Friday, April 26, 2024

உணவும் உங்கள் ராசியும்

 ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா?





நாகரீகமான, படித்த மனிதர்கள் மத்தியிலும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான விடயத்தில் தயக்கம் இருக்கிறது.


எவ்வளவு சாப்பிடுவது என்பது முதல் எதைச் சாப்பிடுவது என்பது வரை இளைஞர்கள் மத்தியில் கூட குழப்பம் காணப்படுகிறது.

பண்டிகை தினங்களில் வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை அதிகளவில் சாப்பிடுவதற்கும் சிலர் தயக்கம் (சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட) காட்டுகின்றனர்.

இதற்கும் அவர்களின் ஜாதக அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதா?

பதில்: ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளில், மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள்.

இதேபோல் மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் போஜனப் பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை இவர்கள் விரும்புவர்.
                                         


எனினும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் போஜனப் பிரியர்களாக இருப்பர்.

மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள்.
                                     







மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் அதிகம் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். பசி நேரத்தில் கூட வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர்.



புதனின் ராசிகளாக மிதுனமும், கன்னியும் வருவதால் அவர்கள் பார்த்து பார்த்துதான் ருசித்து சாப்பிடுபவர்களாக இருப்பர்.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரே அடுத்த வேளை சாப்பாட்டை எடுத்துக் கொள்வர்.

எனவே, ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது ஒருவரின் உணவுப் பழக்கமும், சுவை விருப்பமும் அவரது ராசியைப் பொறுத்தே அமையும்.

மேலும், உடல்வாகு, குடல்வாகு ஆகியவை லக்னாதிபதி, ராசிநாதன் ஆகியோரைப் பொறுத்து மாறுபடும்.

மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் காரம் நிறைந்த உணவுகளை விரும்புவர்.
                                        



கடகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்.





துலாம் ராசிக்காரர்கள் சூடாகச் சாப்பிடுவார்கள்.

கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக சூட்டுடன் சாப்பிடுவர்.



மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் மிதமான சூட்டில் உணவு உட்கொள்வர்.

மீனம், தனுசு ராசிக்காரர்கள் முற்றிலும் சூடு இல்லாத ஜில்லென்ற நிலையில் உள்ள உணவுகளை விரும்புவர்.



ஆனால் மகரம், கும்ப ராசிக்காரர்கள் எண்ணெயில் பொறித்த உணவுகளை விரும்புவர்.










Thursday, April 25, 2024

பொது கிணறு 26/04/2024 வெள்ளிக்கிழமை

 #கிணறு



நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.


அந்த காலத்தில் எப்படி எந்த

டெக்னாலஜியும் இல்லாம

கிணறு வெட்டுனாங்க??? . . .


கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.


ஒரு வேளை தோண்டிய கிணற்றில்

தண்ணீர் வராமல் போய்விட்டால்

அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்

எளிய இலகுவான தீர்வுகள் இதோ :


மனையின் குறிப்பிட்ட

ஏதாவது ஒரு பகுதியில்

அதிகளவு பச்சை பசேலென புற்கள்

வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்

கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்

நீரூற்று தோன்றும் என்கின்றனர் .


சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல

நீரூற்று என அறிவது எப்படி ?


நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட

வேண்டிய நிலத்தில் முதல் நாள்

இரவு தூவி விடவேண்டும். அடுத்த

நாள் கவனித்தால் எறும்புகள்

இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்

கொண்டுசென்று சேர்த்த

அடையாளங்கள் , அதாவது தடயங்கள்

இருக்குமாம் அந்த இடத்தில்

கிணறு வெட்டினால் தூய

சிறப்பான நன்னீர் கிடைக்கும்

என்கிறார்கள் .


சரி தூய நீரும்

கண்டு கொண்டாயிற்று. . . .

கோடைகாலத்திலும்

வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்

இருக்கிறது என்று அறிவது எப்படி ?


கிணறு வெட்ட இருக்கும் நிலப்

பகுதியை நான்கு பக்கமும்

அடைத்து விட்டு பால் சுரக்கும்

பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய

விட வேண்டும். பின்னர் அந்த

பசுக்களை கவனித்தால் மேய்ந்த

பின் குளிர்ச்சியான இடத்தில்

படுத்து அசை போடுகின்றனவாம் .


