Thursday, August 22, 2019

அரவோடு களத்திரகாரகன் இணைவு....22/08/2019 வியாழன்



சுக்கிரனுடன் ராகு ,கேதுக்கள் மிக நெருக்கமான பாகையில் இணைந்தால்?....்(உதாரண விளக்க ஜாதகம்)

 பொதுவாக எந்த ஒரு கிரகத்துடன் ராகு ,கேதுக்கள் 5 டிகிரிக்குள் மிக நெருங்கி இருக்கக்கூடாது.

 அப்படி இருந்தால் சுய ஜாதகத்தில் ராகு கேதுக்கள் பாவர் சம்பந்தம் பெற்று ,சுப தன்மையற்று ,சுய ஜாதகத்தில் இருந்தால் ,தான் இணைந்த கிரகத்தின் பலனையும் ,ஆதிபத்தியத்தையும் ,காரகத்துவத்தையும் முழுமையாக கெடுத்துவிடும்.

 கடந்த இரு நாட்களில் இரண்டு ஜாதகங்களில் ஒரு விஷயம் குறிப்பாக தெரிந்தது.

சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் காதல் ,திருமணம் ,காமம் போன்ற விஷயங்களுக்கு மட்டுமல்லாமல்  மனித உடலில் ஆண் ,பெண் இனப்பெருக்க உறுப்புகள்,சர்க்கரை நோய், அடிவயிறு சார்ந்த கழிவுநீக்க (Kidney only) பகுதிகளுக்கும் சுக்கிரனே காரகத்துவம் வாய்ந்தவர்.(சனி கழிவு பகுதி)

 சுக்கிரனுடைய காரகத்துவங்கள்  நிறைய இருந்தாலும் அவற்றில் மேற்சொன்னது மிகக் குறிப்பிடத்தக்கது.

இங்கு குறிப்பிட்டுள்ள இரண்டு ஜாதகங்களும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஜாதகம்.

 கும்ப லக்னமாகி 4,9ஆம் அதிபதியாகிய சுக்கிரன் இரண்டாம் இடத்தில் உச்சம் பெற்று, ராகுவுடன்
 4 டிகிரிக்குள் இணைந்துள்ளார்.

 கும்ப லக்னத்திற்கு யோகாதிபதி மற்றும் பாதகாதிபதியும் சுக்கிரனே. கும்ப லக்னத்திற்கு 4ம் இடமான சுக ஸ்தானாதிபதி ராகுவுடன் இணைந்து கெட்டுள்ளது.

 13 வயதில் சிறுநீரக மாற்று ஆபரேஷன் ஜாதகர் செய்துள்ளார்.

 சுகஸ்தானாதிபதி ராகுவின் பிடியில் உள்ளதால் மருந்து ,மாத்திரை தயவில் வாழ்க்கையை ஒட்டக்கூடிய அமைப்பில் உள்ளார்.

மற்றொரு ஜாதகத்தில் சுக்கிரன் ,ராகு ,சனி இணைந்துள்ளது. இதில் சுக்கிரனும் சனியும் ஒரே டிகிரியில் உள்ளது. சுக்கிரனுக்கும் ராகுவுக்கும் ஆன இடைவெளி 3 டிகிரி மட்டுமே.

 தற்போது அட்டமாதிபதி திசையில் ராகு புத்தி நடக்கிறது. சிறுநீரகத்தில் சதை வளர்ந்து உள்ளதால் கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.

 ராகு புத்தி ஆரம்பித்து பதினைந்து நாட்கள் மட்டுமே ஆகின்றன.

உச்ச குரு பார்த்தும் பலனில்லை.குரு பார்வை அனைத்து இடத்திலும் செல்லாது.

 சுக்கிரனுடன் ராகு இணைந்து இருப்பது கலப்புத் திருமணத்தையோ அல்லது பிற்காலத்தில் சிறுநீரகம்,பாலியல் சார்ந்த பிரச்சனைகளையோ கண்டிப்பாக கொடுக்கும்.

 பிரச்சனை உடல்நிலை சார்ந்துகொடுக்க வேண்டுமா அல்லது திருமணம் சார்ந்து கொடுக்க வேண்டுமா என்பதை இறைவன் தான் தீர்மானிப்பான்.ஆனால் பிரச்சனை  உறுதியாக உண்டு.

