Saturday, June 23, 2018

காதல் மன்னன் யார்? 23/06/2018 சனி


ஆனந்தம் பொங்கும் அலைபாயும் நெஞ்சம்!!
காதல் மன்னன் யார்?
              
           

மலர்ந்த முகமும் வசீகரிக்கும் கண்களும் பார்த்த உடனேயே ஒருவர்  அவர்பால் ஈர்க்கப்படுகிறார் என்றால் எப்படி?
அவரது அமைதியான தோற்றமும், இனிமையான பேச்சும் மேலும் அவரிடம் மனம் செல்கிறது. எதனால்?
ஜாதகரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா?
முடியும். 

ஒருவரது  ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னாதிபதி சுக்ரன் வீடுகளான ரிஷபம், துலாமில் அமைந்தாலும்,
எந்த லக்னமாயினும்  லக்னாதிபதியோடு சுக்ரன்  இணைந்திருந்தாலும்,
லக்னாதிபதியை சுக்ரன் பார்த்தாலும்
அந்த ஜாதகர் மேற்சொன்னவாறு இருப்பார். மேலும் மங்கையர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் மன்னன் ஆகவும் திகழ்வார். கலாரசிகராகவும் இருப்பார்.

அவ்வகையில் கலைத்துறையில் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பழம்பெரும் நடிகர் திரு. ஜெமினிகணேசன் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயோடு சுக்ரன் இணைந்திருந்தாலும், அவர்கள் இருவரும் லக்னத்துக்கு 2ல் அமைந்தாலும், இவருக்கு இனிய பேச்சும்,வசீகரத் தோற்றமும் அமைந்தது.

 11ல் இருந்த சனி வலுவாக இருந்ததால் ஜனவசியமும் ஏற்பட்டது. திரையுலகில் சிறந்து விளங்கியதோடு மக்களால் அன்பாக காதல்மன்னன் என்றும் அழைக்கப்பட்டார்.

அடுத்து  கலைத்துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்கிய பழம்பெரும் நடிகர் திரு. என்.டி.ராமராவ் அவர்களின் ஜாதகம் ஆகும்.



இவரது ஜாதகத்தில் சுக்ரன் வீடான துலாமில் லக்னம் அமைந்ததும், லக்னாதிபதி சுக்ரன் 7ஆம் வீட்டில் அமைந்து  லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பாகும்.
லக்னத்தில் குருவும், சந்திரனும் அமைந்து  லக்னாதிபதிப் பார்ப்பதும் அருமையான அமைப்பாகும்.

லக்னத்தில் குரு அமைந்தது தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட ஜாதகம் என்பர். அத்தோடு சந்திரன் இணைவு என்பது சந்திரபிம்பத்தைப் போன்ற முகப்பொலிவையும் தோற்றத்தையும் குறிப்பதாகும்.என்.டி.ராமராவ் அவர்களின் முகத்தோற்றம் ஒப்பனையில் தெய்வீகப்பொலிவைக் காட்டியதற்கு இதுவே காரணம். அதனாலேயே அவர் கிருஷ்ணர் வேடம் தரித்தாலே நிஜகிருஷ்ணராகவே மாறிவிடுகிறார்.

கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் அவர் கிருஷ்ணராகவே வாழ்ந்துகொண்டிருந்தார். மக்களின் மனங்களில் உண்மையில் அவர் காதல்மன்னனாகவே  வாழ்ந்தார்.

11மிடத்து ராகுபகவான் அதை செம்மையாக செய்தார். 5லிருந்த கேதுவும் அரச யோகத்தைத் தந்து அரசியலில் வெற்றியைத் தேடித் தந்தார். ஆந்திர அரசின் முதல்வராகவும் விளங்கினார்.

உண்மையான காதல் மன்னன் யார்?
வேடம் தரித்து நடித்ததாலேயே இவர்கள் இவ்வளவு பேரும் புகழும் பெற்றார்கள் என்றால்……
உண்மையான காதல் மன்னன் யாராவது இருந்திருப்பார் அல்லவா? அவர் யார்?
ஆமாம், இருந்தார். அவர்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெனனம் ரிசப ராசி , ரிசப லக்னத்தில் பிறந்து இருக்கிறார். இதுவும் சுக்ரன் வீடு. அவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார். லக்னத்திலேயே சந்திரன்.
லக்னாதிபதி சுக்கிரன் , 12 - ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறார். மேலும் பாவி ராகுவும் கூடவே நிற்கிறான். 4க்குரியவன் சூரியன் ஆட்சிபலத்தோடு 8ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து உள்ளார்.
மேலும் பாக்கியாதிபதி சனி பகவான் 7மிடத்திலிருந்து லக்னத்தை பார்ப்பதாலும் லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்றதாலும் லக்னாதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் அழகுக்கு பஞ்சமில்லாமல் தெய்வீக உருவம் பெற்றார். 
                                        
2 - ம் இடத்து அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றான். ஆகையால் அறிவுக்கு ஒரு குறையும் இல்லை. உத்தவரை குருவாக அடைந்து னைத்து வேதமும் அறிந்தவராக இருந்தார்.      

