*💐 வைகுண்ட ஏகாதசி...*இன்று 10.01.2025 வெள்ளிக்கிழமை
*சொர்க்கவாசல் எப்படி தோன்றியது?*
🔯 தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும், லோகத்தின் இரவை தட்சிணாயணம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தில் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் 'உஷக் காலம்" என்கிறோம்.
🔯 மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாகும். இந்த நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பதால் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை 'மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.
*சொர்க்கவாசல் பிறந்த கதை:*
🔯 ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணுபகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
🔯 'பகவானே... தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.
🔯 'எம்பெருமானே.... தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.
🔯 அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
**பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி அன்று *விரதம்* இருப்பதால் வாழ்க்கையை மாற்றக்கூடிய அற்புதமான பலன்கள் பெற முடியும்.**
பௌர்ணமி முதல் அமாவாசை வரை இருக்கக்கூடிய திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் அமாவாசை முதல் பௌர்ணமி வரை இருக்கக்கூடிய திதிகள் வளர்பிறை திதிகள் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு திதிகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபட்டால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வருடம் முழுவதும் ஏகாதேசி விரதம் இருந்தால் ஏற்படக்கூடிய பலன்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய தினமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசிகளுக்கு என்று பலன்கள் வேறுபடும். பெருமாளின் பரிபூரணமான அருளை பெறுவதற்காக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இந்த தகவலை தெரிந்துகொண்டு இருந்தால் மேலும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும்.
*சித்திரை மாதம்* வளர்பிறை ஏகாதசியை *காமாதா* என்போம். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்தால் அவர்களுடைய கணவன்மார்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். ..
தேய்பிறை ஏகாதசியை பாப மோகினி என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
🕉️🕉️🕉️
*வைகாசி* மாதம் வளர்பிறை ஏகாதசியை *மோகினி* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் முக்தி கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *வருத்தம்* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் குறையில்லாத செல்வ செழிப்பு ஏற்படும்.
🕉️🕉️🕉️🕉️🕉️
*ஆனி* மாத வளர்பிறை ஏகாதசியை *நிர்ஜலா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
தேய்பிறை ஏகாதசியை *அபரா என்போம்* . அன்றைய தினம் விரதம் இருந்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
🕉️🕉️🕉️🕉️🕉️
*ஆடி* மாத வளர்பிறை ஏகாதசியை *ஸையனி* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நம்முடைய கோவம், ஆணவம் அனைத்தும் ஒழியும்.
தேய்பிறை ஏகாதசியை *யோகினி* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் நமக்கு ஏற்படக்கூடிய கொடிய நோய்கள் அனைத்தும் நீங்கும்.
🕉️🕉️🕉️🕉️🕉️ *ஆவணி* மாத வளர்பிறை ஏகாதசியை *புத்ராஜா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *காமிகா என்போம்* . அன்றைய தினம் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்தால் மோட்சம் கிடைக்கும்.
🕉️🕉️🕉️🕉️🕉️ *புரட்டாசி மாதம்* வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை *பத்மநாபா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் செல்வ செழிப்புகள் அனைத்தும் குறைவில்லாமல் கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *அஜா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும்.
🕉️🕉️🕉️🕉️🕉️
*ஐப்பசி* மாத வளர்பிறை ஏகாதசியை *பாபாங்குசா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் செல்வ செழிப்பு மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவோம்.
தேய்பிறை ஏகாதசியை *இந்திரா என்போம்* . அன்றைய தினம் விரதம் இருந்தால் நம்முடைய முன்னோர்கள் நற்கதி அடைவார்கள்.
🕉️🕉️🕉️🕉️🕉️ *கார்த்திகை மாத* வளர்பிறை ஏகாதசியை *பிரபோதினி* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் மேலோகத்தில் நற்கதி கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *ரமா என்போம்* . அன்றைய தினம் விரதம் இருந்தால் நிலையான இன்ப வாழ்க்கை கிடைக்கும்.
🕉️🕉️🕉️🕉️🕉️
*மார்கழி* மாத வளர்பிறை ஏகாதசியை *வைகுண்டா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் மகாவிஷ்ணுவின் அருளும் மோட்சமும் கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *உத்பத்தி* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.
🕉️🕉️🕉️🕉️🕉️
*தை* மாத வளர்பிறை ஏகாதசியை *புத்ரதா என்போம்* . அன்றைய தினம் விரதம் இருந்தால் நல்ல ஒழுக்கமான சிறந்த குழந்தை கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *பைலா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் பாவம் நீங்கும்.
🕉️🕉️🕉️🕉️🕉️
*மாசி மாத* வளர்பிறை ஏகாதசியை *ஜெயா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *சப்திலா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமைகள் அனைத்தும் நீங்கும்.
🕉️🕉️🕉️🕉️🕉️ *பங்குனி* மாத வளர்பிறை ஏகாதசியை *ஆமாலாக்கி* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
தேய்பிறை ஏகாதசியை *விஜயா* என்போம். அன்றைய தினம் விரதம் இருந்தால் வெற்றி வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.
ஏகாதசி விரதம் என்றதும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும் விரதம் இருக்காமல் நம்முடைய தேவைக்கேற்றவாறு விரதமிருந்து பலன்களை அடைவோம்.
படம்:ஸ்ரீரங்கம் அரங்கநாதர்
ரங்கா ரங்கா🙏🙏
No comments:
Post a Comment