Thursday, February 6, 2025

ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் என்ன?


 






ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக் கிரக ரீதியான காரணம் என்ன?

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
*கடந்த வெள்ளிக்கிழமை* *(31/1/2025) அன்று* *புதியன கற்போம் பகுதியில் ஜாதகம் சிறப்பு ஆய்வில்*
*தெரிந்த கதை தெரியுமா விடை பகுதியில் ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக் கிரக ரீதியான காரணம் என்ன?* என்று குழுவில் கேட்கப்பட்டது.

சிறப்பு ஆய்வு என்றாலே அது சற்று விரிவாகவே இருக்கும்.
காலநிலை மாற்றம், வேற்று இடம், உணவு பழக்கம், தூக்கம் ஓய்வு எல்லாமே புதியன.

இது எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு பயணத்தால் ஏற்படும் *Jet log* ஆல் உடல் நிலை சற்று சீராக ஒரு வாரம் அல்லது 10நாட்கள் ஆவதால் உடனடியாக என்னால் உங்களுக்கு பதில் விளக்கம் கொடுக்க முடியாது போனைதற்கு மன்னிக்கவும்; வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*இதோ அதன் விளக்கமும் விவரமும்*



அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

நேற்றைய தினம் *தெரிந்த கதை தெரியுமா விடை?* பகுதியில் ஜாதகம் சிறப்பு ஆய்வில்
ஜாதகருக்கு *அமெரிக்கா விமான பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?* என்று சிறப்பு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஒரு சிலர் ஆய்வு செய்து சிறப்பாக பலன்களை கூறியிருந்தனர்.அவர்களுக்கு *எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.*

இதுபோன்ற சிறப்பு ஆய்வில் நாம் கலந்து கொண்டு பலன் கூறும் போது பல புதிய  விஷயங்கள் தெரிந்து கொள்ள கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும்.
தங்களது ஜோதிட அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளவும் பட்டைத் தீட்டிக் கொள்ளவும் முடியும்.

மேலும் ஒவ்வொருவரின் ஜோதிட பார்வை  வெவ்வேறு வகையான கோணங்களில் விரிந்து பலன் கூறுவது வியப்பாக இருக்கும்.
இப்படியும் ஒரு விஷயத்தைக் கண்டறிந்து பலன் கூறமுடியும் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதனால் தான் இதுமாதிரி ஆய்வினைப் *புதியன கற்போம்* என்று தலைப்பில் பதிவிடுகிறோம்.

சரி. கேள்விக்கு வருவோம்.

ஜாதகருக்கு *அமெரிக்கா விமான பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?* என்று சிறப்பு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டது.

ஜாதகரின் வயது 66

லக்னம் மிதுனம்

கன்னி ராசி

நட்சத்திரம் ஹஸ்தம் 4ஆம் பாதம

*நடப்பு தசா* *புதன் தசை/சுக்கிரன் புக்தி*

*புதன்* தசா
     /\
*1   4 க்குரியவர்*
   \  /
   *5ல் துலாம் ராசியில்*
(குருவுடன் இணைவு)

*சுக்கிரன் புக்தி*
       /\
    5.  12
      \  /
      *4ல் கன்னி ராசியில்*
*நீசம் மற்றும் திக் பலம்*
(புதன் சுக்கிரன் பரிவர்த்தனை)

*புதன் தசா நிலை*

*லக்னாதிபதி புதன்* குருவுடன் இணைந்துள்ளதால் சுபத்துவம் பெற்று 5ஆமிடத்தில் வலுவாக உள்ளார்.
மேலும் தனது நண்பரும் *லக்ன யோகரான சுக்கிரன்* வீட்டில் சுகமாக அமர்ந்துள்ளார்.
எனவே சுக்கிரனின் காரகத்துவங்களான கலை, இசை, ஓவியம், காதல், நுண் கலைகளில் நாட்டம்,மன மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் ஆழ்மன சிந்தனை, இறைநிலை நாட்டம், குலதெய்வம் அனுகிரகம், மந்திர உச்சாடனம், உபதேசம் ஆகியனவும் குருவருளும் திருவருளும் இயல்பாகவே அமைந்துவிடும். கிடைக்கப்பெறும்.

