ஸ்தாபித்தார்.
      மக்கள் போற்றும் மகாஞானியாக விளங்கிய இவர், இந்தியாவில் 4 பெரிய மடங்களையும் தோற்றுவித்தார். அதில் காஞ்சிபுரத்தில் உள்ள மடம் காமகோடி பீடமாக அன்னை ஸ்ரீகாமாக்ஷியின் ஆக்ஞையினால் இவரை சர்வக்ஞராக அமர வைத்து அழகு பார்த்தது.                                      

      அந்நாளில் நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் தெளிவுறக் கற்று பிரம்மசூத்திரத்திற்கு விளக்கவுரை எழுதினார். கனகதாரா ஸ்தோத்திரம், செளந்த்ர்ய லஹரி, பஜ கோவிந்தம் ஸுப்ரமண்ய புஜங்கம் போன்ற அதி அற்புதமான செய்யுட்களையும், பாடல்களையும் இயற்றினார். பல வேத விற்பன்னர்களை தேடிச் சென்று சமய வாதம் புரிந்து வெற்றியும் பெற்று அத்வைத சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்பி வந்தார். உலகமே போற்றும்வண்ணம் ஜகத்குருவாகவும் திகழ்ந்தார்.

அம்மகானது ஜாதகத்தை இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
                               தொடரும்......