Tuesday, September 2, 2025

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

 திருமணத்திற்கு நாள்


பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள் 


1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)


 2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 


3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி. 


4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. …ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் 


5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது


 6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். 


7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. 


8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.


 9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. 


10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது. 


11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது. -


 இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.#ஓம் முருகா

புஷ்கர நவாம்சம் - பிரம்மாண்டமான மாற்றம்

 புஷ்கர நவாம்சம்  - பிரம்மாண்டமான மாற்றம் பிரமிக்கத்தக்க ஏற்றம் 



https://youtu.be/EIYvqgmQT5s?si=QqPc7D8T6OFWUMPP

Monday, September 1, 2025

பாரம்பரிய ஜோதிடத்தில் எப்படி பலன் பார்க்கப்படுகிறது?*

 *பாரம்பரிய ஜோதிடத்தில் எப்படி பலன் பார்க்கப்படுகிறது?* 


1.ஒரு கிரகம் தான் அமர்ந்த வீட்டின் தன்மைக்கு ஏற்ப பலன் தரும்..

2. அந்த கிரகத்தைப் பார்த்த சுப கிரகம்/ அசுப கிரகத்தின் பார்வை  அந்த கிரகத்தின் செயல்பாட்டை மாற்றி அமைக்கிறது.

3.அந்த கிரகம் அமர்ந்த வீட்டு அதிபதி இருக்கக்கூடிய நிலையில் (ஆட்சி, உச்சம், நீசம், வக்ரம், வர்க்கோத்தமம், மறைவு)அதன் செயல்பாட்டை மாற்றுகிறது.

4. அந்த கிரகம் நின்ற நட்சத்திர சாரம் எதுவோ அதற்கு ஏற்ப செயல்படுகிறது.

5. அந்த வீட்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய கிரகத்தோடு இணைந்து  மற்றொரு கிரகத்தின் செயல்பாட்டோடு இணைவு பெற்று பலனை புதிய வகையில் செயல்படுகிறது.


இவ்விதம் ஒரு கிரகம் தான் அமர்ந்த வீட்டின் வழியாக பலன்களை கொடுக்க ஆரம்பிக்கிறது.


வேத ஜோதிடம் (ஜோதிடம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பண்டைய இந்திய வேதங்களில் இருந்து உருவான ஒரு பாரம்பரிய இந்து ஜோதிட அமைப்பாகும். இது கிரகங்களின் நிலை மற்றும் நகர்வுகளைக் கொண்டு, ஒரு நபரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தை கணிக்கவும் பயன்படும் ஒரு கணிப்பு முறையாகும்