Thursday, June 25, 2020

பெண்களை திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா ?25/06/2020 வியாழன்?

ஊஞ்சல் உற்சவம்

பெண்களை திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா ??

வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாககுறைந்து விட்டது..முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியாக ஆடினார்கள். இப்போது செல்போன் கையுமாகவே சுற்றுகிறார்கள். படிப்படியாய் குறைந்து தற்போது காணாமல் போய்விட்டது இந்த பழக்கம்…இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்…


இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் விழாக்கள் இன்றும் உண்டு ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள நெகடிவ் எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றதது திருமணங்களில் ஊஞ்சல் சடங்கு’ இதன்
அடிப்படையிலேயே உருவானது.


ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் அடையும்…நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு சைடுகளிலும் உள்ள சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. கணிணியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய தலைமுறையினர் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று
க ழுத்துவலி போன்ற பிரச்சனைகள் வராது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும்.


தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது…மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு(ஆக்சிஜன்) வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை கொடுத்து இ தயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இ த ய நோய் கட்டுப்படும். ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ர த் த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இது உதவும். உணவு மண்டலம் சீரடையும்.. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோ பம் குறையும்.. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக அமைதியாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள் வீட்டுக்குள் வரும் தேவதைகள் வீட்டின் முன் இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், என்று சொல்லி வைத்தார்கள்.

ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து லஷ்மி பேசுவதும் வழக்கமாக இருந்தது. இப்போது ஊஞ்சலை பார்ப்பது அரிதாக உள்ளதுவாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது. என்று பலரும் கூறுகின்றனர்..

Wednesday, June 17, 2020

வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது? 17/06/2020 புதன்கிழமை


வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது?


--------------------------------------------------------------------------------------------------------------------- தற்போது (17/06/2020 புதன்கிழமை)
அதிசாரம் எனப்படும் இந்த சனியின் நகர்வு திருக்கணிதப்படி மட்டுமே நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்னும் தனுசுராசியிலேயே ஜென்மச்சனியாக நிலை கொண்டிருக்கிறார்.


கீழே உள்ள கட்டுரை ஒரு பத்திரிக்கையில் வந்தது. உங்களின் தகவலுக்காக அதை அப்படியே கொடுத்துள்ளேன்!

வாக்கியப் பஞ்சாங்கங்கள் பிழையானவை. கிரகங்களின் உண்மை இருப்பு நிலையை அவை சொல்லவில்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பொதுவாக அனைத்து பெயர்ச்சிகளிலும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே வித்தியாசங்கள் உண்டு. இவற்றில் சனி விஷயத்தில் அதிகமான வித்தியாசங்கள் ஏற்படும்.

எந்தவிதமான பஞ்சாங்கமாக இருந்தாலும் அவற்றை வெளியிடுபவர்கள் கிரகங்களின் அருகில் போய் நின்று கொண்டு அதன் இயக்கத்தை கண்டுணர்ந்து குறிப்பது இல்லை. இதற்கென சில கூட்டல், கழித்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மூலச் சமன்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதை ஜோதிடப்படி சித்தாந்தம் என்று சொல்லுவோம்.

அதன்படி முந்தைய ஆண்டுகளில் சனி இந்த இடத்தில் இருந்தது, பூமி இங்கே இருந்தது. இந்த வருடம் சனி இவ்வளவு நகர்ந்திருக்கிறார், பூமி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது. எனவே சனி, பூமியில் இருந்து இவ்வளவு தூரம் இருக்கிறார் என்பதை மூலச் சமன்பாட்டின் தொடக்கத்தை வைத்து கணக்கீட்டு முறையிலேயே வாக்கிய, திருக்கணித, பஞ்சாங்க கர்த்தாக்கள் கிரக நிலையை அறிவிக்கிறார்கள்.

இதில் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஆதியில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டே போய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போய் நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாட்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகநிலைகள் மாறுபடுவதற்கான காரணம். சமன்பாடுகளின் மூலங்களில் மட்டுமே கிரக வித்தியாசத்தை திருத்த முடியும் என்பதால் இதை எப்படி நேர் செய்வது என்ற குழப்பத்தில் வாக்கியப் பஞ்சாங்கள் தெளிவற்ற ஒரு நிலையில் இருக்கின்றன.

சில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. திருக்கணித முறைகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் அருகதை இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள்.

உண்மையில் வாக்கியத்தை விட திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. திருக்கணிதமே பழமையானது. ஜோதிடத்தின் ஆதி பிதாமகர்களான ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான்.

