*நேற்று (15/07/2024) கல்வி வளர்ச்சி நாள்*
அதனை முன்னிட்டு
நேற்றைய *சிறப்பு ஆய்வுக்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களது ஜாதகம் கொடுக்கப்பட்டது.*
*அதற்கான கேள்வியும் பதிலும் இன்று*
இவர் வறுமையில் வாடக் காரணம் என்ன?
ஆரம்ப கல்வி கூட படிக்காதவர் உயர் பதவிகள் வகித்தது எப்படி?
இவருக்கு திருமணம் இல்லாமல் போனது ஏன்?
குழுவில் உள்ள உறுப்பினர்கள் கொடுத்த பதில்கள்
இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பார்வையில் பல்வேறு கோணங்களில் ஜாதகத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
அனைத்தும் சிறப்பு.
கருத்து ஒன்று தான். அவர்களின் கண்ணோட்டம் வித்தியாசமானது. இப்படியும் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கலாம் என்று எடுத்துக் கூறியுள்ளனர்.
*வாழ்த்துக்கள்! தொடரட்டும்!* *உங்கள் புதிய ஜோதிடப் பார்வை.*
*என்றும் புதியன கற்போம்!*
*திரு யுவராஜாவின் பார்வையில் ஆய்வு*
குரு வணக்கம்🙏
இன்றைய " *தெரிந்த கதை தெரியுமா விடை* " பகுதியில் இடம்பெற்ற *கர்மவீரர் காமராஜர்* அவர்கள் ஜாதக ஆய்வு:-
கர்மவீரர் காமராஜர் ஐயா பிறந்தது கடக லக்கனம், கும்ப ராசி, பூரட்டாதி-3ம் பாதம்.
*இவர் வறுமையில் வாட காரணம் என்ன? ஆரம்பக் கல்வியில் இவருக்கு ஏன் தடை ஏற்பட்டது?*
இவர் பிறக்கும்போதே ஏழரை சனியில் பிறந்திருக்கிறார். இவர் பிறக்கும்பொழுது பாக்யாதிபதி குரு தசா நடப்பில் இருந்திருக்கிறது. பூரட்டாதி-3ம் பாதம் என்பதால் குரு தசா இருப்பு ஒரு ஆறு ஆண்டுகள் இருந்திருக்கும். ஆனாலும் ஏழரை சனியில் இவர் பிறந்ததால் பாக்கியங்களை இவர் அனுபவிக்க முடியவில்லை. அடுத்து இந்த லக்னத்திற்கு வரக்கூடாத ஆகாத சனி பகவான் தசா ஒரு 19 ஆண்டுகள். எனவே ஆரம்பக் கல்வியில் அப்பொழுதே தடை ஏற்பட்டது. ஆரம்பக் கல்வி என்று சொல்லக்கூடிய இரண்டாம் பாவகத்திற்கு அவர் ஆறாம் அதிபதி அல்லவா? மேலும் சனி பகவான் லக்னத்திற்கு ஏழில் திக்பலம் மற்றும் ஆட்சி பெற்று வலுவாக லக்னத்தை பார்த்து மேலும் உயர்வு என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானத்தையும் பார்த்து கெடுத்து அவருடைய தசா காலங்களில் அவருடைய காரகத்துவமான வறுமையை கொடுத்தார்.
அடுத்த புதன் தசாவும் அவர் 3,12க்கு அதிபதியாகி 12ம் வீட்டிலேயே ஆட்சி பெற்று தசா நடத்தினார். எனவே அந்த தசாவும் அவருக்கு சரியான உயர்வை தந்திருக்காது.
*ஆரம்ப கல்வி படிக்காதவர் அரசியலில் உயர் பதவி வகித்தது எவ்வாறு?*
அரசியலில் பட்டம் பதவிகளை பெற சிம்ம மனையும் சிம்மாதிபதியும் வலுத்து இருக்க வேண்டும். மேலும் 9,10க்குடையவர்கள் வலுக்க வேண்டும்.
இவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சிம்ம மனையில் அமர்ந்து பலப்படுத்தி விட்டார். மேலும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி சந்திரன் பார்வையில் சிம்ம வீட்டில் படுகிறது. அவர் பாகை முறையில் குருவுடன் இணைந்து அவருடைய ஒளியைப் பெற்று சிம்மம் மனைக்கு தனது ஒளியை கொடுக்கிறார். சிம்மாதிபதி சூரியன் 12ல் மறைந்தாலும் அங்கே அவர் வர்கோத்தமம் ஆகி இருக்கிறார் மேலும் பாகைமுறையில் குருவின் பார்வை சூரியனுக்கு கிடைக்கிறது.
பாக்கியாதிபதி குரு பகவான் தனது ஒன்பதாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று புஷ்கர நவாம்சத்தில் வலுவாக இருக்கிறார். பத்தாம் அதிபதி செவ்வாய் மூன்றில் மறைந்து ராகுவால் கிரகணம் செய்யப்பட்டாலும் குருவின் பார்வையால் அவர் பலம் ஆகிறார்.
அடுத்து வந்த கேது தசா அவர் குருவை போல் செயல்படுவார் என்பதால் அரசியலில் ஓரளவு காலூன்ற ஆரம்பித்திருப்பார்.
அதற்கடுத்த சுக்கிர தசா 4,11 அதிபதியாகி முதலில் நாலாம் வீட்டு பலனை இரண்டாம் வீட்டின் வழியாக செய்தார். சரியாக சுக்கிர தசா சூரிய புக்தியில் 1954ம் வருடம் அந்த சிம்மாதிபதி வலுத்ததால் முதலமைச்சரானார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார்.
சுக்கிர தசாவின் அடுத்த 10 ஆண்டுகள் அவர் பாதகாதிபதி வேலையை செய்து தேர்தலில் தோல்வியுற செய்தார்.
ஆனாலும் இங்கு பாக்கியாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி வலுவாக இருந்து சிம்மாதிபதியும் வலுவாக இருந்ததால் அவர் சூரிய தசாவில் கிங் மேக்கராக விளங்கினார்.
*இவருக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை?*
லக்னத்திற்கு ஏழில் சனி பகவான் திக்பலம் மற்றும் ஆட்சி. லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி லக்னத்திற்கு 12-ல் மறைவு. லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி ராகு பிடியில். ராசிப்படியும் ஏழில் சுக்கிரன் இது ஒரு களத்திர தோஷம். ராசிக்கு 12 இல் சனி பகவான் அமர்ந்து ராசிக்கு இரண்டாம் வீட்டை பார்த்தார். காரக கிரகங்கள் வலுவாக இருந்தாலும் ஆயுள் கொடுப்பினையில் இவருக்கு நடந்த தசா புக்திகள் இவருக்கு திருமணத்தை நடத்தி வைக்கவில்லை.
மிக்க நன்றி குருவே🙏🙏🙏
இவன்
தங்கள் மாணவன்
K. யுவராஜா
*திரு ரவீந்திரனின் பார்வையில் ஆய்வு**
குரு நாதருக்கு வணக்கம் 🙏 ஐயா கர்மவீரர் காமராஜர் ஜாதகத்திற்கு பலன் ஜாதகர் பிறந்தது கடக லக்கனம் கும்ப ராசி பூரட்டாதி மூன்றாம் பாதம் இவருடைய ஜாதகத்தில் லக்கின அதிபதி சந்திரன் எட்டாம் இடத்தில் மறைந்துள்ளார்
