Wednesday, April 21, 2021

 21.04.2021 #ஸ்ரீ #ராம #நவமி.

****************************

ஜெகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே..


மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவ தாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்ப தற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.


மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதி யான கொள்கையுடன் விளங்க வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவர் அவர்.


அந்த ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது.


அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கி ரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி புகழ்கொடியை பறக்கவிட்ட தசரதருக்கு நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக்குறையாக இருந்தது. தனது மனக்குறை யை குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.


வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதை மனைவிக ளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாய சத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.


பங்குனிமாதம் நவமியன்று கோசலை ஸ்ரீ ராம பிரானைப் பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர்.


ராமன் அழகும், நல்ல தோற்றமும் அரச அம்சங் களுடனும் பிறந்தார். பூமியில் அவருக்கு நிகர் எவருமில்லை. மிகவும் பண்பானவர். அகில உலகமும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னை நம்பி வந்தவர்களை  கைவிட்டதே இல்லை.


மிதிலை மாநகரில் ஜனகன் அரண்மனையில் ராமபிரானின் கைப்பட்டு பரமேஸ்வரனின் வில் உடைப்பட்டது. கானகத்தில் பெருமாளின் கால்பட்டு கல் உருகப்பெற்றது. ராமபாணத் தால் தாடகையை வதம் செய்தார். ராமநாம மகிமையால் வேடன் வால்மீகியின் சாபம் நீங்கியது. ராமரின் திருநாம ஜெபத்தால் நமது பாவங்கள் எல்லாம் விலகும். புண்ணியங்கள் பெருகும்.


தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன் வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வா மித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தார். அனுமன் உள்ளிட்ட வானரர்களின் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத் து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்தார். விபீஷ்ணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.


சீதையை தீக்குளிக்க செய்து புஷ்ப விமானத் தில் அழைத்து கொண்டு அயோத்தி சென்று முடிசூடி நல்லமுறையில் அரசாண்டார்.


ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வரியங்கள் பெருகும்.


விரதம் இருப்பது எப்படி?

**************************

ராமநவமி அயன்று அதிகாலையில் குளித்து விட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடை பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசி மாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.


சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற் றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்றைய தினம் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வது மாக இருக்க வேண்டும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷே கத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்த பின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலை யில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.


லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.


‘ஸ்ரீராமஜெயம்’ என்ற எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதத் தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்த டுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.


விசிறி தானம்

****************

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவார்கள். ஒரு சிலர் பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்ற வற்றையும் கொடுப்பது உண்டு. ராமபிரான், மகரிஷி விஸ்வமித்திர ரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவா சம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும், சித்திரை மாதமான கோடை காலத்தில் தான். ராமர் பிறந்த போது அவரைப் பார்க்க வந்தவர்களு க்கு, தசரதர், நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது


" ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே" ஜெய் ஸ்ரீ ராம்...


எல்லோரது வாழ்வும் ஸ்ரீஇராமரின்  அருளால் சிறந்து விளங்க பிரார்த்திக்கின்றேன்...


ஸ்ரீ ராம..  ஜெய ராம..  ஜெயஜெய ராமா...

 *நவ கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்.* இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம். சகல ஐஸ்வரிய அபிவ்ருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ஸ்ரீராமரின் அருளால் கிடைக்கும். ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் நவகிரகங்களில் முக்கிய கிரகங்கள் உச்சத்தில் அமர்ந்துள்ளன. மேஷத்தில் சூரியன் உச்சம், கடகத்தில் சந்திரன் ஆட்சி, குரு உச்சம், துலாம் ராசியில் சனி உச்சம், மகரத்தில் செவ்வாய் உச்சம், மீனம் ராசியில் சுக்கிரன் உச்சம் என மொத்தம் 5 கிரகங்கள் உச்சம் பெற்றும், மனோகாரகன் சந்திரன் ஆட்சி பெற்றும் அமர்ந்துள்ள அம்சமான ஜாதகம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்.



நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.


