Saturday, October 10, 2020

 ராகு சோதிடத்தில்...


கடந்த வியாழக்கிழமையில் இருந்து, இந்த புதன் வரை 7 கிரகங்களின் தன்மையையும் அதன் குணாதிசயத்தையும் எனக்கு தெரிந்த வகையில் கோடிட்டு காட்டி பதிவிட்டேன், ஆனால் கிரகங்கள் என்றால் 9 அல்லவா ராகு/கேதுவை பற்றி மட்டும் நான் கடந்த இரண்டு நாட்களாக பதிவிடலாமா வேண்டாமா என்கிற யோசனையில் இருந்தேன், காரணம் நான் என் பதிவுகளில் பெரும்பாலும் இவர்கள் இருவரை பற்றியே அதிகம் எழுதியுள்ளேன், அதனால் வேறு என்ன புதியதாக எழுதலாம் என்கிற யோசனை, இன்னொரு யோசனையும் தோன்றியது, அது வாசகரான நீங்கள் இதை எவ்வாறு வரவேற்பீர்கள் என்கிற யோசனை, ஏனெனில் உங்களுக்கு சலித்துவிட்டால் என்ன செய்ய, ஆனால் கடைசியில் எப்போதும் போல் ராகு/கேது உத்தரவு கொடுத்துவிட்டார்கள் நான் விளக்கி பதிவு செய்தே ஆகவேண்டும் என்று ஆகவே இன்று ராகுவை பற்றிய பதிவு செய்கிறேன்... 


சோதிடத்தில் ராகு நிழல் கிரகம் நின்ற வீடு மற்றும் அதன் அதிபதியின் நிலை பொறுத்து அந்த வீட்டின் ஸ்தான பலனை ராகுவே செய்வார், அப்படி எனில் காரக பலன் அந்த வீட்டின் காரகாதிபதி செய்வார், எப்போதும் ஒரு வீட்டிற்கு இரு கிரகங்கள் பலன் தரும் ஒன்று வீட்டதிபதி ஸ்தான பலனை தருவார், இன்னொன்று அந்த வீட்டின் காரகாதிபதி காரக பலனை தருவார், இதில் ராகு ஸ்தான பலனை தந்தாலும், காரக பலனிலும் மூக்கை நுழைப்பார் எப்போது என்றால் அந்த காரகாதிபதி ஜனன ஜாதகத்தில் வலுவிழந்தால், அடுத்து ராகு தனக்கு பின்னால் இருக்கும் வீட்டின் ஸ்தான பலனிலும் தலையிடுவார் ஏனெனில் வக்கிர சுழற்சி கொண்டவர் என்பதால், ஆனால் இதில் ஒரு வேளை அந்த வீட்டின் அதிபதி சுபராகி வலுப்பெற்றால் ராகுவால் அங்கே ஆதிக்கம் செலுத்த இயலாமல் போகும், எப்போதுமே ராகுவுடன் 8 பாகைக்குள் இணைந்த கிரகம் கிரகணம் சுழந்த கிரகம் எனலாம் அதாவது ராகுவே அதன் பலனை செய்ய கடமைப்பட்டவர், 8 பாகைக்கு மேல் விலகி 15 பாகை கடந்தால் அது இணைவாகாது, ஆனாலும் ஒரே ராசியில் நின்றதால் இணைந்த கிரகத்தின் வலுவை பொறுத்து ராகுவின் ஆளுமை இருக்கும், ஆனாலும் இதை துல்லியமாக பாவ கட்டத்தில் தெரிந்து கொள்ளலாம், ராகு நிழல் கிரகம் என்பதால் பார்வை கிடையாது, ஆனாலும் அதன் திரிகோண ராசியில் தன் ஆளுமையை செலுத்துவார் அந்த அதிபதியின் வலுவை பொறுத்து...


இதுவரை பார்த்தது பலன் எடுக்க உதவும் இனி இந்த ராகு யார் என்ன காரகம் என்பதை அறிவோம் வாருங்கள்...