இரண்டாம் பாவஅதிபதி சூரியன் 12 ஆம் பாவத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து வர்க்கோத்தமம் பெற்று அமர்ந்து உள்ளார் இவருடைய லக்னத்திற்கு ஏழாம் பாவத்தில் திக்பலம் பெற்ற சனி பார்வை மட்டுமே உள்ளது இந்த அமைப்புகளே இவருடைய குடும்ப வறுமையை காட்டுகிறது தாயார் கிரகம் மறைவு தந்தையை குறிக்கும் சூரியனும் 12 ஆம் பாவத்தில் மறைவு வறுமையை கொடுக்கும் சனி லக்னத்தை பார்க்கிறார் இவர் பிறந்தது குரு திசை ஏழு வருடங்கள் பின்னர் 26 வயது வரை சனி திசை ஜாதகருக்கு கல்வி யோகம் இல்லை கல்வி ஸ்தானமான இரண்டாம் இடத்தில் பாதகாதிபதி சுக்கிரன் அமர்வு காரககிரகம் புதன் லக்னத்திற்கு பன்னிரண்டில் மறைவு ஆக சிறுவயதில் வறுமையும் கல்வி பயில முடியாத சூழ்நிலையும் கிரகங்களும் தசா புத்தியும் காட்டுகிறது இவருடைய ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிகமாக உள்ளதும் ஏழாம் பாவத்தில் திக்பலம் பெற்று சனி பகவான் அமர்ந்ததும் இவருக்கு திருமண தாமதத்தையும் திருமணம் இல்லாத நிலைமையும்கொடுத்து விட்டது அதன் பின்னர் வந்த புதன் திசை மூன்றாம் அதிபதி தசையாகும் மூன்றாம் பாவம் தைரியம் வீரியம் புகழ் வெளி தொடர்புகள் நண்பர்கள் ஆகியவற்றை குறிக்கக் கூடியது இந்த காலகட்டத்தில் இவர் அரசியல் ஈடுபாடு கொண்டுள்ளார் இவருடைய ஜாதகப்படி ஒன்பது பத்தாம் இடங்கள் சிறப்பான முறையில் அமைந்து உள்ளது ஒன்பது பத்து அதிபதிகள் பார்வையும் 10 கூடிய செவ்வாய் தனது வீட்டை பார்ப்பதும் ஒன்பது அதிபதி குரு சந்திரன்இணைவில் ஆட்சி பலம் பெற்று ஒன்பதாம் பாவ காரகத்துவப்படி அரசுக்கு ஆலோசனை கூறக்கூடிய அளவிற்கு முக்கியத்துவமும் பத்தாம் பாவம் வலுத்து பதவி யோகமும் புதன் திசை கேது திசை சுக்கிர திசை இவருக்கு யோகமாகவும் சுக்கிர திசை பின்பகுதியில் பாதகாதிபதியாகவும் சுக்கிரன் வேலை செய்து பதவி இறக்கம் ஆனது
அதன்பின்னர் சூரிய திசையாகப்பட்டது இரண்டு ஏழு மாரகாதிபதியாவதால் சூரிய திசையில் இவருக்கு மாரகத்தை கொடுத்துள்ளது இவருடைய பாக்கியஸ்தானத்தில் ஆட்சி பெற்ற குரு அமர்வதும் அவரின் பார்வை லக்னத்தின் மீது விழுவதும் வாழ்க்கையில் அப்பழுக்கில்லாத உயர்ந்த வாழ்க்கையை இவர் வாழ்ந்ததற்கு இவருடைய ஜாதக அமைப்பை காரணம் நன்றி குருவே சரணம்🙏
*திரு சுப்பிரமணியன் பம்பாய் பார்வையில் ஆய்வு*
🙏வணக்கம் குருஜி.
ஐயா காமராஜர் ஜாதகத்தில். 7 8க்குடையோன் சனிபகவான்.திருமாங்கல்யஸ்தானம் கூட கெட்டது.விரயத்தில் சனிபகவான்.
ராசி/அம்சம் 2லும் 7ல் சனிபகவான்.திருமணதடை.
குருபகவான்.கேது இணைவில்.கூட சந்திரனும் இணைவு.
5ம் புத்ரஸ்தானாதிபதி செவ்வாய் ராகு மாந்தியோடு 3ல் வீர்யஸ்தானம்..கெட்டது.
லக்னாதிபதி ஒளிமிக்க சந்திரன் .இருள்சனிபகவான் வீட்டில்.
7ம் அதிபதி சனிபகவான் பார்வையில் லக்னம்..ஏழ்மை/கஷ்டம்.
ஆனால்
பொதுமக்கள் ஆளுமை...
சிம்மாதிபதி சூர்யன் நண்பர் புதனோடு இணைவு புதாதித்ய யோகம்.
