Saturday, March 24, 2018

நவநாயகர்களின் லீலை! உலகமாந்தர்களின் வேலை! 23/03/2018 சனி

சித்தர் போற்றி!                                                                               சிவம் போற்றி!
நவநாயகர் போற்றி!                                                          வாலையே போற்றி!
                                                   குருவே துணை!

நவநாயகர்களின் லீலை!
உலகமாந்தர்களின் வேலை!


ஜாதகத்தில் ஒருவரின் குணாதிசயங்களை 7ஆம் இடத்தைக் கொண்டு அறியலாம்.

நவகோள்கள் பலஹீனம் அடையும்போது ஜாதகர் எந்தவிதமாக தொழில் செய்கிறார் என்பதை இவ்விடத்தைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும்.

அரசு அலுவலகங்களில் தாழ்ந்த நிலையில் பணிபுரிவோர்க்கு வாட்ச்மேன்டைம் கீப்பர்,ப்யூன் ஆகியோர்க்கு -- சூரியன்
பலஹீனமாக இருப்பார்.


காய்கறி வியாபாரம்பழம் மற்றும் பூ வியாபாரம் போன்ற பஸ்மாதி தொழில் செய்வோர்க்கு--- சந்திரன் பலஹீனமாக இருக்கும்.

தட்டான்தச்சர்ஈயம் பூசுவோர்உலையில் வேலை செய்வோர்தோட்டத்தில் களை எடுப்போர்தண்ணீர் பாய்ச்சுவோர்சாய வேலை செய்வோர், ---- செவ்வாய் பலஹீனமாக இருப்பார்.

எதையும் செய்து பணம் தேடுவோர்க்கு புதன் பலஹீனமாக இருப்பார்.(மாமா வேலை செய்வோர்).

                                   ……..அடுத்து வரிசையாக வருவர்.

நவநாயகர்களின் லீலை! உலகமாந்தர்களின் வேலை! லீலைகளின் தொடர்ச்சி .. 24/03/2018 ஞாயிறு


சித்தர் போற்றி!                                                                               சிவம் போற்றி!
நவநாயகர் போற்றி!                                                          வாலையே போற்றி!
                                                   குருவே துணை!


நவநாயகர்களின் லீலை!
உலகமாந்தர்களின் வேலை!

லீலைகளின் தொடர்ச்சி………..

சமையல்காரர், சமையல் வேலை செய்வோர், விருந்து பரிமாறு வோர், கோயிலில் எடுபிடி வேலை செய்வோர்க்கு ---- குரு பலஹீனமாக இருப்பார்.


மதுவகை பானங்கள், போதைப்பொருட்கள், அழுகும் பொருட்கள், கிழிந்த துணிமணிகள் விற்பனை செய்தல்,பெண்களைக் கொண்டு நடத்தும் தொழில் செய்வோர்க்கு ---- சுக்ரன் பலஹீனமாக இருப்பார்.


கைவண்டி இழுப்போர், அனுதினமும் மூட்டை தூக்கி சம்பாதிப்போர், சாலை பணியாளர்கள், ----- சனி பலஹீனமாக இருப்பார்.


தோல் பொருட்கள்,  தோல் பதனிடுதல், இறைச்சி வியாபாரம், சாக்கடை துப்பரவு பணியாளர்கள் ---- ராகு பலஹீனமாக இருப்பார்.
     

குடுகுடுப்பைக்காரர், மாந்திரிக வேலை செய்வோர், பில்லி சூன்யம் செய்வோர், துர் ஆவிகளைக் கொண்டு சைத்தான் வேலை செய்வோர்க்கு ---- கேது பலஹீனமாக இருப்பார்.




இன்னும் வரும் வேறு காட்சிகளாக......


