Wednesday, May 8, 2024

*XII X படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன படிக்கலாம்? செய்வது?*

 *XII X படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன படிக்கலாம்? செய்வது?* 




*(உங்கள் குழந்தைகளுக்கான ஜோதிட ரீதியான வழிகாட்டல் பதிவு.)* 




ஜோதிட ரீதியாக,10,12 விற்கு பின் என்ன படிப்பை தேர்ந்தெடுத்து  படிக்கலாம்? தேர்ந்தெடுத்து படிக்கும் துறையில், திருப்தியான அமைப்பில் வேலை வாய்ப்பு எதிர் காலத்தில் கிடைக்குமா?  தெரிந்து கொள்ள கட்டுரையை தொடர்ந்து முழுவதும் படியுங்கள்.


 *(உங்கள் குழந்தைகளுக்கு ஜோதிட ரீதியான வழிகாட்டல் பதிவு.)* 


வாழ்க்கையை தீர்மானிக்ககூடிய

 10,12  ரிசல்ட் வரத் தொடங்கிவிட்டன


 தனிப்பட்ட அமைப்பில், ஒவ்வொரு தாய், தந்தையரின் கனவும், பெரும்பாலான அமைப்பில், தன் குழந்தை மருத்துவராக வேண்டும், இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதாகவே உள்ளது.


 எல்லோரும் மருத்துவர், இன்ஜினியர் ஆகிவிட்டால் ,மற்ற வேலையை எல்லாம் , யார் பார்ப்பது ?


இறைவன் அது போல் எல்லோருக்கும் வாய்ப்பை வழங்குவதில்லை.


இந்த அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


 (மருத்துவமே படிக்க கொடுப்பினை இல்லாத ஒரு மாணவர்,  இரண்டு ஆண்டுகளாக நீட் எழுதி, அதிலும் சீட் கிடைக்காமல்,  உக்ரைனியில் மருத்துவம் படிக்க சென்றார்.  சென்ற ஆறு மாதத்தில் ,உக்ரைனில் போர் தொடங்கியதால், மருத்துவ படிப்பை பாதியிலேயே கைவிட்டு வந்துவிட்டார்.  இந்தப் பதிவு 2022 வருடம், என் டைம் லைனில்  பதிவாகியுள்ளது.  பணமும் போச்சு, படிப்பும்.......


 தனக்கு கிடைக்காமல் போன படிப்பை, தன்னுடைய குழந்தைகள்  மூலமாக ஈடேற்றும் எண்ணத்தை மாற்றுங்கள்)


 கல்வி, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு கருவி மட்டுமே.


 ஒவ்வொரு மாணவருக்கும் படிக்கும் காலத்திலோ அல்லது படித்து முடித்த பிறகு, எந்த துறையில்  ஆர்வம் இருக்கிறதோ, அந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பது  நல்லது.


 சமீபத்தில் பார்த்த ஒரு ஜாதகத்தில், ஒரு மாணவருக்கு, ஆர்க்கியாலஜி எனப்படும் புராதான வரலாற்று சிற்பங்களை (கீழடி. தொல்லியல்) பற்றி படிக்கும் படிப்பில், அதிக நாட்டம் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.


 இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில், செவ்வாய் ஆட்சி வலுவான அமைப்பில், அந்த பெண்ணின் குடும்பமே  ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். இரண்டு தலைமுறைகளாக அவர்களின் குடும்பமே நாட்டிற்கு சேவை செய்கிறது.


 ஆச்சரியப்படத்தக்க விஷயமாக, அந்தப் பெண்ணும், தற்போது பிளஸ் டூ முடித்தவுடன் ,ராணுவத்திற்கான படிப்பில் சேர, பரிட்சை எழுதி விட்டது.


 ராணுவத்தின் டெக்னிக்கல் துறைகளில் (secret service) பணியாற்றக் கூடிய அமைப்பு, அந்த பெண்ணுக்கு உண்டு.


