சித்தர் போற்றி! வாலைத்தாயே போற்றி! சிவம் போற்றி!
கோள்களின் கோலாகலம்! கோதையரின் (அலங்)கோலம்!
காலம் மாறிவிட்டது,
ஒரு 45 வயது பெண்ணின் ஜாதகம் இது.
நான் எப்போதும், ஜாதகம் பார்க்க வருபவரிடம், எதற்காக பார்க்க வந்திருக்கிறார் , அதற்கு தீர்வு என்னவென்று வந்தவுடனே தாளில் எழுதி கையில் கொடுத்து விட்டு பின்பு தான் பேச ஆரம்பிப்பது வழக்கம்.
அவ்வாறு எழுதியது....
நான் எப்போதும், ஜாதகம் பார்க்க வருபவரிடம், எதற்காக பார்க்க வந்திருக்கிறார் , அதற்கு தீர்வு என்னவென்று வந்தவுடனே தாளில் எழுதி கையில் கொடுத்து விட்டு பின்பு தான் பேச ஆரம்பிப்பது வழக்கம்.
அவ்வாறு எழுதியது....
2, குழந்தையால் மனக்கஷ்டம்.
தாளை படிக்கும் முன், அந்த பெண் சொன்ன வார்த்தை “சார், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை”
அதிர்ச்சியுற்ற நான் , ஜோதிட த்தின் மீது இருந்த நம்பிக்கையில் பேப்பரை படிக்க சொன்னேன்.(லேசான பயத்தோடு தான்)

படித்து முடித்து அந்த பெண்மணி சொன்ன வார்த்தை “சூப்பர் சார்”.
அடி விழுமோ என்று பயந்திருந்த எனக்கு பாராட்டா? குழப்பம் ஒரு பக்கம், மகிழ்ச்சி மறுபக்கம்.
அந்த பெண்மணி மேற்கொண்டு சொன்னது “ 45 வயசாச்சு . கல்யாணம் ஆகலை. மூன்று வருடமாக ஒருவருடன் கணவன் மனைவியாக வாழ்ந்தேன், அவர் தற்போது பிரிந்து சென்று விட்டார். கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை பற்றிய மனக்கவலை அதிகமாக இருப்பதாகவும்” சொன்னார்.
நான் நேசிக்கும் ஜோதிடம் என்னை கை விடவில்லை. சில ஜோதிட தீர்வுகள் சொல்லி அனுப்பி வைத்தேன்.
இந்த காலத்தில் திருமணம் என்பதும், தாம்பத்யம் என்பதும் கேள்விக்குறியாகி போன வருத்தமும், அதற்கான காரணத்தை ஜோதிடத்தில் தேடுவதும் தொடர்கிறது… \
நன்றி
- ஸ்ரீ ஹரி ஜோதிட ஆராய்ச்சி மையம்.

சிற்றின்பத்தை தரவேண்டிய சுக்ரன் ஆட்சி பெற்றாலும், பாவகிரகங்களால் சூழப்பட்டு இருப்பதால் மறைமுக இன்பத்தை நுகர்தல்
படுக்கை சுகத்தை தரகூடிய 12ல் மாந்தி இருந்து, சனியின் பார்வை பெறுகிறார்--சமூகத்திற்கு மாறான தாம்பத்ய சுகம்
ராசிக்கு 7ம் இடத்தில் லக்னத்தின் ரோகாதிபதி உச்சம், 7குரியவன் 8ல் மறைவு.
- ஸ்ரீ ஹரி ஜோதிட ஆராய்ச்சி மையம்.

Gokul Gokulan லக்னாதிபதி குரு ஆட்சி பெற்றும் வக்ரம் பெற்றதால் நீசபலன்களை கர்மஸ்தானத்தில் நின்று செய்கிறார்
4&7 குரியவன் நீசம், வீடுகொடுத்தவனும் வக்ரம்--- நீசம்பெற்ற புதன் பார்வை 7ல்
5ல் கேது, 5 குரியவன் 8ல் மறைவு--அந்த சந்திரனை உச்சம் பெற்ற ரோகாதிபதி சூரியன் பார்க்கிறார்.
4&7 குரியவன் நீசம், வீடுகொடுத்தவனும் வக்ரம்--- நீசம்பெற்ற புதன் பார்வை 7ல்
5ல் கேது, 5 குரியவன் 8ல் மறைவு--அந்த சந்திரனை உச்சம் பெற்ற ரோகாதிபதி சூரியன் பார்க்கிறார்.

சிற்றின்பத்தை தரவேண்டிய சுக்ரன் ஆட்சி பெற்றாலும், பாவகிரகங்களால் சூழப்பட்டு இருப்பதால் மறைமுக இன்பத்தை நுகர்தல்
படுக்கை சுகத்தை தரகூடிய 12ல் மாந்தி இருந்து, சனியின் பார்வை பெறுகிறார்--சமூகத்திற்கு மாறான தாம்பத்ய சுகம்
ராசிக்கு 7ம் இடத்தில் லக்னத்தின் ரோகாதிபதி உச்சம், 7குரியவன் 8ல் மறைவு.
ராகுவின் பார்வை நீசம் அடைந்த புதன் மற்றும் லக்னத்தின் மீதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் விழுவதும் கேடு. விளைவு முறையற்ற உறவும்,பந்தமுமே!
No comments:
Post a Comment