ராவணன் என்ற அரக்கனை அழிக்கவே மகாவிஷ்ணு மனிதராக ராமராக அவதரித்தார். காரணம் மனிதர்களையும் குரங்குகளையும் ஏளனமாக நினைத்தே ராவணன் பிரம்மன் சாகா வரம் கேட்ட போது மனிதர்கள், குரங்குகளுக்கு தன்னை கொல்ல தகுதியில்லை என்று சொன்னார். எனவேதான் ஸ்ரீராமர் மனிதராக அவதாரம் எடுத்து குரங்குகளின் துணையோடு ராவணனை அழித்தார்.


ராம அவதாரம்

நவமியில் அவதரித்த ஸ்ரீராமர்

சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர் ஸ்ரீராமர் அதைத் தான் ராம நவமி என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். அயோத்தி மன்னர் தசரதருக்கும் கவுசல்யாவிற்கும் நவமி திதியில் மூத்த மகனாக ராமனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.


 ராமர் ஜாதகம்

யோக ஜாதகம்

ஸ்ரீராமர் கடக லக்னம், கடக ராசி அவர் பிறந்த போது, நவ கிரகங்கள் எங்கெங்கு இருந்தன என்று பார்த்தால் ஐந்து கோள்கள் உச்சத்தில் இருக்க கடக லக்னம் புனர்பூச நட்சத்திரத்தில் சந்திரனும் பிரகஸ்பதியும் இணைந்து குரு சந்திர யோகத்தில் இருக்கிறார்கள். குருவும் செவ்வாயும் நேருக்கு நேராக பார்த்து குரு மங்கள யோகத்தில் இருக்கிறார்கள். சந்திரனும், செவ்வாயும் நேருக்கு நேராக பார்ப்பதும் யோகம்தான்.



ராமரின் தாய்

தாயின் பங்கு

கடகத்தில் லக்னத்தில் சந்திரன், குரு. லக்னாதிபதி லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். ஆறு ஒன்பத்துக்கு உரிய குரு லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். கடகம் கால புருஷத்திற்கு நான்காவது வீடு. ராமர் ஜாதகத்தில் நான்காவது வீடான துலாமில் சனி உச்சமடைந்து வக்ரமடைந்திருக்கிறார். சனி ஏழு மற்றும் எட்டிற்கு உரியவர். ராமருக்கு அம்மாவும், வளர்ப்பு தாயான சித்தியும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.


 *வனவாசம் சென்ற ராமர்* 


ராமரின் அம்மா முக்கிய பங்காற்றியிருக்கிறார். நான்கில் சனி உச்சம். சனி ஆயுள் காரகன், வேலைக்காரன், தசரதனின் இன்னொரு மனைவி கையேயி ராமரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் அவரால்தான் அவர் வனவாசம் சென்றார். ஏழாம் வீடான களத்திரம் சீதை, களத்திர காரகன் சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.



ராவணன்

போர் செய்த ராமர்

ராமர் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் ராகு இருக்கிறார். நோய், கடன், எதிரி ஸ்தானம். ராகு அரக்கன். ராவணன் என்ற அரக்கனை கொல்ல வேண்டியதுதான் ராம அவதாரத்தின் நோக்கம். ராமரின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனது மனைவியை காப்பாற்ற அவர் போர் செய்தார். செவ்வாயின் ஏழாம் பார்வை லக்னத்தின் மீது விழுந்ததே வெற்றிக்கு காரணம்.


அவதார நோக்கம்

யுத்தம் செய்த ராமர்

கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.


ராம நவமி விரதம்

விரதம் இருந்தால் பயன்

ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. பிரதமை தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்

ராமர்

ஜாதகத்தை பூஜை செய்யலாம்.

நவகிரக தோஷம் நீங்கும்

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர். அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் ஜாதக ரீதியாக இருக்கும் நவகிரக தோஷங்களும் நீங்கும்.

Wednesday, April 14, 2021

 சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..

தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்

தெரியாத உண்மைகள்.


சித்திரை 1

ஆடி 1

ஐப்பசி 1

தை 1


இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.


நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?


"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.


என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.


வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....


ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!


பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...


அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...


இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!


சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?


சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)


அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)


மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)


மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)


இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...