 எந்த ஒரு ஜாதகத்திலும் ,ஒரு பலன், லக்னம் ,லக்னாதிபதிக்கு என்பதால், எந்த ஒரு ஜாதகத்திலும், லக்னாதிபதி முதலில் சுப அமைப்பில் வலுப்பெற வேண்டும்.


 இரண்டாம் இடம் என்பது ஆரம்ப கல்வியையும் அதாவது எட்டாவது வரை  ஆரம்பக் கல்வியை குறிக்கும்.


 4ம் இடம் என்பது உயர்கல்வியை குறிக்கும் இடம்.


 ஒன்பதாம் இடம், ஒன்பதாம் அதிபதி  ஆராய்ச்சி படிப்புகள் முதுநிலை படிப்புகளை குறிக்கும் பாவகம்.


 பொதுவான அமைப்பில் வித்தியாகாரகன் புதன்.


படிப்பிற்கு சந்திரனும்,  குருவும் லக்னாதிபதியும் நல்ல அமைப்பில் இருந்து, நல்ல யோக திசைகளும் நடைமுறையில் இருக்க வேண்டும்.


 இரண்டு, நான்காம் பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டு அமர்ந்திருந்தாலோ , பார்த்தாலோ, இத்துடன் வித்யா காரகன் எனப்படும் புதன் வலு குறைந்த அமைப்பில், படிக்கும் காலகட்டங்களில் சாதகம் இல்லாத தசா புத்திகள் சென்று கொண்டிருந்தால், படிப்பில் தடை அல்லது விட்டு விட்டு படிக்கக்கூடிய சூழ்நிலை அல்லது சாதாரண மாணவராக பள்ளியில் தேர்ச்சி பெறுதல் போன்றவை இருக்கும்


(  மீன லக்னத்திற்கு ,

படிக்கும் காலத்தில், சுக்கிர திசை நடக்கும் பல ஜாதகங்களில், இளமைப் பருவங்களில் படிப்பு தடைபடுவதை பார்க்க முடிகிறது.)


 பிளஸ் டூ படிக்கும் காலகட்டங்களில் அவயோக தசா புத்தியுடன், அஷ்டம சனி ,ஏழரை சனி நடந்தால், ஒரு மார்க், இரு மார்க்குகளில் தன் விரும்பிய துறை கிடைக்காமல், 

self finance   அமைப்பில், தன் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்கும் அமைப்பைக் கொடுக்கும்.


 லக்னம் ,லக்னாதிபதி வலுவாகி, நல்ல யோக தசா புத்திகள் நடைபெறும் பட்சத்தில், மிகக் கடினமாக போராடி ,பெறக்கூடிய அமைப்பை கொடுக்கும்.


 சில லக்னங்களுக்கு, சில குணங்கள் இயற்கையாக உள்ளது .


பொதுவாக விருச்சிக லக்னம், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மருத்துவத் துறை சார்ந்த அமைப்புகளில் அதிக அளவு இருப்பதை பார்க்க முடிகிறது. 


அது போல் கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள், ஐடி துறையில் பலர் பணியாற்றுவதையும் பார்க்க முடிகிறது.


 இது அந்த ராசி, லக்னங்களுக்குரிய தனித்துவ குணமாகும்.


 இத்துடன்  லக்னாதிபதி, ராசி அதிபதி, பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது ,அந்த லக்ன  ராசிக்கான  இயற்கை குணத்துடன், அந்த கிரகத்திற்கான ஆளுமை படிப்பை, படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.


 மருத்துவராக வேண்டும் என்று target fix செய்து கொண்டு படிக்கும் ஜாதகர்கள், இது போன்ற அமைப்புடன் தான் இருப்பார்கள்.


 60 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் துறை  இந்தியாவில் இல்லை.  நூறு ஆண்டுகளுக்கு முன்பு நானோ டெக்னாலஜி துறை இல்லை. இவ்வளவு ஏன், இதயமாற்று சிகிச்சையே, கடந்த நூற்றாண்டில் தான் செய்யப்பட்டது.


சாகவைக்கும் கேன்சருக்கு முழு அளவில் மருந்து இல்லை.சாதாரண சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய  மருத்துவம் இன்று வரை இல்லை.