அப்படி அவை படுக்கும்

இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்

கவனித்தால் அவை ஒரே இடத்தில்

தொடர்ந்து படுக்குமாம் . அந்த

இடத்தில் தோண்டினால் வற்றாத

நீரூற்றுக் கிடைக்குமாம்.

செம..!



முன்னோர்களின் அறிவார்ந்த செயலாக்கத்திற்கு தலை வணங்குவோம்!


சனிபகவானும்,சனி ஆதிக்கம் உள்ளவர்கள் செயல்பாடுகள்*

 ஜோதிட பதிவுகள்..



சனி...

சோம்பேறி..


*சனி ஆதிக்கம் உள்ளவர்கள்* 

10 மணி நிகழ்ச்சிக்கு 11 மணிக்கு தான் வருவார்கள்...


மஞ்சள் சட்டை பச்சை பேண்ட் என்று

ஆடை அணிவார்கள்.


பேச்சு அவ்வளவு தெளிவாக இருக்காது...


பணத்தை பையில் இருந்து லேசில் எடுக்க மாட்டார்கள்..


கேள்வி..

எங்கே போய் வந்தீர்கள்?..


பதில் .கோவிலுக்கு சென்றேன்.


இந்தக் கேள்வி பதிலுக்கு ஒவ்வொரு கிரக ஆதிக்கம் உள்ளவர்களிடமிருந்து பதில் எப்படி இருக்கும்? என்று பார்ப்போம்.


 *குரு ஆதிக்கம் உள்ளவர்கள்..* 

கோவில் போனேன். நல்ல தரிசனம்.


 *சுக்கிரன் ஆதிக்கம் உள்ளவர்கள்* 

அம்மன் கோவில் போனேன்..

அற்புதமான அலங்காரம்.. நல்ல தரிசனம்

மனநிறைவாக இருந்தது. பிரசாதம் தந்தார்கள். அருமை என்பார்கள்...


 *சனி ஆதிக்கம் உள்ளவர்கள்* 

அப்படியே போனேங்க... மண்டபத்தில் உட்கார்ந்தேன்

கூட்டமா இருந்திச்சு.

சக்கர பொங்கல் புளியோதரை பிரசாதம் தந்தாங்க 

அம்மனை பார்த்தேங்க...


முன்ன பின்ன பேசி குழப்புவார்கள்...


================

மற்ற கிரக ஆதிக்கம் உள்ளவரிடம் இல்லாத குணம் இவரிடம் மட்டும் உண்டு..

====================

 *திருமணம் போன்ற நிகழ்ச்சி செல்லும் போது* நாமெல்லாம் உறவினர்கள்.. நண்பர்கள் வீட்டில் மட்டும் சேர் போடுதல்..

வரவேற்பு செய்தல்..உணவு  பரிமாறுதல் போன்ற  வேலைகளை

செய்வோம்...


ஆனால் இவர்களுக்கு சம்பந்தமே

இருக்காது..

அறிமுகமான அடுத்த நிமிடமே

வேலைகளை இழுத்து போட்டு செய்வார்கள்.

====

பசி இல்லை என்றால் கூட சாப்பிட்ட

கொஞ்ச நேரத்தில் சாப்பிட கம்பெனி கொடுங்கள் என்றால் சாப்பிடுவார்கள்....


 *திருட தெரியாது..* திருடினால் மாட்டி கொண்டு விடுவார்கள்...


 *சுக்கிரன் திருடினால்* பணம் கொடுத்து தப்பித்து கொள்வார்கள்.


 *குரு திருடினால்* கெளரவமாக இயல்பான செயல் போல சொல்லி நழுவி விடுவார்கள்..


 *ராகு* மாட்டவே மாட்டார்கள் ..


 *சனி.* தெரியாம எடுத்திட்டேன்; மன்னித்து விடுங்கள் என்பார்கள்.......


மனதில் ..வஞ்சனை.. கோபம் ..துரோகம் எதுவும் இருக்காது.