#சித்திரை  (vernal equinox) - புத்தாண்டு.

#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.

#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.

#தை 1(winter solstice) - பொங்கல்.


இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...


#நமது #முன்னோர்கள்  "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, April 5, 2021

 *தாமத திருமணம் ஏன்?*


கோள்களின் கோபமா? சமுதாயத்தின் எதிர்பார்ப்பு சாபமா?


*நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?*


வாழ்க்கை வாழ்வதற்கே

தட்டி கழிப்பதற்கு அல்ல.


35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !...


30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.


இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படைச் சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். 


அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.


குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.


பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர். 


சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.


வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் !!.


1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.


இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பது தான் !!


ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.


சரி, இதன் விளைவு என்ன என்று பார்ப்போமா ?!.


1947 ஆண்டுக்கு முன் 13 - 15 வயதுக்குள் திருமணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை. ஒரு டஜன் குழந்தைகள். ஒவ்வொருவரும் இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். பெண்ணின் வேலையே பெற்ற பிள்ளை, குடும்பத்தோடு கொஞ்சி மகிழ்வது தான். தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. தேவையும் இல்லாத மன நிலை.


1960 ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் என சர்வ சாதாரணமாக பெற்றுக் கொண்டார்கள். நல்ல நிலை தொடர்ந்தது.


1980 ஆண்டுக்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு. விளம்பரமும் நாம் இருவர், நமக்கு இருவர் என்று சாக்கிய சதி வெளிப்படையாக பிரச்சாரம் செய்தது.


2000 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறி விட்டது. நாம் இருவர், நமக்கு ஒருவர் என்ற சதிப் பிரச்சாரம். பின்பு நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை என்று வேறு.


ஒற்றை குழந்தையின் வளரும் மன நிலை எப்படி இருக்கும் !!


ஆனால் 2010 ஆண்டுக்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா!!! என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை என்ற நிலையில் உள்ளனர்.


இதற்கு அறிவியல் ஆயிரமாயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்.


1960 ஆண்டு வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம்

உணவு: ராகி, கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, கருப்புக் கொள்ளு, கருப்பட்டி...


1975 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.

உணவு: ஐ.ஆர் அரிசி


1992 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25

உணவு: பட்டை தீட்டப்பட்ட டபுள் பாலீஷ் அரிசி.


2000 ஆண்டுக்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..

உணவு: துரித உணவு.


2010க்கு மேல்

உணவு: மைதா மாவில் தயாரித்த கேவல உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.


இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.


ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.


வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.


திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம், புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து, சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் எத்தனையோ அதிகம் பேர்.


எனவே, வரும் காலம் இப்படித் தான் இருக்கும் என்று நீங்கள் தீர்மானம் செய்யாமல் இறைவனை முழு மனதாக வேண்டி, நல்லதை நினைத்து, திருமணங்கள் முடித்தால் பாசத்தோடு வளர்த்த பெற்றவர்களுக்கு துரோகம் செய்யாமல் இருக்கலாம்.


எல்லாவற்றுக்கும் மேலாக 

மாடு வளர்த்தால் கேவலம். 

பால் கறந்தால் கேவலம்.

மரம் வளர்த்தால் கேவலம்.

விவசாயம் செய்தால் கேவலம்.

இது நம் வாழ்வியல் என்பதை சுலபமாக மறந்து விடுகிறோம்.


ஐடி தொழில் போகிறோம்.

கலாச்சாரம் மாற்றப் படுகிறது.

செய்யாத தவறுக்கு சுய அறிவு இல்லாத இன்னொருவனிடம் கை கட்டி நிற்கிறோம்.

இஷ்டம் இல்லாத பல நிலையை கடந்து பணம் சம்பாதிக்கிறோம்.

ஒரு கட்டத்தில் வெளியே போகச் சொல்கிறான்.

வாழ்வை தொலைக்கிறோம்.


இது எல்லாமே நம் நிஜ வாழ்வியலை கேவலம் என்று நாம் தொலைத்ததால் வந்த வினை தானே!.


