Thursday, December 24, 2020

திருக்கணித பஞ்சாங்கத்திற்கு பிரபஞ்சம் அளித்த பரிசு 24/12/2020 வியாழன்

 

குழு நண்பர்களுக்கு வணக்கம். இது ஒரு முக்கியமான அவசியமான பதிவு.  இதனை சற்று நேரம் ஒதுக்கி  கவனித்து படித்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா- எது சரியானது?

கடந்த டிசம்பர் 21, 2020 திங்கட்கிழமை அன்று மாலை வானில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

அன்று மாலை சூரியன் மறைவுக்கு பின்னர் சனி குரு இரு கோள்களும் அருகருகே வரும் வானியல் நிகழ்வு நடந்தது.

இது பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரே நேர்கோட்டில் இரண்டும் சேர்ந்து ஒரே கோள் போல தெரிந்தது. பொதுவாக ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடந்தாலும் இதுபோன்ற நெருக்கம் கடந்த 1623 ஆம்  ஆண்டுக்குப் பின் தற்போது நடந்துள்ளது.

டிசம்பர் 21 2020 திங்கட்கிழமை மாலை சூரியன் மறைவுக்கு பின்னர் அடுத்த சுமார் 45 நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் இந்த நிகழ்வு வானில் தெரிந்துள்ளது. இதனை வெறும் கண்ணாலேயே பார்க்கவும் முடிந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.

அன்றைய கோள்களின் நகர்வு பாகை ரீதியாக சனியின் நகர்வும் குருவின் நகர்வும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.




திருக்கணித பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார்.

அதேபோல கடந்த நவம்பர் 20 2020 தேதி அன்று குருவானவர்  தனுசுவிலிருந்து மகரத்திற்கு பெயர்ச்சியாகி விட்டார்.

மேற்படி இரு கோள்களின் இயக்கமும் நகர்வும் திருக்கணித முறைப்படி மிகச்சரியாகவே ரீதியாகவே நடந்துள்ளது என்பதை இந்த அட்டவணையின் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இனி வரவிருக்கும் 27-ஆம் தேதி அன்றுதான் சனிப்பெயர்ச்சி நடப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்திலும் பிற ஆலயங்களிலும் அன்றைய தினம் வழிபாடுகள் நடத்தி சனிப்பெயர்ச்சி விழா நடத்த உள்ளார்கள்.

திருக்கணித முறைப்படி கோள்களின் இயக்கம் அதன் பாகை கலையோடு பிரபஞ்ச இயக்கத்தோடு  இணைந்து செயல்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் நாம் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

எனவே ஜோதிட கலையை பயின்றுவரும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கு இக்கலையை எடுத்து இயம்பி வரும் ஜோதிட அன்பர்களுக்கும் திருக்கணித பஞ்சாங்க முறையே மிகச்சரியான வழிகாட்டுதலை காட்டும் என்பதை உணர்ந்து அதனை திடமாகவந்து மனதில் கொண்டு  செயல்படுத்தலாம் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,

வணக்கம்.🙏

S.ஷண்முகானந்தம் M.A.B.Ed.,  ஸ்ரீ பிரம்மரிஷி ஜோதிட மையம்

R.பொன்னாபுரம்.பொள்ளாச்சி 642 002.


 

[6:37 PM, 12/24/2020] Shanmuganandam: குருவும் சனியும் 21 .12.2020 அன்று ஒரு பாகை ஒரு கலையில்  திருக்கணித பஞ்சாங்கப்படி ஒன்று சேரும்போது அரிய நிகழ்வாக ஒரு வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்னுதான் பதிவு போட்டேன். அப்பப்பா....இதை இந்த வாக்கியபஞ்சாங்கத்தை பயன்படுத்துபவர்களால் ஜீரணிக்க முடியவில்லை போலிருக்குது. சகட்டுமேனிக்கு இம்பாக்சில் ஏதேதோ லாஜிக் இல்லாமல் பேசிவிட்டார்களப்பா...

சனி 24.01.2020 அன்றே மகரத்திற்கு பெயர்ந்து சென்று ஏழு பாகையில் தற்போது மகரத்தில் உள்ளது. வேகமாக செல்லும் கிரகமான குரு டிசம்பர் 20 க்குமேல் தானே பெயர்ந்தது. அதனால் சனியை தொடர்ந்து வேகமாக சென்று தற்போது ஏழாவது பாகையில் சேர்ந்து ஒரே பாகையில் தற்போது உள்ளது. இந்த நிகழ்வு எதேச்சையாக நமது பார்வை கோணத்தில் அமைந்ததால் அரிதாக வெறும் கண்ணாலேயே பார்க்க முடிந்தது. மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் இதில் உள்ள லாஜிக் ஜோதிடம் தெரியாதவர்களுக்கே புரியும்.

அப்படியே நேற்றைய திருக்கணிதப்படி அமைந்த ராசிக்கட்டத்தையும் பாருங்கள். ஒரே பாகையில் சனியும் குருவும் அதுவும் ஒரே கலையில் 21.12.2020 அமர்ந்துள்ளது. இதன் உண்மையான பஞ்சாங்கம்.

இதில் லாஜிக் உள்ளது.

வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஜோதிடத்தை குழப்ப இடையில் வந்த கணக்கீடுகளோ பாகைகளோ அற்ற பஞ்சாங்கம். இதன்படி இன்னும் சனி மகரத்திற்கு பெயரவேயில்லை. பெயராதபோது எங்கே குருவை சேர்வது?

இந்தியாவெங்கும் திருக்கணித பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

நீங்களாகவே என்னிடம் வந்து எங்க பஞ்சாங்கம் பழமையானது என்று லாஜிக் இல்லாமல் பேசி மேலும் மிக வசை வாங்காதீர்கள். வாக்கியம் மன்னர் சரபோஜி காலத்தில் பாகை கலை போன்ற கணக்கீடுகள் படிக்க கஷ்டமாக இருந்ததால் எளிதாக பொத்தாம்பொதுவாக வரருஷியால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்கம். திருக்கணிதம் ஜோதிட மூலநூல்களாலேயே கூறப்பட்ட பஞ்சாங்கம். மூலநூல்களில் படித்து பார்த்தாலே நான் கூறும் உண்மை விளங்கும்.

லாஜிக் இல்லாமல் என்னை ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட்டு நிரூபித்து காட்டுமாறு அழைத்த வாக்கியத்தை பயன்படுத்தும் எனது இரண்டு ஜோதிட நண்பர்களுக்கு நன்றி.

Wednesday, December 23, 2020

ஹோரையும் பலனும்

 ✳✳✳சித்தர்கள் கூறும் ஓரை இரகசியம்✳✳✳


ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.


பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவி யல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர். அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வா ய்க்கும் வழங்கினர்.


இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப் படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம். ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.


பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

6 – 1- 8 – 3 இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.


சூரிய ஓரை : சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம். இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.


சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.


புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.


சந்திர ஓரை : வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய் யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.


சனி ஓரை : இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவ ங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப் பானது.


குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வா ங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உட னே கிடைத்து விடும்.


செவ்வாய் ஓரை: செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.


ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் – ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை – குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம். சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய – நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள்.


மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள். குறிப்பாக கணவன், மனைவி ஏதாவது வாக்குவாதம் செய் யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு – நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை. நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும் என்பது சித்தர்களின் வாக்கு…


✳✳சிவாய நம✳✳

Wednesday, November 11, 2020

சக்திவாய்ந்த சிவ மந்திரம்

 *சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்* .


*🔯இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.*


1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:

*****************************

"ஓம் நமசிவாய"


 இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.


2.ருத்ர மந்திரம் :

******************

"ஓம் நமோ பகவதே ருத்ராய"


3.சிவ காயத்ரி மந்திரம் :

**************************

"ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"


4.சிவ தியான மந்திரம்:

*************************

கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா

ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்

விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ

ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ


நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.


5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

*********************************

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


6.கபாலி மந்திரம்:

********************

"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்"

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Tuesday, November 10, 2020

யம தீபம்

 ஓம் நமோ நாராயணாய 🙏🏻🙏🏻


யம தீபம் ஏற்றினால் என்ன பயன் !!


தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் கலாச்சாரம்.


யம தீபம் ஏற்றினால் நம் குடும்பம் பித்ருக்களின் பரிபூர்ண ஆசிர்வாதத்தை பெறும். 


தொழிலில் முன்னேற்றம் தெரியும். 


திருமணத் தடை மற்றும் தாமதம் விலகும், 


சொத்துகள் பிரச்சினை மற்றும் முடக்கம் நல்ல முடிவுக்கு வரும். 


வீட்டில் செல்வம் சந்தோஷம் பெருகும்.


முக்கியமாக தரித்திரம் ஒழியும்.


அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, நல்லது தானாகவே நடக்கும்.


மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.


அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது 

"யம தீபம்" மட்டுமே.


யம தீபத்தை நீங்கள் தீபாவளி 

காலத்தில் வருகிற 

திரயோதஸி திதியில் தான் ஏற்ற வேண்டும்.


இது எப்போதும் ஒவ்வொரு தீபாவளிக்கும் முதல் நாள் அன்று வரும்.


யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்ட உதவும்.


அந்த வருடம் முழுவதும் 

நல்ல பலன்களைத் தரும்.


யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. 


அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.


சாஸ்திரப்படி யம தீபம் ஏற்றும் முறை:


1. உங்கள் வீட்டின் வெளிப்புறமும் அல்ல உள்ளேயும் அல்ல கதவிற்கு கொஞ்சம் பக்கத்தில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். 


வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.


2. தெற்கு திசை எமனுக்கு உகந்ததாக இருப்பதால் யமதீபம் தெற்கு நோக்கி எரிய வேண்டும்.


3.ஒரு விளக்கு ஏற்ற வேண்டும்., 


4.பின்னர் யமதர்மராஜா அஷ்டோத்ரம் பாராயணம் செய்யவும்.


5.மலர்களால் அந்த விளக்கை சுற்றி அலங்கரிக்க வேண்டும்.


6.இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.


7.பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்வதாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை

 நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

மேலேயுள்ள ஸ்லோகத்தை 9 முறை பாராயணம் செய்து முன்னோர்களை நினைத்து சாஷ்டாங்கமாக ஒரு முறை நமஸ்காரம் செய்யுங்கள்.

அவ்வளவே தான்.

தீபாவளி சமயத்திலே தட்ப வெப்பத்தாலோ ஏற்படும் மாற்றங்களாலோ

வித விதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உற்பத்தியாகி 

மக்களை தாக்கும் அதற்குத்தான் பட்டாசு வெடிக்க சொன்னாங்க பிரதர்ஸ்.

அப்படி செய்தால் புகையில் அவை இறந்து விடும்.

நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

ஜெய் ஸ்ரீராம்

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

Saturday, October 10, 2020

 ராகு சோதிடத்தில்...


கடந்த வியாழக்கிழமையில் இருந்து, இந்த புதன் வரை 7 கிரகங்களின் தன்மையையும் அதன் குணாதிசயத்தையும் எனக்கு தெரிந்த வகையில் கோடிட்டு காட்டி பதிவிட்டேன், ஆனால் கிரகங்கள் என்றால் 9 அல்லவா ராகு/கேதுவை பற்றி மட்டும் நான் கடந்த இரண்டு நாட்களாக பதிவிடலாமா வேண்டாமா என்கிற யோசனையில் இருந்தேன், காரணம் நான் என் பதிவுகளில் பெரும்பாலும் இவர்கள் இருவரை பற்றியே அதிகம் எழுதியுள்ளேன், அதனால் வேறு என்ன புதியதாக எழுதலாம் என்கிற யோசனை, இன்னொரு யோசனையும் தோன்றியது, அது வாசகரான நீங்கள் இதை எவ்வாறு வரவேற்பீர்கள் என்கிற யோசனை, ஏனெனில் உங்களுக்கு சலித்துவிட்டால் என்ன செய்ய, ஆனால் கடைசியில் எப்போதும் போல் ராகு/கேது உத்தரவு கொடுத்துவிட்டார்கள் நான் விளக்கி பதிவு செய்தே ஆகவேண்டும் என்று ஆகவே இன்று ராகுவை பற்றிய பதிவு செய்கிறேன்... 


சோதிடத்தில் ராகு நிழல் கிரகம் நின்ற வீடு மற்றும் அதன் அதிபதியின் நிலை பொறுத்து அந்த வீட்டின் ஸ்தான பலனை ராகுவே செய்வார், அப்படி எனில் காரக பலன் அந்த வீட்டின் காரகாதிபதி செய்வார், எப்போதும் ஒரு வீட்டிற்கு இரு கிரகங்கள் பலன் தரும் ஒன்று வீட்டதிபதி ஸ்தான பலனை தருவார், இன்னொன்று அந்த வீட்டின் காரகாதிபதி காரக பலனை தருவார், இதில் ராகு ஸ்தான பலனை தந்தாலும், காரக பலனிலும் மூக்கை நுழைப்பார் எப்போது என்றால் அந்த காரகாதிபதி ஜனன ஜாதகத்தில் வலுவிழந்தால், அடுத்து ராகு தனக்கு பின்னால் இருக்கும் வீட்டின் ஸ்தான பலனிலும் தலையிடுவார் ஏனெனில் வக்கிர சுழற்சி கொண்டவர் என்பதால், ஆனால் இதில் ஒரு வேளை அந்த வீட்டின் அதிபதி சுபராகி வலுப்பெற்றால் ராகுவால் அங்கே ஆதிக்கம் செலுத்த இயலாமல் போகும், எப்போதுமே ராகுவுடன் 8 பாகைக்குள் இணைந்த கிரகம் கிரகணம் சுழந்த கிரகம் எனலாம் அதாவது ராகுவே அதன் பலனை செய்ய கடமைப்பட்டவர், 8 பாகைக்கு மேல் விலகி 15 பாகை கடந்தால் அது இணைவாகாது, ஆனாலும் ஒரே ராசியில் நின்றதால் இணைந்த கிரகத்தின் வலுவை பொறுத்து ராகுவின் ஆளுமை இருக்கும், ஆனாலும் இதை துல்லியமாக பாவ கட்டத்தில் தெரிந்து கொள்ளலாம், ராகு நிழல் கிரகம் என்பதால் பார்வை கிடையாது, ஆனாலும் அதன் திரிகோண ராசியில் தன் ஆளுமையை செலுத்துவார் அந்த அதிபதியின் வலுவை பொறுத்து...


இதுவரை பார்த்தது பலன் எடுக்க உதவும் இனி இந்த ராகு யார் என்ன காரகம் என்பதை அறிவோம் வாருங்கள்...


