Friday, July 26, 2019

காஞ்சிபுரம் அத்திவரதர் 26/07/2019 வெள்ளி

🙏நேரில் காஞ்சிபுரம் சென்றாலும் இவ்வளவு அருகில்  அத்திவரதரை தரிசிக்கமுடியாது.




























தரிசிக்கமுடியாது.👍ஞ

Thursday, July 25, 2019

சந்திர பகவானின் சக்திகள் 25/07/2019 வியாழன்

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனோகாரகன் என்றும், உடல் காரகன் என்றும் அழைப்பர்.

ஜெனன ஜாதகத்தில் ஒருவருக்கு
சந்திரன் வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-
மன வலிமை குறையும். பயஉணர்வு மேலோங்கும். மனதில் சதா சஞ்சலம் மிக்கவராய் ஒரு நிலைப்பாடும் இல்லாமல் இருக்கும்.
தாய்ப்பாசம் குறைந்து காணப்படும்.
தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது போகும்.

அத்தகையோர்

1. பிரதி திங்களன்று உபவாசம் இருக்கவும்.

2. வெள்ளை நிற உணவு வகைகளான அரிசி சாதம் , நெய் , தயிர், மோர், பால், ஜவ்வரிசி கிச்சடி போன்றவற்றை அதிகமாக உண்ணவும்.

3. அதிகமாக வெள்ளை நிற ஆடைகளை உடுத்தவும், எப்பொழுதும் உங்கள் உடலில் ஏதாவது ஒரு வெள்ளை ஆடை  இருப்பது நல்லது.

4. சுண்டு விரலில் நல் முத்து மோதிரம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

5. திங்களன்று, மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.

6. பௌர்ணமி அன்று அம்பாள் சன்னதிக்கு சென்று கனிவர்க்கங்கள் படைத்து வழிபட சந்திர தோஷம் குறையும்.

அனுதினமும் சந்திர காயத்ரி சொல்லி வர மனோபலம் கூடிவரும். எண்ணிய யாவும் ஈடேறும்.

சந்திர காயத்ரி:

பத்மத் வஜாய வித்மஹே!
ஹேம ரூபாய தீமஹி!
தந்நோ ஸோம ப்ரசோதயாத்!

ஓம் ஸ்ரீம் சந்திராய நமஹ!

Tuesday, July 23, 2019

சந்திரனால் உண்டாகும் நோய்;24/07/2019 புதன்

ஓம் சரவணபவ!

   சந்திரனால் உண்டாகும் நோய்;

    * ஆஸ்துமா, சளி, மூச்சிறைப்பு, நுரையீரல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு, நீர் கண்டங்கள் .
   * சந்திரன் அசுப ஆதிபத்தியம் பெற்றால் இந்த நிலை இதில் சந்திரன் 6, 8 அமைவதும்.
   * சனி, ராகு, கேது சேர்க்கை பெறுவதும்,
  * அட்டம, ரோக, பாதக, மாரகாதிபத்தியம் பெற்ற நிலையில் இந்த பாதிப்பை தரும்.
   * தனுசு லக்ன எட்டில் பூச சந்திரன் , லக்னாதிபதி பலவீனம் நிரந்தர வீசிங் நோயாளி ஒருவர் ,
   * மகர லக்னம் மாரகாதிபதி சந்திரன் எட்டில் எப்போதும் சளி தொந்தரவு, கேந்திரத்தில் திக்பலம் அடைந்த ஒருவருக்கு நீரில் கண்டம்.
   * விருச்சக லக்னம் பாதகாதிபதி உச்சம் நீரில் கண்டம் ஒருவருக்கு ,
   * சந்திரன் சனி பாவத்துவ சேர்க்கையால் மனநிலை பாதிப்பு பலருக்கு,
     இந்த சந்திரன் தசை, புத்தியில் நடக்கிறது ,

    உங்கள் அனுபவங்களை பகிரவும், ஆய்வுக்கு உதவும், 

Friday, July 19, 2019

ஆடி அமாவாசை 31/07/2019 புதன் பதிவு 19/07/2019 வெள்ளி

பேரன்புமிக்க அன்பர்களுக்கும் ஆன்மீக நண்பர்களுக்கும் வணக்கம்.....

