Friday, July 25, 2025

ஜோதிட புதிருக்கான விடை 1/7/2025 செவ்வாய்க்கிழமை


 


அனைவருக்கும் வணக்கம்

உங்கள் ஜோதிட அறிவையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் பகுதி தான் *புதியன கற்போம்.!*

இந்த பகுதியில் நீங்கள் கற்றறிந்த அரிய ஜோதிடக்கலையானது
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமயமாக புதிய புதிய விஷயங்களை மேம்படுத்திக் கொண்டு காலத்திற்கேற்ப வளர்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்!

அந்த வகையிலே புதியன கற்போம்!
பகுதியில் ஒரு பிரிவாக *ஜோதிடப்புதிர்* வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் நாம் ஏற்கனவே படித்த விஷயங்களை நினைவு கூர்வதற்கும் ஜோதிட ஞானத்தை வளப்படுத்திக் கொள்ளவும் உதவும் பகுதியாகும்.

எனவே அனைவரும் இதில் பங்குபெற்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.


Shanmuganandam S:
[6/30, 10:02 AM] Anand: *நேற்றைய தினம் ஜோதிடப் புதிர் எண் 1 கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கான சரியான விடை இதோ....!*


[6/30, 10:02 AM] Anand: விருந்தில் பரிமாறப்பட்டவையும் அதன் காரகங்களும் என்ன? என்று கேட்கப்பட்டது.

1.சப்பாத்தி - சூரியன்
2.சாதம்.       -  சந்திரன்
3.பருப்பு சாம்பார் - செவ்வாய்
4.கொத்தவரங்காய் பொரியல் - புதன்
5.பாயாசம் - குரு
6.வாழைப்பழம் -சுக்ரன்
7.எலுமிச்சை சாதம் - சனி
8.உளுந்து வடை - ராகு
9.அவியல்  - கேது

இந்த அறிவு விளையாட்டு புதிர் போட்டியில் 7 பேர் கலந்து கொண்டனர்.
அவர்கள் ஏக தேசம் ஓரிரண்டு விடைகளைத் தவிர ஓரளவு சரியான விடையை கூறினார்கள்.

அவர்களின் பெயர்கள்:

1.திருமதி ஷான்சுபா செல்வராஜ்
2.திரு.கணேசன்
3.திரு.ஸ்ரீதர்
4.திரு.சரண்
5.திரு.ராஜகோபால்
6.திருமதி.ராஜகுமாரி
7.திருமதி.வித்யா

அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

தங்கள் விடையை ஒப்பிட்டுப் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மற்றவர்களும் முயற்சி செய்யலாமே!
பங்கு பெறுவதுதான் முக்கியம்.
வெற்றி பெறுவது அப்புறம்.

ஒரு விருந்தில் நவகோள்கள் எப்படி இடம்பெற்றன என்பதைப் பார்த்தோம்.

விருந்து எப்படி இருக்கு?

நாளை வேறொரு புதிய புதிரில் சந்திப்போம்....

Bye.. see u..😅

[6/30, 10:02 AM] Anand: வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.

அனைவரும் பயன்பெற *வெற்றி பெற வாழ்த்துக்கள்!!*
*
நன்றி வணக்கம்

*திரு S.ஷண்முகானந்தம்* *MABEd.,RTD HM*.
*பொள்ளாச்சி*
94437 28932.
[6/30, 10:02 AM] Anand: இந்த புதிய பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா?
தொடரவா?

இது பற்றி உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

[6/30, 9:59 AM] +91 95247 27546: மிகவும் அருமை தொடருங்கள் ஜோதிடர்கள் அறிவை இது விசாலமாக வருவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தங்கள் தொண்டு தொடரட்டும்🙏🙏🙏

[6/30, 10:00 AM] +91 99444 44678: 🙏🏻

[6/30, 10:06 AM] Sukran Srithar fb: 🙏

[6/30, 10:21 AM] Sukran Rajagopal: அய்யா தொடருங்கள் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏

நாளை வேறொரு புதிய புதிரில் சந்திப்போம்....🙏


ஜோதிட புதிர்


 அனைவருக்கும் வணக்கம்.🙏




இந்த ஜோதிடப் புதிர் பகுதி நாம் கற்ற ஜோதிட அறிவை வளப்படுத்திக் கொள்ளவும் ஜோதிடத்தில் வேறு நிலைகளை அறிந்து மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் பகுதியாகும்.