ஆட்சிபெற்ற குருபகவான்/கேதுவோடு இணைந்து கேளயோகம் .பார்வையில் லக்னம்..
குருபகவான்/கேது இணைவு ஆன்மீக ஒழுக்கம் .உண்மையான வாக்கு ஞானம் அறிவு.
2ம்குடும்பஸ்தானாதிபதி சூர்யன் 12ல்விரயத்தில்.குடும்பம் பாதிப்பு.
சூர்ய சுக்ராள் இடைவெளி மிகவும் அதிகம்.
இல்லறம் ஆசை பாதிப்பு...
களத்ரகாரகன் சுக்ரன்..சர.கடக லக்னத்திற்கு 11ம்பாதகாதிபதியாகி.2ல்குடும்பஸ்தானத்தில்.
குருபார்வையில் கேனயோகத்தில் 3ம்தைர்ய வீர்ய முயற்சிஸ்தானத்தில் ராகு செவ்வாய் மாந்தி.அபார ஆர்பாட்ட மில்லாத ஆளுமை ..
9ம்இடம். பாக்யஸ்தானத்தில் குருபகவான்/ பற்ற்ற ஞானிகேது.அமர்வு.
7ம்இடம் பொதுமக்கள்.ஆதரவு திக்பலம் பெற்றசனி பகவான் ஆட்சி ..
9க்குடைய குருபகவான்/10க்குடைய செவ்வாய் சமபார்வை..தர்ம கர்மாதி யோகம்.
பட்டம்/ பதவி/ தலைமை..பொறுப்பு தேடி வந்தது.5க்குடைய செவ்வாய் குருபகவான் பார்வையில் அரசியல் /ஆளுமை.
🙏🙏 சுப்பிரமணியன் பம்பாய்.
தங்களின் ஆசீர்வாதம் வேண்டி என்றும்🙏🙏
9ல்கேது 4க்குடையசுக்ரன் பாதகாதிபதி.7ம்இடம் பாதிப்பு 11ம்இடத்து சுக்ரன் பாதகாதிபதி.ஆக படிப்பு பாதிப்பு/ஆனால் அபார ஞானம் அறிவு உண்டு குருபகவான்/கேது பகவான் தயவால்.
*திரு முனியாண்டி காந்தி பார்வையில் ஆய்வு*
குரு வாழ்க குருவே துணை.
பெருந்தலைவர் காமராஜர் ஜாதக ஆய்வுகள்.ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்துள்ளார்.ராசி கும்ப ராசி பூரட்டாதி 3ம் பாதத்தில்
குரு திசாவில் வாழ்க்கை பயணம் ஆரம்பம்.
லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சனிபகவான்.சனிபகவான் 7/8அதிபதியாகி 7ல் ஆட்சிபலம்
.லக்னாதிபதி சந்திரன் 8ல் மறைவு பலம் பெறுகிறார்.8மிடம் என்பது கண்டம் போராட்டம் திடீர் விபத்துகுறிக்கும்.
லக்னம் கடகம்.காலசக்கரத்திற்கு 4ம் பாவகம் .ஜாதகருக்கு லக்னம்.லக்னாதிபதி சந்திரன் 8ல் இருப்பதால் கல்வி சார்ந்த விஷயங்கள் பாதிப்பு ஏற்படுகிறது.லக்னத்திற்கு 8மிடம் காலசக்கரத்திற்கு 11ஆசை அபிலாசை நிறைவேறுகின்ற பாவகம்.ஜாதகர் அமர்ந்து இருப்பது காலசக்கரத்திற்கு பாதக ஸ்தானம் .பாதகம் ஏற்பட்டுள்ளது.கல்வி பொருளாதாரம் தடை.
லக்னத்திற்கு 2மிடம் என்பது காலசக்கரத்திற்கு 5ம் பாவகம் .5ம் பாவகம் என்பது ஆழ்மன சக்தி அரசு அரசாங்க தொடர்பு பொது சேவைகள் சார்ந்த ஈடுபாடு.2ம் அதிபதி சூரியன் லக்னத்திற்கு 12ல் புதனுடன் கூடி புத ஆதித்யா யோகம் பெற்றும் லக்னத்திற்கு 12என்பது காலசக்கரத்திற்கு 3மிடம் தகவல் தொடர்பு வெளிநாட்டு பழக்கவழக்கம் போன்றவற்றை கையாளுகின்றன பக்குவம்.
