Tuesday, July 28, 2020

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி! 28/07/2020 செவ்வாய்க்கிழமை

இன்று கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!

கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்

கருடாழ்வார்....
கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார்.
முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார்.
பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.

காத்தல் தொழிலைக் கொண்ட திருமாலுக்கு வாகனமாய் இருப்பவர் கருடாழ்வார்.
சுபர்ணன்,
பன்னகாசனன்,
புஷ்பப்ரியன்,
மங்களாயன்,
சுவர்ணன்,
புன்னரசு
என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.
இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார்.
கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.

காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவி கள். ஒருத்தி பெயர் கத்ரு; மற்றொருத்தி பெயர் வினதை.
கருட பகவானின் தாயாரான வினதைக்கும், கத்ருவுக்கும் எப்போதும் விரோத மனப்பான்மை உண்டு. கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன.
அவற்றுக்கு கருடன் மீது எப்போதும் பகை எண்ணமே இருந்தன. கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிசேஷன் திருமாலின் அரவணை (படுக்கை)யாகவும் அமைந்தனர்.
இரண்டு மனைவிகள் என்றாலே சண்டையும் சச்சரவுகளும், பொறாமையும் வெறுப்பும்அதிகரித்துக் கொண்டே போக, எப்படியாவது ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும்; தானேஅதிகாரம் செலுத்தி மற்றவரை அடிமை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போனது.
வினதையை வீழ்த்தி தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று நினைத்த கத்ருவிற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

காத்ருவும் ,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர். குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள்.

யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை.மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின.

வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன.

பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார்.

விஷ்ணுவை தன மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை...

கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது.

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன.

அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது

பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது.

 இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.

திருமால் அருளிய வரத்தின்படி திருக்கோயில்களில் கருடக்கொடியாகவும், திருமாலுக்கு வாகனமாகவும் திகழும் கருடன், திருமாலை நமக்குக் காட்டியருளும் குருவாகவும் போற்றப்படுகிறார்.
கருடன் மற்ற பறவைகளைப் போல் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறப்பதில்லை. கருடனின் பார்வையும் மிகக் கூரானது. கருடக் குரலின் அடிப்படையில் "கருடத்வனி' என்று ஒரு ராகமே அமைந்துள்ளது.
ஒவ்வொரு திருமால் கோயிலிலும் கருட úஸவைத் திருவிழா பலமுறை நடக்கும். மாசி மகத்தன்று கருட சேவையில் பகவான் திருக்கோயில்களின் அருகேயுள்ள புஷ்கரிணிக்கோ, ஆறு அல்லது சமுத்திரங்களுக்கோ சென்று தீர்த்த வாரி கண்டருள்வார்.

கருடனுக்கு வடை மாலை சாற்றுவது வழக்கம். பூரண கொழுக்கட்டையைப் போன்ற அமிர்த கலசம் இவருக்கு நிவேதனம். "கருடத்வனி' ராகமாய் நம் வாழ்க்கை இனிமை பெற, கருட பஞ்சமியன்றும் கருட ஜெயந்தியன்றும் கருடாழ்வாரையும், அவர் தாங்கிச் செல்லும் திருமாலையும் வழிபடுவோம்.

கருடபறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
கோவிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது.
சபரிமலை ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்.

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார்.
இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை….
ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்புறம் உள்ளது.

கருடவாகன சேவை

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

கருட புராணம்

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது

கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்:

ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும்

நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.

புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

வியாழன் கருடதரிசனம்- பகைவரிட்ட வைப்பு சூன்யம் அகலும்.

வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்

சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

கருடாழ்வாரை தரிசிக்கும்போது

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும்.

பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்றுதான்.
இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
 ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.

ஓம் நமோ நாராயணாய !

Monday, July 27, 2020

தெனாலி ராமனும் கொரோனாவும்!!! 27/07/2020 திங்கள்!

நகைச்சுவை:


நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!