ராகு இவர் இல்லை என்றால் மனித ஜனனம் உருவாக இயலாது, ஒரு லௌகிக மனிதனாகட்டும், ஆன்மீக மனிதனாகட்டும் தனக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்கிற ஆசையின் காரகரே ராகு தான், இவ்வாறு ஆசையில் ஆரம்பித்து வாழ்நாளில் மனிதனின் ஒவ்வொரு ஆசை மற்றும் லௌகிக வாழ்க்கை முறைக்கும் ராகுவே காரகர், ஆசை ஏற்பட்டால் தான் படிக்கிறோம், வேலைக்கு செல்கிறோம், தனம் சம்பாதிக்கிறோம், கடமைகளை செய்கிறோம் இவ்வாறு அனைத்திலும் அடிப்படை ராகுவே, ஏன் ஆன்மீகத்தில் உயர்நிலை அடைய வேண்டும் என்கிற தீவிர ஆசையும் இவரின் காரகமே, இதை அறியாமல் தான் பலர் ராகுவை தவறாக சித்தரிக்கிறார், தெய்வ தரிசனம் செய்ய எழும்பும் ஆசையும் இவர் தான் தூண்டுகிறார், அடுத்து அந்த ஆசையே ஒருமனிதன் வெற்றி பெறவும் வைக்கிறது, எவ்வாறு என்றால் மேன்மை நிலை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை வரும் போதே ஒரு மனிதன் அதிகம் உழைப்பான், அப்போதே அவன் தேவைகளை பூர்த்திசெய்ய அவனால் இயலும், அதன் வழியே அவன் ஆசையை பூர்த்தியும் செய்வான், இதுவே பேராசையாகி விழ்ச்சியையும்/தவறான எண்ணங்கள், பாதைகளுக்கு வழிவகுக்கும் என்பது உண்மையானாலும் நாணயத்துக்கு இரு பக்கம் போல், நல்லதும் தீயதும் எப்போதும் சம வலுவில் ஒரு காரகத்தில் இருக்கவே செய்யும் என்பதை உணர்க, ராகு பெரும்பாலும் சட்டத்துக்கு புறம்பான காரியத்துக்கு மிகவும் அனுசரணையாக இருப்பார் என்றாலும், சில நேரங்களில் அதே சட்டம் தவறாக செயல்படும் போது அதற்கு எதிராக களம் காணும் தைரியமும் அதற்க்கு ஆதரவும் ராகுவே தருகிறார், ராபின் ஹூட் பலரிடம் கொள்ளையடித்து ஏழைகளை வாழ வைத்தான் இதுவும் ராகுவின் இன்னொரு பக்கமாகும், ராகு எனும் கொள்ளைக்காரன், சனி எனும் ஏழைக்கு உதவ, ராகுவை மூலதனமாக கொண்டு சொத்து சேர்த்தவரிடம் இருந்து பறித்து கொடுக்கிறான், இவ்வாறு ராகு கெடு பலன் மட்டும் தருவதில்லை, நல்ல பலன்களையும் அருளவே செய்வார், எந்த தொழிலானாலும் ராகு இல்லாமல் அதனை வெளியில் பிரபலபடுத்த இயலாது, அதே போல் ஒரு மனிதனுக்கு அடிக்கும் திடீர் அதிர்ஷ்டம் ராகுவே, காற்று ராகு, பிரபஞ்சம் இயற்கை ராகு, இவ்வாறு ராகு பல பரிமாணத்தில் பரந்து விரிந்துள்ளார், ஆன்மீகம் என்றால் தாந்திரீக பூஜை ராகுவே காரகர், பிரம்மாண்ட அலங்கார பூஜை ராகுவே, இப்படி மனிதனின் ஒவ்வொரு செயலிலும் ராகு உள்ளார், கனவு காணுங்கள் என்றால் அந்த கனவின் காரகர் ராகு, நினைவலைகள் ஒரு மாய அந்த மாய ராகுவே, எதையும் இரட்டிப்பாக ராகுவே உதவுவார், இப்படி பல ரூபங்களில் ராகு நம்முடனே உள்ளார், ஒரு மனிதன் இறக்கும் தருவாயில், உடலை விட்டு வெளியேறும் பஞ்ச பூதங்களில் முதல்வன் ராகு எனும் காற்றே, ராகு காரகம் அதிகமுள்ளவர் கீழ்நிலை பணியாளரிடம் அதிக நட்பு பாராட்டுவார் எனின் கீழ்நிலை பணியாளர் சனி, ராகுவை சனியின் பிம்பம் என்று மூல நூல்களில் கூறப்பட்டுள்ளது, ஒருவர் வாய் திறமையால் வெல்கிறார் என்றால் அவருக்கு ராகு நல்ல நிலையில் உள்ளார் என பொருள், ஏனெனில் கால புருஷ 2ம் வீட்டில் ராகு உச்சம், பேசியே மயக்குபவர் ராகு, அதே போல் எழுத்தில் பிரம்மாண்டம் காண்பிப்பதும் ராகுவுடன் புதன் இணையும் போதே நடைபெறும்,  கணினி உலகில் ராகுவே கணினி எனும் தொழில் நுட்ப துறைக்கு காரகம் வகிக்கிறார், நாம் அணியும் உள்ளாடை ராகுவின் காரகமே, இவ்வாறு எவ்வளவோ கூற இயலும் ஆக மொத்தத்தில் ராகு இல்லாமல் வாழ்க்கை இல்லை, மீண்டும் சந்திப்போம்...!