2ல் சுக்ரன்.லக்னத்திற்கு 4/11அதிபதி 2ல் . காலசக்கரத்திற்கு 2/7அதிபதி காலசக்கரத்திற்கு 5ல் . காலசக்கரத்திற்கு 2ம் அதிபதி சுக்கிரன் காலசக்கரத்திற்கு 5ல்பகை.
கடகம் என்பது சர ராசி .அதற்கு பாதக ஸ்தானம் 11மிடம் .அதன் அதிபதி சுக்கிரன் குடும்பம் ஸ்தானத்தில் அமர்வது குடும்ப சார்ந்த வகையில் சிறப்பாக இல்லை.
திருமண வாழ்க்கை.7ம் பாவகம் . லக்னத்திற்கு 7ம் அதிபதி சனி ஆட்சி பலம்.சனிபகவான் சந்திரன் சாரம் பெற்று சந்திரன் 8ல் இருப்பதால் மனவாழ்க்கை சிறப்பாக இல்லை.
உயர் பதவி கௌரவம் புகழ் .5/10ம் ஆதிபத்தியம் பெற்ற செவ்வாய் லக்னத்திற்கு 3ல் காலசக்கரத்திற்கு 6ல் இருந்து சுயசாரம் பெற்று போட்டி எதிரிகள் மூலம் தைரியம்முயற்சிகள் மூலம் சமுதாயத்தில் புகழ்பெற்ற தலைவர் எனும் அந்தஸ்து பெறுகிறார்.
ராகு 3ல் இருந்தாலும் புதன் போல் செயல்பட்டு புதன் +சூரியன் தொடர்பு புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
2ம் அதிபதி சூரியன் குரு சாரம் பெற்று குரு லக்னத்திற்கு 9ல் கேதுவுடன் கூடியுள்ளதால்.தனம் குடும்பம் சார்ந்து இல்லாமல் தான தர்மங்கள் மூலம் பெயர் பெற்றுள்ளார்.
சூரியன் வர்கோத்தமம் நிலையில்.சூரியன் தலைவர் பதவி கௌரவம் அந்தஸ்து புகழ்.இது அடியேன் ஆய்வுகள் .
நன்றி வணக்கம் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்.கா.முனியான்டி சிவகாசி
*திருமதி சுக்கிரன் லட்சுமியின் பார்வையில் ஆய்வு*
வணக்கம் குருஜி🙏
இன்று நாம் ஆய்வுக்காக எடுத்துள்ள ஜாதகம் கல்வி கண் திறந்த காமராஜர்.
ஜாதகர் கடக லக்னம் , கும்ப ராசி, தேய்பிறை பஞ்சமி திதி அன்று பிறந்துள்ளார்.
முதல் கேள்வி:
இந்த ஜாதகர் வறுமையில் வாட காரணம் என்ன?
ஜாதக பிறந்த தசா இருப்பு,குரு தசை ஏழு ஆண்டு மூன்று மாதம் 17 நாட்கள்.
இவருடைய ஏழு வயது வரை குரு தசா அதில் இவருக்கு ஆறு வயது இருக்கும் பொழுது தாத்தா அதை தொடர்ந்து தந்தை அவர்கள் மரணம் ஏற்பட்டது.
அதாவது லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் என்று சொல்லக்கூடிய தந்தை ஸ்தானம் சனி மற்றும் செவ்வாய் பார்வையால் ஆதிபத்தியம் விசேஷம் இல்லாமல் போனது.
ஒன்பது உடையவன் குரு ஆட்சி பெற்றாலும் சனியின் பார்வையில் இருப்பது தவறு.
மேலும் ஒன்பதாம் வீட்டிற்கு ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பு.
ஆக தந்தையின் ஆயுள் காரகன் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் இங்கே லக்னத்திற்கு மாறகம் ஏறிவிட்டார்.