நமது வானவியல் சாஸ்திரத்தின் ஆதிஞானிகளில் ஒருவரான ஆரியபட்டர் தன்னுடைய பெருமைமிகு நூலான சூரியசித்தாந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே தான் பிரம்மாவின் வழித்தோன்றல் எனவும் இரண்டாவதில் மயன், நம்முடைய மேலான இந்துமதத்தின் ஆதிநாயகனான சிவம் எனும் சூரியனை நோக்கித் தவமிருந்து இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும், சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இந்த மயன்தான் மேற்குறிப்பிட்ட பிரபஞ்ச ரகசியங்களை நாரதர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளுக்கும் தெரியப் படுத்தினார் என்றும் ஆரியபட்டர் தெளிவாகச் சொல்கிறார்.

13-ம் நூற்றாண்டு வரை ஆரியபட்டரின் திருக்கணித முறையே நம்முடைய பாரதத்தில் இருந்து வந்தது. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தவறான வாக்கிய முறை இங்கே கையாளப்பட்டது. ஆரியபட்டரை அடுத்து வந்தவரான வரருசி அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய வாக்கிய சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த வாக்கியத்திலும் காலத்திற்கேற்ப மாறுதல்களை செய்து கொள்ளவும் சொன்னார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கிரக இருப்பில் ஏற்படும் மாறுதல்களை மாற்றிக் கொள்ள ஞானிகள் நம்மை அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். ஆனால் வரருசியின் வாக்கிய சித்தாந்தம் அவ்வப்போது திருத்தப்படாமல் விடப்பட்டதால் இன்றைக்கு திருத்தவே முடியாத ஒரு தவறான நிலையில் வந்து நிற்கிறது.

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திருக்கணிதப்படியான கிரக இருப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் நாசாவிற்கே விண்வெளி சமன்பாடுகளில் மூலக்கணிதங்களை அளித்தது திருக்கணித முறைகள்தான்.

வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள முரண்பாட்டை இன்னும் துல்லியமாக ஆராயப் போவோமேயானால், பூமி ஒரு வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும் நிரூபிக்கப்பட்ட துல்லியமான கால அளவான 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்பதை, வாக்கியங்களில் 3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுவதால் வித்தியாசம் வருகிறது.

தங்களுடைய கணிப்புகள் தவறுவதை உணர்ந்து வாக்கிய பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் தங்கள் முறையின் ஆதார கர்த்தரான வரருசியின் மூல முறையில் கணிப்பதை இப்போது கைவிட்டு விட்டனர். இது கிட்டத்தட்ட வாக்கிய முறை தவறு என்பதை ஒத்துக்கொண்டதற்கு சமம்தான்.

ஆனால் பலநாள் தவறை ஒரே முறையில் திருத்துவது எப்படி என்பதுதான் தற்போது பெரிய குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களினால் சனிப்பெயர்ச்சி சில சமயம் இரண்டு பஞ்சாங்கங்களிலும் மூன்றரை மாத வித்தியாசம் வர ஆரம்பித்து விட்டது. எனவே அனைவரும் கிரக இருப்பின் உண்மையான நிலைமையை கூறுகின்ற திருக்கணித முறைக்கு மாறி அதனைக் கடைப்பிடிப்பது மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

இந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது ஜோதிடம் அறியாத பொதுமக்கள் தான். நட்சத்திர இறுதி நேரங்களில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் வேறு வேறு நட்சத்திரத்தை சொல்லும் போது சாதாரண பொது மக்கள் ஜோதிடத்தையே குறை சொல்லும் நிலைமை ஏற்படுகிறது.

தவறான கணிப்பால் வாக்கிய பஞ்சாங்கப்படி சில நேரம் ஜாதகரின் லக்னமே மாறி விடுகிறது. இது சாஸ்திர துரோகம். இதை மாற்ற அனைத்து ஜோதிடர்களும் துல்லியமான கிரக இருப்பை சொல்லும் திருக்கணித பஞ்சாங்கங்களை மட்டுமே பின்பற்றுவது நல்லது.

மற்ற மாநிலங்களில் வாக்கியமா? திருக்கணிதமா? எது நடைமுறையில் உள்ளது?

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் இருக்கும் வான சாஸ்திர நிபுணர்கள், பஞ்சாங்க கணிதர்கள் ஆந்திர மாநில திருப்பதியில் ஒன்று கூடி இனி இந்தியாவில் திருக்கணித அடிப்படையில் மட்டும்தான் பஞ்சாங்கங்களை வெளியிட வேண்டும். திருக்கணிதமே சரியானது மற்றும் துல்லியமானது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதையொட்டி இப்போது தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் திருக்கணித முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தவறு என்று தெரிந்தும் வாக்கிய பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திரத்திலும் கூட திருக்கணித முறைப்படிதான் கோவில் திருவிழாக்கள், ராகு-கேது, குரு, சனி ஆகிய பெயர்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தை கோவில்களில் பின்பற்றும் முறை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

ஜன.27, 2017 மாலைமலரில் வெளியான கட்டுரை!