மேலும் நாலாம் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சூரியனுடன் இருப்பதால் கல்வியில் மிக சிறப்பாக இருந்தார். 64 ஆயகலைகளையும் அறிந்தவர் என்று பெயர் எடுத்தார்.
கலாரசிகர். இசைப்பிரியர். 2க்குரிய புதன் உச்சம். குழல் ஊதுவதில் விருப்பம். அவரது குழல் இசை தெய்வீக கானமாகத் திகழ்ந்தது. அவரது குழல் இசையைக் கேட்ட மனிதர்கள், கோபியர் தேவநிலயை எய்தினார். மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும், விலங்குகளும் கூட அவரது இசைக்கு வசமாயின.

லக்னாதிபதி சுக்கிரனும், மூன்றாம் அதிபதி சந்திரனும், பரிவர்த்தனை ஆகியும் உள்ளனர்.
ஏழாம் இடத்தில் சனி , ஏழுக்கு உடைய செவ்வாய் ஆறுக்கு உடைய சுக்கிரனுடன் சேர்ந்து மேலும் பாவி ராகுவுடனும் கூடி மூன்றாம் வீட்டில் நிற்பதாலும். அதனால் அவருக்கு பல மனைவி அமைந்தார்கள்.
               
சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சனி  இருந்ததாலும் லக்னத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறான். மூன்றில் செவ்வாய்  நீசமாகி இருக்கிறான். மேலும் வர்கோத்தம் பெற்றும் உள்ளார். ஆனாலும் அந்த வீட்டதிபதி சந்திரன் உச்சமாகியும் உள்ளதால் நீசபங்க இராஜயோகம் ஏற்பட்டு விட்டது.ஆகவே கிருஷ்ணர் மிகவும் வீரதீரமிக்கவராகவும் விளங்கினார்.அரசியல்ஞானம் மிக்கவராகவும் இருந்தார். யதுகுலத்திற்கே அரசராகவும் திகழ்ந்தார்.
இல்லறத்திலும் அரசியலிலும்,ஆன்மீகத்திலும் மிகச்சிறப்பாக வாழ்ந்த ஒரு தெய்வீகபுருஷர் ஸ்ரீகிருஷ்ணர். இவரது ஜெனனம் ஒரு அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்தது
இந்த நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி எழுதுவதில் மிக்க மகிழ்ச்சியும் இதை சாத்தியமாக்கிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் என்னுடைய நன்றி
கிருஷ்ணார்ப்பணம்.








Sunday, June 17, 2018

ஜிவிதம் எப்படி? 17/06/2018 ஞாயிறு

🐐 🐐 🐐 🐐 🐐 🐐
ஜிவிதம் எப்படி?

மனிதன் எப்போது மிருகமாகிறான்?

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு கழுதை சொன்னது*

நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!

கடவுள்
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐕 🐕 🐕 🐕 🐕 🐕

அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு நாய் கூறியது :*

கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு
15 வருஷம் போதும்...!

கடவுள்
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐒 🐒 🐒 🐒 🐒 🐒

அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு குரங்கு கூறியது :*

20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!

கடவுளும்
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!

👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼

கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!

*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*
*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*
*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*

*இதற்கு மனிதன் கூறினான் :*

20 வருஷம் ரொம்ப குறைவு...!
*கழுதை* வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
*நாய்* வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
*குரங்கு* வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!

கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!

அன்று முதல்
மனிதன் முதல்
*20 வருடங்களை*
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த
*30 வருடங்களை*
*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!

குழந்தைகள்
வளர்ந்தபிறகு அடுத்த
*15 வருடங்களுக்கு*
அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!

வயதாகி, Retire ஆன
பிறகு *குரங்கு* போல்
*10 வருடங்களுக்கு*
மகன் வீட்டிலிருந்து
மகள் வீட்டிற்கும்,
மகள் வீட்டிலிருந்து
மகன் வீட்டிற்கும் தாவி
பேரக்குழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து  பின்னர் மரணிக்கின்றான்...!

*மனித ஜிவிதம் இப்படித்தான்.
வாழ்க்கையின் உண்மை...!*



🤠 🤠 🤠 🤠 🤠 🤠

Saturday, June 9, 2018

திருமலைக்குச் செல்வதால் என்ன நன்மை? 9/06/2018 சனி




திருமலைக்குச் செல்வதால் என்ன நன்மை

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடன் பதிவு.

யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்  வாருங்கள்...