மருத்துவமும் அப்டேட் செய்யப்படக்கூடிய அமைப்பில் தான் உள்ளது.


 ஏற்கனவே சொல்லியது போல் படிப்பு வாழ்க்கையை பலப்படுத்த உதவும் ஒரு கருவி மட்டுமே. படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. பல ஜாதகங்களில் இதை என்னால் நிரூபிக்க முடியும்.


நான் அறிந்த MBBS DCH  படித்த குழந்தை மருத்துவர் ஒருவர், முழு நேர தொழிலாக, எண்ணெய் கடை சொந்தமாக வைத்து , கல்லாவில்  உட்கார்ந்து கரன்சியை எண்ணுகிறார்.  ஒரு மருத்துவ சீட் வேஸ்ட்.


 வாழ்க்கைத் துணையை அணு அணுவாக ரசித்து தேர்ந்தெடுக்கும் நாம், நம் வேலையையும் காதலித்து செய்ய வேண்டும்.


 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூக்கம் .எட்டு மணி நேரம் குடும்பம். எட்டு மணி நேரம் வேலை என்று அமைப்பில் இருக்கும் பொழுது ,ஒரு நாளின் 3ல் ஒரு பகுதி நமக்கு பிடிக்காத வேலையாக அமைந்தால் வாழும் நாள் நரகம் ஆகிவிடும்.


சரி,


 சூரியனின் ஆதிக்கம் உள்ள சிம்ம ராசிக்காரர்கள்,  ஜாதகத்தில் சூரியன் சுப அமைப்பில் வலுவாகும் பட்சத்தில், அதாவது தொழில் ஸ்தானத்தோடு சம்பந்தப்படக்கூடிய அமைப்பில் இருந்தால், நிர்வாகத்துறையை தேர்ந்தெடுப்பது நல்லது.


 எந்த ஒரு அமைப்பிலும் நிர்வாகம், ஆளுமை செலுத்தக்கூடிய அமைப்புகள், சில நிலைகளில் அரசியல் , H R அமைப்புகள் போன்றவற்றில் இவர்களின் ஆதிக்கம் செலுத்தினால் ,அதில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.MBA சிறப்பு.


 சூரியன் வெப்ப கிரகம் என்பதால் வெப்பம் சார்ந்த எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் துறைகள்  சாதகமாக அமையும்.


  சந்திரன் நீர் கிரகம் என்பதால், நீர் மேலாண்மை படிப்புகள் , கப்பல் துறை எனப்படும் மரைன் இன்ஜினியரிங், ஆழ்கடல் ஆராய்ச்சி படிப்புகள், கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய  படிப்புகள் சிறப்பு தரும்.


 செவ்வாய் சுப அமைப்பில் வலுவாகும் பட்சத்தில், முதல் நிலை அமைப்பாக மருத்துவர், காவல்துறை பணி ,இராணுவத் துறை, சிவில் இன்ஜினியரிங்,  செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் , கேட்டரிங் சார்ந்த துறைகள்  போன்றவையும் சிலருக்கு அமையும்.Agri படிப்பும் சிறப்பு.


 புதன் வலுவாகும் பட்சத்தில் கணக்கு வழக்குகள், ஐடி துறை, C A எனப்படும் ஆடிட்டிங் துறைகள் , B.com  போன்ற துறைகளை தேர்ந்தெடுத்து படிப்பது மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.


 குரு என்றாலே தமிழில் ஆசிரியர் என்பதால், குரு வலுவானவர்கள், ஆர்ட்ஸ் டிகிரி அனைத்தும் படிக்கலாம் .அந்த துறையில்  கோலேச்சும் பட்சத்தில் அவர்களுடைய ஜாதகத்தில் , கூடவே புதன் வலுவாகும் பட்சத்தில் ஆசிரியர்  பணி அமையும்.


 இத்துடன் ஒன்பதாம் பாவகம் வலுப்பெறும் பட்சத்தில் , பட்ட மேற்படிப்பு படித்து, விரிவுரையாளர் போன்ற பணியில் சேரலாம்.