ஒன்பதாம் பாவத்தை லக்னமாக கருதும் பொழுது தந்தை ஸ்தானத்திற்கு ஆறு என்று சொல்லக்கூடியவர் ரோகாதிபதி ஏழாம் இடம் மாறகால் எட்டாம் இடம் ஆயுள்.
ஆக ராகு புத்தி ஒன்பதாம் வீட்டிற்கு மாறகளாக செயல்பட்டு , மேலும் ரோதிபதியான சூரியன்
தந்தைக்கு காரக மரணித்தார்.
அதன் பிறகு குடும்பத்தில் வருமானம் இல்லாத சூழ்நிலை.
இதுவே இவர் வறுமையில் வாழ காரணம் ஆகும்.
கேள்வி இரண்டு:
பள்ளிப்படிப்பு இல்லாதவர் எப்படி பெரிய பதவிகள் வகித்தார்?
இதற்கு ஜாதகரின் லக்னத்தை பார்க்க வேண்டும்.
கடக லக்னம் லக்னாதிபதி லக்னத்திற்கு எட்டில் மறைந்தாலும் அவர் குரு மற்றும் சுக்கிரன் பார்வை மற்றும் இணைவால் அதீத வலுவாகிறார் அதே சமயத்தில் லக்னத்துடன் சூரியன் பாகை அடிப்படையில் தொடர்பு கொள்கிறார்.
ஜாதகரின் லக்னம் லக்னாதிபதி இரண்டும் வலுத்து மேலும் லக்னத்தை குருவின் தொடர்பு கொண்டு சூரியனும் தொடர்பு கொள்கிறார் சனியும் தொடர்பு கொள்கிறார்.
ஜாதக குரு பார்ப்பதால் அதே சமயத்தில் சனியும் பார்ப்பதால் நிதானித்து முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் உடையவர் சூரியன் தொடர்பு கொள்வதால் ஆளுமை திறன் தன்னம்பிக்கை அரசு அரசியல் நிர்வாக திறன் இவை அனைத்தும் இவருக்கு உண்டு.
இவருடைய ஏழு வயதிற்கு மேல் வந்த சனி திசா,
லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் திக்பலம் பெற்று ஆட்சி பலம் பெற்று லக்னத்திற்கு 9 ,ஒன்று மற்றும் நான்காம் இடங்களை பார்க்கிறார்.
ஆக ஒன்பதாம் இடம் என்று சொல்லக்கூடிய பள்ளிக்கூடம் தடை ஏற்பட்டது அதே சமயத்தில் நான்கமிடம் என்று சொல்லக்கூடிய உயர்நிலைக் கல்வியும் தடைபட்டது.
அதே சமயத்தில் இந்த சனி தசா லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் பொது ஜனதாக்கம் சேவை இது போன்ற விஷயங்களில் ஜாதகரை ஈடுபட செய்தது.
எனவே சுதந்திர போராட்டத்திற்கும் மற்றும் பலவிதமான மக்கள் தொடர்பு சேவைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.
அதேபோல் ஒருவர் அரசியல் தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும் என்றால் அவருக்கு சனி சூரியன் லக்னம் லக்னாதிபதி செவ்வாய் இவை அனைத்தும் வலுப்பெற வேண்டும் அதற்கு சாதகமான தசா புத்திகளும் வர வேண்டும்.
இவர் ஜாதகத்தில் சனி ஏழாம் இடத்தில் திக்பலம் பெற்று ஆட்சி பெற்று வலுக்கிறார் அதேபோல் குருவின் பார்வையில் சூரியனும் செவ்வாயும் வலுத்து விட்டார்கள்.
அதேபோல் ஆதிபத்தியம் ஐந்தாம் வீடு குருவின் பார்வையால் சிறப்பு.
அடுத்தபடியாக 1929 ஆம் ஆண்டு முதல் வந்த புதன் திசா லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் பார்வையிடுகிறார்.
இந்த தசாவில் எதிரிகளால் பிரச்சனை உண்டு அதே சமயத்தில் ஏழாம் வீட்டிற்கு ஆறாம் வீடு 12 என்பதால் மனைவி அமையாமல் போனது.
