*மரணம் என்னும் தூது வந்தது. அது கயிறு (தூக்குக் கயிறு) என்னும் வடிவில் வந்தது
*தெரிந்த கதை*
ஓர் உண்மையான போற்றுதலுக்குரிய சாமியாரைக் கொன்றதால் தூக்கிலிடப்பட்ட கொலையாளியின் ஜாதகம் இது.
40வயது தொடும் முன்பாக அவன் ஆயுள் முடிந்து விட்டது.
*தெரியாத விடை*
*ஜாதகரின் இந்த*
*படுபாதகச் செயலுக்கு* *ஜாதக ரீதியான* *காரணம் என்ன?**
*கொஞ்சம் பார்த்தால்* *தெரியும் விடை*
ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜாதகத்தை அலசி ஆராய்ந்து அதற்கு மட்டும் பதில் சொல்லவும் என்று கேட்கப்பட்டிருந்தது.
*எதிரிகளின் வெற்றிக் கூட்டணி*
தசாநாதன் புத்திநாதன் அந்தரநாதன் வலிமையைப் பறைசாற்றும் ஜாதகம் இது.
ஜாதகரின் இந்த படுபாதகச் செயலுக்கு இழுத்துச் சென்ற சில கிரக அமைப்புக்களை மட்டும் இப்போது பார்ப்போம்.
19 May 1910ல் பிறந்த அவன், 15 November 1949ல் தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்தான். 40 வயதைத் தொடும் முன்பாகவே அவன் ஆயுள் முடிந்து போய்விட்டது.
1. ஜாதகத்தில் ஆயுள்காரகன் சனி நீசமாகியுள்ளான். எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் நீசமான சனி பெறவில்லை.
2. லக்னாதிபதி புதன் 12ல் மறைவு.
அதுமட்டும் அல்லாமல் அவன் ராகுவுடன் கூட்டாக ராகுவின் பிடியில் உள்ளான்.
புதன் தனித்து இருந்தால் சுபக்கிரகம், தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் பாவியாகிவிடுவான். புதன் சுபமாகவோ அல்லது சுபக்கிரகங்களுடன் கூட்டாகவோ இருந்தால் ஜாதகனின் புத்தி நல்ல வழியில்’ ஆக்கபூர்வமான வழியில் வேலை செய்யும்.
இல்லை என்றால் தீய வழியில் வேலை செய்துவிடும்.
லக்கினத்தையும், லக்கினாதிபதியையும் வைத்து எவ்வளவு நல்ல குணம் கொண்டவனாக ஜாதகன் இருந்தாலும், என்றாவது ஒரு நாள், ஒரு நாளாவது, அவனைக் கிரிமினலாக ஆக்கிவிடும். அதாவது கிரிமினல் வேலையைச் செய்ய வைத்துவிடும். அதைத் தவிர்க்கமுடியாது.
3.சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தாலும், அவன் விரைய ஸ்தான அதிபதி. அவன் முக்கிய கேந்திர வீட்டில் அமர்ந்து நிஷ்பலம் பெற்று ஜாதகனின் வாழ்க்கையை விரையம் செய்து விட்டான்.
4. சூரியன் 12ல் இருந்தால் அரசிற்கு எதிரான காரியங்களைச் செய்ய நேரிடும். அரச தண்டனையைப் பெற நேரிடும்.
அதே நிலையில் உள்ள சூரியன் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெறவில்லை. மாறாக ராகுவின் பிடியில் கூட்டணியோடு இருக்கிறான். அதனால்தான் ஜாதகனுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைத்தது.
5. லக்கினத்தில் இருந்த செவ்வாயின் தீய பார்வை மனோகாரகன் சந்திரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அது அவனுக்கு அசாத்திய மன உணர்வுகளை தைரியத்தைக் கொடுத்தது.
அவன் ஒன்றும் கொலையைத் தொழிலாகக் கொண்டவன் அல்ல. இந்த அசாத்திய, இயற்கைக்கு மாறான மன உணர்வுதான் அவனைக் கொலை செய்ய வைத்தது,
6. அவன் ஜாதகத்தில் *கஜ கேசரி யோகம் உள்ளது* . அது அவனைக் காப்பாற்றவில்லை.
ஜாதகத்தில் அந்த யோகம் அடிவாங்கிக் கெட்டுப்போய் உள்ளது.
7.எல்லா லக்னத்துக்கும் பொதுவான மாரக ஸ்தானம் 2 மற்றும் 7 ஆகும்.
அவர்கள் இங்கு கூட்டணி வைத்து மற்றுமொரு கேந்திர ஸ்தானமான 4மிடத்தில் அமர்ந்து செவ்வாயின் தீய பார்வையையும் பெற்று
விரையாதிபதி சுக்கிரனின் பார்வையால் பாதகாதிபதி குரு பகவானின் செயல்பாடுகள் தீவிரமடைந்தன.
8.உச்சமான கேதுவின் சாரத்தில் இருந்த சனிபகவான் தனது கொடிய தீய பார்வையை லக்னம் மற்றும் லக்னத்தில் இருந்த 6,11க்குரிய செவ்வாயின் மீதும் ( (உபய லக்னத்துக்கு மாரகாதிபதி 7,11க்குரியவர்)
மற்றும் 5,8 ஆகிய ஸ்தானங்களில் செலுத்தி கெடச் செய்தது.
9.சுபகிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமரக்கூடாது.
ஆனால் அவர்கள் கேந்திர ஸ்தானங்களில் டெண்ட் அடித்து படுபாதகச் செயலுக்கு அடிகோலிட்டனர்.
10. ஆக ஜாதகருக்கு (புதன்) பலமாக 8 கோள்களும் செக் வைத்து கனகச்சிதமாக நாடகத்தை அரங்கேற்றி விட்டனர்.
(சூரியன் சந்திரன் செவ்வாய் குரு சுக்ரன் சனி ராகு கேது )
புதனை படுபாதகத்தை செய்ய விட்டு வேடிக்கை காட்டி தூக்கில் தொங்கவும் விட்டனர்.
*எதிரிகளின் வெற்றிக் கூட்டணி* தான் நினைத்ததை காரியத்தை நடத்தி எக்காளமிட்டது.
பாதகாதிபதி, மாரகாதிபதி, கேந்திர அதிபதி ஆகிய *குரு திசையில்* அஷ்டமாதிபதி என்னும் **சனி புத்தியில்* மற்றோரு மாரக அதிபதியான *செவ்வாயின்* *அந்தரத்தில்*
கோள்கள் தன் வேலையை திறம்பட செய்து முடித்து விட்டன.
கச்சிதமாக வேலையை முடித்த ஜாதகருக்கு தூக்கு கயிறைப் பரிசாக அளித்து விட்டனர்.
இதுதான் *கோள்களின் கோலாட்டம்*
*கிரகங்களின் மாயாஜாலம்* என்னவென்று சொல்வது?
கொலையாளி கோட்சே
கொலையுண்டவர் மகாத்மா காந்தி
நன்றி, வணக்கம்
என்றும் அன்புடன்,
*S.ஷண்முகானந்தம் எம்ஏ பிஎட்*
*ஸ்ரீமால் சிந்தை கூரியன்*
பொள்ளாச்சி
99657 28932
94437 28932
🙏🇮🇳✍️