நமக்கு அறியத் தந்தவர் நமது வகுப்பறை மாணவரான ஆனந்தமுருகள்
பத்திரிக்கைக்கும், அறியத்தந்த மாணவருக்கும் நமது நன்றி உரித்தாகுக!
----------------------------------------------------------------------------

Saturday, June 13, 2020

ஜோதிட புதிர் 13/06/2020 சனிக்கிழமை

வணக்கம் வகுப்பறை ஜோதிடம் 7/6/ 2020 அன்று கொடுக்கப்பட்ட புதிரில் ஒரு ஜாதகருக்கு கடைசி வரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
ஜாதக ரீதியாக என்ன காரணம்? ஆய்வு செய்யவும்.


இந்த ஜாதகத்தில் தனுசு லக்கினம். மகர ராசி. திருவோணம் நட்சத்திரம்.
குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாமிடம் முக்கிய காரணம் வைக்கிறது.
ஐந்தாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்துள்ளார். அவர் தனது சுய சாரத்தில் அதாவது அஸ்வினி நட்சத்திரம் முதலாம் பாகத்தில் அமர்ந்து ராசி மற்றும் அம்சத்திலும் மேஷ ராசியிலேயே வர்கோத்தமம் ஆகி அமர்ந்துள்ளார்.
இயற்கை அசுபர் கிரகமான கேது பகவான் தனது சுய சாரத்தில் அமர்ந்ததும் வர்கோத்தமம் அடைந்ததும் ஐந்து நிமிடம் ஆனது பாதிப்புக்குள்ளானது.
அடுத்து 5-ம் இடத்து அதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து நட்சத்திரத்தை பெற்றுள்ளார்.
ஐந்தாம் வீடும் ஐந்தாம் வீட்டு அதிபதி புத்திர பாக்கியத்தை தருவதில் கேது பகவான் தடையை உருவாக்கிவிட்டார்
அதோடு மட்டுமல்லாமல் புத்திரகாரகன் என்று சொல்லக்கூடிய குருபகவான் மகரத்தில் நீசமாகி உள்ளார்.
குரு பகவான் எட்டாம் இடத்துக்கு அதிபதியான சந்திர பகவானின்  திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்தது தவறாகும்.
குருபகவான் அம்சத்தில் ரிஷபத்தில்  பகை நிலை அடைந்து விட்டார்.
அந்த அந்த வகையிலும் புத்திர பாக்கியத்திற்கு வாய்ப்பு இல்லை.
சரி. விதி சரியில்லை என்றாலும் மதியைக் கொண்டு பார் என்பர். அப்படிப் பார்த்தால் சந்திரன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பார்க்கும்போது ஐந்தாம் இடத்து அதிபதி சுக்கிர பகவான் கன்னியில் அமர்ந்து நீசம் ஆகிவிட்டார்.

அடுத்து சூரியன் உள்ள கதி என்ற நிலையில் பார்த்தாலும் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் வீட்டில் குரு பகவான் நீசம் ஆகிவிட்டார்.
5ஆம் இடத்து அதிபதி சனி பகவான் தன் வீட்டுக்கு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து மறைவு பெற்று விட்டார்.
ஆக ஜென்ம லக்னம் ஜென்ம ராசி கதி என்ற சூரியன் நிலை   என்று பார்த்தால் இவருக்கு எந்த வகையிலும் புத்திர பாக்கியம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போனது பூர்வ ஜென்மத்தில் செய்த வினைப்பயன் என்றே தெரிகிறது அதனாலேயே இவருக்கு கடைசிவரை புத்திரபாக்கியம் அமையவில்லை எல்லாம் இல்லை எல்லாம் வல்ல இறை நிலை அவருக்கு மன அமைதியை தரட்டும் வாழ்க வளமுடன்.


7.6.20


Astrology: Quiz: புதிர்: 5-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகதைக் கொடுத்து, அவர் திருவோண நட்சத்திரம். அவருக்கு திருமணமாகி நல்ல மனைவி கிடைத்தும் நல்ல தாம்பத்திய வாழக்கை அமைந்தும் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. அந்த மனவருத்தம் அவருக்கு கடைசிவரை இருந்தது. அந்த நல்ல மனிதருக்கு குழந்தை பாக்கியம் ஏன் கிட்டவில்லை? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஐந்தாம் வீடு கெட்டிருக்கிறது. கேதுவின் ஆதிக்கத்தோடு மாந்தியின் பார்வையும் உள்ளது. குழந்தைக்குக் காரகனான (Authority) குரு பகவான் நீசமாகி விட்டார். அத்துடன் 8ம் அதிபதியின் சேர்க்கையும் அவரை மேலும் வலுவிலக்கச்செய்கிறது. சந்திரனுக்கு 5ம் வீட்டுக் காரரான சுக்கிரன் நீசமாகி விட்டார். அத்துடன் அவர் பாப கர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார் ஒரு பக்கம் ராகு மறுபக்கம் செவ்வாய் சர்வாஷ்டகவர்க்கத்திலும் பரல்கள் குறைவாக உள்ளன. (5ல் 22 பரல்கள் - குரு இருக்கும் வீட்டில் 20 பரல்கள்) ஆகவே இக்காரணங்களால் ஜாதகருக்கு குழந்தை இல்லை