நேற்று பார்த்த மற்றொரு ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவுடன் கூடி  ஒரு டிகிரி வித்தியாசத்தில் மட்டுமே இருந்ததால் ஜாதகருக்கு முழுமையாக தாம்பத்திய சுகத்தை தரக்கூடிய அமைப்பில் இருக்கும் சுக்கிரன் கெட்டு விட்டதால்  திருமணமே ஆகவில்லை. கேது  தடையை ஏற்படுத்துபவர்.வயது 37.

 ராகு கேதுக்கள் எந்த ஒரு கிரகத்துடன் மிகவும் நெருக்கமான நிலையில் இருந்தால் அந்த  கிரகத்தின் பலனை கெடுத்துவிடும் என்பதை தெளிவாக உணர முடிகிறது. மேலும் பாவ கிரக சம்பந்தப்பட்ட சம்பந்தம் ராகுக்கு கிடைத்தால் துவைத்து தொங்க போட்டு விடுகிறது.

சில கர்மாக்களை நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மாற்றமுடியாது. அதுவே கர்ம வினைப்பயன்.
       
                   
           திருச்சிற்றம்பலம்!

Wednesday, August 14, 2019

யாருக்கு என்ன பிரச்சினை? 14/08/2019. புதன்


சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்.
ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...
ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும்,
எஜமானியும்,
ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது...
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது...

"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.
எனக்கு பயமாக இருக்கிறது என்றது.."
இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.."
உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.
நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.."
உடனே அது ..
பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று..
அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.

வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு,
"நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்..." என்றது.
மனம் நொந்த எலி... அடுத்தாக...
பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது...
ஆடும் அதேபதிலைச் சொல்லியது.
அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை...
"எலிப்பொறியை பார்த்து,
என்னையும் பயப்படச் சொல்கிறாயா?"
என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு...
எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு...
பண்ணையாரும்,
அவர் மனைவியும், தூங்கப் போயினர்...
ஒரு அரை மணி நேரத்தில்,,
*"டமால் "* என்றொரு சத்தம்.
எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று என்னிய பண்ணையார் மனைவி ஓடிவந்து..
எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
ஆனால்...
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.
விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்..
பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி...
"பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.."
சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது.."
என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை.
கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.
கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்...
அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்...

வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட
ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை.....

விருந்தாக ஆடும் உயிரை விட்டது..
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
"எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால்
"என்ன..? என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை... நம்முடையதாகவும் இருக்கலாம்..

படித்தேன்! பகிர்ந்தேன்!...😁😁🙏🏿👇

Tuesday, August 13, 2019

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வரலட்சுமி விரதம்...

வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும்.

வரும் 09.08.2019 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம்....

எங்கள் இல்லத்தில் கொண்டாடப்படுகிறது.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம்.

திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளாகும்.
திருமாலின் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாக உள்ளார்.

தன லட்சுமி,
தானிய லட்சுமி,
தைரிய லட்சுமி,
கஜலட்சுமி,
ஜெய லட்சுமி,
வீர லட்சுமி,
சந்தான லட்சுமி,
மகா லட்சுமி

என 8 வகையான லட்சுமியாக காட்சி தந்து அருளாசி புரிகிறார்.

அஷ்ட லட்சுமிகளில் ஒவ்வொரு லட்சுமியும் நமக்கு தேவையானதை வாரி வழங்குகின்றனர்.

குழந்தை பேறு தருபவள் சந்தான லட்சுமி.

பதவியை தருபவள் கஜ லட்சுமி,

செல்வத்தை தருபவள் தனலட்சுமி.

வீரத்தை தருபவள் வீர லட்சுமி.

வெற்றியை தருபவள் விஜய லட்சுமி.
எல்லா செல்வமும் ஒரு சேர இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்ட லட்சுமி.

வரலட்சுமி விரதத்தினைக் கடைப்பிடிப்பதால் அன்னை வரலட்சுமியின் அருள் பெற்று மகிழ்ச்சியும், நலமும் ஏற்படும் என்பது ஐதீகம்.