டீல் வித் கொரோனா தி தெனாலி வே!

தெனாலி ராமன் வீட்டில் ஹாயாக நெட்ஃபிளிக்ஸில் மலையாளப்படம் பார்த்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவர் மனைவி அவரின் பர்சனல் மொபைலை எடுத்து வந்து,

தெனாலி ராமனின் மனைவி : சுவாமி, மன்னர் கான்ஃப்ரன்ஸ் காலில் இருக்கிறார். உங்களுடன் ஏதோ அவசரமாக பேச வேண்டுமாம்!

தெனாலி : நான் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லி சமாளிக்க வேண்டியது தானே? இந்த லாக்டவுனிலும் விடாமல் கழுத்தை.........

மன்னர் : தெனாலி........நான் லைனில் தான் இருக்கிறேன்.

தெனாலி : மன்னியுங்கள் மன்னா! மைக் ம்யூட்டில் இருப்பதாக நினைத்து உள்ளத்தில் இருந்தவற்றை உரக்க பேசி விட்டேன்.  எதற்காக இந்த அவசர ஆலோசனை?

மன்னர் : அமைச்சர்களே நன்றாக கவனியுங்கள்!
அஷ்டதிக்கஜங்கள் என்று உங்களுக்கு பட்டப்பெயர் கொடுத்தது சும்மா வீட்டில் சாப்பிட்டு தூங்க இல்லை. கொரோனாவை ஒழிக்க ஏதாவது யோசித்தீர்களா?

அமைச்சர் 1 : மன்னா, முக கவசம், மூலிகை குடிநீர், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் கொடுத்தாயிற்று.

அமைச்சர் 2 : மக்கள் அனைவரையும் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி எல்லோருடைய வீட்டின் முன்புற வாசலையும், பின்புற வாசலையும் பூட்டி, அனைத்து சாவிகளையும், நம்பர் ஒட்டி, அரண்மனை வைத்தியரின் பி.ஏ.விடம் ஒப்படைத்தாயிற்று.

அமைச்சர் 3 : மக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கனி முதலியவற்றை அவர்கள் வீட்டின் ஜன்னல் சாளரத்தின் வழியே பட்டுவாடா செய்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளும் தயார் மன்னா !

அமைச்சர் 4 : அரண்மனை வைத்தியரின் சிஷ்யர்கள் தினமும் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மக்கள் அனைவரும் உடல்நலக்குறைவில்லாமல் நன்றாக இருக்கின்றனரா என்று விசாரித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர் மன்னா!

அமைச்சர் 5 : நம் நாட்டில் இருக்கும் ஆலயங்கள், குருகுலங்கள், மல்யுத்த கூடங்கள், வீர விளையாட்டுக்கள், கேளிக்கை கூடங்கள், எல்லாவற்றையும் மூடச்சொல்லி உத்தரவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது மன்னா!

அமைச்சர் 6 : நாடு முழுவதும் இண்டு இடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும் கிருமி நாசினி கூட தெளித்தாயிற்று அரசே!

அமைச்சர் 7 : அரண்மனை வைத்தியரும், அவருடைய பிரதான சிஷ்யர்களும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ராப்பகலாக ஈடுபட்டிருக்கின்றனர், மன்னரே!

மன்னர் : என்ன தெனாலி, நீ மட்டும் மௌனமாக இருக்கிறாய்? கொரோனாவை ஒழிப்பதில் உன் பங்களிப்பு என்ன?

தெனாலி : மன்னா, எனக்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும்.

மன்னர் : மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு மிகவும் தவிக்கிறார்கள். அவர்களை காப்பது நம் அரசின் கடமை.  உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ உருப்படியான யோசனை எதுவும் சொல்லவில்லை என்றால் சிறையில் தள்ளப்படுவாய்.

தெனாலி : உத்தரவு மன்னா!

(ஒரு வாரம் கழிந்தது)

மன்னர் :  என்ன தெனாலியிடமிருந்து எந்த தகவலும் இல்லை!