Wednesday, March 14, 2018

இன்று காரடையான் நோன்பு : 14/03/2018 புதன்

          தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு :

‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பது பழமொழி. தாலிகட்டி, கரம் பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இல்லற வாழ்க்கையில் இணைந்த கணவன், எப்போதும் பிரியாமல் இருக்கவும், அவன் நீண்ட ஆயுளுடன் வாழவும் மனைவி நோற்கின்ற விரதம் இது. மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என்பதே, இந்த நோன்பின் குறிக்கோள் ஆகும்.
கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.
                                                  
    மாசி மாத முடிவில், பங்குனி மாத தொடக்கத்தில், இந்த விரதம் கடைப் பிடிக்கப்படுகிறது. ‘மாசிக்கயிறு பாசி படியும்’ (விருத்தியாகும்) என்ற பழமொழிக்கேற்ப, இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.

இதனால் காரடையான் நோன்பு மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரம் அருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர்.
பதிவிரதையான சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிரை எமன் பறித்து சென்றான். சாவித்திரி அவனை தடுத்து, வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தாள். இதற்காக இவள் நோற்ற நோன்பு தான் சாவித்திரி நோன்பு ஆகும். காரடையான் நோன்பின் போது, சாவித்திரியின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியம்.
அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு சமயம் காட்டுக்கு சென்ற போது, எதிரி களால் நாடு இழந்து அங்கு வசித்து வந்த, த்யுமற்சேனன் என்ற பார்வையற்ற மன்னரின் மகனான சத்தியவானை சந்தித்தாள். பெற்றோருக்கு அவர் செய்த பணிவிடை சாவித்திரியை கவர்ந்தது. அவள் சத்தியவானை மணமுடிக்க விரும்பினாள்.
தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். அவரும் மகிழ்ச்சி அடைந்து சத்தியவானின் ஜாதகத்தை பார்த்த போது, அவனுக்கு இன்னும் 1 வருடமே ஆயுள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரியின் தந்தை, ‘வேறு மாப்பிள்ளை பார்க்கலாம்’ என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி, தனது முடிவில் பிடிவாதமாக இருந்து சத்தியவானையே திருமணம் செய்தாள்.
கணவரின் ஆயுள் முடிவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக சாவித்திரி ஒரு விரதத்தை தொடங்கினாள். இரவும், பகலும் கண் விழித்து, அன்ன ஆகாரமின்றி கடும் விரதம் இருந்தாள். அன்று சத்தியவான் பெற்றோருக்கு பழம் பறித்து வருவதற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்டான்.
அவனுடன் தானும் வருவதாக கூறி சாவித்திரியும் உடன் சென்றாள். சத்தியவானின் ஆயுள் முடியும் நேரம் வந்தது. திடீரென அவன் தலை வலிக்கிறது என்று கூறி கீழே விழுந்தான். அவனை சாவித்திரி தாங்கி பிடித்து, தனது மடியில் சாய்த்துக் கொண்டாள்.
அப்போது அங்கே பாசக்கயிற்றுடன் எமன் தோன்றினான். ‘நீங்கள் யார்?’ என்று சாவித்திரி கேட்டாள்.