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 12-6-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்

Thursday, June 11, 2020

யாருக்கு சகட யோகம்...11/06/2020 வியாழன்

யாருக்கு சகட யோகம்...
வாலை போற்றி!                          வாசி போற்றி!


சகடம் என்றால் சக்கரம் எனப்பொருள்.

சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனுக்கு 6,8 மற்றும் 12ம் இடத்தில் மன்னவன் என்று அழைக்கப்படும் குருபகவான் இருக்க அதுவே சகட யோகம் ஆகும்..

சகடை யோக பலன்கள்...

சகடை என்றால் சக்கரம் என்று பொருள்..
சக்கரம் எப்படி கீழ் இருந்து மேலாக மற்றும் மேல் இருந்து கீழாக சுழல்கிறதோ
அதேபோல இந்த சகடயோகம் உடைய ஜாதகரின் வாழ்க்கையும் சக்கரத்தை போல மேல் இருந்து கீழாகவும் கீழ் இருந்து மேலாகவும் மாறி மாறி அமையும்.. இவர்களின் வாழ்க்கை நிலையாக ஒரே சீராக இருக்காது.. இவர்கள் தீடீரென உச்சத்திற்கு செல்வார்கள்.. தீடீரென கீழ் மட்டத்திற்கு வந்து விடுவார்கள்.. மறுபடியும் உச்சத்திற்கு செல்வார்கள்..இப்படி சக்கரத்தை போல மாறி மாறி சுழன்று கொண்டே இருப்பார்கள்...

துணிவு கொள்வோம்! துயரினைக் களைவோம்!

இன்பமே சூழ்க!  எந்நாளும் வாழ்க!

வாழ்க வளமுடன்! வளர்க துணிவுடன்!

                  ஓம் நமசிவய!

Monday, June 8, 2020

கோவில் கோபுரத்தில் கடவுள் சிலைகள் 8/6/2020 திங்கள்

கோவில்  கோபுரத்தில்  கடவுள் சிலைகள், நாட்டிய மாதர்கள், ஆபாச சிலைகள், ஆன்மீக பெரியோர்சிலைகள் ,  மற்றும்  போர்யகளத்தில் சண்டையிடும்  வீரர்கள்,    விலங்குகள் ,  பரதநாட்டியம்,    என்று  எல்லா சிலைகளும்   வைத்து  இருக்க  காரணம்  என்ன ?
**********************************************

             கடவுள்  எங்கே  இருக்கிறார் ?,  கடவுள்  எப்படி  இருக்கிறார் ?  உண்மையில்  இந்த  உலகம்   எப்படி  இருக்கிறது ?..  போன்ற  பல்வேறு   கேள்விகளுக்கு   பதில்  அளிக்கும்  விதமாக  தான்  கோவில்கள்  கட்டப்பட்டு   இருக்கிறது.

             கடவுள்  ஐந்து  இடங்களில்  இருக்கிறார் .    ஐந்து  விதங்களில்  செயல்படுகிறார் .

         1.  பரம் ,    2. வியூகம்,   3.  விபவம்,
         4.  அர்ச்சை,   5. அந்தர்யாமி .
என்று   ஐந்து  விதங்களில்  செயல்படுகிறார்.

" பரம்  உலகம்  =  உச்சி  முதல்  வரிசை. "
================================

           பரம்  என்பது   உயர்மட்ட  மேல்  உலகம்  ஆகும்.   இங்கு  இருக்கும்  மூர்த்திகள்  :-   நாராயணன்  ,    சதாசிவம்,  லலிதா பரமேஸ்வரி,   போன்றோர்  ஆவர்.

இந்த   பரம்  என்கிற  உலகில்  உள்ள  மூர்த்தி  ஆனவர்  சும்மா  கண்ணை மூடி   கண்ணை  திறக்கிற  சொற்ப  வினாடி  நேரத்திலே   பூமியில்  ஒரு  யுகமே   முடிந்து  விட்டு  இருக்கும்.   அப்படி  ஒரு  காலம்  கணக்குபடி   அங்கு   அவர்   வாழ்கிறார்.

இந்த  பரம்  என்ற  உலகத்தை   நமது   கோவில்  கோபுரத்தில்   உச்சியில்   உள்ள  மேல்  வரிசையில்   அமைத்து  மக்களுக்கு  தெரியப்படுத்தினர்  .