*சுக்கிரன் புதன் பரிவர்த்தனையால்* புதன் ஆட்சி உச்சம் பெறுபவர் ஆவதால் மேலும் கல்வியில் சிறந்தவராகவே புலமை மிக்கவராக திகழ்வார்.

அத்தோடு புதன் 5ஆமிடத்தில் இருந்து இயங்குவதால் 5ன் திரிகோணங்களான 1 மற்றும் 9ஆம் பாவங்களும் மறைமுகமாக இயங்கும்.
அதனால் நீண்ட தூரப் பயணங்கள் ஆன்மீக நாட்டம் தெய்வ வழிபாடுகள் தீர்த்த யாத்திரை சாதுக்கள் குருமார்கள் சந்திப்பு ஆசீர்வாதங்கள் கிட்டும்.



*புதன் தசா நாதன் பலன்கள்*

*காரகமும் பாவமும் இணைந்த பலன்*

மேற்கண்ட  பலன்கள் தசா புக்தி காலங்களில் நடைமுறையில் செயல்படும்.
இத்தோடு கோட்சார பலனும் அனுகூலமாக வலுவாக இருக்கும் பட்சத்தில் தசா பலன்கள் நன்முறையில் நற்பலன்கள் விளையும்.

அந்த வகையில் ஜாதகருக்கு புதன் தசா லக்னாதிபதி தசாவாக 5ஆமிடத்தில் இருந்து இயங்குவதால் அதன் பலன்கள் நன்மை தருவதாக அமையும்.லக்னாதிபதி
புதன் குருவோடு இணைந்து இருப்பது சுப பலன்கள் கூடுதலாக இருக்கும்.

*கோட்சாரத்தில் ராசிக்கு 4ஆமிடத்தில் புதன் குருவின் வீட்டில் தனுசுவில் இருப்பது சுப பலனே தரும்.*


அதேபோல லக்னப்படி 5ன் மற்றுமொரு திரிகோணமான 9ஆமிடமும் சேர்ந்து இயங்குவதால் *9ஆமிடத்தின் பாவக பலன்களையும் வெளிப்படுத்தவே செய்வதால் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.*

*வெளிநாட்டில் வாழும் மகள் மற்றும் பேத்தியைக் காணவேண்டி நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.*


*விமான பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்*👆

இதனை லக்னாதிபதியாகிய ஜாதகர் அனுபவிக்க கிரகங்கள் செய்துள்ளன.

*ஆக 1,5,9 திரிகோணங்கள் இயங்கி தசா புக்தி காலங்களில் பலனை அனுபவிக்க* *கோட்சாரமும் துணை புரிந்துள்ளன என்பது தெளிவாகிறது*.


*புக்தி நாதன் சுக்கிரன் செயல்பாடு*

*சுக்கிரன் புக்தி*
       */\*
    *5.  12*
      *\  /*
       *4ல் கன்னி ராசியில்*
*நீசம் மற்றும் திக் பலம்*
(புதன் சுக்கிரன் பரிவர்த்தனை)

புக்தி நாதன் தசா நாதனுக்கு கட்டுப்பட்டு அதற்கு ஏற்ப செயல்படுபவர் என்பதால்
*தசா நாதன் புதன் 5ல் இருந்து செயல்படுவதால்* அதன் மற்ற திரிகோணங்களும் இயங்குவதால் புக்தி நாதன் சுக்கிரன் 5,12க்குரிய பாவ பலன்களை 4ஆமிடத்தின் மூலமாகவே செயல்படுத்துவார்.

அதேசமயம் *புக்தி நாதன் பலவான் ஆவதால்* *சுக்கிரன் 4ல் இருந்து செயல்படுவதால்* அதன் மற்ற திரிகோணங்களும் இயங்கும் (8,12).

எனவே 5,12ன் பாவ பலனை 4ஆமிடத்தின் வாயிலாக செயல்படுத்தும்.
அத்தோடு 8,12 திரிகோணங்களும் தங்கள் பங்களிப்பை தவறாமல் அளிக்கும்.