அதற்கு எமதர்மன், ‘பெண்ணே! உன் கணவரின் ஆயுள் முடிந்து விட்டது. பதிவிரதையானதால் உனது கண்களுக்கு தெரிந்தேன். நான் எமதர்மன்’ என கூறிவிட்டு, சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு புறப்பட்டான்.
சாவித்திரியும் எமனை பின் தொடர்ந்து சென்று, ‘நண்பரே! சற்று நில்லுங்கள்’ என்றாள்.
இதைக்கேட்டு திடுக்கிட்ட எமன், ‘நான் உனது நண்பனா?’ என வியப்புடன் கேட்டார்.
அதற்கு ‘ஒருவன் மற்றொருவருடன் ஏழு அடிகள் நடந்து சென்றால், இருவரும் நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் நான் உங்களை பின் தொடர்ந்து வந்தேன். நீங்கள் என் நண்பர் ஆவீர்கள்’ என சாவித்திரி பதில் அளித்தாள்.
இதைக்கேட்டு எமன் புன்முறுவலுடன், ‘அழகாக பேசும் உனக்கு பாராட்டுகள். உனக்கு வேண்டும் வரங்களை தருகிறேன். உன் கணவனின் உயிர் தவிர, வேறு எதையாவது கேட்டு பெற்று கொள்’ என்றார்.
அதற்கு சாவித்திரி ‘தர்ம மகாராஜாவுக்கு மிகவும் நன்றி. என் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும். என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. அவருக்கு நூறு குழந்தைகள் வேண்டும். மேலும் எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்’ என்றாள்.
‘நீ கேட்ட வரத்தை தந்தேன். இனியும் என்னை பின் தொடராமல் போய்விடு’ என்றார் எமன். ஆனால் சாவித்திரி மீண்டும் எமனை பின் தொடர்ந்தாள்.
இதனால் கோபமடைந்த எமன், ‘வேறு என்ன வேண்டும்?’ என கேட்க, அதற்கு சாவித்திரி ‘தர்மராஜாவின் வாக்கு தப்பாது என்று நம்புகிறேன். எனக்கு 100 குழந்தைகள் பிறப்பதாக வரம் தந்தீர்கள். என் கணவன் இல்லாமல் எப்படி குழந்தை பிறக்கும்?’ என்றாள்.
இதைக்கேட்டு வெலவெலத்துப் போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார்.
காரடையான் நோன்பு அன்று சாவித்திரியின் கதையை கேட்பவர்களுக்கு தீர்க்காயுசு கிடைப்பதாக ஐதீகம்.
விரதமுறை :
காரடையான் நோன்பன்று வீட்டை தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை சூட்ட வேண்டும்.
                                                         
          ஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்த போது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக் குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி துளசியை ஒன்று கட்டி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் 
வைத்து நோன்பு நோற்றேன் 
ஒரு நாளும் என் கணவன் என்னைப் 
பிரியாமல் இருக்க வேண்டும்’
–என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும்.
பிறகு தானும் கட்டிக் கொண்டு, அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல், முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன், பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.
வைக்கோலுக்கு மரியாதை :
காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும் போது, வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை, உடலை காத்திரு!’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
பார்வதி தேவி செய்த சிவலிங்க பூஜை :
பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை, காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.
                                        
ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாக மூடினாள். ஆதியும், அந்தமுமான அருட்பெருட்ஜோதியான பரமேஸ்வரனின் கண்கள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திரு விளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார்.
ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது. 


வாழ்க்கை பசுமையாகட்டும்!             வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்!!




Wednesday, March 7, 2018

கும்பாபிஷேகம் என்பது என்ன?....7/3/2018 புதன்

கும்பாபிஷேகம் என்பது என்ன?....

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து பகிறவும்...

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.

1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}

8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}

9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18, விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

Tuesday, March 6, 2018

6/3/2018 செவ்வாய்

பட்டீஸ்வரர் !!! பேரூர்

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று உள்ள‍ து.

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.


இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .

*இறவாத "பனை",

*"பிறவாத புளி,"

*"புழுக்காத சாணம்,"

*"எலும்பு கல்லாவது,"

*"வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து."

"இதுதான் அந்த அதிசயங்கள்"

இறவாத பனை:-

பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று
கொண்டிருக்கிறது.

இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.

இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், . . .

தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் "இறவாத பனை"

 பிறவாத புளி:-

அடுத்து "பிறவாதபுளி," என்றுபோற்ற‍ப்படும் "புளியமரம்" இங்கு இருக்கிறது.

இந்த "புளியமரத்தின்" கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம்.

"புளியம்பழத்தின்" கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். "முளைக்க‍வே இல்லை."

இந்த "புளியமரம்" இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம்.

அதனால் "பிறவாத புளி "என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்,:-

மூன்றாவதாக புழுக்காத "சாணம்," கோயில் இருக்கிற "பேரூர்" எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் . . .

ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் "சாணம் "
மண்ணில் கிடந்தால் . . .

எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்.
             
மனித எலும்புகள் கல்லாவது:

அடுத்து "மனித எலும்புகள்" கல்லாவது.

இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை . . .

இந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம்.

அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற "எலும்புகள் "சிறிது காலத்தில் "கற்களாக உருமாறி" கண்டெடுக்க‍ப்படுகிறதாம்.

*அதுதான்" பட்டீஸ்வரரின்" திருவருவள்.