கோவில்  கோபுரம் உச்சியில்  உள்ள  மேல்  வரிசையில்  தான்  நாராயணன்  சிலை , ஐந்து  தலை உள்ள  சதாசிவம்  சிலை,  காயத்ரி  சிலை ,   லலிதா பரமேஸ்வரி  சிலை  போன்றவற்றை   வைக்க  வேண்டும்.

வீட்டில்  நவராத்திரி  அன்று  வைக்கிற  கொலுவிலும்    மேலே  உச்சியில்  மேல்  வரிசையில்  தான்  இந்த  நாராயணன் சிலை,  சதாசிவம்,  லலிதா பரமேஸ்வரி  போன்ற   சிலைகளை வைக்க வேண்டும்.

      1. கோவில்  கோபுரம்  என்பதும்
      2. மேரு  மலை  என்பதும் ,
      3. நவராத்திரி  கொலு  என்பதும்,
      4. ஸ்ரீ  சக்கரம்  என்பதும்,.
         .... எல்லாம்   ஒரே  தத்துவ  ரகசியத்தை   குறிப்பிடுவது   ஆகும்.

          அதாவது   நாம்  வாழும்  இந்த  உலகத்துக்குள்  பல்வேறு  பரிமாண  உலகங்கள் இருக்கிறது.    அவற்றில்  மிக மிக  ஆழத்தில்   கடைசியில்   உச்சியில்   இருப்பது  தான்   பரம்   என்ற  உலகம்  ஆகும்.

       வீட்டில்  விளையாட   பயன்படுத்துகிற     பரமபதம்  என்ற   விளையாட்டு   புகைப்படம்   சார்ட்டிலும்    உச்சியில்  மேல்  வரிசையில்  தான்  பரமபதம்   என்று  குறிப்பிட்டு  இருப்பர்.


மார்கழி  வைகுண்ட  ஏகாதசி  அன்று  இந்த  பரம பதம்  வாசல்  திறக்கும்.   அன்று  உயிர்  விடுகிறவர்கள்  அந்த  உலகிற்கு  செல்வர்   என்று  சாஸ்திரம்  சொல்கிறது.

            இந்த  பரம்  என்ற  உலகிற்கு  அடுத்ததாக  சற்று  வெளியே  இருக்கிற  உலகம்  தான்  " வியுகம் "   என்ற  உலகம்  ஆகும்.

" வியுகம் உலகம்  = இரண்டாவது  வரிசை"
==================================

          இந்த   வியுகம்  உலகத்தில்  தான்   பிரம்மா ,  விஷ்ணு,  சிவன்,   என்கிற  மும்மூர்த்திகள்   இருக்கிறார்கள் .

           இவர்கள்  தான்   வியுகம்  வகுப்பவர்கள்  ஆவர்.    பூமியில்    கிரேதா  யுகம்,   திரேதா யுகம் ,    துவாபர  யுகம் ,  கலி யுகம்,     போன்ற  நான்கு  யுகத்திலும்     அசுரர்களை  அழிக்க  யார்  யார்  அவதாரம்  எடுக்க வேண்டும் ;   யார்  யார்   என்ன என்ன  செயல்கள்  செய்ய வேண்டும்  என்று  திட்டம்  வகுத்து   முடிவு  செய்து   பூமியில்   அவதார  புருஷர்களையும் ,    மகான்களையும்   பிறக்க செய்வது   இவர்கள்  வேலை  ஆகும்.

               இந்த  வியுகம்  உலகத்தை  கோவில்  கோபுரம்  உச்சியில்  உள்ள  மேல்  வரிசைக்கு  அடுத்து   உள்ள  கீழ்  வரிசையில்   அமைத்து   அதற்கு  கீழ்  இந்த  உலகம்   இருக்கிறது   என்ற  உண்மையை   வெளிபடுத்தினர் .

             இந்த  இரண்டாவது   உலக  பரிமாணத்தில்   எந்த  எந்த  தெய்வங்கள்  இருக்கிறார்கள்,  என்ன மாதிரியான  பணிகளை  செய்கிறார்கள்  என்பதை   மக்களுக்கு  தெரியபடுத்தும்   விதத்தில்  அதற்கு  உரிய  சிலைகளை  வைத்தனர்.

             இந்த  இரண்டாவது  வரிசையில்  தான்  இந்த  முப்பெரும்  தெய்வங்கள்  சிலையை  வைக்க  வேண்டும்.

             நவராத்திரி  கொலு  மண்டபத்திலும்  இந்த  இரண்டாவது  வரிசையில்  தான்   முப்பெரும்  தெய்வங்கள்  பொம்மைகளை  வைக்க வேண்டும்.