""""ஆடி அமாவாசை""""'

முன்னோர்களுக்கு திதி கொடுத்து விரதம் இருந்து அவர்களை வழிபடுதல்......

இந்த விகாரி வருஷத்தில்
வரும் 31.07.2019.. புதன் கிழமை ஆடி 15 அன்று அமாவாசை.... காலை 11 35 முதல் ஆரம்பிக்கிறது மறுநாள் அதாவது வியாழக்கிழமை 9 21 முடிகிறது.....

திதிகளைப் பொறுத்தவரை....

""முழு இரவுக்கு முன் பகல்"" என்பதுதான் சரி..

எனவே 31.07.2019 ஆடி 15 புதன்கிழமையன்று சூரிய உதயத்திற்கு பிறகு...

தாராளமாக நதிக்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கலாம்.....

(ஒரு சில காலண்டர்களில் வியாழக்கிழமை என காண்பிக்கப்பட்டுள்ளது)

ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாளே அமாவாசை...

மேலும் மாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.

அப்படி கொடுக்க முடியாவிட்டாலும்,

ஆடி அமாவாசை,

புரட்டாசி மகாளாய அமாவாசை,

தை அமாவாசை

ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தைத் துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை...

தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசை முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள் ஆகும்.

சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர்.

அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.

எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும்,
அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.... என்கிறது சாஸ்திரம்.

அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய அமாவாசை ஆகும்.

எனவே, அன்றும்.... அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை.

அன்றும்.... அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ராமேஸ்வரம் மிகவும் முக்கியமானதும் விசேஷமானதுமான தலம் ஆகும்.

ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது.

குறிப்பாக அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.

ஆடி தர்ப்பணம்

ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும்...

(இந்த விகாரி ஆண்டில் அமாவாசை திதி தாமதமாக ஆரம்பித்தாலும்.... முழு இரவிற்கு முன் பகல்.... அதே திதியாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.)

ஏதேனும் ஒரு தீர்த்தக் (நதி) கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும்.

மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கவேண்டும்.

பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி.

மேலும்....
சந்திரன் ஆட்சி பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம்.

சூரியன் சிவ அம்சம், சந்திரன் சக்தியின் அம்சம்.

இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால்  """ஆடி அமாவாசை""" முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும்  சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை.

தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை.

மேற்சொன்ன கடக ராசி நீர் ராசியாகவும், மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில்தான் சூரி சந் இணைவு...அதன் அதிபதி சந்திரன் (நீர் நிலைகள்) என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது.

இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.

வாருங்கள் நண்பர்களே.....

நம்முடைய வாழ்க்கையும், நம்சந்ததியினரின் வாழ்க்கையும், மகிழ்ச்சியும்...சகல செல்வங்களும் நிறைந்ததாக அமைய நம்முன்னோர்களை இந்த நாட்களில் வணங்குவோம்.....

என்றும் அன்புடன்....

Thursday, July 18, 2019

ஆடி மாதம் சிறப்பு 18/07/2019 வியாழன்

*ஆடிப்பிறப்பு !* *17/07/2019*

🍂  *ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு* 🍂

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி யின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன் னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவ தைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவு சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36 .வருடத்தில் ஆடிப்பூரத்தன்று  மட்டும் சிவரூபத்தில்  காட்சி  தரும் பரசுராமேஸ்வரர்  , மற்ற   நாட்களில்  வருடம்  முழுவதும்  சக்தி ரூபமாக  9கஜ புடவையுடனும்  , திருமாங்கல்யம்  தரித்து ,, பாதத்தில் தண்டை, கொலுசு, மெட்டியுடன் காட்சி தருகிறார். ஆண்டுக்கு  ஒரு முறை மட்டுமே  சிவரூபம்  அருளும்  அதிசய  சிவலிங்கம்  ,ஆடிப்பூரத்தன்று 04/08/2019 மட்டும்  விசேஷ  சிவ தரிசனம் ,காண  கண்  கோடி வேண்டும் .பல்லூர் கிராமம் , திருமால்பூர் ரயில் நிலையம் மிக அருகில் , காஞ்சிபுரத்தில்  இருந்து    அரக்கோணம் செல்லும்   வழி . .வாய்ப்பை தவறவிட  வேண்டாம் .

37. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

38.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

39.ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

40.. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக்
  கருதப்படுகின்றன.
🍁 *வாழ்க வளமுடன்* 🍁

Friday, July 12, 2019

மைத்ரேய முஹுர்த்தம் 13/07/2019 சனிக்கிழமை

🌹🌺 உன் நினைவுடன் நான் 🌺🌹
#🤔 ஆன்மீக சிந்தனைகள் மைத்ரேய முஹுர்த்தம் இன்று (13.7.2019) சனி மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை. மைத்ரேய முகூர்த்தம்..... ஜோதிட சாஸ்திரத்தில் நம்முடைய அனைத்து கடன்களும் தீர , நம்மை மாபெரும் குபேரனாக மாற்ற கூடிய அபூர்வ நேரத்தை மைத்ரேய முகூர்த்தம் என கூறுவர். அதை பற்றி இன்று நம் சித்தர்களின் குரலில் விரிவாக பார்க்கலாம். அவசியம் அனைவரும் படித்துஅனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்; கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்; கடன் என்பதும் கர்மவினையே! இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது... ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது... பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது. மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும். வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும். செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும். செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது. மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம். செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம். கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை. இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்; உங்கள் கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் நாட்கள் 2019 - 2020 இந்த விகாரி வருடத்தின் வரும் அடுத்த மைத்ர முகூர்த்த நாட்கள்: *13.7.2019 சனி மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;* 25.7.2019 வியாழன் இரவு 12.30 முதல் நள்ளிரவு 2.30 வரை; 9.8.2019 வெள்ளி மதியம் 12.40 முதல் 2.40 வரை; 20.8.2019 செவ்வாய் இரவு 10.12 முதல் 12.12 வரை; 21.8.2019 புதன் இரவு 10.16 முதல் 10.45 வரை;(வெறும் 29 நிமிடங்கள் மட்டுமே) 5.9.2019 வியாழன் காலை 10.48 முதல் 12.48 வரை; 17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை; 3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை; 14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை; 30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை; 9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை; மாலை 4.36 முதல் 6.36 வரை; காலை & இரவு 10.36 முதல் 12.36 வரை; 11.11.2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை; 27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை; 8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை; 24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை; 4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை; 1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை; 16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை; 28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை; 8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை; மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை; 14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை; 21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை; மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை; 26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை; 27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை; 11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை; இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று; பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும். குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது; கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிக்கும் அன்பர்கள், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து, அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும். ராசிப்படி கடன் தொல்லை தீரவைக்கும் மைத்ர முகூர்த்தம் மேஷம்: வியாழன் காலை 9 – 10½ ; ரிஷபம்: வெள்ளி காலை 8 – 10½; மிதுனம்: புதன் காலை 7½ – 9; கடகம்: திங்கள் மாலை 4½ – 6; சிம்மம்: ஞாயிறு காலை 11 – 12½; கன்னி: வெள்ளி மாலை 5 – 6½; துலாம்: சனி காலை 10½ – 12½; விருச்சிகம்: வியாழன் மாலை 3 – 5½; தனுசு: செவ்வாய் 10½ – 12½; மகரம்: சனி காலை 9 – 10½; கும்பம்: திங்கள் மாலை 3 – 5½; மீனம்: வியாழன் காலை 9 – 10½ வரை. மைத்ர நேரம் என்பதற்கு நண்பன்போல கடன் அடைய உதவும் நல்ல நேரம் என்று பொருள். பயன்படுத்திப் பலன் பெறலாம். குறிப்பு : இந்த பதிவை பாதுகாத்து வைத்து கொள்ளுங்கள், நண்பர்களுக்கும் பகிருங்கள்.


மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
புகார்
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post

அஷ்டமி,நவமி என்ன செய்யும்? 12/07/2019 வெள்ளி

அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்?

அர்த்தமுள்ளஇந்துமதம்...
கவியரசர் கண்ணதாசனின் சொல்லோவியம்.


#அஷ்டமியும்_நவமியும்...

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .

நம் முன்னோர்கள் அஷ்டமி  அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ?  அதற்குக் என்ன காரணம் ?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration  பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுதமுடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

                    👁👃👁🌹🌹💐🌻🌸🌗🌙

             சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!!