அடுத்த 1946 முதல் 1953 வரை கேது தசா நடந்துள்ளது.
இந்த கேது தசா லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து சனி மற்றும் செவ்வாய் பார்வையில்
இருந்து தசா நடத்துகிறார்.
என்னதான் கேது குருவுடன் இணைந்திருந்தாலும் இரண்டு பாவர்கள் பார்வையில் இருந்து நடத்தும் தசா இவருடைய புகழுக்கு சிறிது களங்கம் ஏற்படுத்த தான் செய்தது.
அதே சமயத்தில் இந்த கேது குருவை போல செயல்படுவார் ஆக குரு லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டு வேலையை முழுவதுமாகவே செய்தார் ஜாதகருக்கு புகழையும் தேடி கொடுத்தது.
இந்த குரு ஐந்தாம் வீட்டை பார்த்ததால் அரசியல் தாக்கம் ஜாதகருக்கு அதிக அளவில் ஏற்பட்டது.
அடுத்தபடியாக வந்த சுக்கிர திசை 195 3 முதல் 1973 வரை,
ஜாதகருக்கு 50 வயது நெருங்கிய காலகட்டம் அது.
இந்த சுக்கிர திசை லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இருந்து லக்னத்தில் எட்டாம் வீட்டை பார்க்கிறார்.
ஆக பிறப்பிடம் விட்டு வெளியே வெளியூர் வெளி மாநிலம் எட்டாம் பாவத்தை இயக்குவதால்,
தான் பிறந்து விருதுநகர் என்றாலும் அவர் சென்னை மாநிலத்தில் முதலமைச்சர் ஆக இந்த சுக்கிர திசாவில் ஆனார்.
ஆக இந்த சுக்கிர திசாவாது இவருக்கு மனைவியை கொடுத்திருக்கலாம் அல்லவா ஏன் கொடுக்கவில்லை அதாவது லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் இருந்து பார்த்தோமே ஆனால் ஏழுக்கு சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைகிறார்.
மேலும் இரண்டாம் வீட்டிற்கு இந்த சுக்கிரன் மாறகன் அல்லவா?
ஆக இந்த சுக்கிரன் குடும்ப அமைப்பிற்கோ அல்லது களஸ்திர அமைப்பிற்கும் வலு சேர்க்க மாட்டார்.
அதற்கு பதிலாக ஆதிபத்திய காரகரீதியாக பிரைமரி எஜுகேஷன் என்று சொல்லக்கூடிய கல்விக்கூடங்களை திறந்து வைத்தார்.
அதேபோல் இந்த சுக்கிரனை சந்திரன் பார்ப்பதால் மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டியதாயிற்று.
அது மட்டுமல்லாமல் நீர் சம்பந்தமான பாசனம் கால்வாய்கள் அனைத்தும் இவர் காலகட்டத்தில் சரி செய்யப்பட்டது.
மொத்தத்தில் இவருக்கு திருமணம் ஆகாததற்கு காரணம்,
மிகச்சிறிய வயதில் வந்த குரு தசா அதேபோல் வயதான காலத்தில் வந்த சுக்கிர திசா.
இருவரும் இவருக்கு ஏற்ற பருவ காலத்தில் வராததால் அவர்களுடைய உயிர் காரகத்துவத்தை கொடுக்க முடியாமல் போயிற்று.
நன்றி🙏
*திருமதி வித்யா அஸ்ட்ரோ பார்வையில் ஆய்வு*
வணக்கம் குருஜி🙏.
லக்னம் கடகம். ராசி கும்பம். பாவக அடிப்படையில்
1.இவர் கர்ம வீரர்
எனும்போது லக்னத்தில் சூரியன் புதன். 10 ம் அதிபதி 10ல் ஆட்சி. ளள
10ல் குரு சனி கேது சேர்க்கை இவர் பற்றற்ற சன்னியாசி தொழில் உடையவர்.
1.லக்னத்தில் சூரியன். குரு பார்வையில் சூரியன்.ஜாதகர் அரசு அரசியல் தொடர்பு உள்ளவர். சமயோஜித புக்தி உள்ளவர்.