          ஸ்ரீ  சக்கரம்  வழிபாடு  செய்பவர்கள்   இந்த  இரண்டாவது  வரிசையில்  முப்பெரும்  தெய்வங்கள்  பீஜாட்சரம்  ஜெபித்து   ஆவாஹனம்  செய்து   உபாசித்து  வழிபட  வேண்டும்.

           இதற்கு  அடுத்து    வெளிபக்கமாக   உள்ள  மூன்றாவது   வரிசையில்   தான்  விபவம்  உலகம்    இருக்கிறது.

" விபவம்  உலகம்  =  மூன்றாவது  வரிசை "
==================================

            விபவம்  உலகத்தில்  தான்   அவதார  புருஷர்கள்  வாழ்கிறார்கள்.  மச்சவதாரம்  மூர்த்தி ,  ஹயக்ரிவர் மூர்த்தி,   வராக மூர்த்தி,   நரசிம்மர்  மூர்த்தி,   வாமன  மூர்த்தி,  ஸ்ரீ ராமர் ,  ஸ்ரீ கிருஷ்ணர்,    சோமசுந்தரர்,   ஐயப்பன்,....

            போன்ற   தெய்வங்கள்  எல்லாம்  இந்த  விபவம்  உலகத்தில்   வீற்றிருக்கிறார்கள் .   இந்த  உலகில்  இருக்கிற   இவர்கள்  தான்  பூமிக்கு  வந்து  மக்களுக்கு  நல்வழி காட்டிவிட்டு   மீண்டும்  இந்த   விபவம்  உலகிற்கு  சென்று  விடுகிறார்கள்.

           இந்த  உலகிற்கான   கால கணக்கு   வேறு  ஆகும்.

           இந்த   விபவம்  உலகத்தை  கோவில் கோபுரத்தில்  மூன்றாவது   வரிசையில்   அமைத்து  ;   இந்த  வரிசையில்  இதுவரை  அவதரித்த  தெய்வங்கள்  சிலைகளை   வைத்து  மக்களுக்கு  தெரியப்படுத்தினர்.

            நவராத்திரி  கொலு  மண்டபத்திலும்  மூன்றாவது  வரிசையில்  தான்  வராகர் சிலை ,  ராமர்  சிலை , கிருஷ்ணர்  சிலை ,  ஐயப்பன்  சிலை ,.. போன்றவற்றை  வைக்க வேண்டும்.

            ஆனால்  நிறைய பேர்  வீடுகளில்  நவராத்திரி  கொலுவில்  இந்த   வரிசை  படி  சாமி சிலைகளை   வைப்பது  இல்லை.   தங்கள்  இஷ்டத்திற்கு  எங்கு வைக்கணும்   என்று  தோணுகிறதோ   அங்கு  வைத்து  விடுகிறார்கள்.

             இதற்கு  காரணம்  மக்களுக்கு      கொலு  என்பதே    பல்வேறு  பரிமாண   உலகங்கள்  பற்றிய  அறிவை  போதிக்கிற   ஒன்று   என்று  தெரியாததே  ஆகும்  ;

              அதனால்  தான்   தெய்வங்கள்  பொம்மையை   எங்கு   வைக்கணும்  என்று  தெரியாமல்  மாற்றி  மாற்றி  வைத்து  விடுகிறார்கள்.

           மக்கள்   இந்த  நியமத்தை  அறிந்து  அதற்கு  ஏற்ப   தெய்வ சிலைகளை   வைத்து  வழிபட்டால் ;      உபாசனையானது   முழுமை  பெறும் . முழுபலன்  கிடைக்கும் .

             இதற்கு  அடுத்து  கீழ்  இருக்கிற  உலகம்  தான்   " அர்ச்சை " ஆகும்.

" அர்ச்சை  உலகம்  =  நான்காவது வரிசை"
==================================

            இந்த  அர்ச்சை  உலகம்  தான்  சொர்க்கம்  ஆகும்.   இங்கு  தான்  தேவர்கள்  வாழ்கிறார்கள்.    இவர்கள்  தங்கள்  உலகில்  சிவ லிங்கம்,   நடராஜர்  சிலை  வைத்து   அர்ச்சனை  செய்வார்கள்.    பஜனை ,  கீர்த்தனை என்று   பலவாறாக   வழிபாடு  செய்வார்கள்.

         இந்த   அர்ச்சை  என்ற   சொர்க்கத்தில்  இருந்து  தான்   நடராஜர்  சிலையை  தேவர்களிடம்   கேட்டு  வாங்கி   பூமிக்கு   கொண்டு  வந்தார்  அகத்தியரின்  ராஜ  சீடர்.

             பூமியில்  இருந்து   சொர்க்கம்    சென்ற  பக்தர்கள்   அங்கு  உள்ள  மிக சக்தி வாய்ந்த   இந்த   சிலைகளை   வழிபாடு  செய்து  கொண்டு  இருப்பர்.

