Wednesday, December 27, 2017

நவகிரகங்களின் ஜேம்ஸ்பாண்ட் 007. ம27/12/2017 புதன்

யார் மாயாவி? நவகிரகங்களின் ஜேம்ஸ்பாண்ட் 007.

நவக்கிரகங்களில் சாயா கிரகம் என அழைக்கப்படுபவர் ராகு பகவான். அசுர குலத்திலிருந்து எம் தவ வலிமையால் நவக்கிரக பட்டத்தை பிடித்தேன். அந்த சூரியனையே விழுங்கும் மகாசக்தி படைத்தவன்.
நானே சாயா கிரகம். நானே யோக காரகன். நானே போக காரகன்.

நான் நினைத்தால் பிச்சைக்காரனை கூட ஒரு நொடியில் கோடீஸ்வரன் ஆக்குவேன்.
உங்கள் பூர்வ புண்ய கணக்கை என்னை கொண்டே அறிய முடியும். நானே மந்திர தந்திர அதிபதி. நானே அகோராதிபதி. நானே சூட்சுமம்.
என்னால் தீமை என்றால் அது மிக கொடூரமாக இருக்கும். நன்மையோ தீமையோ அதை கண்மூடித்தனமாக வாரி வழங்கும் வள்ளல் நான். என்னைப்போல் கொடுப்பவர் யாரும் இல்லை.
உங்களை பில்லி சூன்யம் ஏவல் செய்வினை போன்ற அமானுஷ்ய விசயத்தில் மாட்டிவிட்டு சந்தோசப்படுவேன். மகா கொடூரன். நான் உங்களுக்கு யோகம் தர முடிவெடுத்து விட்டால் உங்களை உழைக்காமலே கோடீஸ்வரன் ஆக்குவேன்.


முகமூடி, கருப்பு நிற ஆடை, கயிறு, கைத்தடி, விஷம் அருந்துதல், விஷ ஊசி, விஷக்கிருமிகள், நூதன நோய்கள், துப்பாக்கி, இருண்ட பகுதிகள்,
 கள்ளக்கடத்தல்,கொள்ளை,கொலை, சிறைவாசம்,தூக்கு தண்டனை, கள்ளக்காதல், பால்வினை நோய்கள் போன்றவை என் அதிகாரத்திற்கு உட்பட்ட சிலவே.

ஒரு நொடியில் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும் சர்வ வல்லமை படைத்தவன். என்னுடன் எவர் சேர்ந்தாலும் அவர்களின் பலம் எனக்கே வந்துவிடும்.

மாயக்காரன். மாயாவி. ஜாலவித்தைக்காரன். மாயாஜாலம் புரிபவன். சூழ்ச்சிகள் நிறைந்தவன்.
சதி திட்டங்கள் தீட்டுவதில் வல்லவன்.
சூது வாது நிரம்பியவன் எனப் பேர் பெற்றவன்.

நான் எந்த வீட்டில் இருக்கிறேனோ அந்த வீடே என் சொந்த வீடு. நானே உங்களுக்கு பாவியாகவும் நல்ல நிலையில் இருந்தால் யோகக்காரனாகவும் இருப்பேன்.

என் பிடியில் நவக்கிரகங்கள் சிக்கினால் கால சர்ப்ப தோசத்தை தருவேன். அப்போது நீங்கள் செத்தே விடலாம் என நொந்து போகும் அளவிற்கு சோதிப்பேன். 32 வயதிற்கு பிறகு அதுவே காலசர்ப்ப யோகமாக மாறி நீங்கள் சுகபோக சக்ரவர்த்தியாக வாழ விடுவேன்.
நான் அவரவர் பூர்வ புண்ய கணக்குப்படி கால சர்ப்ப தோசம். புத்திர தோசம். களத்திரதோசம் போன்றவற்றை அளிப்பேன்.

எனக்கென்று கிழமை இல்லை.
ஆனால் ராகு காலம் என்று எனக்கான நேரம் உண்டு என்பதை மறவாதே.

என் அருள் பெற்றவர்களிடம் பல கனவான்களே கைகட்டி வாய்பொத்தி ஊழியம் செய்யவேண்டி வரும். எதிரிகளை உருவாக்குபவனும் நானே. எதிரியில்லா நிலையை தருவதும் நானே. கஷ்டம் கொடுப்பதும் நானே.. யோகத்தை அளிப்பவனும் நானே.

விதவையின் சொத்துக்களுக்கும் நானே காரகம் ஆவேன்.

எனது அதிதெய்வம் காளி.துர்க்கை.கருமாரி அம்மனின் தலைமை பக்தன்.

ஓம் பத்ர காளியே போற்றி.... ஜெய்

ராகு காயத்ரி
ஓம் நகத்வஜாய வித்மஹே!
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்!

No comments:

Post a Comment