இந்த சந்தர்ப்பத்தில் அவன் புத்திசாலித்தனம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
ஹே.......சிரி.......... தெனாலியை கூப்பிடு!

தெனாலியின் மனைவி : வணக்கம் மன்னா! அவர் காலையிலேயே கிளம்பி எங்கோ வெளியே போய் விட்டார். நீங்கள் அழைத்தால் உங்களிடம் அவர் ஃபேஸ்புக் பேஜில் சரியாக நான்கு மணிக்கு லைவில் அவரை பார்க்கலாம் என்று சொல்ல சொன்னார்.  உங்களுடன் சேர்த்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் ஃபேஸ்புக் லைவ் பார்க்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ள சொன்னார்.

மன்னர் : “அப்படியா, ஆச்சர்யமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்?”

“சரி, மக்கள் அனைவரையும் இன்று நான்கு மணிக்கு ஃபேஸ்புக் லைவ் வரும்படி ஆணையிடுகிறேன். “

நேரம் சரியாக நான்கு மணி!

ஃபேஸ்புக் லைவில் மன்னர் லாக் இன் செய்ததும், தெனாலி ஒரு மலை உச்சியில், கையில் தாம்புக்கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறார்.

பார்வையாளர்கள் பட்டியலில் நாட்டு பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள்.

காற்று வேகமாக வீசுகிறது.

எங்கே தெனாலி ஸ்லிப்பாகி விழுந்து விடப்போகிறாரோ என்று அனைவருக்கும் டென்ஷனாக இருக்கிறது.

மன்னர் “தெனாலி என்ன பண்ற?” என்று மெசேஜ் டைப் செய்கிறார்.

தெனாலி உரத்த குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

“மன்னா வணக்கம்! மக்கள் அனைவருக்கும் வணக்கம்!
இங்க பாருங்க, என் கையில் இருக்கும் தாம்பக்கயிறில் கொரோனாவை கட்டி இழுத்து வந்திருக்கிறேன். உங்கள் கண்களுக்கு அது தெரிகிறதா?
வீரர்களின் கண்களுக்கும், இளமையான யுவதிகளுக்கும் அது கண்டிப்பாக கண்ணில் தெரியும்.  தெரிந்தவர்கள் மட்டும் கமென்டில் ‘எஸ்’ போடுங்கள்.

மன்னர் : என்னது இது? கயிற்றின் நுனியில் ஒன்றுமே இல்லை. வீரர்களுக்கு கண்ணில் தெரியும் என்று பொடி வைத்து பேசுகிறானே, எதற்கு வம்பு, நமக்கு வீரம் இல்லை என்று நினைத்து விடப்போகிறான். ‘எஸ்’ போட்டு விடுவோம் என்று நினைத்து மெசேஜை டைப் செய்தார்.  அவர் ‘எஸ்’ என்றதும் ஆயிரக்கணக்கான ‘எஸ்’ கள் குவிந்தன.

தெனாலி : “ஓகே, குட், எல்லாரும் நல்லா பாருங்க.”

“இப்போ இந்த மலை உச்சிலேர்ந்து கொரோனாவை கீழே தள்ளிவிடப் போறேன், இன்னியோட கொரோனா ஒழிஞ்சது, நீங்க எல்லாரும் பழையபடி ஆட்டம், பாட்டு என்று நிம்மதியா இருக்கலாம்”
என்று சொல்லியபடியே தாம்பக்கயிற்றை கஷ்டப்பட்டு இழுப்பது போல் பாவ்லா செய்து, அதை மலை உச்சியின் மேலிருந்து கீழே தூக்கி வீசினான்.

மக்கள் மிகவும் ரசித்து, நிம்மதி பெருமூச்சுடன்,
“மன்னர் வாழ்க!
  தெனாலி வாழ்க” என்று கமென்ட் எழுதி ஸ்மைலியுடன் சேர்த்து மெசேஜ் எழுதி பாராட்டினார்கள்.

