Sunday, May 25, 2025

ஹாட்ரிக் வெற்றி துலாம் ராசி பலன் 26/03/2025

ஹாட்ரிக் வெற்றி! துலாம் ராசி பலன்!

 சனிப்பெயர்ச்சி பலன்கள் 


எமது கிரக லீலா டிவி சானலில் பாருங்கள் 

லிங்க்:

https://youtu.be/YWYA21CXQqA?si=_9Sb3nJ4AByR3ahd

Tuesday, March 11, 2025

*மார்ச் 14 /2025 அன்று ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் 2025*

*ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் 2025*


இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 14 ஆம் தேதி காலை 9.27மணிக்கு ஆரம்பம்


 *சந்திர கிரகணம்*

சென்னை: 2025ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகங்கள் உள்ளன. ஆனால் இதில் ஒரே ஒரு கிரகணம்தான் இந்தியாவிலிருந்து பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


 *சந்திர கிரகணம்* 


மார்ச் மாதம் 14ம் தேதியன்று *சந்திர கிரகணம்* நடைபெறுகிறது. ஆனால் *இதை இந்தியாவில் பார்க்க முடியாது.* ஏனெனில் சந்திர கிரகணம் நடக்கும்போது இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும்.

இந்தியா தவிர, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரியும்.


*சூரிய கிரகணம்:*

 அதே மாதத்தில் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அதாவது மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ஆனால் இதுவும் இந்தியாவில் தெரியாது. மற்றபடி வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் தெரியும்.


*கிரகண நேரம்* 


இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மார்ச் 14 ஆம் தேதி காலை 9.27மணிக்கு ஆரம்பம்.

மதியம் 3.03 மணிக்கு முடியும்.

நண்பகல் 12.28 மணிக்கு உச்சம் அடையும்.


இந்தியாவைப் பொறுத்தவரை கிரகணம் நடைபெறும் நேரம் முழுவதும் பகல் நேரத்தில் நிகழ்வதால் நம் நாட்டில் இக்கிரகணத்தைப் பார்க்க முடியாது.



மார்ச் 14 ஆம் தேதி நிகழும் இந்த சந்திர கிரகணம் *ரத்தச் சிவப்பு நிறத்தில் சந்திர கிரகணம் தெரியும்*.

** (*)**

Monday, March 10, 2025

ஜாதக கணிதம் செய்தல் Graha Leela Tv

 


ஜாதக கணிதம் செய்தல் Graha Leela Tv

https://youtu.be/_eU5j4doY3A?si=lhMzNdeiW9Jl15ub


Wednesday, February 12, 2025

_மாசி_மாத_பிறப்பு #மகத்துவம்_நிறைந்த_மாசி_மாதம்.*13/02/2025 வியாழக்கிழமை

 *#_மாசி_மாத_பிறப்பு #மகத்துவம்_நிறைந்த_மாசி_மாதம்.*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாதங்களில் மாசி மாதத்தினை "கும்ப மாதம்" என்றும் அழைப்பார்கள். 



இவ்வளவு மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

🌝

*#மாசி_பௌர்ணமி*

இந்த ஆண்டு மாசி 29ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (13.03.2025) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

🌝

அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

🌝

*#மாசி_மகம்*

மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள்.

🌹

அந்த வகையில், வரும் (12.03.2025) புதன் கிழமை அதாவது, மாசி 28ஆம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

🌹

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.

🌹

*#மாசி_சங்கடஹர_சதுர்த்தி*

மாசி 04 ஆம் தேதி அதாவது ஞாயிறுயன்று (16.02.2025) மாசி சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகப்பெருமானை வழிபட எல்லா தோஷங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம்.

☘️

*#மகா_சிவராத்திரி* 

மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி இன்னும் விசேஷமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மகா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

☘️

அந்த வகையில், வரும் 26.02.2025 புதன்கிழமை அதாவது மாசி 14ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

🌑

*#மாசி_அமாவாசை*

அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களே. மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலனை தரக்கூடியது. அதன்படி மாசி 15 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (27.02.2025) மாசி மாத அமாவாசை வருகிறது.

🌹

*#காரடையான்_நோன்பு*

வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.