ராகு இவர் இல்லை என்றால் மனித ஜனனம் உருவாக இயலாது, ஒரு லௌகிக மனிதனாகட்டும், ஆன்மீக மனிதனாகட்டும் தனக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்கிற ஆசையின் காரகரே ராகு தான், இவ்வாறு ஆசையில் ஆரம்பித்து வாழ்நாளில் மனிதனின் ஒவ்வொரு ஆசை மற்றும் லௌகிக வாழ்க்கை முறைக்கும் ராகுவே காரகர், ஆசை ஏற்பட்டால் தான் படிக்கிறோம், வேலைக்கு செல்கிறோம், தனம் சம்பாதிக்கிறோம், கடமைகளை செய்கிறோம் இவ்வாறு அனைத்திலும் அடிப்படை ராகுவே, ஏன் ஆன்மீகத்தில் உயர்நிலை அடைய வேண்டும் என்கிற தீவிர ஆசையும் இவரின் காரகமே, இதை அறியாமல் தான் பலர் ராகுவை தவறாக சித்தரிக்கிறார், தெய்வ தரிசனம் செய்ய எழும்பும் ஆசையும் இவர் தான் தூண்டுகிறார், அடுத்து அந்த ஆசையே ஒருமனிதன் வெற்றி பெறவும் வைக்கிறது, எவ்வாறு என்றால் மேன்மை நிலை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை வரும் போதே ஒரு மனிதன் அதிகம் உழைப்பான், அப்போதே அவன் தேவைகளை பூர்த்திசெய்ய அவனால் இயலும், அதன் வழியே அவன் ஆசையை பூர்த்தியும் செய்வான், இதுவே பேராசையாகி விழ்ச்சியையும்/தவறான எண்ணங்கள், பாதைகளுக்கு வழிவகுக்கும் என்பது உண்மையானாலும் நாணயத்துக்கு இரு பக்கம் போல், நல்லதும் தீயதும் எப்போதும் சம வலுவில் ஒரு காரகத்தில் இருக்கவே செய்யும் என்பதை உணர்க, ராகு பெரும்பாலும் சட்டத்துக்கு புறம்பான காரியத்துக்கு மிகவும் அனுசரணையாக இருப்பார் என்றாலும், சில நேரங்களில் அதே சட்டம் தவறாக செயல்படும் போது அதற்கு எதிராக களம் காணும் தைரியமும் அதற்க்கு ஆதரவும் ராகுவே தருகிறார், ராபின் ஹூட் பலரிடம் கொள்ளையடித்து ஏழைகளை வாழ வைத்தான் இதுவும் ராகுவின் இன்னொரு பக்கமாகும், ராகு எனும் கொள்ளைக்காரன், சனி எனும் ஏழைக்கு உதவ, ராகுவை மூலதனமாக கொண்டு சொத்து சேர்த்தவரிடம் இருந்து பறித்து கொடுக்கிறான், இவ்வாறு ராகு கெடு பலன் மட்டும் தருவதில்லை, நல்ல பலன்களையும் அருளவே செய்வார், எந்த தொழிலானாலும் ராகு இல்லாமல் அதனை வெளியில் பிரபலபடுத்த இயலாது, அதே போல் ஒரு மனிதனுக்கு அடிக்கும் திடீர் அதிர்ஷ்டம் ராகுவே, காற்று ராகு, பிரபஞ்சம் இயற்கை ராகு, இவ்வாறு ராகு பல பரிமாணத்தில் பரந்து விரிந்துள்ளார், ஆன்மீகம் என்றால் தாந்திரீக பூஜை ராகுவே காரகர், பிரம்மாண்ட அலங்கார பூஜை ராகுவே, இப்படி மனிதனின் ஒவ்வொரு செயலிலும் ராகு உள்ளார், கனவு காணுங்கள் என்றால் அந்த கனவின் காரகர் ராகு, நினைவலைகள் ஒரு மாய அந்த மாய ராகுவே, எதையும் இரட்டிப்பாக ராகுவே உதவுவார், இப்படி பல ரூபங்களில் ராகு நம்முடனே உள்ளார், ஒரு மனிதன் இறக்கும் தருவாயில், உடலை விட்டு வெளியேறும் பஞ்ச பூதங்களில் முதல்வன் ராகு எனும் காற்றே, ராகு காரகம் அதிகமுள்ளவர் கீழ்நிலை பணியாளரிடம் அதிக நட்பு பாராட்டுவார் எனின் கீழ்நிலை பணியாளர் சனி, ராகுவை சனியின் பிம்பம் என்று மூல நூல்களில் கூறப்பட்டுள்ளது, ஒருவர் வாய் திறமையால் வெல்கிறார் என்றால் அவருக்கு ராகு நல்ல நிலையில் உள்ளார் என பொருள், ஏனெனில் கால புருஷ 2ம் வீட்டில் ராகு உச்சம், பேசியே மயக்குபவர் ராகு, அதே போல் எழுத்தில் பிரம்மாண்டம் காண்பிப்பதும் ராகுவுடன் புதன் இணையும் போதே நடைபெறும்,  கணினி உலகில் ராகுவே கணினி எனும் தொழில் நுட்ப துறைக்கு காரகம் வகிக்கிறார், நாம் அணியும் உள்ளாடை ராகுவின் காரகமே, இவ்வாறு எவ்வளவோ கூற இயலும் ஆக மொத்தத்தில் ராகு இல்லாமல் வாழ்க்கை இல்லை, மீண்டும் சந்திப்போம்...!

Tuesday, October 6, 2020

 

[ அமெரிக்காவில்  ஒரு  நீதிபீடம் !
---------------------------------------
பதினைந்து வயதான சிறுவன்
குற்றவாளி .!

ஒரு கடையிலிருந்து ஆகாரம்
திருடியதாக கையும் களவுமாக
பிடிக்கப்பட்டபோது, காவலாளியிடம்
இருந்து தப்பிக்க முயற்சிக்கும்
வேளையி்ல் கடையிலிருந்த அலமாாி
கீழே விழுந்து உடைந்தது.

குற்றம் செய்த குழந்தையோடு
நீதிபதி வினவினாா்..

நீ  உண்மையாகவே  திருடினாயா ?
ஆம் ! .Bread  chess  pocket .
அந்த குழந்தை கீழே பாா்த்து பதில்
சொன்னது.

நீதிபதி :  நீ எதற்காக திருடினாய் ?
குழந்தை :  எனக்கு அது தேவைப் -
பட்டது ..
நீதிபதி :  பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. ! ..

குழந்தை :  கையில் பணம் இல்லை ..
நீதிபதி :  வீட்டிலுள்ளவா்களிடம் கேட்டு வாங்கியிருக்கலாமல்லவா..

குழந்தை :  வீட்டில் அம்மா மட்டுமே உள்ளாா். அவா் நோயில் படுத்துகிடக்கின்றாா் ஒரு வேலையுமில்லை அவருக்காக
திருடினேன் ..

நீதிபதி :  நீ வேலை ஒன்றும் பாா்க்க
வில்லையா ?

குழந்தை :  நான் ஒரு காா் கழுவும்
இடத்தில் வேலைப் பாா்த்து
கொண்டிருந்தேன். ஒரு நாள் என்
தாயாரை கவனிப்பதற்காக நான்
விடுமுறை எடுத்ததால் என்னை
அந்த வேலையிலிருந்து நீக்கி
விட்டனா்.

நீதிபதி : நீ யாரிடமாவது உதவி
கேட்டிருக்கலாமல்லவா ?

குழந்தை : நான் காலையில் வீட்டை
விட்டு இறங்கி ஐம்பதிற்கும் அதிகம்
ஆட்களிடம் நடந்துசென்று வேலை
கேட்டேன் யாரும் எனக்கு வேலை
தரவில்லை. நான் நம்பிக்கை
வைத்தது எல்லாம் அஸ்தமித்தது.
இறுதியில் இதை செய்யவேண்டிய
சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
பிறகு வழக்கின் வாக்கு வாதம்
முடிந்தது.

நீதிபதி தீர்ப்பு அறிவிக்க
தொடங்கினாா்.  இது மிகவும்
உணா்ச்சிபூர்வமான திருட்டு.
ரொட்டி திருடிய குற்றம் என்பதில்
சந்தேகமில்லை. இந்த குற்றத்திற்கு
நாம்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்
என்னையும் சோ்த்துதான். நீதி
மன்றத்திலுள்ள அனைவரும்
குற்றவாளிகளே !
அதனால் நீதி மன்றத்திலுள்ள
ஒவ்வொருவரும் நான் உட்பட
அனைவரிடத்திலிருந்தும் பத்து
டாலா் வசூலிக்கப்படவேண்டும்.
இதை கொடுக்காமல் இங்கிருந்து
வெளியே யாரும் செல்லக்கூடாது.
இதை  கூறிய நீதிபதி பத்து
டாலரை எடுத்து மேசை மீது
வைத்தாா்.

பிறகு பேனாவை
எடுத்து தீர்ப்பு எழுத ஆரம்பித்தாா்.
பட்டினியால் திருடிய அந்த குழந்தை
மீது மனித சினேகம் இல்லாத
விதத்தில் நடந்தும், அவன் மீது குற்றம் சுமத்தி
போலீஸில் ஒப்படைத்து கொடுத்தமைக்காக
கடை முதலாளிக்கு ஆயிரம் டாலா்
அபராதம் விதிக்கப்பட்டது.
24 மணிக்குள் அபராத தொகை கட்டவில்லை என்றால்
கடை முத்திரை போடப்பட்டு
நிரந்தரமாக மூடப்படும் என்று
நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னா் நீதிமன்றத்தில் வசூலித்த
அபராதத் தொகை முழுவதும். அந்த குழந்தைக்கு நீதி மன்றம்
வழங்கியது.