இப்பகுதியில் தினமும் ஒரு ஜோதிடப் புதிர் வெளியாகும்.

ஜோதிடம் சார்ந்த பல விஷயங்கள் கொண்ட தாக ஜோதிடப்புதிர் அமைந்திருக்கும்.

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிருக்கான விடை கண்டு பிடிக்க வேண்டும்.

புதிருக்குரிய விடை மறுநாள் வெளிவரும்.

தங்கள் பதில்களை
எனக்கு தனியாக அனுப்பி வைக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் அன்புடன்
ரிஷி
S.ஷண்முகானந்தம்
ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிடம் மையம் பொள்ளாச்சி
94437 28932.



*ஜோதிடப்புதிர்*

ஞாயிற்றுக்கிழமை மதியவேளை.
அனைவரும் நன்றாகவே சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருக்கும் நேரம் இது.

ஓய்வு வேளையில் சற்று ரிலாக்ஸாக இருப்போமே!
அதனை பயனுள்ளதாக மாற்றினால் நலம் தானே!
அதற்காக வெறுமனே படுத்திராமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு இதைப் பற்றி சிந்திப்போமே!

உங்களுக்கான ஒரு special meals அனுப்பியுள்ளேன்.
உடனே சாப்பிட்டு விட வேண்டாம்.

தட்டைப் பாருங்கள்.



அதில் உள்ள உணவும் காய்கறிகள் எல்லாவற்றையும் உற்று கவனியுங்கள்.
பின் அதனை ஒவ்வொரு கவளமாக எடுத்து சாப்பிடுங்கள்

அப்படி சாப்பிடும் போது.... உங்கள் கையில் உள்ள உணவுப் பதார்த்தம் எந்த கிரகத்தின் காரகம் என உங்களால் சொல்ல முடிகிறதா?....

இதுதான் இன்றைய ஜோதிடப்புதிர்?


இது எப்படி இருக்கு விருந்து?
சுவையான விருந்துதானே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!புதிரின் விடையை!
                     __________________

*புதியன கற்போம்*

*ஜோதிடப் புதிர்*
ஜோதிட பாடத்தில் புதிய பார்வை இப்பகுதி.

*மூளைக்கு வேலை.*

*இன்றைய ஜோதிடப்புதிர்!*

*படம் பார்த்து பதில் சொல்!*

நன்கு கவனியுங்கள்!
பின் யோசித்து பதில் சொல்லுங்கள்.!
எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்?


*தட்டிவிடுங்கள் உங்கள் பொறியை...(ஜோதிட அறிவை சிந்தனையை)*...
*
*கண்டுபிடியுங்கள் புதிரின் விடையை...*


இது உங்கள் தேடுதலுக்கான வேளை(லை)...


உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

That is ur participation is most important.

உங்கள் பதிலை குழுவில் பதிவிட வேண்டாம்.எனது கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்!

மற்றவர்களும் தனியாக உட்கார்ந்து புலம்பட்டுமே!
சாரி! யோசிக்கட்டுமே!

என்ன ஓகே வா?

*புதிருக்கான விடை நாளை வெளி வரும்!....*

அதுவரை உங்களிடமிருந்து ... Good bye..🖐👋.







Thursday, July 24, 2025

பெரும் புகழும் தனமும் தரும் புஷ்கர நவாம்சம் பகுதி 1

 


பெரும் புகழும் தனமும் தரும் புஷ்கர நவாம்சம் பகுதி 1 


https://youtu.be/jcp_64i5lqc?si=3e81YnH_mUJWJqoN








உங்கள் கிரக லீலா டிவியில் 



புஷ்கர நவாம்சம் பகுதி 2

 

உங்கள் கிரக லீலா டிவி சானலில் 

https://youtu.be/3G45x4mHptc?si=q1YoC3HmIUUbDcqO


Thursday, July 17, 2025

 ஆடி  01-ந் தேதி 

17   07   2025.

வியாழக்கிழமை *தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்* ....

உத்தராயணம், தட்சிணாயனம் என்றால் என்னவென்று தெரியுமா.....?

😮😟😮😮😮

சூரியனின் நகர்வின் அடிப்படையில்..... இயற்கையாக அமையும் புண்ணிய காலங்கள் உத்தராயண புண்ணிய காலமும் தட்சிணாயன புண்ணிய காலமும் ஆகும். *உத்தராயணம்* என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம் என்று பொருள்.


