ஜோதிட பதிவுகள்..
சனி...
சோம்பேறி..
*சனி ஆதிக்கம் உள்ளவர்கள்*
10 மணி நிகழ்ச்சிக்கு 11 மணிக்கு தான் வருவார்கள்...
மஞ்சள் சட்டை பச்சை பேண்ட் என்று
ஆடை அணிவார்கள்.
பேச்சு அவ்வளவு தெளிவாக இருக்காது...
பணத்தை பையில் இருந்து லேசில் எடுக்க மாட்டார்கள்..
கேள்வி..
எங்கே போய் வந்தீர்கள்?..
பதில் .கோவிலுக்கு சென்றேன்.
இந்தக் கேள்வி பதிலுக்கு ஒவ்வொரு கிரக ஆதிக்கம் உள்ளவர்களிடமிருந்து பதில் எப்படி இருக்கும்? என்று பார்ப்போம்.
*குரு ஆதிக்கம் உள்ளவர்கள்..*
கோவில் போனேன். நல்ல தரிசனம்.
*சுக்கிரன் ஆதிக்கம் உள்ளவர்கள்*
அம்மன் கோவில் போனேன்..
அற்புதமான அலங்காரம்.. நல்ல தரிசனம்
மனநிறைவாக இருந்தது. பிரசாதம் தந்தார்கள். அருமை என்பார்கள்...
*சனி ஆதிக்கம் உள்ளவர்கள்*
அப்படியே போனேங்க... மண்டபத்தில் உட்கார்ந்தேன்
கூட்டமா இருந்திச்சு.
சக்கர பொங்கல் புளியோதரை பிரசாதம் தந்தாங்க
அம்மனை பார்த்தேங்க...
முன்ன பின்ன பேசி குழப்புவார்கள்...
================
மற்ற கிரக ஆதிக்கம் உள்ளவரிடம் இல்லாத குணம் இவரிடம் மட்டும் உண்டு..
====================
*திருமணம் போன்ற நிகழ்ச்சி செல்லும் போது* நாமெல்லாம் உறவினர்கள்.. நண்பர்கள் வீட்டில் மட்டும் சேர் போடுதல்..
வரவேற்பு செய்தல்..உணவு பரிமாறுதல் போன்ற வேலைகளை
செய்வோம்...
ஆனால் இவர்களுக்கு சம்பந்தமே
இருக்காது..
அறிமுகமான அடுத்த நிமிடமே
வேலைகளை இழுத்து போட்டு செய்வார்கள்.
====
பசி இல்லை என்றால் கூட சாப்பிட்ட
கொஞ்ச நேரத்தில் சாப்பிட கம்பெனி கொடுங்கள் என்றால் சாப்பிடுவார்கள்....
*திருட தெரியாது..* திருடினால் மாட்டி கொண்டு விடுவார்கள்...
*சுக்கிரன் திருடினால்* பணம் கொடுத்து தப்பித்து கொள்வார்கள்.
*குரு திருடினால்* கெளரவமாக இயல்பான செயல் போல சொல்லி நழுவி விடுவார்கள்..
*ராகு* மாட்டவே மாட்டார்கள் ..
*சனி.* தெரியாம எடுத்திட்டேன்; மன்னித்து விடுங்கள் என்பார்கள்.......
மனதில் ..வஞ்சனை.. கோபம் ..துரோகம் எதுவும் இருக்காது.
No comments:
Post a Comment