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம்
திருப்பதி ஆகும். சந்திரனின் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனதிற்கு நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார், அவற்றின் சக்தி கடல் அளவு என்பர், .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும், 

மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலமடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

                     


வாஸ்துபடி  வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும், மக்கள் கூட்டம் அலைமோதும், செல்வம் மலை போல குவியும் .

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான், சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள், . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக
அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள
கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு
உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். 


குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர்
சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது, நிமிர்ந்து
மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு
சுழல்கின்றன.

உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்க்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் இத்திருக்கோவில்!

குறிப்பு

சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். 
திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.
   


திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா. திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள், நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம்.
 காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம்
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம், 
அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது, ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த
அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம், ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது, மாறாக
அங்கு கூச்சலும் குலப்பமாக தான் இருக்கும், இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.




அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா-.-. 
மேஷம்  , ரிஷபம் ,
மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் அவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.


வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னக்காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

 
ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ
                                   
"

சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " --

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!


பொதுப்  பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு
மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
               

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்


ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

Tuesday, June 5, 2018

புதிய பறவை! புதிய பார்வை!! 5/06/2018 செவ்வாய்

புதிய பறவை!     புதிய பார்வை!!     5/06/2018 செவ்வாய்

ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு...

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.

மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும்.

இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும்.

பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும்.

தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும்.

இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.

வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!.

ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது.

இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.

சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது.

அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது.
 
"நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை!

வேகமாகச் செயல்பட முடியவில்லை.

எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை" என்றது.

நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது.

"அதுவா, என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருக்கிறேன்!" என்றது குருவி.

"அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்" என்றது நாய்.

"எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்." என்றது குருவி.

"அப்படியா! இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்.

"சே! புரியாமல் பேசுகிறாயே!
இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை" என்றது குருவி.

நாய் விடவில்லை. "நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.

ஒத்துக் கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது....

அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது.

என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது...

ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.

சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்தது

"நண்பனே!எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே கூடாது.

அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது.

அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன!


ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது.

விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது என்றது.
 தனது இயல்பான, உயர்வான நிலைக்கு திரும்ப உதவிய நண்பனுக்கு                   நன்றியைத் தெரிவித்தது குருவி.


மனிதர்களும் இது போன்ற ஏமாற்றம், சோகம், கோபம், பொறாமை, பேராசை என்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் அல்லவா!"
விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் அல்லவா!".
5ஆமிடம் திரிகோணஸ்தானம். இங்கு புதிய எண்ணங்கள், சிந்தனைகள், உற்சாகம் தோன்றும்இடமாகும்.
அது தான் குருவிக்கு ஆரம்பத்தில் ஏற்பட்டது. அதை 10ஆம் இடம் வாயிலாக செயல்படுத்தியது.

11ஆமிடம் மூலமாக லாபமாக சேகரம் ஆயிற்று.
 அதன் சேகரிப்புக்கு அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது குருவி.

 அளவு கூடக்கூட அதுவே அதற்கு பாரமாகத் தோன்றியது.
இப்போது 6ஆமிடமும், 8ஆமிடமும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.மனதில் அமைதியின்மையும், போராட்டமும் குடிகொண்டுவிட்டன
லக்னாதியும்( குருவியும்) 5ஆமிடமும் வலுவிழக்கவே சோர்வும், உற்சாகமின்மையும் ஏற்பட்டு விட்டன.
சிந்தித்து செயல்படவும் முடியாது தவித்தது.

இப்போது நட்பு ஸ்தானத்துக்கு ( 7மிடம்)
லக்னாதிபதி தொடர்பு ஏற்பட நாய் நல்லூரை கூற, ஆரம்பத்தில் குருவி அதை  விரும்பாவிடிலும்
நட்புக்காக ஏற்றுக்கொண்டது.

.


லக்னம் பாதிக்கப்பட்டால்  அதன் எதிர்ஸ்தானம் ஆகிய 7 ஆமிடம்(நட்பு/துணை) வலுவாகி விடுவது வழக்கம்; இயல்பு.  ஆகவே  இங்கு நட்பான நண்பன்   நல்லூரை கூறவே, குருவியின் பிரச்னைக்கு  (6ஆமிடம்) தீர்வு
கிடைத்தது.  6ஆமிடத்திற்கு எதிர்ஸ்தானம் 12ஆமிடம் விடுதலைஸ்தானம்,
 பிரச்னைகளை ஒவ்வொன்றாக  கழட்டி விட கழட்டி விட தனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது.

நாமும் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் அல்லவா!".

 பிரச்னைகளைச் சந்திப்போம்!     தீர்வு கண்டு சாதிப்போம்!!