இப்போது பாவகத்தையும் காரகத்தையும் இணைத்து விடுங்கள்.
சுக்கிரன் தரவுள்ள
முழு பலனையும் அறிந்து கொள்ள முடியும்.

தசா நாதனுக்கு சொல்லப் பட்ட பலனோடு சுக்கிரன் தனது *காரக ஆதிபத்திய* பலன்கள் சேர்த்து கொடுப்பார்.

ஆக 5,8,9,12 ஆதிபத்திய பலன்களை ஜாதகரை அனுபவிக்க புக்தி நாதன் சுக்கிரன் செய்வார்.

*புக்தி நாதன் சுக்கிரன் செயல்பாடு*

*சுக்கிரன் புக்தி*
      */  !   !   \*
    *5.  8  9  12 பாவ     பலன்கள்*
      *\  /* /. /
       *4ல் கன்னி ராசியில் சுக ஸ்தானத்தில்*
இருந்து வீடு, வண்டி, வாகனம், கால்நடைகள் வீட்டு உபயோகப் பொருட்கள், தாயார், உயர் நிலை படிப்பு வாயிலாக வெளிபடுத்தும்.

*12ன் செலவினத்தை விரையத்தை சுக்கிரன் லக்ன சுபர் ஆவதால் ஜாதகருக்கு சுப விரையமாக்கியது.*

அதன் வெளிப்பாடாக வீட்டில் *CCTV CAMERA set* செய்யப்பட்டது.

*4 சக்கர வாகனமான கார் service* செய்யப்பட்டது.

பயணத்தின்போது தேவை யான *Luxury materials* ஆன *கோட், சூட், dresses, Travelling Bag, suitcase* இன்னும் பிற சுக்கிரனின் காரகங்களுக்குரிய பொருட்கள் வாங்க செலவு செய்ய வைத்தது.

லக்னாதிபதி புதன் 1 மற்றும் 4 ஆமிடங்களுக்கு அதிபதி ஆனாலும் கால புருஷ தத்துவத்தின் படி 3,6க்குரியவராக வருவதால் *பிறர் சகாயம் உதவி, ஆதரவுடன் (3) எந்தவொரு சுகத்தையும் (4)* அனுபவிக்க நேரிடும் என்பது ஜோதிட விதி.

அதன்படி *மருமகன் மூலமாக அவரது sponsorship வாயிலாக* *வெளிநாட்டு பயணம் செல்வதற்கு அமைந்தது.*

சுக்கிரன் 4லிருந்து செயல்படுவதால் சுகமான சொகுசு வாகனமான விமானம் மூலம் வெளிநாட்டு பயணம் ஏற்பட்டது.

*பேத்தியைக் கவனித்து கொள்ள வேண்டியே* பயணம் ஏற்பட்டது *(5ஆமிடம்)*

8ஆமிடம் வெளிநாடு
9ஆமிடம் நீண்ட தூரப் பயணம்
*(3நாட்கள் விமானப் பயணம்)*

*வான்வழி பயணம்*
*கோட்சாரப்பலன்*


மேற்கண்ட ஜாதக ரீதியாக அமைப்பு இருப்பினும் *கோட்சாரம்* இந்த நிகழ்வுக்கு எவ்வாறு துணை புரிந்துள்ளன என்பது பார்ப்போம்.

*பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்* 👇


*விமான பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்*👆

லக்னாதிபதி புதன் சுப கோள் குருவின் வீட்டில் ராசிக்கு 4ல் அமர்வு.
எதையும் அனுபவிக்கும்
சுகமான நிலை.ஜாதகர் ஓகே.

ராசிக்கு குருவின் சுபபார்வை வேறு.கேதுவின் குழப்பநிலை மாறி ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும்.
ராசிக்கு 3,5 ஆமிடம் குருவின் சுப பார்வையால் தைரியம் முயற்சி ஆகியன வெற்றியைத் தரும்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் வலு பெறுவதால் குலதெய்வம்,தெய்வ அனுகிரகம், மந்திர உச்சாடனம், உபதேசம் பேரன், பேத்திகள் மீது பிரியம் உண்டு.