தெனாலியின் லைவ் வீடியோவிற்கு லைக்ஸும், கமென்டும், பாராட்டும் குவிந்து அன்றைய தினத்தின் டாப் ட்ரெண்டிங் ஆனது.

மன்னர் : “தெனாலி இது என்ன விளையாட்டு?”

என்று இன்பாக்ஸில் கேட்க,

தெனாலி : “மன்னா, இதற்கு பேர் தான் ‘பிளாஸிபோ எஃபெக்ட்’”.

மன்னர் : “அப்படின்னா?”

தெனாலி : “உங்கள் கேள்விக்கு கூகிளில் விரிவான விளக்கம் இருக்கிறது மன்னா! அந்த பக்கத்தை இன்பாக்ஸில் அனுப்புகிறேன். படித்து பாருங்கள். “

என்று பதில் மெசேஜும், அதனுடன் ஒரு லிங்க்கும் வந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்து தொடர்ந்த வாரங்களில் கொரோனாவின் பயம் குறைந்து, வீரியம் குறைந்து, அந்த விஷக்கிருமி முற்றிலுமாக அழிந்தது.

ஒரு மாதம் கழித்து மன்னரின் ராஜ தர்பார்!

தெனாலி : வணக்கம் மகாராஜா!

மன்னர் : வாரும் தெனாலி அவர்களே!

கண்ணுக்கு தெரியாத கிருமியை மலை உச்சியின் மேலிருந்து தள்ளுவது போல் நாடகமாடி, அந்த கிருமியின் மேல் இருந்த பயத்தை மக்களிடமிருந்து அறவே போக்கி விட்டீர்கள்.

அதனால், அவர்கள் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ‘கொரோனா’ நோய் முற்றிலுமாக ஒழிந்தது.

நாடும், மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

உங்கள் சமயோசிதமான  அறிவுக்கு என் உயர்ந்த பரிசு,

இதோ அங்கிருக்கும் அலங்கார இருக்கையில் அமருங்கள்!

இனிமேல் நீர் தான் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சர்!
சந்தோஷம் தானே!

தெனாலி : “அலங்கார இருக்கையா, எங்கே மன்னா? என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லையே!”

மன்னர் : “அது அறிவாளிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும்”

தெனாலி : “ஹா....ஹா.....ஹா.... இப்போது நன்றாக தெரிகிறது மன்னா! உங்கள் அன்புக்கு நன்றி!”

உங்கள் கண்ணுக்கும் கிருமி மலை உச்சியிலிருந்து விழுந்தது தெரிந்ததா?
----------------------------------------------------------------
படித்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன்

அன்புடன்
ரிஷி
========================
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Saturday, July 18, 2020

ஹோரை காலம் 18/07/2020 சனிக்கிழமை

பயன் தரும் ஹோரை காலம்
ஹஜ்
ஒரு நாளில் 7 கிரகங்களின் ஹோரைகள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வரும், ஒரு நாளின் ஆரம்ப ஹோரை பிரம்ம முகூர்த்தம் முடிந்து ஆரம்பிக்கும் முதல் ஒரு மணி நேரம், அந்த நாளின் சுய ஹோரை ஆகும், எல்லா ஹோரைகளும் எல்லோருக்கும் பொருந்தாது, ஜாதகபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஹோரை சுப பலனை தரும், அதன்படி பொதுவாக லக்னம் வைத்து எந்த எந்த லக்னத்துக்கு எந்த ஹோரை நன்மை செய்யும் என்று பார்ப்போம்..

எந்த லக்னமானாலும் அந்த லக்னத்துக்கு முன் பின் ராசி அதிபதிகளும் அந்த லக்னத்துக்கு திரிகோணாதிபதிகளும் லக்னாதிபதிக்கு நட்பாகும், எந்த லக்னமானாலும் அந்த லக்னத்துக்கு 7 ம் அதிபதியும், ஏழாம் வீட்டின் திரிகோணாதிபதியும் லக்னாதிபதிக்கு பகையாகும், இதன்படி 2,5,9,12 ம் வீட்டு அதிபதிகள்  லக்னாதிபதிக்கு நட்பாகும், லக்னத்துக்கு 3-7-11 வீட்டின் அதிபதிகள் லக்னாதிபதிக்கு பகையாகும்..

