Thursday, August 25, 2016
Wednesday, August 24, 2016
தாம்பூலம் தரித்தல் 24-08-2016 புதன்
சித்தர் வாழ்க! சிவன் வாழ்க!
முத்தர் வாழ்க! முனிவர் வாழ்க!
பக்தர் வாழ்க! ரிஷிகள் வாழ்க!
பார்புகழும் வாலைப்பெண் வாழியவே!
வணக்கம்.
ஹரி ஓம்!
மெய்யன்பர்களே! இன்று நாம் தாம்பூலம் குறித்த விஷயங்களைப் பற்றி பேச உள்ளோம்.
வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. பண்டிகைகள் முதல் விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது வெற்றிலை.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலையில் பணம் வைத்து அழைப்பார்கள். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.
வெற்றிலையும்,பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும் சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும் பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வெற்றிலையானது
பயன்பாட்டில் இருந்து வருகிறது. பழந்தமிழர் மரபாகட்டும்; இந்தியக் கலாச்சாரம்
ஆகட்டும். அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டது தான். முடி
வெட்டுவதிலிருந்து மன்னன் முடிசூடுவது வரை கடைபிடிக்கப்படும் சடங்குகளில் பல்வேறு
வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கியுள்ளன.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படியொரு நல்ல விஷயம் அடங்கியுள்ளது. பொதுவாக வெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு
ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த கலவை
உடலையும்,மூளையையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. அதே சமயம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்த வைத்தியமும், ஆயுர் வேதமும் உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம்
ஆகியன சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும்போதோ,குறையும்போதோ தான் நோய் வருகிறது
எனச் சொல்கின்றன.இம்மூன்றையும் சரியான விகிதத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோயை
எதிர்த்து நிற்கும் ஆற்றல் வருகிறது.
இந்த மூன்று நிலைகளையும் சரியாக வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.
பாக்கிலிருந்து கிடைக்கும் துவர்ப்பு
பித்தத்தைக் கண்டிக்கக் கூடியது.
சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தைப்
போக்கவல்லது.
வெற்றிலையில் உள்ள உறைப்பு கபத்தை நீக்கவல்லது.
இப்படிப் பாத்தால் வெற்றிலை போடுதல் என்ற ஒரே
பழக்கத்தில் மூன்று நிலைகளையும் முறைப்படுத்தி சரியாக அமைந்து விடுகிறது.
அதோடு ஜீரணசக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது.
இப்போது வயதானவர்களுக்கு வரக்கூடிய அபாயங்களில்
மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டாலும் முதுமையின் காரணமாக
பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் வயதானவர்களுக்கு
எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம்
தரித்தல் பழக்கமே. ஒரு குறிப்பிட்ட அளவு
சுண்ணாம்புச்
சத்து நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுவடைந்து விடுகிறது.
எனவே இனியாவது நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டியாவது
நம் பண்டைய கலாச்சாரமாக திகழும் தாம்பூலம் தரித்தல் என்பதைக் கடைபிடிப்போமாக! இந்நாள் சுபநாளாக அமையட்டும்! நமஸ்காரம். நாளை சந்திப்போம்.
Sunday, August 7, 2016
Subscribe to:
Posts (Atom)