Sunday, August 20, 2017

பிள்ளைச் செல்வமே! பேசும் தெய்வமே! இரு மணம் கொண்ட திருமணம். 20/08/2017 ஞாயிறு

                           வாலைத்தாயே போற்றி!
பிள்ளைச் செல்வமே! பேசும் தெய்வமே! இரு மணம் கொண்ட திருமணம்.
                                                        
குழந்தை
 
பாக்கிய தடை
இரண்டாம் 
திருமண தோசமும் :-
தாய்க்கு 
தோசம் கொண்ட ஜாதக அமைப்பு  பற்றிய ஓர் ஆய்வு.
.

.
.
அன்பர் ஒருவர் தன் ஜாதகம் காட்டினார் ,
.
.
ஜாதகம் பார்த்து அவரிடம் கேட்டேன் என்னங்க ,
உங்களுக்கு குழந்தை பிறக்க வில்லையா? என்று,
.
.
ஆமாம் சார் திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றார்.
.
.
அண்ணன் ஒருத்தர் கூட உங்களூக்கு #ஆகாது என்றேன் ஆமாம் சார் அவ்ரிடம் பேசி பல வருடம் ஆகிறது என்றார்.
.
.
தங்கை ஒன்று அவங்க நோயால் பாதிக்கப்பட்டு இருந்து
இறந்து கூட இருக்கலாம் என்றேன்.
.
.
தங்கச்சி சின்ன வயசிலே இறந்து விட்டது நோய் வந்து என்றார்.
.
.
சரிங்க அம்மா வீடோ, சொத்தோ  உங்களுக்கு வந்து இருக்குமே? என்றேன்

ஆமாம் சார்.
.
.
அவங்க பெயர்ல இருந்து தான் நான் வாங்கினேன் என்றார்.
.
.
அவங்க உங்க கூட இருக்க கூடாது. எனவே அவங்கள தள்ளி  இருக்க சொல்லுங்க என்றேன்.
.
.
அவங்க தனியா போய் 6 வருடம் ஆகிறது . அவங்க என்னோடு இல்லை என்றார்.
.
.
சரிங்க  உங்களூக்கு பிள்ளை பிறக்காதே என்றேன்.
.
.
சார் எல்லா ஜோதிடரும் சொல்றாங்க பிள்ளை பிறக்கும் என்று

எப்ப பிறக்கும்? என்று சொன்னாங்களா என்று கேட்டேன்.
.
சொன்னாங்க. ஆனால் அது போல இன்னும் பிறக்கல என்றார்.
.
சரிங்க. அப்புறம் எப்படி சொல்றீங்க? என்றேன்.
.
.
சார் உங்க மனைவிக்கு கருப்பபை  கோளாறு இருக்கு. போய் டெஸ்ட் பன்னுங்க. 
கரு தங்காது . உருவாகினாலும் அடிக்கடி கலைந்து விடும் என்றேன்.
.
.
ஆமா சார். ஏற்கனேவே பன்னியாச்சி. அப்படிதான் இருக்குனு 
#மருத்துவர்கள் 
கூறினார்கள். அது போல தான் கரு தங்காது என்றார்கள்.
.
.
அடிக்கடி கரு கலைந்து போகிறது என்றார்.
.
.
உங்களூக்கு இந்த மனைவி மூலம் குழந்தை இல்லை சார்.
.
.
அப்புறம் என்ன சார் பன்றது?.
.
.
உங்களுக்கு இரு தார தோசம் உள்ளது. 
.                                          
.
இரண்டாவது மனைவி மூலம்
குழந்தை பிறக்கும் என்றேன்.
.
.
அதற்கு அவர் சொன்னார். இரண்டாவது திருமணம் செய்ய மாட்டேன் என்றார்.
.
சிரித்து கொண்டே கூறினேன். நீங்க பண்ணுவீங்க.
,
குழந்தை அதன் மூலம் பிறக்கும் என்றேன்.
.
.
சரிங்க என்று போனார்..
.
தற்போது எதேச்சியா பார்க்கும் போது சொன்னார்.
சார் நீங்க சொன்ன மாதிரி ஆயிடுச்சு.
நான் 2ஆவது திருமணம் செய்து விட்டேன்.
மனைவி 5 மாதம் கருப்பமா இருக்காங்க
என்றார்.
.
..
எப்படி இவ்வாறு நடந்தது .
.
.
1
. குழந்தை பாக்கிய த்தடை எதனால் ?
.
லக்னம் பாருங்க கன்னி லக்னம் . லக்னாதிபதி புதன் கேந்திராதிபதி தோசம் அடைந்தது மட்டும் இல்லாம அஸ்டமாதிபதி செவ்வாய் உடன் இருக்கிறார்.
அதனால் வாழ்க்கையில எதையும் அடைய தடை ஏற்படுத்தும் லகனாதிபதி பலம் இல்லன்னா.
.
5
க்குடைய சனி செவ்வாய் பார்வை மற்றும் சூரியன் பார்வை. எனவே 5ஆம் அதிபதியும் பலம் இல்லை,