லக்னாதிபதிக்கு நட்பான கிரகங்களின் ஹோரை காலங்களில் எந்த காரியம் செய்தாலும் வெற்றி உண்டாகும், லக்னாதிபதிக்கு பகையான கிரகங்களின் ஹோரை காலங்களில் எந்த காரியம் செய்தாலும் தோல்வி உண்டாகும், லக்னாதிபதிக்கு சமமான கிரகங்களின் ஹோரை காலங்களில் வெற்றி தோல்வி இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு உண்டு..

12 லக்னத்துக்கு உரிய ஹோரை காலம்..

1. மேஷம், சிம்மம், தனுசு: செவ்வாய், சூரியன், குரு..
2. ரிஷபம், கன்னி, மகரம்: சுக்கிரன், புதன், சனி..
3. மிதுனம், துலாம், கும்பம்: புதன், சுக்கிரன், சனி..
4. கடகம், விருச்சிகம், மீனம்: சந்திரன், செவ்வாய், குரு..

12 லக்னத்துக்கு பகையான ஹோரை காலம்..

1. மேஷம், சிம்மம், தனுசு: சுக்கிரன், புதன், சனி..
2. ரிஷபம், கன்னி, மகரம்: சந்திரன், செவ்வாய், குரு..
3. மிதுனம், துலாம், கும்பம்: சூரியன், செவ்வாய், குரு..
4. கடகம், விருச்சிகம், மீனம்: சனி, சுக்கிரன், புதன்..

குறிப்பு: இதில் கொடுத்துள்ளது பொதுவானதே, அவரவர் ஜாதகத்தில் அந்த கிரகங்கள் பெற்ற சுபத்துவம், வலுவை பொறுத்து சில பகை கிரகங்களும் நன்மை செய்யும், நட்பும் தீமை செய்யும் ஆகவே இது பொதுவானதே, இந்த பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவே, சுய ஜாதகம், கிரக நிலை பதிந்து கேள்விகள் வேண்டாம், ஏனெனில் முழு ஜாதகம் ஆராய்ந்தே இதை கூற இயலும்..

Sunday, July 12, 2020

ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் 12/07/2020 ஞாயிறு அன்று

{ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிய தகவல்}

 ஆன்மிக உலகில் விடை தெரியாத புதிர்கள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. செந்தனலைக் கக்கி, வானத்தில் வலம் வரும்-நம்மால் தினமும் வணங்கப்படும் நவகோள்களுள் ஒன்றான சூரியனின் வெப்பத்தையே தாங்க முடியவில்லை. கோடைக்காலத்தில் குமுறிப் போகிறோம். ஆனால், மெய்ஞானமும் விஞ்ஞானமும் என்ன சொல்கிறது தெரியுமா? சூரியனையும் தாண்டிய பரவெளியில் சூரியனை விடவும் அதிக சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்.

ஆன்மிகத்தை அறிவதே ஆனந்தம். ஆராய்ச்சியில் இறங்கினால், ஆண்டுகள் போதாது. பரவெளியில் புதைந்து கிடக்கும் பிரமாண்ட ரகசிய ங்களைப் போன்றது தான் சித்தர்கள் வாழ்க்கையும். மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும், ஷீரடி அவதார புருஷர் ஸ்ரீசாய்பாபாவும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே சமாதி கொண்டிருந்தாலும், அவர்களை நம்பித் தொழும் பக்தர்களுக்கு இன்றைக்கும் தரிசனம் தந்து கொண்டிரு க்கிறார்கள். இது தரிசனம். இது போன்ற சித்த புருஷர்களுள் ஒருவர்தான் ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர். 1980-களின் துவக்கத்தில் இவர் சமாதி கொண்டார். ஒட்டன்சத்திரத்தில் நாகனம்பட்டி ரோட்டில் இவரது ஜீவ சமாதி இருக்கிறது. சுமார் 550 வருடங்கள் இவர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள். இவர் சமாதி ஆகி, சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும். இன்றைக்கும் கேராளவில் ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைத் தரிசித்த பழநிவாசிகள் இருக்கிறார்கள். ஒட்டன்சத்திரத்துல எல்லா பயலுகளும் நல்லா இருக்கானுங்களா? என்கிற விசாரிப்பைக் கேட்ட பக்தர்களுக்கும் உண்டு.