Saturday, April 6, 2024

எனது மற்றும் எனது துணைவியார் ஜாதகம் ஆய்வு






 

https://www.youtube.com/live/QBoaY00WR7o?si=bZCLG7R-xn7FVDEu


*மேலே உள்ள You tube channel link  மூலம் எனது மற்றும் எனது துணைவியார் ஜாதகம் ஆய்வு பற்றி கண்டு களிக்கலாம்* 👆.

திரு.S.ஷண்முகானந்தம் RTD Hm @ AEEO ஜாதகம்






திருமதி S பாக்கியலட்சுமி
M.Sc.,B.Ed., 
Science BT Teacher👇
ஜாதகம்







நன்றி வணக்கம்
திரு.S.ஷண்முகானந்தம் M.A.B.Ed.Rtd.Hm.
ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட மையம்
பொள்ளாச்சி 


Friday, April 5, 2024

சம்மணம்போட்டு உட்காருங்கள்?*

 *கடைசியாக எப்போது கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்தீர்கள்?*



*இதுவரையில்லையென்றால்*

*முதலில்தரையில்*

 *15 நிமிடம் உட்காருங்கள்.* 


*இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது*. 


*லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார முயலுங்கள்*, *இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாதுமுதுகுநேராகத்* *தான்இருக்கும்*.


இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும்.


*நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான்*.  


*நாற்காலி சோபாவில் அமர்வதன் தீமைகள்*.


*இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை*. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. *அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை.* *இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது.*


*மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது*. 


*இது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான்.* இதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர நிற்கப்போவது கிடையாது.


*ஜெரென்டாலஜி, எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை* கேட்டால் சொல்வார்கள். ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டு மெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது. *கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு.* *தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.*


*ஜெரென்டாலஜி துறை, ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து, எழ வைத்து ஆய்வு செய்தார்கள். 


*கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு.*

*ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு.*

*இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு*. இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆன்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விசயம் பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்.


*கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது*. 



*இந்தியா, சீனா, ஜப்பான் என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள்*. செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.


கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம்.


*சோபா, சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு*. 

அடுத்து பின்புற வலி. காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது. *பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்*.


*கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள்.* 


*காரணம் அவர்கள் வாழ்வதே தரையில் தான்*. கீழே படுத்து, உட்கார்ந்து எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும், எலும்புகளும் அத்தனை வலுவாகி விடுகின்றன.


 *ஆனால் சோபா, மெத்தையில் படுத்து பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு வயதானபின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் கீழே விழுவதுதான்.*


*ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள்.* சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி, முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி பின்புறத்தையும், முதுகுத் தண்டையும், மூட்டையும் வலுவாக்குகின்றன.


*அதனால் இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள்*. அப்படி உட்கார்கையில் முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள். 


*இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி போஸ்ச்ரசை (Posture) சரி செய்யும்.*


*சுகாசனம் செய்வோம்* 

*சுகமாக இருப்போம்.*



Thursday, April 4, 2024

காதல் விளையாட்டு*

 *காதல் விளையாட்டு* 



அழகு மனம் அன்பு இவற்றை குறிக்க கூடிய சந்திரன் உச்சம் அடைய கூடிய இடம் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி. சுக்ரன் வீட்டில்.

 சுக்ரன் காமம், காதல், உல்லாசம், சொகுசு, சுகம் இவற்றை குறிக்க கூடியவர். 


அந்த இடத்தில் சந்திரன் உடன் சுக்ரன் இணைந்து இருப்பவர்கள் அதீத காமம் உடையவர்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பல பெண்களை/ ஆண்களை மயக்க கூடியவர்கள்.


 காமத்தை ரசிப்பவர்கள், காமத்திலும் காதல் இருக்கும்; காட்டு தனமான உடலுறவில் ஈடு படமாட்டார்கள். எப்பொழுதும் அரவணைப்பை நாட கூடியவர்கள். எந்த நேரம் கூப்பிட்டாலும் செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு வந்துவிடுவார்கள். (கணவன்/மனைவி)சுகத்திற்காக உடலுறவு என்பதை விட அன்புக்காக ஏங்க கூடியவர்கள். 


இந்த இணைவு லக்னத்துக்கு 3, 7, 11 இல் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். 


மிக்க நன்றி