           கண்ணகி,   தருமர்,  சுந்தரரின்  நண்பர்  சேர மன்னர் ,   மீரா பாய்,     சித்தர்கள்,...  என்று   நிறைய  பக்தர்கள்  இந்த  அர்ச்சை  என்ற  உலகத்தில்  இருப்பார்கள்.

             இந்த  அர்ச்சை  என்ற   சிலைகளில்   தெய்வம்   உறைந்து  இருக்கும் .   அந்த  சிலை  வழியாக   அங்கு  உள்ள  பக்தர்களுக்கு   அருளுவார்  இறைவன்.

              இந்த  உலகத்தை பற்றிய  தகவலை  கோவில்  கோபுரத்தில்   நான்காவது  வரிசையில்   அமைத்து ;  அதில்  இதற்கு  முன்  முக்தி அடைந்த  சித்தர்கள்,  பக்தர்கள்  சிலைகளை  வைத்து   மக்களுக்கு  உணர்த்தினர்.

         வீட்டில்  நவராத்திரி  கொலு மண்டபத்திலும்   நான்காவது  வரிசையில்  தான்   அவ்வையார்  சிலை ,  நால்வர்  பெருமக்கள்  சிலை ,   சித்தர்கள்  சிலைகளை  வைக்க வேண்டும்.

            இதற்கு  அடுத்து  கீழ்  இருக்கிற  உலகம் தான்   அந்தர்யாமி   என்கிற  நாம்  வாழ்கிற  பூமி  ஆகும்.

" அந்தர்யாமி உலகம் = ஐந்தாவது வரிசை"
==================================

             நாம்  வாழ்கிற  இந்த  பூமியில்  இருக்கிற   புல் பூண்டு  மரம்   முதல்  ஈ எறும்பு  , நாய்  நரி,  பறவைகள்,  மனிதர்கள்  வரை  எல்லாவற்றிலும்   இறைவன்   அந்தர்யாமியாக    உறைந்து  இருக்கிறார்.

            அதனால்  இந்த  பூமியில்   மனிதர்கள்   எல்லா ஜீவராசிகளுக்கும்   செய்கிற  சேவையே    அவற்றின்  உள் உறையும்   இறைவனுக்கு  செய்கிற  சேவையாகிறது.

            மக்கள்  தொண்டே  மகேசன்  தொண்டு  ஆகும்.   இங்கே  கடவுளை  வெளியே  தேட கூடாது.   தனக்குள்ளே  அந்தர்யாமியாக  உள்ள   இருதயாளிஸ்வரரை   அக  பூஜையில்  வழிபட  வேண்டும்.

             தங்கள்  மனதில்  கெட்ட  எண்ணங்களுக்கு  இடம்  தராமல்   சிவனின்  திருவடிக்கு  மட்டுமே  இடம்  தந்து வழிபட்டால்   நிச்சயம்  காணலாம்  கடவுளை.

                இந்த  அந்தர்யாமியான   இறைவன்    உறைந்து  உள்ள  ஜீவராசிகளை  எல்லாம்  கோவில்  கோபுரத்தில்  கீழ்  வரிசையில்   அமைத்து  காட்டினர்   ஆதிகால  சான்றோர்  பெருமக்கள்.

               வீட்டில்   நவராத்திரி  கொலு மண்டபத்திலும்    கடைசி  கீழ்  வரிசையில்  தான்  மனிதர்கள்  பொம்மை,  குரங்கு பொம்மை,   பறவைகள்,  மரம்,  வீடு ,  மாடு ,...  என்று  எல்லாம்  வைக்க வேண்டும்.

               இந்த   அந்தர்யாமி  உள்ள  பூமியில்  மக்கள்  முதல்  மற்ற ஜீவ ராசிகள்  எப்படி  உள்ளன ,   எப்படி  இன பெருக்கம் செய்கின்றன ,   எப்படி  வாழ்கின்றன,..  என்பதைக்  காட்டும்  விதமாக  தான்    இந்த  கீழ்  வரிசையில்  தாம்பத்திய  சிலைகள் ,   ஏர்  உழும்  விவசாயி  சிலை ,    போர்  வீரர்  சிலை , என்று   எல்லாவற்றையும்    வடித்து  வைத்து  உள்ளனர்.

              எவ்வளவோ  பிரபஞ்ச  உண்மைகளை  எல்லாம்    இந்த  கோவில்  கோபுரத்தில்  அமைத்து   காட்டியாச்சு ;

          மீதி  இருக்கிற   இந்த   பூலோக  மக்கள்  வாழ்கை  முறையையும்   வடித்தால்  தான்  மேருமலை   என்கிற  பல்வேறு  பரிமாண உலகம்  பற்றிய  கல்வி போதனை  முழுமை பெறும்  என்பதால்   மனிதர்கள்  சிலைகளும்   கீழ்  வரிசையில்  வடித்து  வைத்தனர்.

