Wednesday, July 25, 2018

பூர்ண சந்திர கிரகணம் 27/7/2018 வெள்ளி




*
சந்திரகிரஹணம்**பூர்ண சந்திரகிரஹணம்*

*'(கேது க்ரஸ்த ஸோமோபராக புண்யகாலம்)*
அன்றைய தினம் ஆடிவெள்ளி, மற்றும் ஆடிப்பெளர்ணமியும் கூட.
அம்பாளுக்கு உகந்த அற்புத நாளும்கூட.

*விளம்பி வருடம் ஆடி மாதம் 11ம் நாள் (27-07-2018) வெள்ளிக்கிழமை இரவு பெளர்ணமி உத்திராட நட்சத்திரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.*

*இந்த கிரஹணத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் நன்கு காணமுடியும்.*

*கிரஹண ஆரம்பம் 27-07-2018 இரவு 11.54 மணி*                     

*கிரஹண மத்தியம் 28-07-2018 அ.காலை 1.59 மணி*                       

*கிரஹண முடிவு 28-07-2018, ஆ.காலை 3.49 மணி*

*வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.*

   *கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரைசந்திரனை பார்க்க கூடாது*

*பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்ராடம், திருவோணம், ரோஹிணி, ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை சாந்தி செய்துகொள்ளவும்.*

*பெளர்ணமி திதி ச்ரார்த்தம் மறு நாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.*.
மற்றவர்கள் கோயிலுக்குச் சென்று தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துகொள்ளவும்.

*'(

Friday, July 13, 2018

நகைச்சுவை: நவீன அவ்வையார் !9/7/2018 திங்கள்

படித்ததில் பிடித்தது


நகைச்சுவை: நவீன அவ்வையார் !





நகைச்சுவை: நவீன அவ்வையார் !

"முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் அவ்வையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள். பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்! கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை. கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை."

"நல்லது வேலவா!"

"ஔவையே, கருப்பு, வெள்ளை - எளிய தமிழில் விளக்கு."

"ஐயனே, வரி கட்டியது வெள்ளை. கட்டாதது கருப்பு!"

"வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?"

"கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாதது எது?"

"சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்!"

"ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?"

"ஒழிக்க நினைத்தது கருப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"

"அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"

"தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

"என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"

"அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கருப்புதான் வேலவா!"

"மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு."

"பேங்க் பாஸ் புத்தகமும். செக் புத்தகமு

ம்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே, உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன். தயங்காமல் கேள்."

"ஐயனே, உன் கடன் அன்றி பிறிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம்
என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என் கையில் தள்ளி விட்டான். அதற்கு இன்கம்டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்!"

படித்ததில் பிடித்தது......பேஸ் புக்..
.
ஐயோ அது அல்ல. எனக்கு படிச்சதில் பிடித்தது என்று சொன்னேன்.

அப்படியென்றால் வாட்ஸ் அப் தான்.



ஐயோ! தெரியாம கேட்டுவிட்டேன்!

கூளுக்குள் சென்றால் தெரிந்து கொள்ளலாம்.

அடக்கடவுளே!...

முருகா!....முருகா!.... எங்கே செல்கிறீர்கள்?

போதும்...ஆள விடு!



முருகனை காணவில்லை. எஸ்கேப்.......