வெளி நாடு போகிறேன் என்பான்.அவன் என்ன வேலை செய்வான் என்று அவனே வெளியில் சொல்ல முடியாது.

ஆனால் தான் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தப் படுத்த தயங்கியவனாகவே கடைசி வரை வாழ்ந்து சாகிறான்.


நம் வீடு, நம் குடும்பம், என் தோட்டம், என் மாடு, என் சாமி, என் கலாச்சாரம், என் தெய்வம், என் பண்பாடு, என் மண், என் ஊர், என் தேசம் என்று ஒற்றுமையில் துண்டாடப்பட்டு உடைகிறானோ அன்றே தொலைகிறான்.


ஆண் 23,24 தாண்டிய உடன், பெண்கள் 20,21 வயதில் திருமணம் செய்து விட வேண்டும்.


நான் சம்பாதித்தால் தான் திருமணம். எனக்கு வெள்ளை மாப்பிள்ளை வந்த பிறகு தான் திருமணம் என்று எதையாவது கற்பனை செய்து பொன்னான காலத்தை தொலைத்தால் பொன்னான குழந்தைச் செல்வம் இருக்காது.


கஷ்டம் என்பது தவறு அல்ல. அது வாழ்க்கைக்கு தேவை.


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம். அதற்கு பணம் தேவை தான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.


சரியான கல்வி அறிவு, நல் ஒழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து திருமணம் முடியுங்கள்.


அத்தனையும் ஒரு பெண்ணே வாழ்க்கையில் கொண்டு வந்து விட்டால் ஆணே உனக்கு என்ன வேலை!!.

அது ஆண் மகனுக்கும் அழகு அல்ல. அது அந்த பெண்ணுக்குமே சுவாரஸ்யம் இருக்காது.


பெண்களே, உங்களுக்கு தெய்வ நம்பிக்கையும், அன்பும், அறிவும் இருந்தால் கட்டாயமாக உங்கள் கணவனோடு சேர்ந்து முன்னேறி விடுவீர்கள். பல குழந்தை பெற்று சிறப்போடும் இருப்பீர்கள்.

ரொம்ப கணக்குப் போட்டாலும் ஆண்டவன் போடும் கணக்கு வேற மாதிரித் தான் இருக்கும். அப்பா சம்பாதித்து கொடுக்கும் பிள்ளைக்கு பெரிய அனுபவம், நம்பிக்கை இருக்காது. 


அதே நேரத்தில் அவள் வீட்டில் கார் கிடைக்குமா, பவுன் கிடைக்குமான்னு பேயா அலையாமல் நம்ம குணத்துக்கு ஒத்து வருவாளான்னு பார்க்கும் ஆம்பளையா ஆண் வாழ வேண்டும்.


வாழும் வாழ்க்கையில் மனது ஒத்து போகிறதா பாருங்கள். வாழும் சிறந்த வயதை தொலைக்காதீர்கள்.


தெய்வ நம்பிக்கை ஒன்றை மட்டும் அசைக்க முடியாத அளவு நிலையாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு இனிமை ஆகியே தீரும்.


வாழ்க்கையில் கடைசி வரை ஏதாவது கடன், ஏதாவது பிரச்சனை இருக்கும். எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தான் திருமணம் என்றால் வாழும் காலம் தொலைந்து போகும்.


ஜாதகத்தையும் சமுதாயத்தையும்

(பாதகத்தை) சாதகமாக்கி

நல்வாழ்வுக்கு வழி அமையுங்கள் இளைய சமுதாயமே!


 *ஸ்ரீமால் சிந்தைகூரியன்*


Saturday, April 3, 2021

 .அன்பார்ந்த அரசு ஊழியர் ஆசிரியர் பெருமக்களே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

தாங்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தால் தயவுசெ ய்து இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதை வாசிக்கவும்.


தேர்தல் பணியை பற்றி எண்ணற்ற ஆலோசனைகள் காணொளி காட்சிகள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன.


ஆனால் எனது ஒரே ஒரு அறிவுரை தேர்தல் முடிந்து 6ஆம் தேதி இரவு தேர்தல் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தையோ நான்கு சக்கர வாகனத்தையோ தாங்களே ஓட்டிவந்து தங்கள் வீடு நோக்கி பிரயாணம் செய்ய வேண்டாம் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.