நீதிபதியின் தீர்ப்பை கேட்டு நீதி
மன்றத்தில் ஆஜா் ஆன அனைவரும் திகைத்து நின்றனா்.
ஆனந்த கண்ணீா் வடித்தனா்.
நீதிபதியின் தீர்ப்பை கேட்டு ஆச்சரியப்பட்டு நீதிபதியை மீண்டும், மீண்டும் உற்று பாா்த்து கொண்டிருந்தான் அந்த சிறுவன்.
நீதிபதி தன்னில் மறைத்து வைத்த
கண்ணீர் அவரை அறியாமல்
கண்ணிலிருந்து வழிந்து விழுந்தது.
நேர்மையும், நியாயமும் நிறைந்த
மனித சினேகித நீதிமான்கள்
நீதி பீடத்தின் தராசை துல்லியமாக்கி நம்மோடு வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறாா்கள்.

நன்றி,
♥ ( கமால்)   ♥
----------------------------------------------------------------------------+
[06/10, 7:38 pm] Shanmuganandam:

இந்த நிலையில் கிரகங்களின் செயல்பாடு

சிறுவனின் பசியும் திருட்டும் ___ சந்திரன்,கேது மற்றும் சனி

நீதிபதியும் புலன்விசாரணையும் ___ குரு பகவான் மற்றும் ராகு

நியாயமான தீர்ப்பு __ நீதிமான் சனி

கடை வியாபாரியும் உடைந்த அல்மாரியும் __ புதன்

கோதுமை ரொட்டி ___ சூரியன்

காவலர் ___ செவ்வாய்

வசூலித்த அபராத தொகை __ சுக்கிரன்

இப்படித்தான் கிரகங்கள் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்மாவுக்கு தக்கவாறு முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதுதான் கிரக ஜாலம்.

ஸர்வஜனா சுகினோ பவந்து!

Monday, September 21, 2020

காசிக்குச் செல்பவர்களுக்கு

 *காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?*


*இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!*


*அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?*


*கீழே கொடுத்துள்ளேன்.*


*அனைவரும் தங்கலாமா?*


இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.


சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?


அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது


முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:


Sri Kasi Nattukkottai Nagara Satram

Godowlia,

Varanasi - 221 001 (U.P) 

Telephone Nos: 0542 - 2451804,

Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)


Naat Koat Satram

Location Godowlia, Tanga Stanad

Behind Sushil Cinema

Varanasi


கட்டணம் உண்டா?


உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது. 


உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.


ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்

அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.


மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.


எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள். 


இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்

டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்


குளியல் அறைகளில் Water Heater உண்டு 

குடிப்பதற்கு Purified Water உண்டு

மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு


சரி உணவு?


விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.


1

காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.

இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு

கட்டணம் ரூ.35:00 மட்டுமே


2. 

மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை

சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்


ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.


3. மாலை 4 மணி டீ உண்டு


4. இரவு 7:30 முதல் 9 மணிவரை

இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்

கட்டணம் ரூ.35:00 மட்டுமே


உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு. 


🙏🙏ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமஸ்காரம் 🙏🙏

Courtesy Sri Ranganathan

Wednesday, September 2, 2020

தர்ப்பணம்

 தர்ப்பணம் .... கவனத்தில் கொள்க...!!..


1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.


2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.


3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.


4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்கு  காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.


5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில்

14 மன்வாதி நாட்கள்,

யுகாதி நாட்கள் 4,

மாதப்பிறப்பு நாட்கள் 12,

அமாவாசை 12,

மகாளய பட்சம் 16,

வ்யதீபாதம் 12,

வைத்ருதி 12,

அஷ்டகா 4,

அன்வஷ்டகா 4,

பூர்வேத்யு 4 நாட்கள்.

இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.


6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் எந்த பூஜைகளையும்  நாம்  ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.


7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.


8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.


9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.


10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.


11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை தவிர்ப்பது  நல்லது.


12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.


13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.


14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.


15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.


16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.


17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.


18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.


20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.


21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.


22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.


23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவின்  தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.


24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.


25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.


26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடித்தான் கொடுக்க வேண்டும்.


28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக மிக நல்லது.


29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் ஆசி பரிபூரணமாக  கிடைக்கும்.


30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.


31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.


32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.


33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.


நீங்களும் அறிய வேண்டி இங்கே பதிகிறேன்..


அதிகம் பகிருங்கள்.


எல்லோரும் பயன் அடையட்டும்...

Thursday, August 6, 2020

அந்தரங்க மர்மம் - கோரக்கர்:-
**********************************

 பெண்ணுடன் உறவு கொள்ளும் போது விந்து விணாகாமல் இருக்கவும், உயிர்சத்தியை தன்னுள் தக்க வைத்துக்கொள்ளவும் சிறந்ததொரு முறையை அகத்தியர் கூறியுள்ளார். இதே முறையை மறைப்பில்லாமல் கோரக்கரும் தனது சந்திரரேகை என்னும் நூலில் கூறியிருப்பது
ஆய்வுக்குரியதாகும். இன்று அறிவியல்
வளர்ச்சியின் காரணமாய் புணர்ச்சிக்கென்று எத்தனையே மருந்துகள் வந்திருந்தாலும் அவைகள் உறவு நேரத்தை அதிகரிக்குமே தவிர விந்துவை நிறுத்தாது மேலும் அவைகளால் உடலுக்கு பல கேடுகள்
உண்டாகும். எந்தவொரு பக்கவிளைவும்
இல்லாத வகையில் விந்துவை உள்நிறுத்தி உயிர்சக்தியை தக்க வைத்துக்கொள்ள நமது சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்த முறைகளை அருளியுள்ளனர். அதைப்பற்றிய அதை பற்றிய ஓர் விளக்கம்.

கலவியல் தம்பனம்- அகத்தியர்:-
*************************************

"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு
கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே".
- அகத்தியர் கலைஞானம் 1200

பொருள்:
***********

கலவியல் தம்பனத்தை சொல்கிறேன் கேள்,
மனதை ஓர் நிலைபடுத்தி புருவமையத்தில் குவித்து முச்சை நன்கு இழுத்து அடக்கிக்கொண்டு வசியசிவ என்பதை மாறி செபிக்கவும் அதாவது "ஓம் சிவயவசி" என்று 100-உரு மனதினுள் செபித்து விட்டு பின்பு பெண்களை புணர்ந்தால் விந்து விழாது
தம்பித்துக்கொள்ளும்.

இது உண்மை, இதை உலக மக்களுக்கு
சொல்லாதே ஏனென்றால் இதனை தவறான் வழிக்கு பயன்படுத்தி விடுவார்கள் மேலும் பல குற்றங்கள் இதனால் நடக்கும் என்கிறார்
அகத்தியர்.