இந்நோன்பு மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு, பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.

🌹

*#அமிர்தம்_நிறைந்துள்ள_மாதம்.*

இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

🌹

*#கும்பமேளா_கொண்டாட்டம்.*

இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

🌹

*#மாசி_மாத_புண்ணிய_பலன்கள்.*

மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். மாசி மகத்தன்று விரதமிருந்து இறைவனை நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால் வாழும் வரை ஆரோக்கியத்தோடு, உலகையே ஆளக்கூடிய ஆசி கிட்டும் என்பது ஐதீகம்.

🌹

*#பகவான்_மகா_விஷ்ணு_ஸ்ரீ_வராக_அவதாரம்.*

பகவானின் மிக முக்கிய 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்றியது இந்த மாசி மாத்தில்தான் என்பது மாசி மாதத்திற்கேயுரிய கூடுதல் சிறப்பாகும்.

🌹

*#சாவித்திரி_தன்_கணவன்_உயிரை #எமனிடம்_இருந்து_மீட்ட_மாதம்.*

சத்தியவான் மரணமடைய, அவனது உயிரைக் கவர்ந்து சென்ற எமதர்மராஜரிடம் மன்றாடி, போராடி, வாதம் செய்து, தன் கற்பின் சக்தியினால், தன் கணவரின் உயிரைத் திரும்பப் பெற்றாள் சாவித்திரி. இந்த சம்பவம் மாசி மாதக் கடைசி தினத்தில் நிகழ்ந்ததாக, ஸ்ரீமத் மகாபாரதம் கூறுகிறது.

Thursday, February 6, 2025

ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் என்ன?


 






ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக் கிரக ரீதியான காரணம் என்ன?

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
*கடந்த வெள்ளிக்கிழமை* *(31/1/2025) அன்று* *புதியன கற்போம் பகுதியில் ஜாதகம் சிறப்பு ஆய்வில்*
*தெரிந்த கதை தெரியுமா விடை பகுதியில் ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக் கிரக ரீதியான காரணம் என்ன?* என்று குழுவில் கேட்கப்பட்டது.

சிறப்பு ஆய்வு என்றாலே அது சற்று விரிவாகவே இருக்கும்.
காலநிலை மாற்றம், வேற்று இடம், உணவு பழக்கம், தூக்கம் ஓய்வு எல்லாமே புதியன.

இது எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு பயணத்தால் ஏற்படும் *Jet log* ஆல் உடல் நிலை சற்று சீராக ஒரு வாரம் அல்லது 10நாட்கள் ஆவதால் உடனடியாக என்னால் உங்களுக்கு பதில் விளக்கம் கொடுக்க முடியாது போனைதற்கு மன்னிக்கவும்; வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*இதோ அதன் விளக்கமும் விவரமும்*



அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

நேற்றைய தினம் *தெரிந்த கதை தெரியுமா விடை?* பகுதியில் ஜாதகம் சிறப்பு ஆய்வில்
ஜாதகருக்கு *அமெரிக்கா விமான பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?* என்று சிறப்பு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஒரு சிலர் ஆய்வு செய்து சிறப்பாக பலன்களை கூறியிருந்தனர்.அவர்களுக்கு *எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.*

இதுபோன்ற சிறப்பு ஆய்வில் நாம் கலந்து கொண்டு பலன் கூறும் போது பல புதிய  விஷயங்கள் தெரிந்து கொள்ள கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும்.
தங்களது ஜோதிட அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளவும் பட்டைத் தீட்டிக் கொள்ளவும் முடியும்.

மேலும் ஒவ்வொருவரின் ஜோதிட பார்வை  வெவ்வேறு வகையான கோணங்களில் விரிந்து பலன் கூறுவது வியப்பாக இருக்கும்.
இப்படியும் ஒரு விஷயத்தைக் கண்டறிந்து பலன் கூறமுடியும் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதனால் தான் இதுமாதிரி ஆய்வினைப் *புதியன கற்போம்* என்று தலைப்பில் பதிவிடுகிறோம்.

சரி. கேள்விக்கு வருவோம்.

ஜாதகருக்கு *அமெரிக்கா விமான பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?* என்று சிறப்பு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்டது.