 5 ஆம் தேதி இரவு   இடத்தில் உறக்கம் வராமல் சிரமப்பட்டு இருப்போம். தேர்தல் நாளன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து மாதிரி வாக்கெடுப்புக்கு தயார் செய்து அதைத் தொடர்ந்து 11 மணி நேரம் இடைவிடாமல் வாக்கெடுப்பு நடத்தி பின்பு மேலும் அவற்றைப் தயார் செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் வரை இடைவிடாது உழைத்து இருப்போம்.


நமது உடலும் கண்களும் எவ்வளவு களைத்துப் போய் இருக்கும் என்பது நமக்கே தெரியாது.


இதன் பிறகு நாம் அவசரஅவசரமாக வீடு நோக்கி நமது வாகனத்தை நாமே ஓட்டிச் செல்லும்போது நாமோ அல்லது நம்மைப் போல் தேர்தல் பணி முடித்து எதிரில் வருபவரோ ஒரு நொடி கண்ணசந்தால் போதும் என்ன நடக்கும் என்பது தாங்கள் அறிந்ததே.


இதை தவிர்ப்பதற்கு ஒரே வழி வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைத்த பிறகு குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது வாக்குச்சாவடியில் தூங்கிவிட்டு ஓய்வெடுத்த பின் வாகனங்களை ஓட்டிச் செல்லலாம். மூட்டைப் பூச்சிக் கடிக்கும் கொசு கடிக்கும் பயந்து உயிரை பணயம் வைக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.


நான்கு மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு செல்வதால் எதையும் நாம் பெரிதாக இழந்து விடப் போவதில்லை. 

இப்போதே இந்த மனநிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். நாம் சிங்கம் புலி போன்ற கொடிய விலங்குகளுடன் தேர்தல் பணியாற்ற போவதில்லை நம்மை போல ஒரு ஆசிரியரிடம் அல்லது அரசு ஊழியர் உடன் தான் பணியாற்ற போகிறோம் என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


அரைமணி நேரத்தில் வீட்டுக்கு சென்றால் நிம்மதியாக உறங்கலாம் என்ற எண்ணமே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. அரை மணி நேர பயணத்தில் ஒரு நொடி தடுமாற்றம் அல்லது உறக்கம் நமது வாழ்வையே சிதைத்துவிடும். 


தேர்தல் பணி ஆற்றியவர் வாகனத்தை இயக்க 

ஒரே வாகனத்தில் வந்த நண்பர்கள் இரவிலேயே பயணம் செய்ய தயவுசெய்து ஊக்குவிக்க வேண்டாம்.


கடந்த தேர்தல்களில் நானும் அவசரப்பட்டு வாகனம் ஓட்டி வந்து எனக்கு முன்பு இருசக்கர வாகனங்களில் வந்த நண்பர்கள் விபத்தை சந்தித்து அதனால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய முடியாமல் இன்று வரை அவர்களும் அவர் குடும்பத்தாரும் அனுபவித்து வருவதை கண்கூடாக பார்ப்பதனால் தான் இந்த பதிவு.


ரியல் வாழ்வில் ரீவைண்ட் கிடையாது ஊழியர்களே

என்றும் அரசு ஊழியர் நலனில்.                 நாளை அனைவரும் நம் நாட்டின் புனிதப் பணிக்குச் செல்கிறோம். எளிமையாகச் செல்லுங்கள். பொன் நகைகள் அதிகம் வேண்டாம். புன்னகைய மட்டுமே முகத்தில் கொண்டு செல்லுங்கள்.

செல்லும் இடம் புதிய இடம். தொடர்பில்லாத பேச்சைத் தவிருங்கள். உங்கள் மனதில் உள்ள விருப்பு, வெறுப்புகளை வீட்டில் விட்டுச் செல்லுங்கள். அரசியல் பேச வேண்டாம். நமக்குத் தரப்பட்ட புனிதப் பணியை மன விருப்போடு செய்வோம்.