5
ஆம் இடத்தில் விரையாதிபதி சூரியன். மற்றும் சனி பார்வை உள்ளது. சனி தன் சொந்த வீட்டைப் பார்தாலும் பார்க்கும் பார்வை என்னவோ கெட்ட பார்வை தான்,
அதுதான் புத்திர பாக்கியக் குறையைக் கொடுத்தது,
புத்திர காரகன் குரு அஸ்டமத்தில் கேது உடன் மறைவு .
.
.
அதாங்க பிள்ளை பிறக்க தாமதம் செய்தது.
.
.
2
. மனைவிக்கு கருப்பப்பை பிரச்சனை எதனால் ?
.
.
மனைவி ஸ்தான அதிபதி எட்டில் கேது உடன் மறைவு.
 மற்றும் மனைவியைக் குறிக்கும் களஸ்த்திர ஸ்தானாதிபைதி சுக்கிரன் 6ல் மறைவு.
 மற்றும் ஏழாம் அதிபதியான குரு மீது சனி பார்வை.
எனவே திருமண பிரிவு உண்டாக்கும் அல்லது கருப்பப்பைக் கோளாறு உண்டாக்கும்.
.
.
3.
தங்கை இறக்க காரணம் என்ன ?
.
குரு கேது இணைந்தாலே மூத்த சகோதர நாசம் அல்லது இளைய சகோதர நாசம் உண்டு பண்ணுங்க.
 அதே நேரத்தில் 3க்குரிய செவ்வாயே அஸ்டமாதியாக வருவதாலும்,
அவர் புதனுடன் கூடி 4ல் அமர்ந்ததாலும்
தங்கைக்குரிய ஸ்தானத்தை பார்த்தாலும்
 தங்கைக்கு லக்னாதிபதியே எதிரியாக வந்து அஸ்டமாதிபதியான புதன் உடன் சேர்ந்து இருப்பதால்
தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்தாங்க..
இளைய சகோதர நாசம் செய்தது.
.
.
4
. அம்மா  சொத்து எப்படி வந்தது ?
.
பொதுவா லக்னாதிபதி அல்லது 4க்குடையவனுக்கு லக்னம் அல்லது 4மிடத் தொடர்பு பலமாக இருந்தால் கண்டிப்பாக அம்மா வழி மூலம் நல்ல ஆதாயம் உண்டுங்க,
.
அந்த புதன் நிலக்காரகனான செவ்வாய் உடன் கூடி 4ல் அமர்ந்ததால் அம்மா சொத்து இவருக்கு வந்தது..
.
.
5.
அம்மா ஏன் இவருடன் இருக்கக் கூடாது ?
.
.
சரிங்க அம்மா ஏன் இவருடன் இருக்க கூடாது.
 அம்மா என்றாலே நேரா போய் சந்திரன் நிலையைப் பார்க்கனுங்க.
.
இங்கு சந்திர அஸ்டமாதி சூரியனுடன் கூடி சனி பார்வையில் இருப்பதாலும்,
4
க்குடைய குரு அஸ்டமாதி கேது உடன் மறைந்து ராகு பார்வையில் இருப்பதாலும்
அம்மா இவர்கூட இருந்தால் அவங்க உயிருக்கே ஆபத்து,
அவங்களூக்கு ஆயுள் இருந்ததால் அவங்களே பிரிந்து போய்ட்டாங்க,
.
.
6.
 இரண்டாவது திருமணம் எப்படி நடக்கும்.?
.

                                   


.
பொதுவாக 11ல் சனி இருந்தாலே தலைவருங்க சில பேர் 2 குடும்பம் நடத்துவாங்க.
.
அதுவும் குடும்பஸ்தானாதிபதி சுக்கிரன் 6ல் ஆறில் மறைவு.
அதுவும் சனி வீட்டு சுக்கிரன் சொல்லவா வேண்டும்.
கள்ளத் தொடர்பை உண்டு பன்னுங்க. அதுவும் இருக்கு.
.
.
7
ஆம் இடம் , 2ஆம் இடம்,2ஆம் அதிபதி, மற்றும் 7ஆம் அதிபதி மேல் சொன்ன மாதிரி பாதிக்கப் பட்டு 11ல் சனி இருந்தால்
தலைவர்களுக்கு 2 திருமணம் நட்க்குங்க அதுதான் விதி.
அவ்வாறே நடந்தது. அதுதான் சொன்னேன் அவர்கிட்ட.
அவர் பண்ண மாட்டேன்னு பில்டப் பண்ணிட்டார்.

.
7. அதனால் குழந்தை எப்படி பிறக்கும் ?
.
.
11
என்று சொல்லக் கூடிய இடம் 2ஆவது மனைவியைக் குறிக்கும்.
 சந்திரன் 5ஆம் இடத்தில் தன் குடும்பஸ்தானாதிபதி சூரியனுடன் இருப்பதால்
சனி தன் சொந்த வீட்டை பார்த்து கொஞ்ச தீய பார்வை குறைத்ததால்
இரண்டாவது மனைவி மூலம் குழந்தை பேறு கிடைக்கும்.
அதுதான் கூறினேன் போன வருடம்.
.
அவ்வாறே இப்போ கருத்தரித்தாங்க 2ஆவது மனைவி.
,
.
.
.
அலசல் போதுமா?

.
.
.
ஜாதகத்தில் தெரியும் கெட்டதை மறைக்காம சொல்லி
எச்சரிக்கிறேன்.
ஆகவே கெட்ட விஷய பதிவு அல்ல.
வாழ்க்கையில எந்த கெட்டதும் நடக்காமல் இருக்க எச்சரிக்கும் பதிவு.

இது மாதிரி அமைப்பு உள்ள ஜாதகருக்கு ஒரு முன்எச்சரிக்கை.
அன்புடன்.


உங்கள் அன்பன்.