2. 2 ம் அதிபதி8 ல். வக்ர சனி பார்வை 2 ல். சனி தசா வில் குடும்பத்தை விட்டு மபிரியும் நிலை. சுய குடும்பம் அமைவதில்
தடை. வருமானம் கையிருப்பில் பற்றாகுறை.
ஆயினும் 2 ம் அதிபதி குரு வுடன் இணைந்துள்ளார். நல் வாக்கு உண்டு.
3. 10ல் குரு. 2 ம் இடத்தை பார்க்கிறார். ராசிக்கு 2 ல் குரு10 ம் இடத்தை பார்க்கிறார். பலருக்கு வழிகாட்டி
குருவாக இருந்தார்.
ராசிக்கு இரண்டில் குரு வக்ரம் பெற்று கேது பிடியில் உள்ளார். 7 ல் சுக்ரன் களத்திர தோஷம்.
12 ல் சனி. இதனால் இவருக்கு திருமணம் இல்லை.
சூரியன் சுக்ரன் இடைவெளி அதிகம்.
இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாதவர்.
பிறந்த நேரம் 6.02 என்று வைத்து பார்த்தால் தசா புக்தி நிகழ்வுகள் பொருந்தி வருபவையாக
தெரிகிறது குருஜி.
நன்றி🙏குருஜி.
[16/07, 12:08 pm] S.Shanmuganandam🤴: *எனது பார்வையில்*
*ஜாதகர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது!*
லக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல். போராட்டமான வாழ்க்கை அமைந்தது.
சூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது. 'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்” என்னும் பழமொழி இவர் விஷயத்தில் உண்மையானது.
அத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல!
படிப்பில் தடை.
ஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம் இருந்தது. அது அவருக்குப் பல வழிகளில் கை கொடுத்தது.
ஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குரு சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக் கவனியுங்கள். அவை இரண்டும் அவருக்கு புத்தி சாதுர்யத்தையும், சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்ததுடன், எடுத்த காரியங்களில் வெற்றிகளையும் பெற்றுத்தந்தன!
இரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி
பலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.
இரண்டும் திரிகோண, கேந்திர
பலத்துடன்இருப்பதையும் பாருங்கள். அவைகள் அவருக்குத்
தலைமைப் பதவியைப் பெற்றுத்தந்தன.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான
3 ஆம் இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான பாக்கியஸ்தானத்தைப்
பார்த்ததால் பல யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப்
பெற்றுத்தந்தது.
பாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி திசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல்
அமைச்சர் பதவியைத் தந்துவிட்டுப்போனது!
இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் - அதுவும் குறிப்பாக ராகு கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும் என்பதே!
3) *குடும்பம்*
2க்குரிய குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 12ல் அமர்ந்து வைத்தார் வேட்டு.
7ல் சனி ஆட்சி மற்றும் திக் பலம். களத்திர தோஷம்.
சனி அடித்த அடியில் பந்து
(மனைவி ஸ்தானம்) கண்காணாமல் போனது.
2ம், 7ம் க்ளீன் போல்ட்.
2ல் பாதகாதிபதி சுக்கிரன் (பகை) அமர்ந்து ஆப்பு.
அப்புறம் எங்கே வரும் குடும்பம்?
அதனால் இவருக்கு மனைவி மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போனது.
ஆனாலும் தான் என்ன?
தான் வாழ்ந்த நாடும், நாட்டு மக்களையும் குடும்பமாக எண்ணி அவர்களின் உயர்வையே பெரிதாகக் கொண்டு செயல்பட்ட வாழ்ந்த கர்மவீரர் காமராஜர் ஆவார்.
மக்கள் மனதில் என்றும் அன்புடன் வாழும் பெருந்தகையாளர் காமராஜர் ஆவார்.
அத்தகைய மாமனிதரின் தன்னிகரில்லா வாழ்க்கையை எண்ணி பெருமிதம் கொள்வோம்.
*வாழ்க காமராஜர்*
*ஜெய்ஹிந்த்* 🇮🇳🙏🪷