திண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர் இது. வர்த்தகர்கள் அதிகம். எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை..... ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராமசாமி சித்தரின் சமாதி,  இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர்கள் எப்போதாவது இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். மற்றபடி இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது. எண்ணற்ற அற்புதங்களையும் ஸித்து விளையாட்டுகளையும் நிகழ்த்திய ஒரு மகான் ஒட்டன்சத்திரத்தில் குடி கொண்டிருக்கிறார்

ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார், பெற்றோர் யார். எப்படி ஒட்டன்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை. தான் ஒட்டன்சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார். இதற்கு அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும், பிரியாணி பொட்டலமும் வந்துவிடும். சித்தர்கள் பிரியாணி சா ப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. தன்னை நாடி வரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு. வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி, அதை சாப்பிடுவது போல் செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள். அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.

ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின், எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ, அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத் துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர். ஆக, ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா? இனி, ராமசாமி சித்திரைப் பற்றி பார் ப்போம். இவரது பெயர் ராமசாமி என்பது. ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது. அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர். சாமீ, சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார். ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம். ஒட்டன்சத்திரத்தில் வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள். உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர் தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது. காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது. விடிகாலை மூன்று மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர். புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. போங்கடா... போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீங்க.... என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி அனுப்பினார்.

ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள், சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவனெல்லாம் இங்க வாங்கடா என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல். ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள். பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் - ஒற்றைக் காலில் நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார். வாங்கடா ஒட்டன்சத்திரத்து ஆளுங்களா..... உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்.... ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல? என்றார் (அதுவரை சித்தர், பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பி றகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்). யார் சாமீ.... நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே? என்றனர் ஊர்க்காரர்கள். அடேய்.... பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே... அவன்தான் ராமசாமி சித்தர். அவனுக்கு வயசு என்ன தெரியுமா? ஐந்நூத்தி ஐம்பது. சரி, ஊருக்குப் போனதும். அவன்கிட்ட போய், ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க என்றார். தொடர்ந்து தவத்தில் இறங்கி விட்டார்.

ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள். தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடையாளம் கண்டுகொண்டு. நம்மூர் சித்திரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள். அங்கிருந்து அகன்றார்கள். ஒரு வழியாக ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள். தாங்கள் புறப்பட்ட இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள். மெள்ளக் கலையை முற்படும்போது ரிஷிகேஷ் போனவனெல்லாம் இங்க வாங்கடா என்று பாத்திரக்கடை வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார். அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது - ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம். அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர். ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.

ஏண்டா.... அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல..... ஏண்டா, என்கிட்ட சொல்லாம போறீங்க? என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்கவும், சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை. சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும். அவசரத்தல மறந்துட்டோம் என்று சொல்ல.... சிரித்தார் சித்தர். போங்கடா. எல்லாரும் நல்லா இருப்பீங்க என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
😞🙏
பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன். மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம். பூஜை, புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும். மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர். மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார். பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால், அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார். இப்படித்தான் ஒரு முறை ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.

