Sunday, November 21, 2021

வெற்றிகளைக் குவிக்கும் ஓரை

 *ஓரைகள்*


ஒரு நாளில் பகல் பொழுது 12 மணி நேரம் ஆகும் .அதேபோல இரவு 12 மணி நேரம் ஆகும்.

ஓரை என்பது நவ கோள்களில் ராகு கேதுக்களைத் தவிர்த்து மீதமுள்ள ஏழு கிரகங்களை வைத்து வரிசைப்படுத்தி அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப கிழமை நாதனை தலைமையாகக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகம் ஓரையாக செயல்படும்.


ஓரைகள் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். சூரியன் 

சுக்கிரன்

 புதன் 

சந்திரன் 

சனி 

குரு

 செவ்வாய்


உதாரணமாக திங்கட்கிழமை என்றால் காலை 6:00 மணிக்கு சந்திர ஓரை ஆரம்பிக்கும் அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து 7 மணிக்கு சனி ஓரை தொடங்கும்.

இவ்விதமாக அடுத்தடுத்து ஓரைகள் வரிசைக்கிரமமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிரகம் ஓரையாக செயல்படும்.


 பஞ்சாங்கத்தில் பொதுவாக 6 மணியில் இருந்து ஓரை ஆரம்பித்திருப்பார்கள்....இது பொது....


ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் சூரிய உதயம் அஸ்தமனம் வேறு படும்..


சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதை 12 ஆல் வகுத்து வருவதை ஒரு ஓரை எனக்கொள்ள வேண்டும்..


அதன்படியே 12 ஓரைகளும் பகல் பொழுதிற்கு கணக்கிடலாம்...துல்லியமாக ஓரையை கணக்கிட இம்முறையே கையாளப்படுகிறது...


இரவு பொழுதும் இப்படியே


 *ஓரைகளும்  செய்திகளும்* 


ஓரைகளுக்கும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் உண்டு..ஏன்?....எப்படி?....


அது எப்படியெனில், ஓரைகள் 100 % பலம் வாய்ந்தவை..

நமக்கு நடக்கும் அல்லது நாம் கேட்கும் செய்திகள், பார்க்கும் காட்சிகள் ஓரை சார்ந்த கிரக காரகத்தன்மை பொருந்தியதாக இருக்கும்...


நீங்கள் திடீர் என்று ஒரு கோரமான செய்தி (விபத்து) போன்ற செய்திகள் கேட்டால் அது *செவ்வாய் ஓரையோ* அல்லது *செவ்வாய் அந்தர ஓரையாவது* இருக்கும்...


அது மட்டும் இல்லாமல் கிழமைகளுக்கு உரிய பகை ஓரைகளிலும் இது போன்ற கோர செய்திகள் கேட்பீர்கள்...


நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போது ஒரு திருமண நிகழ்வு காட்சியாக தெரிகிறது என்றால் அந்த நேரத்தில் *குரு ஓரை* நடந்து கொண்டிருக்கும்.


 அதேபோல காதல் பாட்டுகள் காட்சிகள் வரும்போது *சுக்கிர ஓரை* நடந்துகொண்டிருக்கும்.


நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஜன்னல் ஓரத்தில் இருந்து வெளியே பார்க்கும் போது ஏதாவது நீர்நிலைகள் ஏரி குளம் கிணறு ஆறு போன்றவை தென்பட்டால் கண்டிப்பாக அந்த நேரத்தில் *சந்திரன் ஓரை* நடந்து கொண்டிருக்கும்.


நம்மை சுற்றி நடக்கும் அனைத்திற்கும் காரணம் உண்டு...

அவற்றில் இந்த ஓரையின் தாக்கம் இல்லாமல் இருக்காது.


முயன்றுதான் பாருங்களேன்...

Saturday, November 20, 2021

 கீழே படித்து விட்டு 

கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா 

செல்லவேண்டாமா 

முடிவு பண்ணுக....!!!


இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்...!!


1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.


2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.


3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.


4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.


5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.


6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..


7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.


8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.


9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.


10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.


11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..


12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.


13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.


14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.


15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.


16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.


17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.


18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.


19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..


20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.


இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் …அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் …