ஜாதகரின் வயது 66

லக்னம் மிதுனம்

கன்னி ராசி

நட்சத்திரம் ஹஸ்தம் 4ஆம் பாதம

*நடப்பு தசா* *புதன் தசை/சுக்கிரன் புக்தி*

*புதன்* தசா
     /\
*1   4 க்குரியவர்*
   \  /
   *5ல் துலாம் ராசியில்*
(குருவுடன் இணைவு)

*சுக்கிரன் புக்தி*
       /\
    5.  12
      \  /
      *4ல் கன்னி ராசியில்*
*நீசம் மற்றும் திக் பலம்*
(புதன் சுக்கிரன் பரிவர்த்தனை)

*புதன் தசா நிலை*

*லக்னாதிபதி புதன்* குருவுடன் இணைந்துள்ளதால் சுபத்துவம் பெற்று 5ஆமிடத்தில் வலுவாக உள்ளார்.
மேலும் தனது நண்பரும் *லக்ன யோகரான சுக்கிரன்* வீட்டில் சுகமாக அமர்ந்துள்ளார்.
எனவே சுக்கிரனின் காரகத்துவங்களான கலை, இசை, ஓவியம், காதல், நுண் கலைகளில் நாட்டம்,மன மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் ஆழ்மன சிந்தனை, இறைநிலை நாட்டம், குலதெய்வம் அனுகிரகம், மந்திர உச்சாடனம், உபதேசம் ஆகியனவும் குருவருளும் திருவருளும் இயல்பாகவே அமைந்துவிடும். கிடைக்கப்பெறும்.

*சுக்கிரன் புதன் பரிவர்த்தனையால்* புதன் ஆட்சி உச்சம் பெறுபவர் ஆவதால் மேலும் கல்வியில் சிறந்தவராகவே புலமை மிக்கவராக திகழ்வார்.

அத்தோடு புதன் 5ஆமிடத்தில் இருந்து இயங்குவதால் 5ன் திரிகோணங்களான 1 மற்றும் 9ஆம் பாவங்களும் மறைமுகமாக இயங்கும்.
அதனால் நீண்ட தூரப் பயணங்கள் ஆன்மீக நாட்டம் தெய்வ வழிபாடுகள் தீர்த்த யாத்திரை சாதுக்கள் குருமார்கள் சந்திப்பு ஆசீர்வாதங்கள் கிட்டும்.



*புதன் தசா நாதன் பலன்கள்*

*காரகமும் பாவமும் இணைந்த பலன்*

மேற்கண்ட  பலன்கள் தசா புக்தி காலங்களில் நடைமுறையில் செயல்படும்.
இத்தோடு கோட்சார பலனும் அனுகூலமாக வலுவாக இருக்கும் பட்சத்தில் தசா பலன்கள் நன்முறையில் நற்பலன்கள் விளையும்.

அந்த வகையில் ஜாதகருக்கு புதன் தசா லக்னாதிபதி தசாவாக 5ஆமிடத்தில் இருந்து இயங்குவதால் அதன் பலன்கள் நன்மை தருவதாக அமையும்.லக்னாதிபதி
புதன் குருவோடு இணைந்து இருப்பது சுப பலன்கள் கூடுதலாக இருக்கும்.

*கோட்சாரத்தில் ராசிக்கு 4ஆமிடத்தில் புதன் குருவின் வீட்டில் தனுசுவில் இருப்பது சுப பலனே தரும்.*


அதேபோல லக்னப்படி 5ன் மற்றுமொரு திரிகோணமான 9ஆமிடமும் சேர்ந்து இயங்குவதால் *9ஆமிடத்தின் பாவக பலன்களையும் வெளிப்படுத்தவே செய்வதால் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.*

*வெளிநாட்டில் வாழும் மகள் மற்றும் பேத்தியைக் காணவேண்டி நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.*


*விமான பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்*👆

இதனை லக்னாதிபதியாகிய ஜாதகர் அனுபவிக்க கிரகங்கள் செய்துள்ளன.

*ஆக 1,5,9 திரிகோணங்கள் இயங்கி தசா புக்தி காலங்களில் பலனை அனுபவிக்க* *கோட்சாரமும் துணை புரிந்துள்ளன என்பது தெளிவாகிறது*.