Tuesday, October 6, 2020

 

[ அமெரிக்காவில்  ஒரு  நீதிபீடம் !
---------------------------------------
பதினைந்து வயதான சிறுவன்
குற்றவாளி .!

ஒரு கடையிலிருந்து ஆகாரம்
திருடியதாக கையும் களவுமாக
பிடிக்கப்பட்டபோது, காவலாளியிடம்
இருந்து தப்பிக்க முயற்சிக்கும்
வேளையி்ல் கடையிலிருந்த அலமாாி
கீழே விழுந்து உடைந்தது.

குற்றம் செய்த குழந்தையோடு
நீதிபதி வினவினாா்..

நீ  உண்மையாகவே  திருடினாயா ?
ஆம் ! .Bread  chess  pocket .
அந்த குழந்தை கீழே பாா்த்து பதில்
சொன்னது.

நீதிபதி :  நீ எதற்காக திருடினாய் ?
குழந்தை :  எனக்கு அது தேவைப் -
பட்டது ..
நீதிபதி :  பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. ! ..

குழந்தை :  கையில் பணம் இல்லை ..
நீதிபதி :  வீட்டிலுள்ளவா்களிடம் கேட்டு வாங்கியிருக்கலாமல்லவா..

குழந்தை :  வீட்டில் அம்மா மட்டுமே உள்ளாா். அவா் நோயில் படுத்துகிடக்கின்றாா் ஒரு வேலையுமில்லை அவருக்காக
திருடினேன் ..

நீதிபதி :  நீ வேலை ஒன்றும் பாா்க்க
வில்லையா ?

குழந்தை :  நான் ஒரு காா் கழுவும்
இடத்தில் வேலைப் பாா்த்து
கொண்டிருந்தேன். ஒரு நாள் என்
தாயாரை கவனிப்பதற்காக நான்
விடுமுறை எடுத்ததால் என்னை
அந்த வேலையிலிருந்து நீக்கி
விட்டனா்.

நீதிபதி : நீ யாரிடமாவது உதவி
கேட்டிருக்கலாமல்லவா ?

