குழு நண்பர்களுக்கு வணக்கம். இது ஒரு முக்கியமான அவசியமான பதிவு. இதனை சற்று நேரம்
ஒதுக்கி கவனித்து படித்து பயன்பெற
வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா- எது சரியானது?
கடந்த டிசம்பர் 21, 2020 திங்கட்கிழமை அன்று மாலை வானில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
அன்று மாலை சூரியன் மறைவுக்கு பின்னர் சனி குரு இரு கோள்களும் அருகருகே
வரும் வானியல் நிகழ்வு நடந்தது.
இது பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரே நேர்கோட்டில் இரண்டும் சேர்ந்து ஒரே
கோள் போல தெரிந்தது. பொதுவாக ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு
ஒருமுறை இந்த நிகழ்வு நடந்தாலும் இதுபோன்ற
நெருக்கம் கடந்த 1623 ஆம்
ஆண்டுக்குப் பின் தற்போது நடந்துள்ளது.
டிசம்பர் 21 2020 திங்கட்கிழமை மாலை சூரியன் மறைவுக்கு
பின்னர் அடுத்த சுமார் 45 நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் இந்த
நிகழ்வு வானில் தெரிந்துள்ளது. இதனை வெறும் கண்ணாலேயே பார்க்கவும் முடிந்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.
அன்றைய கோள்களின் நகர்வு பாகை ரீதியாக சனியின் நகர்வும் குருவின் நகர்வும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார்.
அதேபோல கடந்த நவம்பர் 20 2020 தேதி அன்று
குருவானவர் தனுசுவிலிருந்து மகரத்திற்கு
பெயர்ச்சியாகி விட்டார்.
மேற்படி இரு கோள்களின் இயக்கமும் நகர்வும் திருக்கணித முறைப்படி
மிகச்சரியாகவே ரீதியாகவே நடந்துள்ளது என்பதை இந்த அட்டவணையின் மூலம் தெளிவாகத்
தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இனி வரவிருக்கும் 27-ஆம் தேதி அன்றுதான் சனிப்பெயர்ச்சி நடப்பதாக
குறிப்பிட்டிருக்கிறார்கள். திருநள்ளாறு
சனி பகவான் ஆலயத்திலும் பிற ஆலயங்களிலும் அன்றைய தினம் வழிபாடுகள் நடத்தி
சனிப்பெயர்ச்சி விழா நடத்த உள்ளார்கள்.
திருக்கணித முறைப்படி கோள்களின் இயக்கம் அதன் பாகை கலையோடு பிரபஞ்ச
இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது
என்பதை இதன் மூலம் நாம் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
எனவே ஜோதிட கலையை பயின்றுவரும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கு இக்கலையை
எடுத்து இயம்பி வரும் ஜோதிட அன்பர்களுக்கும் திருக்கணித பஞ்சாங்க முறையே
மிகச்சரியான வழிகாட்டுதலை காட்டும் என்பதை உணர்ந்து அதனை திடமாகவந்து மனதில்
கொண்டு செயல்படுத்தலாம் என்பதை
பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி,
வணக்கம்.🙏
S.ஷண்முகானந்தம்
M.A.B.Ed., ஸ்ரீ பிரம்மரிஷி
ஜோதிட மையம்
R.பொன்னாபுரம்.பொள்ளாச்சி 642 002.
[6:37 PM, 12/24/2020] Shanmuganandam: குருவும் சனியும் 21 .12.2020 அன்று ஒரு பாகை ஒரு கலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஒன்று சேரும்போது
அரிய நிகழ்வாக ஒரு வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்னுதான் பதிவு போட்டேன்.
அப்பப்பா....இதை இந்த வாக்கியபஞ்சாங்கத்தை பயன்படுத்துபவர்களால் ஜீரணிக்க முடியவில்லை போலிருக்குது. சகட்டுமேனிக்கு
இம்பாக்சில் ஏதேதோ லாஜிக் இல்லாமல் பேசிவிட்டார்களப்பா...
சனி 24.01.2020 அன்றே மகரத்திற்கு பெயர்ந்து சென்று ஏழு
பாகையில் தற்போது மகரத்தில் உள்ளது. வேகமாக செல்லும் கிரகமான குரு டிசம்பர் 20 க்குமேல் தானே பெயர்ந்தது. அதனால் சனியை
தொடர்ந்து வேகமாக சென்று தற்போது ஏழாவது பாகையில் சேர்ந்து ஒரே பாகையில் தற்போது
உள்ளது. இந்த நிகழ்வு எதேச்சையாக நமது பார்வை கோணத்தில் அமைந்ததால் அரிதாக வெறும்
கண்ணாலேயே பார்க்க முடிந்தது. மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் இதில் உள்ள
லாஜிக் ஜோதிடம் தெரியாதவர்களுக்கே புரியும்.
அப்படியே நேற்றைய திருக்கணிதப்படி அமைந்த ராசிக்கட்டத்தையும் பாருங்கள்.
ஒரே பாகையில் சனியும் குருவும் அதுவும் ஒரே கலையில் 21.12.2020 அமர்ந்துள்ளது. இதன் உண்மையான
பஞ்சாங்கம்.
இதில் லாஜிக் உள்ளது.
வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஜோதிடத்தை குழப்ப இடையில் வந்த கணக்கீடுகளோ
பாகைகளோ அற்ற பஞ்சாங்கம். இதன்படி இன்னும் சனி மகரத்திற்கு பெயரவேயில்லை.
பெயராதபோது எங்கே குருவை சேர்வது?
இந்தியாவெங்கும் திருக்கணித பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
நீங்களாகவே என்னிடம் வந்து எங்க பஞ்சாங்கம் பழமையானது என்று லாஜிக் இல்லாமல் பேசி மேலும் மிக வசை வாங்காதீர்கள். வாக்கியம் மன்னர் சரபோஜி காலத்தில் பாகை கலை போன்ற கணக்கீடுகள் படிக்க கஷ்டமாக இருந்ததால் எளிதாக பொத்தாம்பொதுவாக வரருஷியால் உருவாக்கப்பட்ட பஞ்சாங்கம். திருக்கணிதம் ஜோதிட மூலநூல்களாலேயே கூறப்பட்ட பஞ்சாங்கம். மூலநூல்களில் படித்து பார்த்தாலே நான் கூறும் உண்மை விளங்கும்.
லாஜிக் இல்லாமல் என்னை ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட்டு நிரூபித்து
காட்டுமாறு அழைத்த வாக்கியத்தை பயன்படுத்தும் எனது இரண்டு ஜோதிட நண்பர்களுக்கு
நன்றி.