*புக்தி நாதன் சுக்கிரன் செயல்பாடு*

*சுக்கிரன் புக்தி*
       */\*
    *5.  12*
      *\  /*
       *4ல் கன்னி ராசியில்*
*நீசம் மற்றும் திக் பலம்*
(புதன் சுக்கிரன் பரிவர்த்தனை)

புக்தி நாதன் தசா நாதனுக்கு கட்டுப்பட்டு அதற்கு ஏற்ப செயல்படுபவர் என்பதால்
*தசா நாதன் புதன் 5ல் இருந்து செயல்படுவதால்* அதன் மற்ற திரிகோணங்களும் இயங்குவதால் புக்தி நாதன் சுக்கிரன் 5,12க்குரிய பாவ பலன்களை 4ஆமிடத்தின் மூலமாகவே செயல்படுத்துவார்.

அதேசமயம் *புக்தி நாதன் பலவான் ஆவதால்* *சுக்கிரன் 4ல் இருந்து செயல்படுவதால்* அதன் மற்ற திரிகோணங்களும் இயங்கும் (8,12).

எனவே 5,12ன் பாவ பலனை 4ஆமிடத்தின் வாயிலாக செயல்படுத்தும்.
அத்தோடு 8,12 திரிகோணங்களும் தங்கள் பங்களிப்பை தவறாமல் அளிக்கும்.

இப்போது பாவகத்தையும் காரகத்தையும் இணைத்து விடுங்கள்.
சுக்கிரன் தரவுள்ள
முழு பலனையும் அறிந்து கொள்ள முடியும்.

தசா நாதனுக்கு சொல்லப் பட்ட பலனோடு சுக்கிரன் தனது *காரக ஆதிபத்திய* பலன்கள் சேர்த்து கொடுப்பார்.

ஆக 5,8,9,12 ஆதிபத்திய பலன்களை ஜாதகரை அனுபவிக்க புக்தி நாதன் சுக்கிரன் செய்வார்.

*புக்தி நாதன் சுக்கிரன் செயல்பாடு*

*சுக்கிரன் புக்தி*
      */  !   !   \*
    *5.  8  9  12 பாவ     பலன்கள்*
      *\  /* /. /
       *4ல் கன்னி ராசியில் சுக ஸ்தானத்தில்*
இருந்து வீடு, வண்டி, வாகனம், கால்நடைகள் வீட்டு உபயோகப் பொருட்கள், தாயார், உயர் நிலை படிப்பு வாயிலாக வெளிபடுத்தும்.

*12ன் செலவினத்தை விரையத்தை சுக்கிரன் லக்ன சுபர் ஆவதால் ஜாதகருக்கு சுப விரையமாக்கியது.*

அதன் வெளிப்பாடாக வீட்டில் *CCTV CAMERA set* செய்யப்பட்டது.

*4 சக்கர வாகனமான கார் service* செய்யப்பட்டது.

பயணத்தின்போது தேவை யான *Luxury materials* ஆன *கோட், சூட், dresses, Travelling Bag, suitcase* இன்னும் பிற சுக்கிரனின் காரகங்களுக்குரிய பொருட்கள் வாங்க செலவு செய்ய வைத்தது.

லக்னாதிபதி புதன் 1 மற்றும் 4 ஆமிடங்களுக்கு அதிபதி ஆனாலும் கால புருஷ தத்துவத்தின் படி 3,6க்குரியவராக வருவதால் *பிறர் சகாயம் உதவி, ஆதரவுடன் (3) எந்தவொரு சுகத்தையும் (4)* அனுபவிக்க நேரிடும் என்பது ஜோதிட விதி.

அதன்படி *மருமகன் மூலமாக அவரது sponsorship வாயிலாக* *வெளிநாட்டு பயணம் செல்வதற்கு அமைந்தது.*

சுக்கிரன் 4லிருந்து செயல்படுவதால் சுகமான சொகுசு வாகனமான விமானம் மூலம் வெளிநாட்டு பயணம் ஏற்பட்டது.