 குரு தன காரகன் என்பதால், வங்கித் துறை, நிதித்துறை சார்ந்த துறைகள் அனைத்தும் இவர்களுக்கு அத்துபடி  என்பதால், முதலீடு சார்ந்த துறைகள் அனைத்தும் படிக்கலாம்.


 சில நிலைகளில், சிலருக்கு வேதகல்வி கற்க கூடிய அமைப்புகளும்  அமைகின்றன. இதையும் பல ஜாதகங்களில் பார்க்க முடிகிறது.


 சுக்கிரன் கலைத்துறைக்கு காரக கிரகம் என்பதால் சினிமா துறை, ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பேஷன் டிசைனிங் , இன்டீரியர் டெக்கரேஷன் துறை,  எந்த ஒரு துறையிலும் அழகு சார்ந்த அமைப்பில் படிப்பது, போன்றவை அமையும்.


 இத்துடன் ஜாதகத்தில் புதனும் வலுவாகும் பட்சத்தில், சினிமாவில் பாட்டு எழுதுவது, சவுண்ட் டிசைனிங், கிராபிக்ஸ் காட்சிகள்,vfx , sfx பற்றிய படிப்புகள்  படிப்பது நல்ல சிறப்பை கொடுக்கும்.


art work  அனைத்தும் செய்யலாம்.


 சனி ஜாதகத்தில் வலுவாகும் பட்சத்தில் , சுரங்கம் பற்றிய படிப்புகள், செவ்வாய்,சனி சேரும் பட்சத்தில் மெக்கானிக்கல் துறை,ITI, எலெக்ட்ரீஷியன், பிட்டர் போன்ற படிப்புகள்  நல்ல பலனை கொடுக்கும்.oil,பெட்ரோலிய படிப்புகள், gas pipe line, நிலக்கரி, பூமிக்கு கீழ் வேலை பார்க்கும் துறை,பிளாஸ்டிக் Engineering, கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யக்கூடிய படிப்புகள், அகழ்வாராய்ச்சி படிப்புகள்,தொல்லியல் துறை,Forensic department, 

sanitary inspector, house cleaning, home making துறைகளில் படித்து சிறப்பு பெறலாம்.


 ராகு, கெமிக்கல் இன்ஜினியரிங் சார்ந்த துறைகள், மருத்துவம் மருத்துவம் சார்ந்த பார்மசி  சார்ந்த படிப்புகள், வேதி பொருள்களை கையாளும் துறை,EEE,ECE ,robotic  துறை  படிப்பது சிறப்பைத் தரும்.


 கேது வலுவானவர்கள் மெடிக்கல்,மெடிக்கல் சார்ந்த துறை, வேத கல்வி  இவற்றைத் தேர்ந்தெடுத்து படிப்பது நல்லது.


 மீண்டும் ,மீண்டும் சொல்கிறேன். படிப்பு, வாழ்க்கையை வளப்படுத்த உதவும் ஒரு காரணி மட்டுமே.


 நல்ல தசா புத்திகளும், நல்ல  யோக அமைப்புகளுமே, ஒரு ஜாதகத்தில் ஒருவரை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.


 மேற்சொன்ன அமைப்பில் உங்கள் குழந்தைகளின்  ஆர்வத்தை அறிந்து அதற்கேற்ற கல்வியை தேர்ந்தெடுப்பது நல்லது.


வணக்கம் 

Tuesday, May 7, 2024

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:

 🌚 அமாவாசை...! 



⚫அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:


⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.


⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.


⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.


⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?


⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.


⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.


⚫இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி, மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.


⚫முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.


⚫அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.


⚫அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.


⚫அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


⚫அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.


⚫ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.


⚫சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.


⚫அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.


⚫சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.


⚫அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.


⚫வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.


⚫அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.


⚫அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.


⚫உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.


⚫ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.


⚫நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.


⚫அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.


⚫எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.


⚫முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...