               ஆனால்  இந்த  வரிசை நியதிப்படி தான்  கோவில்  கோபுரத்தில்   சிலைகள்  வைக்கப்பட்டு  உள்ளதா ?  என்றால்  இல்லை.   தாறுமாறாக  சிலைகளை  அந்த  அந்த  வரிசையில்  வைக்காமல்  மாறி மாறி  வைத்து  உள்ளனர்.

          இதற்கு  காரணம்   கோவில்   கட்டுபவர்கள்    பல்வேறு   பரிமாணம்   உலகம்  பற்றிய  கல்வியை  போதிக்கிற   பிரம்ம ரிஷிகளிடம்  முழுமையாக   சரணடையாததே  ஆகும்.

           பிரம்ம ரிஷிகளும்   இந்த  சூட்சுமத்தை   எல்லாம்    ரகசியமாக   தங்கள்  சீடர்களுக்கு  மட்டும்  போதித்து  வந்து  இருக்கிறார்கள் .

           இதனை   பிரம்ம வித்தை ,   பர ஆகாய  பிரவேசம்  ,  பரலோக  ரகசியம் ,   என்று   குறிப்பிட்டு   போதித்து  வந்து  இருக்கிறார்கள் .   அதனாலேயே   கோவில்  கட்டுகிறவர்களிடம்  முழு உண்மையையும்   சொல்லாமல்  பாதி  சொல்லியும்,   பாதி மறைத்தும்   இருக்கிறார்கள்.

              அதனால்  எங்கோ  ஒரு  சில கோவில்களில்   மட்டுமே  பரிமாண   டைமன்ஷன்  வரிசைப்படி   சிலைகளை  வைத்து  உள்ளனர்.    அப்படிபட்ட  கோவில்    கோபுரத்தை   தரிசனம்  செய்வது   தான்  கோடி  புண்ணியம்   ஆகும்.

                  எனவே  உலகுக்கே   வெவ்வேறு  டைமன்ஷன்கள்    பற்றிய  கல்வியை  கோவில்  கோபுரத்திலும்,   மேரு மலை  வழிபாட்டிலும் ,    ஸ்ரீசக்கரம்  வழிபாட்டிலும் ,   நவராத்திரி  கொலு  வழிபாட்டிலும்    வைத்து   நமக்கு    போதித்து   உள்ள    இந்து மதத்தை   போற்றுவோம்.

           இந்து  மதம்  சொல்லி  உள்ள  இந்த  உயரிய   உண்மைகளை   அடுத்த  தலைமுறைக்கும்   சொல்வோம்.      எல்லா  நலனும் பெற்று  சிறப்புடன்   வாழ்வோம்.

பொருள் புதைந்த அருள் நிறைந்த மதம்!
அர்த்தமுள்ள இந்து மதம்!

                               

Saturday, June 6, 2020

#ஊஞ்சல்_ஆடுவது
#எதற்காக_தெரியுமா ?

♥தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.

♥வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

♥முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

♥பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

♥இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

♥அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

♥இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

♥ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

♥ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

♥மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.

♥திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

♥ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

♥நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

♥கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

♥தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.

♥மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

♥இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

♥ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

♥சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.

♥சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

♥கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

♥வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

♥பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

♥வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள்,

♥ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

♥இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.

♥இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

♥வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

♥#முக்கியகுறிப்பு:-

இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

உங்கள் துணைவி எப்படிப்பட்டவர்? 06/06/2020 சனிக்கிழமை


உங்கள் துணைவி எப்படிப்பட்டவர்?
 பொன் மகளாக யாருக்கு மனைவி அமைவார்?

ஆணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் அதிபதியாக வரக்கூடிய கிரகம் எந்த விதத்திலும் கெடாமல் 4,2 ,10 ,11  ஆம் இடங்களில் ,கெடாமல் இருந்தால் பொன்மகள் வந்தாள் ,பொருள் கோடி தந்தாள் என்று  புன்னகையுடன் பாடி சந்தோசமாக வாழும் அமைப்பு கொடுக்கும்.

 ஆண் ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்குரிய கிரகம் நாலாம் இடத்தில் இருந்தால் பெண் வீட்டிலிருந்து சொத்துக்கள் கிடைக்கும்.

 ஏழாம் வீட்டிற்குரிய கிரகம் பத்தாமிடத்தில் இருந்தால் தொழிலால், பணம் பண்ணக்கூடிய அமைப்பை பெற்றிருப்பர்.

 இரண்டாம் இடத்தில் இருந்தால், அள்ள அள்ள குறையாத , அட்சய பாத்திரமாக கைச்செலவுக்காவது கணவருக்கு காசு கொடுப்பார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!