அந்தரங்க மர்மம் - கோரக்கர்:-
***********************************

"பித்தர்களே ஓதிடுவேன் பெருமை கேளீர்
பேய்போல திரியாதீர் பிதற்றல் வேண்டாம்
உத்தமியாள் தன்னுடனே புணரும் போது
உன்னுடைய இந்திரியம் விட்டேங்காதே
பத்தினியாள் இச்சைகாமம் பருகத் தாக்கி
மதனமிட்டு கொண்டிடுவாய் பாழ்போகாதே"

"போகத்தில் இந்திரியம் பொங்கா துய்யா
புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து
கொள்வீர்
பாகமுடன் பரிஎன்ற வாசி பூட்டிப்
பக்குவமாய் ஓம்சிவய வசிஎன்றே
ஏகமனம் பேசாது நூறு செப்பி
எகராமல் கும்பித்துப் புணர்வாயானால்
தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும்
தங்கிவிடும் உன்விந்திந்த விதமுமாமே"

"இந்தவித முலகோருக் கியல்பைக் காட்ட
எடுத்தணைத்தார் மூவர்களும்
பெண்ணைத்தானே
விந்து நிலையா மூட மாந்தர்
விபரிதமாய் வீண்பேச்சுப் பேசிக்கெட்டார்
அந்தரங்க மர்மமிதை யறியாமற்றான்
ஆருலகில் அரிவையரை ஆகாதென்றார்".
           - கோரக்கர் சந்திரரேகை

பொருள்:
***********

பித்தர்களே உங்களுக்கு ஒரு பெருமை மிகுந்த முறையை சொல்கிறேன் கேளுங்கள், காம எண்ணத்தோடு கண்ட பெண்களை தேடி திரியாதீர்கள், பெண்களை பார்த்து காம புலம்பல் புலம்பாதீர்கள், உங்கள் மனைவியிடம் மட்டும் உறவு கொள்ளுங்கள், அப்படி உறவு கொள்ளும் போது உங்கள்
விந்து சக்தியை இழந்து விட்டு ஏங்காதீர்கள், மனைவியாய் இருந்தாலும் அளவுக்கு மீறி உறவு கொண்டு வாழ்க்கையை பாழாக்கி
விடாதீர்கள்.

போகத்தின்போது விந்து வெளியேறி
வீணாகாமல் இருப்பதற்க்காக ஓரு முறையை சொல்கிறேன், இதை புத்தியுடன் பின்பற்றுங்கள். எப்போதும் குதிரைபோல் ஓடிக்கொண்டிருக்கும் மூச்சை மெதுவாக இழுத்தடக்கிக் வைத்துக்கொண்டு "ஓம் சிவயவசி" என்ற மந்திரத்தை மன ஓர்நிலையோடு மனதினுள் 100- செபித்து விட்டு பின்னர் பெண்களுடன் உறவு கொண்டால் அப்பெண்ணின் காமஆசையும், காம ஏக்கமும் எந்த அளவு இருந்தாலும் அது தணியும். நீ எவ்வளவு நேரம் உறவு கொண்டாலும் உன் விந்து வெளியேறாது உள்ளேயே தங்கி விடும்.

இந்த முறையை உலகத்திற்கு காட்டவே
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்களும் பெண்ணை அணைத்தபடி காட்சி தருகிறார்கள். அதாவது பெண்ணுடன் உறவு கொண்டாலும் தெய்வதன்மையை இழக்காமல் இருப்பதை இது காட்டும்.

விந்துவை அடக்கமுடியாத மூடமனிதர்கள் வீண் பேச்சுக்களை பேசியே கெட்டுப்போனார்கள், இந்த அந்தரங்க மர்மத்தை அறியாமல்தான் இவர்கள் பெண்களை ஆகாதவர்கள்
என்கிறார்கள் என்கிறார் கோரக்கர்.

விந்திறங்கா வசியம்-கோரக்கர்:
**************************************

மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
              - சந்திர ரேகை

பொருள்:
***********

பெண்களை சேரும் முன் உம்-யம்
என்று 108 முறை எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது. இதனால்
ஆனந்தம் அடைந்த பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள் என்கிறார் கோரக்கர்.

 
 - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து 
   சித்தர்களின் குரல் shiva shangar

Tuesday, July 28, 2020

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி! 28/07/2020 செவ்வாய்க்கிழமை

இன்று கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!

கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்

கருடாழ்வார்....
கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார்.
முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார்.
பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.

காத்தல் தொழிலைக் கொண்ட திருமாலுக்கு வாகனமாய் இருப்பவர் கருடாழ்வார்.
சுபர்ணன்,
பன்னகாசனன்,
புஷ்பப்ரியன்,
மங்களாயன்,
சுவர்ணன்,
புன்னரசு
என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.
இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார்.
கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.

காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவி கள். ஒருத்தி பெயர் கத்ரு; மற்றொருத்தி பெயர் வினதை.
கருட பகவானின் தாயாரான வினதைக்கும், கத்ருவுக்கும் எப்போதும் விரோத மனப்பான்மை உண்டு. கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன.
அவற்றுக்கு கருடன் மீது எப்போதும் பகை எண்ணமே இருந்தன. கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிசேஷன் திருமாலின் அரவணை (படுக்கை)யாகவும் அமைந்தனர்.
இரண்டு மனைவிகள் என்றாலே சண்டையும் சச்சரவுகளும், பொறாமையும் வெறுப்பும்அதிகரித்துக் கொண்டே போக, எப்படியாவது ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும்; தானேஅதிகாரம் செலுத்தி மற்றவரை அடிமை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போனது.
வினதையை வீழ்த்தி தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று நினைத்த கத்ருவிற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

காத்ருவும் ,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர். குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள்.

யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை.மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின.

வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன.

பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார்.

விஷ்ணுவை தன மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை...

கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது.

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன.

அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது

பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது.

 இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.

திருமால் அருளிய வரத்தின்படி திருக்கோயில்களில் கருடக்கொடியாகவும், திருமாலுக்கு வாகனமாகவும் திகழும் கருடன், திருமாலை நமக்குக் காட்டியருளும் குருவாகவும் போற்றப்படுகிறார்.
கருடன் மற்ற பறவைகளைப் போல் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறப்பதில்லை. கருடனின் பார்வையும் மிகக் கூரானது. கருடக் குரலின் அடிப்படையில் "கருடத்வனி' என்று ஒரு ராகமே அமைந்துள்ளது.
ஒவ்வொரு திருமால் கோயிலிலும் கருட úஸவைத் திருவிழா பலமுறை நடக்கும். மாசி மகத்தன்று கருட சேவையில் பகவான் திருக்கோயில்களின் அருகேயுள்ள புஷ்கரிணிக்கோ, ஆறு அல்லது சமுத்திரங்களுக்கோ சென்று தீர்த்த வாரி கண்டருள்வார்.

கருடனுக்கு வடை மாலை சாற்றுவது வழக்கம். பூரண கொழுக்கட்டையைப் போன்ற அமிர்த கலசம் இவருக்கு நிவேதனம். "கருடத்வனி' ராகமாய் நம் வாழ்க்கை இனிமை பெற, கருட பஞ்சமியன்றும் கருட ஜெயந்தியன்றும் கருடாழ்வாரையும், அவர் தாங்கிச் செல்லும் திருமாலையும் வழிபடுவோம்.

கருடபறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
கோவிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது.
சபரிமலை ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்.

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார்.
இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை….
ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்புறம் உள்ளது.

கருடவாகன சேவை

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

கருட புராணம்

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது

கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்:

ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும்

நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.

புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

வியாழன் கருடதரிசனம்- பகைவரிட்ட வைப்பு சூன்யம் அகலும்.

வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்

சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

கருடாழ்வாரை தரிசிக்கும்போது

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும்.

பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்றுதான்.
இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
 ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.

ஓம் நமோ நாராயணாய !

Monday, July 27, 2020

தெனாலி ராமனும் கொரோனாவும்!!! 27/07/2020 திங்கள்!

நகைச்சுவை:


நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!

டீல் வித் கொரோனா தி தெனாலி வே!

தெனாலி ராமன் வீட்டில் ஹாயாக நெட்ஃபிளிக்ஸில் மலையாளப்படம் பார்த்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் மனைவி அவரின் பர்சனல் மொபைலை எடுத்து வந்து,

தெனாலி ராமனின் மனைவி : சுவாமி, மன்னர் கான்ஃப்ரன்ஸ் காலில் இருக்கிறார். உங்களுடன் ஏதோ அவசரமாக பேச வேண்டுமாம்!

தெனாலி : நான் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லி சமாளிக்க வேண்டியது தானே? இந்த லாக்டவுனிலும் விடாமல் கழுத்தை.........

மன்னர் : தெனாலி........நான் லைனில் தான் இருக்கிறேன்.

தெனாலி : மன்னியுங்கள் மன்னா! மைக் ம்யூட்டில் இருப்பதாக நினைத்து உள்ளத்தில் இருந்தவற்றை உரக்க பேசி விட்டேன்.  எதற்காக இந்த அவசர ஆலோசனை?

