Saturday, July 23, 2016

23-07-2016 சனிக்கிழமை

வணக்கம்
.ஹரி ஓம்!
    மெய்யன்பர்களே! இந்த தளத்திலே தினம் ஒரு தகவல் என்ற தலைப்பிலே  நாம் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்பந்தமான  விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
         இன்று சங்கடஹர சதுர்த்தி.


  இன்று விநாயகப்பெருமானுக்கு விரதம் ஏற்று பலவகையான பழங்கள்,
அவல்,கரும்பு, வெல்லம், அப்பம், கொழுக்கட்டை, பொரி,கடலை,வாழைப்
பழம், வெற்றிலை, பாக்கு இவைகளைப் படைத்து அருகம்புல், வெள்ளருக்கு மாலை சாற்றி தூபம்,தீபம் ஏற்றி வழிபட்டு கீழ்க்கண்ட சுலோகத்தைச்
சொல்லவும்.

வக்ரதுண்ட மஹாகாய
ஸுர்யகோடி ஸமப்ரப !
அவிக்நம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா !!
எனப் பிரார்த்தனை செய்தால் எண்ணியவை யாவும் தடையின்றி இனிதே
நிறைவேறும்.

இந்நாள் சுபநாளாக அமையட்டும்!

நமஸ்காரம். 
மீண்டும் சந்திப்போம்……

அது பற்றி அன்பர்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் இந்த தளத்திலும், முக நூலிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
முக நூல் முகவரி:




Thursday, July 21, 2016

21-07-2016 வியாழன் சித்தரின் வல்லபம்

                                                                            

                              வாழ்த்து

                     சித்தர் வாழ்க!  சிவன் வாழ்க!
                     முத்தர் வாழ்க! முனிவர் வாழ்க!
                     பக்தர் வாழ்க! ரிஷிகள்  வாழ்க!
                     பார்புகழும் வாலைப்பெண் வாழியவே!
          
          
வணக்கம்.
ஹரி ஓம்!

    மெய்யன்பர்களே! இன்று நாம் சித்தரின் வல்லபம் குறித்த விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.

 எல்லாம் வல்ல எழிலுடைய மகத்துவம் மிக்க வாசியின் கருணையினால்  சித்தரின் வல்லபம் குறித்து பாம்பாட்டிச் சித்தர் கூறுவது.

    மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்;
       முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;
    தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;
       தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!

    செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்;
       செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;
          இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்;
       எங்கள் வல்லபங் கண்டு நீ ஆடு பாம்பே!


முந்நீர்  -   கடல்
செங்கதிர்  - தகிக்கும் சூரியன்
தண்கதிராய் - குளிர்ந்த

 நமஸ்காரம். 
மீண்டும் சந்திப்போம்……

Wednesday, July 20, 2016

20-07-2016 புதன் சித்தர் வணங்கும் தெய்வம்



ஹரி ஓம்!                                                                                       வாலை போற்றி!

                                                         வேதத்து மறை நீ!
                                                         பூதத்து முதலும் நீ!
                                                         வெஞ்சுடர் ஒளியும் நீ!
                                                         எங்களுள் வாசியும் நீ!
                                                          அனைத்தும்  நீ!
                                                          நின் பாதகமலம் சரணம்
                                                          அருள்புரிவாயே!