த‌மது வலது "காதை" மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து:-

ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும்   இங்கு  இன்னமும்  நடந்து   கொண்டுதான் இருக்கின்றது.
இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற "பட்டீஸ்வரர்," . . .

இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார்.

ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது.

முன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.

அப் போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .

*அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்.

இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது "பட்டீஸ்வரர்."

**கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர்.

இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, . . .

மார்பில் பாம்பின் பூணூல்,

தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள்,

சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,

இவைகளோடு " பட்டீஸ்ரர்" தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.

இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்  திருக்கிறார்கள்.

இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன.
ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் ""திப்பு சுல்தான்.""

இந்தக் கோயில் . . .
அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள்.

ஆம் இறைவன் குடியிருக்கும் "சிவலிங்கம்" அடிக்க‍டி அசையும் என்று, . . .

இதை நம்பாமல்
"சிவாலயத்தின் "
மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் "திப்பு சுல்தான்"

*அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன.

நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்.

கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது
நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது "பட்டீஸ்வரரிடம்" தன்னை
மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.

கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.

இவனைப்போன்றே "ஹதர் அலியும் " நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.

இக்கோயிலின் "ஸ்தல விருட்சம் அரச மரமாகும்."

இங்குள்ள‍ அம்ம‍னின் பெயர் ""பச்சை நாயகியாகும்.""

""பச்சை நிறமாகிய மரகதக் கல்லில்" அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.

அன்னையின் அன்புமுகத் தைப்பார்த்து கொண்டேயி ருக்க‍லாம்.

அவ்வ‍ளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள்.

*இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது.

அத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது.

கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள்
நிற்கின்றன.

அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவாக்க‍ப்பட்டுள்ள‍து.

ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.

இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன.

**குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது.

இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.

சிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍, . . .

தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.

மேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப்படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.

அருள் நிரம்பிய இந்த ஆலயத் தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு,
வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி, கோமுனி,
பட்டிமுனி , போன்றவர்களும் வணங்கி
அருள் பெற்றுள்ளனர்.

அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள‍ மூருகன் பழனியில் உள்ள‍தை போன்றே மேற்கு நோக்கி தண்டபாணி
த் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான்.

* நால்வரில் ஒருவராகிய "சுந்தரர், "இங்குள்ள‍ "பட்டீஸ்வர்ரை" வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.

எப்போதுமே "சுந்தரரிடம்" ஒரு நல்ல‍ குணம் உண்டு.

எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார்.

ஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்ல‍வா!

இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.

செல்வ செழிப்போடு இருந்த "ஈசனுக்கே" ஒருமுறை பணம் தட்டுப்பாடாம்.

"சுந்தரர் " வந்தால், பணம் கேட்பானே என்ன‍ செய்வது என்று யோசித்த" பட்டீஸ்வரர்"
"சுந்தரரிடமிருந்து" தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாறும் நடும் கூலி தொழிலாளியாய், "பச்சையம்ம‍னுடன்" சேர்ந்து நாற்று நடும்போது "சுந்தரர்" பார்த்து விடுகின்றார்.

அவரை அழைத்து வந்து
ஆட வைக்கிறாராம்.

அவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது.

*அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்:-

பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்
பங்கன் பைங்கண் ஏற்ற‍ன்
ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்
இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச்
சிற்ற‍ம்பலத்தே பெற்றாம் அன்றே!

**சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் "இறைவன்" அதைக்கண்டு மகிழ்ந்து பாடினார் "சுந்தரர்."

"சுந்தரர்" பாடிய "இறைவனை" மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.

""பேரூரில் இறைவனும் இறைவியும் "" நடவு நட்ட‍ வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்க‍ள் ""ஆனி மாதத்தில்"" வரும் ""கிருத்திகை நட்சத்திரத்தன்று"" உற்சாக‌மாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

படித்ததில் பிடித்தது
         
ஹர ஹர மஹா தேவா
திருச்சிற்றம்பலம் 
ஓம் நமசிவாய
அன்பே சிவம்