*பேத்தியைக் கவனித்து கொள்ள வேண்டியே* பயணம் ஏற்பட்டது *(5ஆமிடம்)*

8ஆமிடம் வெளிநாடு
9ஆமிடம் நீண்ட தூரப் பயணம்
*(3நாட்கள் விமானப் பயணம்)*

*வான்வழி பயணம்*
*கோட்சாரப்பலன்*


மேற்கண்ட ஜாதக ரீதியாக அமைப்பு இருப்பினும் *கோட்சாரம்* இந்த நிகழ்வுக்கு எவ்வாறு துணை புரிந்துள்ளன என்பது பார்ப்போம்.

*பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்* 👇


*விமான பயணம் மேற்கொண்டபோது கோட்சாரம்*👆

லக்னாதிபதி புதன் சுப கோள் குருவின் வீட்டில் ராசிக்கு 4ல் அமர்வு.
எதையும் அனுபவிக்கும்
சுகமான நிலை.ஜாதகர் ஓகே.

ராசிக்கு குருவின் சுபபார்வை வேறு.கேதுவின் குழப்பநிலை மாறி ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும்.
ராசிக்கு 3,5 ஆமிடம் குருவின் சுப பார்வையால் தைரியம் முயற்சி ஆகியன வெற்றியைத் தரும்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் வலு பெறுவதால் குலதெய்வம்,தெய்வ அனுகிரகம், மந்திர உச்சாடனம், உபதேசம் பேரன், பேத்திகள் மீது பிரியம் உண்டு.

செவ்வாய் பார்வை புதனுக்கு படுவதால் செயல்பாடுகள் துரிதமாக நடைபெறும்.

புக்தி நாதன் சுக்கிரன் காற்று ராசியான கும்பத்தில் அமர்வு.
தனது நட்பு கிரகமான சனியின் வீட்டில் சுகமாக சனியோடு இணைவு.

சனி ஆகாய தத்துவத்திற்குரியவர்.

*எனவே சுக்கிரன்  காற்றில் ஆகாயத்தில் மிக உயரத்தில் பறந்து செல்லும் சுகமான சொகுசு வாகனமான விமானத்தில் பயணிக்கும்படி நிகழ்காலம் ஏற்றதாக அமைந்தது.*

(38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.)

*ஜாதகத்தில் லக்னாதிபதி புதன், 7ஆமிட அதிபதி குருவின் இணைவால் தனது துணைவியாருடன் சேர்ந்து அமெரிக்கா விமான பயணம் மேற்கொண்டார்.*

மேலும் 7ஆமிட செயல்பாடாக புதிய சமுதாய சூழல் மற்றும் மக்கள், சமுதாய அமைப்பு, வேற்று இனமொழி மதத்தினரோடு பழகுதல் தொடர்பு ஏற்பட்டது. *ராசியில் கேது மற்றும் 7ஆமிடத்தில் உள்ள ராகு அமைவு*
.

*4லில் இருந்த சந்திரன் ராகுவின் சாரமான சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம்*

வெளிநாடு செல்லல் அமைப்பு வேற்று மொழி பேசும் அந்நிய தேசம் வாசம் செய்தல் நிலையைத் தந்தது.

*வெளிநாட்டில் வாசம் செய்தல்*

பேத்தியை playing schoolக்கு அழைத்து *(5, 9ஆமிடம்*)*சென்று வருதல்.
*
சற்று தள்ளியுள்ள சிறிது தூரம் பயணம் செய்து பெரிய Departmental storeக்கு சென்று வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணிமணிகள் purchase & shopping செய்தல். *.(4,7ஆமிடம்)*

அதேபோல கோவில்களுக்கு சென்று வருதல்.*.(9ஆமிடம்)*

மருமகனின் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வருதல் *.(7ஆமிடம்)*

அவர்கள் வீட்டில் நடக்கும் birthday party போன்றவற்றில் உற்சாகமாக கலந்து கொள்ளல் *.(5ஆமிடம்)*

*லக்னத்திற்கு 4ல் உள்ள சூரியன்* கோட்சாரத்தில் ராசிக்கு 5ல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக நாட்டம் மேலோங்கும் என்பதால் தெய்வ ஸ்தலங்கள் சென்று வழிபட்டு வருதல் நிலை உருவாகும்.
கற்ற கலையின் வாயிலாக நிரந்தர வருமானத்திற்கு வழியும் ஏற்படும்.

