Wednesday, April 17, 2019

17/04/2019 புதன் எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்ற திரையிசைப் பாடலை கேட்காதவர் உண்டா?

பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்பர்.

இன்றைய அவசர கால நிலையில்  மனுசனுக்கு டென்சனோ டென்ஷன்.

தொடர்ந்து வரும் தோல்விகள், குழப்பமான மனநிலை மற்றும் சூழ்நிலைகள். இதன் தாக்கம் நம்மால் தெளிவான தீர்க்கமான முடிவுகள்
எடுக்க முடியாது.

அதன் விளைவாக வருத்தம், வேதனை. அதன் கால நீட்டிப்பு துன்பம்.

துன்பங்கள் தேடி வரும் நிலையை ஜாதகத்தில் எப்படி தெரிந்து கொள்வது? பார்க்கலாமா.?

சாதாரணமாக ஒருவன் பலம்மிக்கவனாக இருப்பின் அவன் தன் திறனை எவ்வகையிலாவது வெளிப்படுத்த விரும்புவான் அல்லவா?

அவன் நற்குணங்கள் பொருந்தியவன் எனில் தனது திறனை மற்றவர்க்கு பயன்படும் வகையில் வெளிப்படுத்துவான்.

மாறாக அவன் தீய குணங்கள் பொருந்தியவன் எனில் அவனது திறன் மற்றவர்க்கு தீமையை விளைவிக்கும். துன்பத்தையே தரும்.

அவ்வகையில் ஜாதகத்தில் யார் பலம் பெறுகிறாரோ அவரது குணநலனுக்கு ஏற்ப நன்மையும் தீமையும் நடைபெறும்.

இங்கு 8க்குடையவன் பலம் பெறும்போது துன்பமே எந்நாளும்.

எப்படி?
...........
8க்குடையவன் லக்ன கேந்திரங்களில் நின்றால்,

8க்குடையவன் லக்னாதிபதியுடன்இணைந்தால் அல்லது பார்த்தால்,

8க்குடையவன் 10க்குடையவனோடு இணைந்தாலோ பார்த்தாலோ துன்பங்கள் தேடிவரும்.

               ...துன்பம் எப்போது வரும்?.....
                                ............
8ல் நின்ற கிரகத்தின் சாரத்தில் ஒருகிரகம் திசை நடத்தும் போது.

8க்குடையவன் திசை நடத்தும்போது.

8க்குடையவன் கோட்சாரத்தில் லக்ன கேந்திரத்தில் சஞ்சரிக்கும் போது.

8க்குடையவன் கோட்சாரத்தில் 10க்குடையவனுடன் இணையும்போது அல்லது பார்க்கும் போது துன்பங்கள் வந்து சேரும்.

ஹலோ! ஹலோ! சுகமா!
ஆமா நீங்க நலமா?

என கேட்க வேண்டி வரும்.

No comments:

Post a Comment