வரலட்சுமி விரதம் புராண வரலாறு
சிவபெருமானின் உபதேசப்படி, மகாலட்சுமியை வழிபட்டு விரதம் பூண்டாள் உமாதேவி. இதனாலேயே முருகன் அவதாரம் நிகழ்ந்தது என புராணங்கள் கூறுகின்றன.

மலைமகளாம் பார்வதி தேவி, அலைமகளாம் திருமகளைப் போற்றி, விரதம் பூண்ட நன்னாளே வரலட்சுமி விரத நன்னாள் ஆகும்.

கயிலாயத்தில் ஒருநாள் சிவபெருமானும், உமாதேவியும் "சொக்கட்டான்' என்ற பகடை விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். "விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்' என்றார் சிவன்.

ஆனால் உமாதேவியோ, "இல்லையில்லை. சொக்கட்டான் விளையாட்டில் வென்றவள் நானே'' என்றாள். அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரநேமி என்ற கந்தர்வனிடம், "நீதான் யார் வெற்றி பெற்றது என்று கூற வேண்டும்' என்று சிவபெருமான் சொல்ல, அவனோ, "சிவபெருமான்தான் வெற்றி பெற்றது' என்றான்.
சித்ரநேமி பொய்யான தீர்ப்பு கூறியதாக எண்ணிக் கோபமடைந்த உமாதேவி, "நீ பெருநோய்க்கு ஆளாவாய்' என்று சாபமிட்டாள். தன்னை மன்னிக்குமாறு சித்ரநேமி வேண்ட, "கற்புக்கரசிகள் வரலட்சுமி விரத பூஜை செய்வதை நீ பார்க்கும்போது, உன் பெருநோய் நீங்கும்' என்றாள்.

அதன்படி சித்ரநேமியும் அந்த விரதத்தைக் கண்டு நோய் நீங்கப் பெற்றான்.

எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ள நோய்நொடி நீங்கும் என்பது நம்பிக்கை.
வரம் தரும் வரலட்சுமி விரதம்
லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதம்.

செல்வம், தானியம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்களை லட்சுமி தேவி அள்ளிக் கொடுப்பதால், இதை வரம் தரும் விரதம் எனவும் அழைக்கின்றனர்.

பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வார்கள். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவவும், செல்வங்கள் பெருகும், கணவர் நீண்ட ஆயுளும், குழந்தைகள் நலம் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.

அன்போடு அழைக்கிறோம்..

வாருங்கள் அனைவரும்...

Tuesday, August 6, 2019

இன்று கருட ஜெயந்தி 7/08/2019 புதன்

இன்று
ஸ்ரீகருட ஜெயந்தி!!

பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.

அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா இன்று புதன்கிழமை (07.08.2019) கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரமான இன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூனியம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

யாரெல்லாம் கருடனை வணங்க வேண்டும்?

🦅 ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.

🦅 புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் சர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நட்சத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.

🦅 ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகுஃகேது அமைய பெற்றவர்கள்.

🦅 ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்.

🦅 சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகுஃகேது சேர்க்கை பெற்றவர்கள்.

🦅 கால சர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்.

🦅 பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

🦅 கோசார ராகுஃகேதுவினால் பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்.

🦅 ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள் ஆகியோர் கருட பகவானை வணங்கி நன்மையை பெறலாம்.

கருடனைத் தரிசிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள் :

👉 ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும், பாவங்கள் நீங்கும்.

👉 திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.

👉 செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.

👉 புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

👉 வியாழன் கருட தரிசனம் - பில்லி, சூனியம் அபிசாரங்கள் நீங்கும்.

👉 வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்.

👉 சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

💐

கருட காயத்ரி

ஸ்ரீ கருடன் காயத்ரீ
(மரண பயம் நீங்க)

”ஓம் பட்சி ராஜாய வித்மஹே,
விஷ்ணு வாகனாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்”

(பட்சிகளின் அரசே, பெருமாளின் வாகனமாய்
இருக்கும் கருடபகவானே, உள்ளத்தில் காலன் பயம் ஒழித்து கள்ளமிலா பக்தர் தமை காத்திடுவாய்!

✍🙏