மன்னர் : அமைச்சர்களே நன்றாக கவனியுங்கள்!
அஷ்டதிக்கஜங்கள் என்று உங்களுக்கு பட்டப்பெயர் கொடுத்தது சும்மா வீட்டில் சாப்பிட்டு தூங்க இல்லை. கொரோனாவை ஒழிக்க ஏதாவது யோசித்தீர்களா?

அமைச்சர் 1 : மன்னா, முக கவசம், மூலிகை குடிநீர், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் கொடுத்தாயிற்று.

அமைச்சர் 2 : மக்கள் அனைவரையும் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி எல்லோருடைய வீட்டின் முன்புற வாசலையும், பின்புற வாசலையும் பூட்டி, அனைத்து சாவிகளையும், நம்பர் ஒட்டி, அரண்மனை வைத்தியரின் பி.ஏ.விடம் ஒப்படைத்தாயிற்று.

அமைச்சர் 3 : மக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கனி முதலியவற்றை அவர்கள் வீட்டின் ஜன்னல் சாளரத்தின் வழியே பட்டுவாடா செய்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளும் தயார் மன்னா !

அமைச்சர் 4 : அரண்மனை வைத்தியரின் சிஷ்யர்கள் தினமும் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மக்கள் அனைவரும் உடல்நலக்குறைவில்லாமல் நன்றாக இருக்கின்றனரா என்று விசாரித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர் மன்னா!

அமைச்சர் 5 : நம் நாட்டில் இருக்கும் ஆலயங்கள், குருகுலங்கள், மல்யுத்த கூடங்கள், வீர விளையாட்டுக்கள், கேளிக்கை கூடங்கள், எல்லாவற்றையும் மூடச்சொல்லி உத்தரவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது மன்னா!

அமைச்சர் 6 : நாடு முழுவதும் இண்டு இடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும் கிருமி நாசினி கூட தெளித்தாயிற்று அரசே!

அமைச்சர் 7 : அரண்மனை வைத்தியரும், அவருடைய பிரதான சிஷ்யர்களும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ராப்பகலாக ஈடுபட்டிருக்கின்றனர், மன்னரே!

மன்னர் : என்ன தெனாலி, நீ மட்டும் மௌனமாக இருக்கிறாய்? கொரோனாவை ஒழிப்பதில் உன் பங்களிப்பு என்ன?

தெனாலி : மன்னா, எனக்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும்.

மன்னர் : மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு மிகவும் தவிக்கிறார்கள். அவர்களை காப்பது நம் அரசின் கடமை.  உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ உருப்படியான யோசனை எதுவும் சொல்லவில்லை என்றால் சிறையில் தள்ளப்படுவாய்.

தெனாலி : உத்தரவு மன்னா!

(ஒரு வாரம் கழிந்தது)

மன்னர் :  என்ன தெனாலியிடமிருந்து எந்த தகவலும் இல்லை!

இந்த சந்தர்ப்பத்தில் அவன் புத்திசாலித்தனம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
ஹே.......சிரி.......... தெனாலியை கூப்பிடு!

தெனாலியின் மனைவி : வணக்கம் மன்னா! அவர் காலையிலேயே கிளம்பி எங்கோ வெளியே போய் விட்டார். நீங்கள் அழைத்தால் உங்களிடம் அவர் ஃபேஸ்புக் பேஜில் சரியாக நான்கு மணிக்கு லைவில் அவரை பார்க்கலாம் என்று சொல்ல சொன்னார்.  உங்களுடன் சேர்த்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் ஃபேஸ்புக் லைவ் பார்க்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ள சொன்னார்.

மன்னர் : “அப்படியா, ஆச்சர்யமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்?”

“சரி, மக்கள் அனைவரையும் இன்று நான்கு மணிக்கு ஃபேஸ்புக் லைவ் வரும்படி ஆணையிடுகிறேன். “

நேரம் சரியாக நான்கு மணி!

ஃபேஸ்புக் லைவில் மன்னர் லாக் இன் செய்ததும், தெனாலி ஒரு மலை உச்சியில், கையில் தாம்புக்கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறார்.

பார்வையாளர்கள் பட்டியலில் நாட்டு பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள்.

காற்று வேகமாக வீசுகிறது.

எங்கே தெனாலி ஸ்லிப்பாகி விழுந்து விடப்போகிறாரோ என்று அனைவருக்கும் டென்ஷனாக இருக்கிறது.

மன்னர் “தெனாலி என்ன பண்ற?” என்று மெசேஜ் டைப் செய்கிறார்.

தெனாலி உரத்த குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

“மன்னா வணக்கம்! மக்கள் அனைவருக்கும் வணக்கம்!
இங்க பாருங்க, என் கையில் இருக்கும் தாம்பக்கயிறில் கொரோனாவை கட்டி இழுத்து வந்திருக்கிறேன். உங்கள் கண்களுக்கு அது தெரிகிறதா?
வீரர்களின் கண்களுக்கும், இளமையான யுவதிகளுக்கும் அது கண்டிப்பாக கண்ணில் தெரியும்.  தெரிந்தவர்கள் மட்டும் கமென்டில் ‘எஸ்’ போடுங்கள்.

மன்னர் : என்னது இது? கயிற்றின் நுனியில் ஒன்றுமே இல்லை. வீரர்களுக்கு கண்ணில் தெரியும் என்று பொடி வைத்து பேசுகிறானே, எதற்கு வம்பு, நமக்கு வீரம் இல்லை என்று நினைத்து விடப்போகிறான். ‘எஸ்’ போட்டு விடுவோம் என்று நினைத்து மெசேஜை டைப் செய்தார்.  அவர் ‘எஸ்’ என்றதும் ஆயிரக்கணக்கான ‘எஸ்’ கள் குவிந்தன.

தெனாலி : “ஓகே, குட், எல்லாரும் நல்லா பாருங்க.”

“இப்போ இந்த மலை உச்சிலேர்ந்து கொரோனாவை கீழே தள்ளிவிடப் போறேன், இன்னியோட கொரோனா ஒழிஞ்சது, நீங்க எல்லாரும் பழையபடி ஆட்டம், பாட்டு என்று நிம்மதியா இருக்கலாம்”
என்று சொல்லியபடியே தாம்பக்கயிற்றை கஷ்டப்பட்டு இழுப்பது போல் பாவ்லா செய்து, அதை மலை உச்சியின் மேலிருந்து கீழே தூக்கி வீசினான்.

மக்கள் மிகவும் ரசித்து, நிம்மதி பெருமூச்சுடன்,
“மன்னர் வாழ்க!
  தெனாலி வாழ்க” என்று கமென்ட் எழுதி ஸ்மைலியுடன் சேர்த்து மெசேஜ் எழுதி பாராட்டினார்கள்.

தெனாலியின் லைவ் வீடியோவிற்கு லைக்ஸும், கமென்டும், பாராட்டும் குவிந்து அன்றைய தினத்தின் டாப் ட்ரெண்டிங் ஆனது.

மன்னர் : “தெனாலி இது என்ன விளையாட்டு?”

என்று இன்பாக்ஸில் கேட்க,

தெனாலி : “மன்னா, இதற்கு பேர் தான் ‘பிளாஸிபோ எஃபெக்ட்’”.

மன்னர் : “அப்படின்னா?”

தெனாலி : “உங்கள் கேள்விக்கு கூகிளில் விரிவான விளக்கம் இருக்கிறது மன்னா! அந்த பக்கத்தை இன்பாக்ஸில் அனுப்புகிறேன். படித்து பாருங்கள். “

என்று பதில் மெசேஜும், அதனுடன் ஒரு லிங்க்கும் வந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்து தொடர்ந்த வாரங்களில் கொரோனாவின் பயம் குறைந்து, வீரியம் குறைந்து, அந்த விஷக்கிருமி முற்றிலுமாக அழிந்தது.

ஒரு மாதம் கழித்து மன்னரின் ராஜ தர்பார்!

தெனாலி : வணக்கம் மகாராஜா!

மன்னர் : வாரும் தெனாலி அவர்களே!