செல்லும் இடம் குக்கிராமமாகவும் இருக்கலாம். எனவே பிரட் பாக்கெட், பேரீட்சை, உலர் பருப்புகள் போன்றவற்றை உடன் கொண்டு செல்லுங்கள். வாட்டர் பாட்டில் அவசியம். வாக்குச்சாவடிக்கு தண்ணீர் கேன் BLO மூலம் ஏற்பாடு செய்து கொள்ளவும். எளிய பருத்தி உடைகளை தேர்வு செய்யுங்கள். கோடை வெயிலை இதமாக எதிர்கொள்ள முன்வாருங்கள்.வாக்குப் பதிவு மையத்தில் அமைதியும், பொறுமையும் உங்களை வெற்றிகரமான தலைமையாளராக முன்னிறுத்தும்.

தேவையான மருந்து, மாத்திரைகள் எடுத்துச் செல்ல மறக்கவேண்டாம். மையத்தில் அலுவலர்கள் அனைவரும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்க. முடிந்த வரை வாக்குச்சாவடியிலேயே தங்குவது நலம்..

குக்கிராமப் பகுதிகளில் உணவினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வாக்குப் பதிவின் போது தவறு நேரா வண்ணம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். உள்ளூர் மக்களுடன் இணக்கமான நேர்மையுடன் நட்புப் பாராட்டுங்கள். இந்திய கிராமங்கள் உயிர்ப்பும், உணர்வும் உள்ளவை. அம்மக்கள் நமக்கு நிச்சயம் தேவையான உதவிகளை வழங்குவர்.

முதல் நாளே வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை நல்க கேட்டுக் கொள்வதோடு, mock poll நடத்த உரிய நேரத்தில் வரச் சொல்லுங்கள்.வயதான பெரியோர், உடல் ஊமுற்றோர், குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் மேல் பரிவு காட்டுங்கள்.2:1 என்ற விகிதத்தில் பெண்களுக்கு வரிசையில் உரிமை தாருங்கள். வீட்டிலேயே கடைசி நேர வரிசைடோக்கனை தயார் செய்து கொண்டு செல்க.17 - cபடிவம் தயார் செய்து வாய்ப்பிருந்தால் Xerox எடுத்து முகவர்களுக்கு தர முயற்சி செய்யவும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவு எந்திரங்களை zonal officers எடுக்கும் வரை பாதுகாக்கவும். பின் அனைவரும் சேர்ந்து ஊருக்குப் புறப்படவும். பெண் ஊழியர்களை தனிமையில் விட்டு விட்டு வர வேண்டாம். நாட்டிற்கு நாமாற்றும் கடமையோடு, நமது உடல் நலனும் அவசியம் காக்கப்பட வேண்டும். கவனமுடன் பணி செய்வீர். பணியில் வெற்றியுடன் தேர்தலுக்கு விடை தந்து வீடு வந்து சேர்ந்திடுவீர்.

அன்பு, கனிவு, வெற்றி இதுவே உமது தாரக மந்திரம். இடையூறு ஏதுமின்றி பணி முடித்து வீடு திரும்ப இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். அன்பு நண்பர்களே

தேர்தல் பணி என்பது முக்கியமானதாக இருந்தாலும் 06.04.2021 இரவு தேர்தல் கருவிகளை ஒப்படைத்தப் பின்பு அனாதைகளாக நடுரோட்டில் விடப்படுவோம் என்பது தெரிந்த்துதான். வீட்டிற்கு விரைந்து செல்லலாம் என்ற நோக்கோடு அறிமுகமில்லாத நபர்களோடு வாகனங்களில் செல்வதை தவிருங்கள். வண்டிகளை வேகமாக ஓட்டுவதையும், ரயில் தண்டவாளங்களை கடப்பதையும் தவிர்த்து விடவும். இரவு நேரத்தில் சாலைகளை கவனமாக கடந்து உங்களை எதிர் நோக்கி காத்துக் கிடக்கும் குடும்பத்தாரை சென்று அடையுங்கள். 

நமக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் கட்சி *நம் குடும்பம்* மட்டுமே .


 *உங்கள் பணி சிறக்க* *வாழ்த்துக்கள்!* 


💐🙏