Thursday, December 24, 2020

திருக்கணித பஞ்சாங்கத்திற்கு பிரபஞ்சம் அளித்த பரிசு 24/12/2020 வியாழன்

 

குழு நண்பர்களுக்கு வணக்கம். இது ஒரு முக்கியமான அவசியமான பதிவு.  இதனை சற்று நேரம் ஒதுக்கி  கவனித்து படித்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா- எது சரியானது?

கடந்த டிசம்பர் 21, 2020 திங்கட்கிழமை அன்று மாலை வானில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

அன்று மாலை சூரியன் மறைவுக்கு பின்னர் சனி குரு இரு கோள்களும் அருகருகே வரும் வானியல் நிகழ்வு நடந்தது.

இது பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரே நேர்கோட்டில் இரண்டும் சேர்ந்து ஒரே கோள் போல தெரிந்தது. பொதுவாக ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடந்தாலும் இதுபோன்ற நெருக்கம் கடந்த 1623 ஆம்  ஆண்டுக்குப் பின் தற்போது நடந்துள்ளது.

டிசம்பர் 21 2020 திங்கட்கிழமை மாலை சூரியன் மறைவுக்கு பின்னர் அடுத்த சுமார் 45 நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் இந்த நிகழ்வு வானில் தெரிந்துள்ளது. இதனை வெறும் கண்ணாலேயே பார்க்கவும் முடிந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.

அன்றைய கோள்களின் நகர்வு பாகை ரீதியாக சனியின் நகர்வும் குருவின் நகர்வும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.




திருக்கணித பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார்.

அதேபோல கடந்த நவம்பர் 20 2020 தேதி அன்று குருவானவர்  தனுசுவிலிருந்து மகரத்திற்கு பெயர்ச்சியாகி விட்டார்.

மேற்படி இரு கோள்களின் இயக்கமும் நகர்வும் திருக்கணித முறைப்படி மிகச்சரியாகவே ரீதியாகவே நடந்துள்ளது என்பதை இந்த அட்டவணையின் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இனி வரவிருக்கும் 27-ஆம் தேதி அன்றுதான் சனிப்பெயர்ச்சி நடப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்திலும் பிற ஆலயங்களிலும் அன்றைய தினம் வழிபாடுகள் நடத்தி சனிப்பெயர்ச்சி விழா நடத்த உள்ளார்கள்.

திருக்கணித முறைப்படி கோள்களின் இயக்கம் அதன் பாகை கலையோடு பிரபஞ்ச இயக்கத்தோடு  இணைந்து செயல்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் நாம் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

எனவே ஜோதிட கலையை பயின்றுவரும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கு இக்கலையை எடுத்து இயம்பி வரும் ஜோதிட அன்பர்களுக்கும் திருக்கணித பஞ்சாங்க முறையே மிகச்சரியான வழிகாட்டுதலை காட்டும் என்பதை உணர்ந்து அதனை திடமாகவந்து மனதில் கொண்டு  செயல்படுத்தலாம் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,

வணக்கம்.🙏

S.ஷண்முகானந்தம் M.A.B.Ed.,  ஸ்ரீ பிரம்மரிஷி ஜோதிட மையம்

R.பொன்னாபுரம்.பொள்ளாச்சி 642 002.


 

[6:37 PM, 12/24/2020] Shanmuganandam: குருவும் சனியும் 21 .12.2020 அன்று ஒரு பாகை ஒரு கலையில்  திருக்கணித பஞ்சாங்கப்படி ஒன்று சேரும்போது அரிய நிகழ்வாக ஒரு வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்னுதான் பதிவு போட்டேன். அப்பப்பா....இதை இந்த வாக்கியபஞ்சாங்கத்தை பயன்படுத்துபவர்களால் ஜீரணிக்க முடியவில்லை போலிருக்குது. சகட்டுமேனிக்கு இம்பாக்சில் ஏதேதோ லாஜிக் இல்லாமல் பேசிவிட்டார்களப்பா...

சனி 24.01.2020 அன்றே மகரத்திற்கு பெயர்ந்து சென்று ஏழு பாகையில் தற்போது மகரத்தில் உள்ளது. வேகமாக செல்லும் கிரகமான குரு டிசம்பர் 20 க்குமேல் தானே பெயர்ந்தது. அதனால் சனியை தொடர்ந்து வேகமாக சென்று தற்போது ஏழாவது பாகையில் சேர்ந்து ஒரே பாகையில் தற்போது உள்ளது. இந்த நிகழ்வு எதேச்சையாக நமது பார்வை கோணத்தில் அமைந்ததால் அரிதாக வெறும் கண்ணாலேயே பார்க்க முடிந்தது. மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் இதில் உள்ள லாஜிக் ஜோதிடம் தெரியாதவர்களுக்கே புரியும்.

அப்படியே நேற்றைய திருக்கணிதப்படி அமைந்த ராசிக்கட்டத்தையும் பாருங்கள். ஒரே பாகையில் சனியும் குருவும் அதுவும் ஒரே கலையில் 21.12.2020 அமர்ந்துள்ளது. இதன் உண்மையான பஞ்சாங்கம்.

இதில் லாஜிக் உள்ளது.

வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஜோதிடத்தை குழப்ப இடையில் வந்த கணக்கீடுகளோ பாகைகளோ அற்ற பஞ்சாங்கம். இதன்படி இன்னும் சனி மகரத்திற்கு பெயரவேயில்லை. பெயராதபோது எங்கே குருவை சேர்வது?

இந்தியாவெங்கும் திருக்கணித பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

நீங்களாகவே என்னிடம் வந்து எங்க பஞ்சாங்கம் பழமையானது என்று லாஜிக் இல்லாமல் பேசி மேலும் மிக வசை வாங்காதீர்கள். வாக்கியம் மன்னர் சரபோஜி காலத்தில் பாகை கலை போன்ற கணக்கீடுகள் படிக்க கஷ்டமாக இருந்ததால் எளிதாக பொத்தாம்பொதுவாக வரருஷியால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்கம். திருக்கணிதம் ஜோதிட மூலநூல்களாலேயே கூறப்பட்ட பஞ்சாங்கம். மூலநூல்களில் படித்து பார்த்தாலே நான் கூறும் உண்மை விளங்கும்.

லாஜிக் இல்லாமல் என்னை ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட்டு நிரூபித்து காட்டுமாறு அழைத்த வாக்கியத்தை பயன்படுத்தும் எனது இரண்டு ஜோதிட நண்பர்களுக்கு நன்றி.

Wednesday, December 23, 2020

ஹோரையும் பலனும்

 ✳✳✳சித்தர்கள் கூறும் ஓரை இரகசியம்✳✳✳


ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.


பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர். சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவி யல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர். அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வா ய்க்கும் வழங்கினர்.


இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப் படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம். ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.


பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

6 – 1- 8 – 3 இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.


சூரிய ஓரை : சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம். இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.


சுக்கிர ஓரை : சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.


புதன் ஓரை : கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.


சந்திர ஓரை : வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய் யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.


சனி ஓரை : இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவ ங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப் பானது.


குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வா ங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உட னே கிடைத்து விடும்.


செவ்வாய் ஓரை: செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.


ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் – ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை – குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம். சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய – நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள்.


மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள். குறிப்பாக கணவன், மனைவி ஏதாவது வாக்குவாதம் செய் யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு – நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை. நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும் என்பது சித்தர்களின் வாக்கு…


✳✳சிவாய நம✳✳