செவ்வாய் பார்வை புதனுக்கு படுவதால் செயல்பாடுகள் துரிதமாக நடைபெறும்.

புக்தி நாதன் சுக்கிரன் காற்று ராசியான கும்பத்தில் அமர்வு.
தனது நட்பு கிரகமான சனியின் வீட்டில் சுகமாக சனியோடு இணைவு.

சனி ஆகாய தத்துவத்திற்குரியவர்.

*எனவே சுக்கிரன்  காற்றில் ஆகாயத்தில் மிக உயரத்தில் பறந்து செல்லும் சுகமான சொகுசு வாகனமான விமானத்தில் பயணிக்கும்படி நிகழ்காலம் ஏற்றதாக அமைந்தது.*

(38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.)

*ஜாதகத்தில் லக்னாதிபதி புதன், 7ஆமிட அதிபதி குருவின் இணைவால் தனது துணைவியாருடன் சேர்ந்து அமெரிக்கா விமான பயணம் மேற்கொண்டார்.*

மேலும் 7ஆமிட செயல்பாடாக புதிய சமுதாய சூழல் மற்றும் மக்கள், சமுதாய அமைப்பு, வேற்று இனமொழி மதத்தினரோடு பழகுதல் தொடர்பு ஏற்பட்டது. *ராசியில் கேது மற்றும் 7ஆமிடத்தில் உள்ள ராகு அமைவு*
.

*4லில் இருந்த சந்திரன் ராகுவின் சாரமான சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம்*

வெளிநாடு செல்லல் அமைப்பு வேற்று மொழி பேசும் அந்நிய தேசம் வாசம் செய்தல் நிலையைத் தந்தது.

*வெளிநாட்டில் வாசம் செய்தல்*

பேத்தியை playing schoolக்கு அழைத்து *(5, 9ஆமிடம்*)*சென்று வருதல்.
*
சற்று தள்ளியுள்ள சிறிது தூரம் பயணம் செய்து பெரிய Departmental storeக்கு சென்று வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிமணிகள் purchase & shopping செய்தல். *.(4,7ஆமிடம்)*

அதேபோல கோவில்களுக்கு சென்று வருதல்.*.(9ஆமிடம்)*

மருமகனின் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வருதல் *.(7ஆமிடம்)*

அவர்கள் வீட்டில் நடக்கும் birthday party போன்றவற்றில் உற்சாகமாக கலந்து கொள்ளல் *.(5ஆமிடம்)*

*லக்னத்திற்கு 4ல் உள்ள சூரியன்* கோட்சாரத்தில் ராசிக்கு 5ல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக நாட்டம் மேலோங்கும் என்பதால் தெய்வ ஸ்தலங்கள் சென்று வழிபட்டு வருதல் நிலை உருவாகும்.
கற்ற கலையின் வாயிலாக நிரந்தர வருமானத்திற்கு வழியும் ஏற்படும்.

இதுபோன்று ஒரு ஜாதகத்தில் கேள்வி கேட்கப்படும் போது எவ்வாறு ஆய்வு செய்வது என்பது பற்றி உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஏறக்குறைய சரியாகவே  பலன்கள்  கணித்துள்ளனர்.

அவர்கள் *அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.*

அவர்கள் கணித்த பலன்கள் உங்கள் பார்வைக்காகக் மேலே முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்!

*....விரைவில் புதிய தொடர் ஆரம்பம்.....*

*நன்றி வணக்கம்*
*திரு S.ஷண்முகானந்தம்*
*M A.B.Ed., RTD Hm*
*ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட மையம் பொள்ளாச்சி*
*Camp: Henrico Richmond Virginia*



சுக்கிரன் முனியாண்டி

குரு வாழ்க .குருவே துணை. ஜோதிட கலை ஞானம் ஆன்மீக செம்மல் திருவாளர்.சன்முகாநந்தம் அவர்கள் பதிவு எளிதில் புரியும் படி தெளிவாக உள்ளது. வணக்கம் சார்
கா.முனியாண்டி
சிவகாசி 🙏🙏🙏🙏

                நன்றி வணக்கம் 🙏

No comments:

Post a Comment