வாழ்த்து
சித்தர் வாழ்க! சிவன் வாழ்க!
முத்தர் வாழ்க! முனிவர் வாழ்க!
பக்தர் வாழ்க! ரிஷிகள் வாழ்க!
பார்புகழும் வாலைப்பெண்
வாழியவே!
வணக்கம்.
ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இன்று நாம் சித்தரின் வல்லபம் குறித்த விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
எல்லாம் வல்ல எழிலுடைய மகத்துவம் மிக்க வாசியின்
கருணையினால் சித்தரின்
வல்லபம் குறித்து
பாம்பாட்டிச் சித்தர் கூறுவது.
மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி
வருவோம்;
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;
தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;
தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு
பாம்பே!
செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்;
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து
விடுவோம்;
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்;
எங்கள் வல்லபங் கண்டு நீ ஆடு பாம்பே!
முந்நீர் - கடல்
செங்கதிர் - தகிக்கும் சூரியன்
தண்கதிராய் - குளிர்ந்த
நமஸ்காரம்.
மீண்டும் சந்திப்போம்……
No comments:
Post a Comment