💯💯💯💯💯


 ( மற்றொரு பொருளாக.... அயனம் என்றால் பின் தொடர்தல். *எப்படியெனில்*.... ராமாயணம் ராமனைப் பின்பற்றி  

ராம + அயனம் = *ராமாயணம்* என்று ஆயிற்று.) 


💯💯💯💯💯



சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள்,  அதாவது தை மாதம் முதல் நாள் உத்தரயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி வரை இருக்கிறது. இந்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதை *தட்சிணாயனம்* என்று அழைக்கிறார்கள். ஆடி மாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் சூரியன், அடுத்த ஆறு மாதங்களுக்கு அதாவது பங்குனி மாதம் வரை தெற்கு நோக்கியே பயணிக்கிறார்.


சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம்.  உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்.


⬇️⬆️⬇️⬆️⬆️


 *வேறுபாடுகள்* 


நமக்கு உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரண்டு காலங்கள் கூடிய ஓர் ஆண்டே தேவர்களின் ஒரு நாளாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு ஆண்டாக இருப்பது *தேவர்களுக்கு ஒரு நாளாக* சொல்லப்படுவதின் காரணம் இதுதான். இவற்றுள் உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயனம் என்பது தேவர்களின் இரவுப் பொழுதாகவும் கூறப்படுகிறது. உத்தராயண காலத்தின் பகல் பொழுது நீளமாகவும், தட்சிணாயன காலத்தில் இரவுப் பொழுது  நீளமாகவும் இருப்பதை நாம் பார்க்க முடியும்.


=======


 *உத்தராயண புண்யகாலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று* பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்று *மகர சங்கராந்தி பண்டிகையும்* கொண்டாடப்பட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுகிறோம்.


 அதேபோல.....

 *தட்சிணாயனத்தின் தொடக்க  நாளான ஆடி மாத முதல் நாளிலும்* பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அன்று தேங்காய்ப்பாலில் பாயசம் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.


=======


தேவர்களின் மாலைப்பொழுதாக தட்சிணாயனம் வருவதால்  பெரும்பாலான பண்டிகைகள் அந்தக் காலத்தில் இருப்பதைக் காணலாம். குளிர்ச்சியான தட்சிணாயன காலம் பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும். தட்சிணாயனத்தின் தொடக்க மாதமாகிய ஆடி மாதத்திலேயே ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் வரலட்சுமி விரதம் என்று அம்பிகை, மகாலட்சுமி ஆகியோருக்கு மிகவும் விசேஷ நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன.


⬇️⬆️⬇️⬇️⬆️


ஆடியைத் தொடர்ந்து வரும் ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் இப்படி பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதைக் காணலாம்.

 நாமும் நமக்கு பண்டிகைகளையும் விசேஷங்களையும் கொண்டு வரும் தட்சிணாயன புண்ணிய காலத்தை வரவேற்றுக் கொண்டாடுவோம்.


தெரிந்து கொள்வோம்.....


🙏🙏🙏🙏🙏

Saturday, July 12, 2025

பாரம்பரிய ஜோதிடம் பயிற்சி வகுப்பு*

 *ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட மையம் நடத்தும் ஆன்லைன் மூலம் வீடு தேடி ஜோதிடம்*


*அடிப்படை பயிற்சி வகுப்பு ஆரம்பம்* 

அட்மிஷன் நடைபெறுகிறது.

 *பாரம்பரிய ஜோதிடம் பயிற்சி வகுப்பு* 

 *_தினமும் வாட்ஸ் அப்பில் பாடங்கள் & பயிற்சி_* 


 *வாரம் ஒரு நாள்*Google meet*மூலம் ஆன்லைன் நேரடி வகுப்பு* 

 *பயிற்சி காலம்: 3 மாதம்* 



 *பயிற்சி கட்டணம் விவரங்களுக்கு-* 

தொடர்புக்கு

*திருS.ஷண்முகானந்தம் M.A.B.Ed.,RTD Hm* 

 *ஸ்ரீ பிரம்மரிஷி ஜோதிட மையம்* 

 *பொள்ளாச்சி 642 002*

*செல்:99657 28932*. 

            *94437 28932* .

விருந்தும் மருந்தும் 12/07/2025 சனிக்கிழமை

 விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்பர் நம் முன்னோர்கள்.

ஏன் அவ்வாறு சொன்னார்கள் தெரியுமா?



இப்போது தெரிகிறதா? இதன் பொருள்.