குழந்தை : நான் காலையில் வீட்டை
விட்டு இறங்கி ஐம்பதிற்கும் அதிகம்
ஆட்களிடம் நடந்துசென்று வேலை
கேட்டேன் யாரும் எனக்கு வேலை
தரவில்லை. நான் நம்பிக்கை
வைத்தது எல்லாம் அஸ்தமித்தது.
இறுதியில் இதை செய்யவேண்டிய
சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
பிறகு வழக்கின் வாக்கு வாதம்
முடிந்தது.

நீதிபதி தீர்ப்பு அறிவிக்க
தொடங்கினாா்.  இது மிகவும்
உணா்ச்சிபூர்வமான திருட்டு.
ரொட்டி திருடிய குற்றம் என்பதில்
சந்தேகமில்லை. இந்த குற்றத்திற்கு
நாம்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்
என்னையும் சோ்த்துதான். நீதி
மன்றத்திலுள்ள அனைவரும்
குற்றவாளிகளே !
அதனால் நீதி மன்றத்திலுள்ள
ஒவ்வொருவரும் நான் உட்பட
அனைவரிடத்திலிருந்தும் பத்து
டாலா் வசூலிக்கப்படவேண்டும்.
இதை கொடுக்காமல் இங்கிருந்து
வெளியே யாரும் செல்லக்கூடாது.
இதை  கூறிய நீதிபதி பத்து
டாலரை எடுத்து மேசை மீது
வைத்தாா்.

பிறகு பேனாவை
எடுத்து தீர்ப்பு எழுத ஆரம்பித்தாா்.
பட்டினியால் திருடிய அந்த குழந்தை
மீது மனித சினேகம் இல்லாத
விதத்தில் நடந்தும், அவன் மீது குற்றம் சுமத்தி
போலீஸில் ஒப்படைத்து கொடுத்தமைக்காக
கடை முதலாளிக்கு ஆயிரம் டாலா்
அபராதம் விதிக்கப்பட்டது.
24 மணிக்குள் அபராத தொகை கட்டவில்லை என்றால்
கடை முத்திரை போடப்பட்டு
நிரந்தரமாக மூடப்படும் என்று
நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னா் நீதிமன்றத்தில் வசூலித்த
அபராதத் தொகை முழுவதும். அந்த குழந்தைக்கு நீதி மன்றம்
வழங்கியது.

நீதிபதியின் தீர்ப்பை கேட்டு நீதி
மன்றத்தில் ஆஜா் ஆன அனைவரும் திகைத்து நின்றனா்.
ஆனந்த கண்ணீா் வடித்தனா்.
நீதிபதியின் தீர்ப்பை கேட்டு ஆச்சரியப்பட்டு நீதிபதியை மீண்டும், மீண்டும் உற்று பாா்த்து கொண்டிருந்தான் அந்த சிறுவன்.
நீதிபதி தன்னில் மறைத்து வைத்த
கண்ணீர் அவரை அறியாமல்
கண்ணிலிருந்து வழிந்து விழுந்தது.
நேர்மையும், நியாயமும் நிறைந்த
மனித சினேகித நீதிமான்கள்
நீதி பீடத்தின் தராசை துல்லியமாக்கி நம்மோடு வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறாா்கள்.

நன்றி,
♥ ( கமால்)   ♥
----------------------------------------------------------------------------+
[06/10, 7:38 pm] Shanmuganandam:

இந்த நிலையில் கிரகங்களின் செயல்பாடு

சிறுவனின் பசியும் திருட்டும் ___ சந்திரன்,கேது மற்றும் சனி

நீதிபதியும் புலன்விசாரணையும் ___ குரு பகவான் மற்றும் ராகு

நியாயமான தீர்ப்பு __ நீதிமான் சனி

கடை வியாபாரியும் உடைந்த அல்மாரியும் __ புதன்

கோதுமை ரொட்டி ___ சூரியன்

காவலர் ___ செவ்வாய்

வசூலித்த அபராத தொகை __ சுக்கிரன்

இப்படித்தான் கிரகங்கள் மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்மாவுக்கு தக்கவாறு முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதுதான் கிரக ஜாலம்.

ஸர்வஜனா சுகினோ பவந்து!