பழநியில் இருந்து புறப்பட்டு, சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார். அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார். ராஜம்மாள் அங்கு வந்ததுமே, வாம்மா..... உன்னைத்தான் தேடுகிறேன், வா என்றார் சித்தர். மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார் ராஜம்மாள். பிறகு, பக்கத்துல ஒட்டல் இருக்கு. அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா என்றார். அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார். பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது. தயங்கியவாறே நின்றிருந்தார். என்னம்மா... பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்.... அப்படியே நிக்கறே..... பொறப்படு என்றார் சித்தர். பிறகு, நான் வேணா காசு தர்றேன், யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா? என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள். அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா. நீயே கடைக்குப் போய் வாங்கிட்டு வா. சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் சித்தர். ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள். இவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர். என்னம்மா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா?  யோகக்காரப் பொம்பளைம்மா நீ.... உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை பார்சல் செய்யச் சொன்னார். காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள்,ரொம்பவும் கூசிப் போனார். ஐயர் வீட்டுப் பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு, அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.

பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி? நீயே பிரி என்று சித்தர் சொன்னதும், அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு. சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்தால். இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி, பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி. பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெல்லப் பிரித்தார். பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல் ஏற்படும் என்பதால். அந்த வேளையில் சுவாசிக்கவும் மறந்தார். பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இந்தாங்க சாமீ.... என்று கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார். நீயே கண்ணைத் திறந்து பாரம்மா - உன் கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு. அதன் பிறகு என்னிடம் கொடு என்றார் சித்தர். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம். காரணம்-பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அல்ல.... நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல். சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள். முந்திரியும் திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம், ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது. தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை - கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை-நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள். சாப்பிடும்மா.... எடுத்துச் சாப்பிடு. ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா என்ற சித்தர், தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
😞🙏
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன்சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ராமசாமி சித்தர், பாத்திரக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். இவரது இடத்தைக் கடக்கும்போது அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது. ஜீவகாருண்யத்தை (அசைவம் சாப்பிடாதவர்கள்) எப்போதும் கடைபிடித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார். சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் துண்டுகளைப் பார்த்து முகம் சுளித்தார். ஓரமாக நடந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார். டேய் இங்கே வாடா என்று அவரை அழைத்தார். யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர், என்ன சாமீ? என்று கேட்டார். கிழே விழுந்து கிடக்கிற க ருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்! முகம் கொதித்துப் போனார் அன்பர்.
இத்தனை ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்த என்னைப் பார்த்தா, கருவாடு சாப்பிடச் சொல்கிறீர்? நான் செத்தாலும் சாவேனே தவிர, கருவாடு சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப் போயே விட்டார்.

சித்தர் மெதுவாகச் சொன்னார்: ஆமாடா....இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே.... உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்..... விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா.... போய்ச் சேரு. ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர் மாரடைப்பு வந்து இறந்து போனார்.

 ஒருவேளை, சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால், பிரியாணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி, இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும். இதை உண்ட பலனால், அவரது ஆயுள் பலம் கூடி இருக்கலாம். விதி ஜெயித்து விட்டது போலும்! பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர், சித்தர்கள் தரிசனத்தில் நெகிழ்பவர். பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து, ஆன்ம ஞானம் பெற்றவர். ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது, அப்போது அவருடன் இருந்தவர் இவர்.

இனி, கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.

ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை. அவ்வப் போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர். யார் என்பது தெரியாது. பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர். வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார். சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார்.

 1977-ஆம் வருடம் என்று நினைக்கிறேன். நான், என் மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம். சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார். பிறகு, நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார். உடனே பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன். எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார். பிறகு, ஒரு பீடிக்கட்டு, மூன்று சிகரெட், ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து, பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார். ரொம்ப காலம் பாதுகாத்து வந்தேன். ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன், சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு சனிக்கிழமை....சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன். சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்து கொடுத்தேன். குடித்தார். பிறகு, அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது. பாதையை மறைக்காதடா.... குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச் சொன்னேன். வேறொன்னுமில்லை. அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார். அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார் என்றார் அவர். அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகி விட்டார். தகவல் கேள்விப்பட்டதும். சித்தரின் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர். சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார். சித்தர் அடக்கம் ஆவதற்கு காங்கிரஸ் பிரமுகரான பழநியப்பா, நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார் (இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இருக்கிறது) பெரிய குழி வெட்டி, அதற்குள் நான் இறங்கினேன். அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமைஅன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது. விபூதி, உப்பு, வில்வம், புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி, சித்திரை அடக்கம் செய்தோம். நான் கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன். மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று கிடைத்தது அவரது அருள்தான்.

எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும். அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால், அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும். அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது யதேச்சையாக சாலையின் இடப்பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன். அங்கே-ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத் துண்டு இருந்தது. சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன். பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். இதற்குள் பேருந்தும் வேகம் எடுத்து விட்டது. மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர். எப்படி விருபாட்சிமேடு அரு கே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது, எனவே, பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன். சுவாமிகளே வந்து கதவைத் திறந்து என்னப்பா... இந்த வேளைல? என்றார். எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன். நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.

இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை. விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த சமாதியை நோட்டமிட்டேன். அவரது சமாதியில் - தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது. உடனே பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன். ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு, சரீரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா. அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார். அவர் போன ஊர் புண்ணியம் பெறும் என்றார். அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான். அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசி ர்வதித்துக் கொண்டிருப்பார்கள். ராமசாமி சித்தரும் அப்படித்தான். சுமார் இரண்டு மாதங்கள் கழித்து. கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார். கண்ணன். ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார். முஸ்லிம் பக்தர் ஒருவர். ஆசையுடன் கொடுத்ததாம் இது.

Friday, July 10, 2020

காதலுக்கு மரியாதை 10/07/2020 வெள்ளிக்கிழமை

காதலுக்கு மரியாதை.......
யாரிடம்....?
யாருக்கு?


இந்த பாடலைக் கேளுங்கள்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..!
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்.

காதலுக்கு கடிதம் எழுத சொல்லி மேகங்களை தூதுவிடுவதாக இருக்கும் இந்த பாடல்..!

காதல்
கடிதம்
இசை
எழுத்து இவை எல்லாம் மிதுனத்தையும் குறிக்கும்..!
🕊️
3,5 நல்ல தொடர்பு பெற்று வலுவாக இருந்தால் காதலிக்கு கடிதம் மூலம் தூதுவிடுவான்..!


5,7 தொடர்பு என்பது காதலிக்கு பரிசு பொருள்கள் வாங்கி தந்து ஆளை மயக்குவான்..!

5,8 தொடர்பு காதல் செய்யும் போதே கசாமுசா வேலை நடந்து முடிந்துவிடும்..

5,4 தொடர்பு கற்பு கோவிந்தா! கோவிந்தா!தான்..!

4 ம் இடம் கெட்ட பெண்கள் காதலனை நம்பி எங்கேயும் போக கூடாது..பல வித்தைகளை காட்டி மேட்டரை முடித்துவிடுவான் கவனம்..!

வாழ்வில் கவனம் வேண்டும்.
அதை வெல்லும் துணிவும் வேண்டும்.


5,12 தொடர்பு காதலால் காதலிக்கு காதலே மோசம் போகும்..!

5,9 தொடர்பு காதலியே பாக்கியவதியாக அமைவாள்..!

5,6 தொடர்பு காதலுக்கு தடை..காதலியே தடை..காதலே தடை..!

🕊️பிரபஞ்ச_சக்தி


Wednesday, July 1, 2020

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.....

ஒப்பணக்கார வீதி :

விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புறம்:

1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்:

பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.

சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:

கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.

டவுன்ஹால் :

விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.

கோட்டை மேடு :

டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1782ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

கோட்டை ஈஸ்வரர் இருக்கிறார்.

ராஜா வீதி :

ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.

காட்டூர் :

அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று.
சரிதானுங்கோ!