கண்ணுக்கு தெரியாத கிருமியை மலை உச்சியின் மேலிருந்து தள்ளுவது போல் நாடகமாடி, அந்த கிருமியின் மேல் இருந்த பயத்தை மக்களிடமிருந்து அறவே போக்கி விட்டீர்கள்.

அதனால், அவர்கள் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ‘கொரோனா’ நோய் முற்றிலுமாக ஒழிந்தது.

நாடும், மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

உங்கள் சமயோசிதமான  அறிவுக்கு என் உயர்ந்த பரிசு,

இதோ அங்கிருக்கும் அலங்கார இருக்கையில் அமருங்கள்!

இனிமேல் நீர் தான் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சர்!
சந்தோஷம் தானே!

தெனாலி : “அலங்கார இருக்கையா, எங்கே மன்னா? என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லையே!”

மன்னர் : “அது அறிவாளிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும்”

தெனாலி : “ஹா....ஹா.....ஹா.... இப்போது நன்றாக தெரிகிறது மன்னா! உங்கள் அன்புக்கு நன்றி!”

உங்கள் கண்ணுக்கும் கிருமி மலை உச்சியிலிருந்து விழுந்தது தெரிந்ததா?
----------------------------------------------------------------
படித்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன்

அன்புடன்
ரிஷி
========================
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Saturday, July 18, 2020

ஹோரை காலம் 18/07/2020 சனிக்கிழமை

பயன் தரும் ஹோரை காலம்
ஹஜ்
ஒரு நாளில் 7 கிரகங்களின் ஹோரைகள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வரும், ஒரு நாளின் ஆரம்ப ஹோரை பிரம்ம முகூர்த்தம் முடிந்து ஆரம்பிக்கும் முதல் ஒரு மணி நேரம், அந்த நாளின் சுய ஹோரை ஆகும், எல்லா ஹோரைகளும் எல்லோருக்கும் பொருந்தாது, ஜாதகபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஹோரை சுப பலனை தரும், அதன்படி பொதுவாக லக்னம் வைத்து எந்த எந்த லக்னத்துக்கு எந்த ஹோரை நன்மை செய்யும் என்று பார்ப்போம்..

எந்த லக்னமானாலும் அந்த லக்னத்துக்கு முன் பின் ராசி அதிபதிகளும் அந்த லக்னத்துக்கு திரிகோணாதிபதிகளும் லக்னாதிபதிக்கு நட்பாகும், எந்த லக்னமானாலும் அந்த லக்னத்துக்கு 7 ம் அதிபதியும், ஏழாம் வீட்டின் திரிகோணாதிபதியும் லக்னாதிபதிக்கு பகையாகும், இதன்படி 2,5,9,12 ம் வீட்டு அதிபதிகள்  லக்னாதிபதிக்கு நட்பாகும், லக்னத்துக்கு 3-7-11 வீட்டின் அதிபதிகள் லக்னாதிபதிக்கு பகையாகும்..

லக்னாதிபதிக்கு நட்பான கிரகங்களின் ஹோரை காலங்களில் எந்த காரியம் செய்தாலும் வெற்றி உண்டாகும், லக்னாதிபதிக்கு பகையான கிரகங்களின் ஹோரை காலங்களில் எந்த காரியம் செய்தாலும் தோல்வி உண்டாகும், லக்னாதிபதிக்கு சமமான கிரகங்களின் ஹோரை காலங்களில் வெற்றி தோல்வி இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு உண்டு..

12 லக்னத்துக்கு உரிய ஹோரை காலம்..

1. மேஷம், சிம்மம், தனுசு: செவ்வாய், சூரியன், குரு..
2. ரிஷபம், கன்னி, மகரம்: சுக்கிரன், புதன், சனி..
3. மிதுனம், துலாம், கும்பம்: புதன், சுக்கிரன், சனி..
4. கடகம், விருச்சிகம், மீனம்: சந்திரன், செவ்வாய், குரு..

12 லக்னத்துக்கு பகையான ஹோரை காலம்..

1. மேஷம், சிம்மம், தனுசு: சுக்கிரன், புதன், சனி..
2. ரிஷபம், கன்னி, மகரம்: சந்திரன், செவ்வாய், குரு..
3. மிதுனம், துலாம், கும்பம்: சூரியன், செவ்வாய், குரு..
4. கடகம், விருச்சிகம், மீனம்: சனி, சுக்கிரன், புதன்..

குறிப்பு: இதில் கொடுத்துள்ளது பொதுவானதே, அவரவர் ஜாதகத்தில் அந்த கிரகங்கள் பெற்ற சுபத்துவம், வலுவை பொறுத்து சில பகை கிரகங்களும் நன்மை செய்யும், நட்பும் தீமை செய்யும் ஆகவே இது பொதுவானதே, இந்த பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவே, சுய ஜாதகம், கிரக நிலை பதிந்து கேள்விகள் வேண்டாம், ஏனெனில் முழு ஜாதகம் ஆராய்ந்தே இதை கூற இயலும்..

Sunday, July 12, 2020

ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் 12/07/2020 ஞாயிறு அன்று

{ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிய தகவல்}

 ஆன்மிக உலகில் விடை தெரியாத புதிர்கள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. செந்தனலைக் கக்கி, வானத்தில் வலம் வரும்-நம்மால் தினமும் வணங்கப்படும் நவகோள்களுள் ஒன்றான சூரியனின் வெப்பத்தையே தாங்க முடியவில்லை. கோடைக்காலத்தில் குமுறிப் போகிறோம். ஆனால், மெய்ஞானமும் விஞ்ஞானமும் என்ன சொல்கிறது தெரியுமா? சூரியனையும் தாண்டிய பரவெளியில் சூரியனை விடவும் அதிக சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்.

ஆன்மிகத்தை அறிவதே ஆனந்தம். ஆராய்ச்சியில் இறங்கினால், ஆண்டுகள் போதாது. பரவெளியில் புதைந்து கிடக்கும் பிரமாண்ட ரகசிய ங்களைப் போன்றது தான் சித்தர்கள் வாழ்க்கையும். மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும், ஷீரடி அவதார புருஷர் ஸ்ரீசாய்பாபாவும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே சமாதி கொண்டிருந்தாலும், அவர்களை நம்பித் தொழும் பக்தர்களுக்கு இன்றைக்கும் தரிசனம் தந்து கொண்டிரு க்கிறார்கள். இது தரிசனம். இது போன்ற சித்த புருஷர்களுள் ஒருவர்தான் ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர். 1980-களின் துவக்கத்தில் இவர் சமாதி கொண்டார். ஒட்டன்சத்திரத்தில் நாகனம்பட்டி ரோட்டில் இவரது ஜீவ சமாதி இருக்கிறது. சுமார் 550 வருடங்கள் இவர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். இவர் சமாதி ஆகி, சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும். இன்றைக்கும் கேராளவில் ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைத் தரிசித்த பழநிவாசிகள் இருக்கிறார்கள். ஒட்டன்சத்திரத்துல எல்லா பயலுகளும் நல்லா இருக்கானுங்களா? என்கிற விசாரிப்பைக் கேட்ட பக்தர்களுக்கும் உண்டு.

திண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர் இது. வர்த்தகர்கள் அதிகம். எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை..... ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராமசாமி சித்தரின் சமாதி,  இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர்கள் எப்போதாவது இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். மற்றபடி இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது. எண்ணற்ற அற்புதங்களையும் ஸித்து விளையாட்டுகளையும் நிகழ்த்திய ஒரு மகான் ஒட்டன்சத்திரத்தில் குடி கொண்டிருக்கிறார்

ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார், பெற்றோர் யார். எப்படி ஒட்டன்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை. தான் ஒட்டன்சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார். இதற்கு அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும், பிரியாணி பொட்டலமும் வந்துவிடும். சித்தர்கள் பிரியாணி சா ப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. தன்னை நாடி வரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு. வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி, அதை சாப்பிடுவது போல் செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள். அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.

ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின், எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ, அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத் துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர். ஆக, ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா? இனி, ராமசாமி சித்திரைப் பற்றி பார் ப்போம். இவரது பெயர் ராமசாமி என்பது. ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது. அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர். சாமீ, சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார். ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம். ஒட்டன்சத்திரத்தில் வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள். உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர் தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது. காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது. விடிகாலை மூன்று மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர். புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. போங்கடா... போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீங்க.... என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி அனுப்பினார்.

ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள், சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவனெல்லாம் இங்க வாங்கடா என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல். ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள். பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் - ஒற்றைக் காலில் நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார். வாங்கடா ஒட்டன்சத்திரத்து ஆளுங்களா..... உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்.... ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல? என்றார் (அதுவரை சித்தர், பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பி றகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்). யார் சாமீ.... நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே? என்றனர் ஊர்க்காரர்கள். அடேய்.... பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே... அவன்தான் ராமசாமி சித்தர். அவனுக்கு வயசு என்ன தெரியுமா? ஐந்நூத்தி ஐம்பது. சரி, ஊருக்குப் போனதும். அவன்கிட்ட போய், ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க என்றார். தொடர்ந்து தவத்தில் இறங்கி விட்டார்.

ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள். தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடையாளம் கண்டுகொண்டு. நம்மூர் சித்திரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள். அங்கிருந்து அகன்றார்கள். ஒரு வழியாக ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள். தாங்கள் புறப்பட்ட இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள். மெள்ளக் கலையை முற்படும்போது ரிஷிகேஷ் போனவனெல்லாம் இங்க வாங்கடா என்று பாத்திரக்கடை வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார். அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது - ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம். அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர். ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.

ஏண்டா.... அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல..... ஏண்டா, என்கிட்ட சொல்லாம போறீங்க? என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்கவும், சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை. சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும். அவசரத்தல மறந்துட்டோம் என்று சொல்ல.... சிரித்தார் சித்தர். போங்கடா. எல்லாரும் நல்லா இருப்பீங்க என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
😞🙏
பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன். மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம். பூஜை, புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும். மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர். மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார். பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால், அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார். இப்படித்தான் ஒரு முறை ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.

பழநியில் இருந்து புறப்பட்டு, சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார். அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார். ராஜம்மாள் அங்கு வந்ததுமே, வாம்மா..... உன்னைத்தான் தேடுகிறேன், வா என்றார் சித்தர். மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார் ராஜம்மாள். பிறகு, பக்கத்துல ஒட்டல் இருக்கு. அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா என்றார். அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார். பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது. தயங்கியவாறே நின்றிருந்தார். என்னம்மா... பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்.... அப்படியே நிக்கறே..... பொறப்படு என்றார் சித்தர். பிறகு, நான் வேணா காசு தர்றேன், யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா? என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள். அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா. நீயே கடைக்குப் போய் வாங்கிட்டு வா. சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் சித்தர். ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள். இவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர். என்னம்மா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா?  யோகக்காரப் பொம்பளைம்மா நீ.... உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை பார்சல் செய்யச் சொன்னார். காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள்,ரொம்பவும் கூசிப் போனார். ஐயர் வீட்டுப் பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு, அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.

பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி? நீயே பிரி என்று சித்தர் சொன்னதும், அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு. சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்தால். இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி, பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி. பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெல்லப் பிரித்தார். பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல் ஏற்படும் என்பதால். அந்த வேளையில் சுவாசிக்கவும் மறந்தார். பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இந்தாங்க சாமீ.... என்று கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார். நீயே கண்ணைத் திறந்து பாரம்மா - உன் கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு. அதன் பிறகு என்னிடம் கொடு என்றார் சித்தர். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம். காரணம்-பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அல்ல.... நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல். சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள். முந்திரியும் திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம், ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது. தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை - கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை-நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள். சாப்பிடும்மா.... எடுத்துச் சாப்பிடு. ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா என்ற சித்தர், தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
😞🙏
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன்சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ராமசாமி சித்தர், பாத்திரக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். இவரது இடத்தைக் கடக்கும்போது அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது. ஜீவகாருண்யத்தை (அசைவம் சாப்பிடாதவர்கள்) எப்போதும் கடைபிடித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார். சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் துண்டுகளைப் பார்த்து முகம் சுளித்தார். ஓரமாக நடந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார். டேய் இங்கே வாடா என்று அவரை அழைத்தார். யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர், என்ன சாமீ? என்று கேட்டார். கிழே விழுந்து கிடக்கிற க ருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்! முகம் கொதித்துப் போனார் அன்பர்.
இத்தனை ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்த என்னைப் பார்த்தா, கருவாடு சாப்பிடச் சொல்கிறீர்? நான் செத்தாலும் சாவேனே தவிர, கருவாடு சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப் போயே விட்டார்.

சித்தர் மெதுவாகச் சொன்னார்: ஆமாடா....இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே.... உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்..... விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா.... போய்ச் சேரு. ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர் மாரடைப்பு வந்து இறந்து போனார்.

 ஒருவேளை, சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால், பிரியாணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி, இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும். இதை உண்ட பலனால், அவரது ஆயுள் பலம் கூடி இருக்கலாம். விதி ஜெயித்து விட்டது போலும்! பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர், சித்தர்கள் தரிசனத்தில் நெகிழ்பவர். பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து, ஆன்ம ஞானம் பெற்றவர். ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது, அப்போது அவருடன் இருந்தவர் இவர்.

இனி, கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.

ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை. அவ்வப் போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர். யார் என்பது தெரியாது. பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர். வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார். சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார்.

 1977-ஆம் வருடம் என்று நினைக்கிறேன். நான், என் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம். சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார். பிறகு, நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார். உடனே பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன். எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார். பிறகு, ஒரு பீடிக்கட்டு, மூன்று சிகரெட், ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து, பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார். ரொம்ப காலம் பாதுகாத்து வந்தேன். ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன், சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு சனிக்கிழமை....சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன். சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்து கொடுத்தேன். குடித்தார். பிறகு, அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது. பாதையை மறைக்காதடா.... குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச் சொன்னேன். வேறொன்னுமில்லை. அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார். அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார் என்றார் அவர். அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகி விட்டார். தகவல் கேள்விப்பட்டதும். சித்தரின் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர். சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார். சித்தர் அடக்கம் ஆவதற்கு காங்கிரஸ் பிரமுகரான பழநியப்பா, நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார் (இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது) பெரிய குழி வெட்டி, அதற்குள் நான் இறங்கினேன். அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமைஅன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது. விபூதி, உப்பு, வில்வம், புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி, சித்திரை அடக்கம் செய்தோம். நான் கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன். மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று கிடைத்தது அவரது அருள்தான்.

எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும். அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால், அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும். அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது யதேச்சையாக சாலையின் இடப்பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன். அங்கே-ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத் துண்டு இருந்தது. சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன். பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். இதற்குள் பேருந்தும் வேகம் எடுத்து விட்டது. மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர். எப்படி விருபாட்சிமேடு அரு கே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது, எனவே, பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன். சுவாமிகளே வந்து கதவைத் திறந்து என்னப்பா... இந்த வேளைல? என்றார். எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன். நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.

இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை. விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த சமாதியை நோட்டமிட்டேன். அவரது சமாதியில் - தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது. உடனே பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன். ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு, சரீரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா. அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார். அவர் போன ஊர் புண்ணியம் பெறும் என்றார். அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான். அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசி ர்வதித்துக் கொண்டிருப்பார்கள். ராமசாமி சித்தரும் அப்படித்தான். சுமார் இரண்டு மாதங்கள் கழித்து. கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார். கண்ணன். ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார். முஸ்லிம் பக்தர் ஒருவர். ஆசையுடன் கொடுத்ததாம் இது.