Saturday, June 13, 2020

ஜோதிட புதிர் 13/06/2020 சனிக்கிழமை

வணக்கம் வகுப்பறை ஜோதிடம் 7/6/ 2020 அன்று கொடுக்கப்பட்ட புதிரில் ஒரு ஜாதகருக்கு கடைசி வரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
ஜாதக ரீதியாக என்ன காரணம்? ஆய்வு செய்யவும்.


இந்த ஜாதகத்தில் தனுசு லக்கினம். மகர ராசி. திருவோணம் நட்சத்திரம்.
குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாமிடம் முக்கிய காரணம் வைக்கிறது.
ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்துள்ளார். அவர் தனது சுய சாரத்தில் அதாவது அஸ்வினி நட்சத்திரம் முதலாம் பாகத்தில் அமர்ந்து ராசி மற்றும் அம்சத்திலும் மேஷ ராசியிலேயே வர்கோத்தமம் ஆகி அமர்ந்துள்ளார்.
இயற்கை அசுபர் கிரகமான கேது பகவான் தனது சுய சாரத்தில் அமர்ந்ததும் வர்கோத்தமம் அடைந்ததும் ஐந்து நிமிடம் ஆனது பாதிப்புக்குள்ளானது.
அடுத்து 5-ம் இடத்து அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நட்சத்திரத்தை பெற்றுள்ளார்.
ஐந்தாம் வீடும் ஐந்தாம் வீட்டு அதிபதி புத்திர பாக்கியத்தை தருவதில் கேது பகவான் தடையை உருவாக்கிவிட்டார்
அதோடு மட்டுமல்லாமல் புத்திரகாரகன் என்று சொல்லக்கூடிய குருபகவான் மகரத்தில் நீசமாகி உள்ளார்.
குரு பகவான் எட்டாம் இடத்துக்கு அதிபதியான சந்திர பகவானின்  திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்தது தவறாகும்.
குருபகவான் அம்சத்தில் ரிஷபத்தில்  பகை நிலை அடைந்து விட்டார்.
அந்த அந்த வகையிலும் புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை.
சரி. விதி சரியில்லை என்றாலும் மதியைக் கொண்டு பார் என்பர். அப்படிப் பார்த்தால் சந்திரன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பார்க்கும்போது ஐந்தாம் இடத்து அதிபதி சுக்கிர பகவான் கன்னியில் அமர்ந்து நீசம் ஆகிவிட்டார்.

அடுத்து சூரியன் உள்ள கதி என்ற நிலையில் பார்த்தாலும் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் வீட்டில் குரு பகவான் நீசம் ஆகிவிட்டார்.
5ஆம் இடத்து அதிபதி சனி பகவான் தன் வீட்டுக்கு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து மறைவு பெற்று விட்டார்.
ஆக ஜென்ம லக்னம் ஜென்ம ராசி கதி என்ற சூரியன் நிலை   என்று பார்த்தால் இவருக்கு எந்த வகையிலும் புத்திர பாக்கியம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போனது பூர்வ ஜென்மத்தில் செய்த வினைப்பயன் என்றே தெரிகிறது அதனாலேயே இவருக்கு கடைசிவரை புத்திரபாக்கியம் அமையவில்லை எல்லாம் இல்லை எல்லாம் வல்ல இறை நிலை அவருக்கு மன அமைதியை தரட்டும் வாழ்க வளமுடன்.


7.6.20


Astrology: Quiz: புதிர்: 5-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகதைக் கொடுத்து, அவர் திருவோண நட்சத்திரம். அவருக்கு திருமணமாகி நல்ல மனைவி கிடைத்தும் நல்ல தாம்பத்திய வாழக்கை அமைந்தும் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. அந்த மனவருத்தம் அவருக்கு கடைசிவரை இருந்தது. அந்த நல்ல மனிதருக்கு குழந்தை பாக்கியம் ஏன் கிட்டவில்லை? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஐந்தாம் வீடு கெட்டிருக்கிறது. கேதுவின் ஆதிக்கத்தோடு மாந்தியின் பார்வையும் உள்ளது. குழந்தைக்குக் காரகனான (Authority) குரு பகவான் நீசமாகி விட்டார். அத்துடன் 8ம் அதிபதியின் சேர்க்கையும் அவரை மேலும் வலுவிலக்கச்செய்கிறது. சந்திரனுக்கு 5ம் வீட்டுக் காரரான சுக்கிரன் நீசமாகி விட்டார். அத்துடன் அவர் பாப கர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார் ஒரு பக்கம் ராகு மறுபக்கம் செவ்வாய் சர்வாஷ்டகவர்க்கத்திலும் பரல்கள் குறைவாக உள்ளன. (5ல் 22 பரல்கள் - குரு இருக்கும் வீட்டில் 20 பரல்கள்) ஆகவே இக்காரணங்களால் ஜாதகருக்கு குழந்தை இல்லை

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 12-6-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்

No comments:

Post a Comment