இதுபோன்று ஒரு ஜாதகத்தில் கேள்வி கேட்கப்படும் போது எவ்வாறு ஆய்வு செய்வது என்பது பற்றி உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஏறக்குறைய சரியாகவே  பலன்கள்  கணித்துள்ளனர்.

அவர்கள் *அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.*

அவர்கள் கணித்த பலன்கள் உங்கள் பார்வைக்காகக் மேலே முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்!

*....விரைவில் புதிய தொடர் ஆரம்பம்.....*

*நன்றி வணக்கம்*
*திரு S.ஷண்முகானந்தம்*
*M A.B.Ed., RTD Hm*
*ஸ்ரீபிரம்மரிஷி ஜோதிட மையம் பொள்ளாச்சி*
*Camp: Henrico Richmond Virginia*



சுக்கிரன் முனியாண்டி

குரு வாழ்க .குருவே துணை. ஜோதிட கலை ஞானம் ஆன்மீக செம்மல் திருவாளர்.சன்முகாநந்தம் அவர்கள் பதிவு எளிதில் புரியும் படி தெளிவாக உள்ளது. வணக்கம் சார்
கா.முனியாண்டி
சிவகாசி 🙏🙏🙏🙏

                நன்றி வணக்கம் 🙏

ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் என்ன?

 

ஜாதகருக்கு வான்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் என்ன?














*அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.*🌷🙏
இன்றைய தினம் *தெரிந்த கதை தெரியுமா விடை* பகுதியில் *ஜாதகம் சிறப்பு ஆய்வில்* இந்த ஜாதகர் கடந்த வாரம் (24/01/2025 வெள்ளிக்கிழமை அன்று) அமெரிக்காவுக்கு சென்றார்.

*இவரது அமெரிக்க விமானப் பயணம் செல்வதற்கு கிரக ரீதியான காரணம் என்ன?*

என்பதுதான் சிறப்பு ஆய்வின் கேள்வி.


இவரது ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாதகர் S.ஷண்முகானந்தம்

இவரது வயது 66

*லக்னம் மிதுனம்*
*ராசி கன்னி*
*நட்சத்திரம் ஹஸ்தம் 4ம் பாதம்*

தற்போது இவருக்கு நடப்பு *புதன் தசா/சுக்ர புக்தி*

*31/01/2025 முதல் சூரியன் புக்தி






22/01/2025 புதன் கிழமை அன்று அமெரிக்கா விமான பயணம் மேற்கொண்டார்.
உங்கள் ஆய்வுக்காக
*அன்றைய தினம் கிரகங்களின் கோட்சாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.*

*அன்றைய தினம் கிரகங்களின் கோட்சாரம்*

*
அமெரிக்கா விமான பயணம் மேற்கொண்ட நாள்*
*22/01/2025 to 24/01/2025 புதன் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை*


*அமெரிக்கா வந்து சேர்ந்த நாள்* *25/01/2026 வெள்ளிக்கிழமை*
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15Am.

அமெரிக்கா நேரப்படி 24/01/2025 வியாழக்கிழமை மாலை 4.45pm.(washington Airport)



                 *Washington Airport ல்*👆



*மூளைக்கு வேலை*

உங்கள் ஜோதிட அறிவையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் பகுதி இது.

தட்டிவிடுங்கள்! உங்கள் பொறியை...
கண்டு பிடியுங்கள்! புதிரின் விடையை...
எழுதுங்கள்! உங்கள் பதிலை....

தொடரட்டும்! உங்கள் ஜோதிட பயணம்.....

*வாழ்த்துக்கள்!*

*துணிவே துணை!* *வெற்றி நமதே!!*

*கோள்களின் கோலாட்டம்!*
*வாழ்வின் கொண்டாட்டம்!*அல்லது *திண்டாட்டம்!*


நீங்கள் தேர்வு செய்த இந்த ஜோதிடத் துறை உங்கள் விருப்பத்திற்குட்பட்டது.

அதில் குறைந்த பட்ச அளவாவது நாம் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் அல்லவா?
வாய்ப்பு எப்போதும் கிடைக்காது.
*காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.*

*கற்றது கையளவு.*
*கல்லாதது உலகளவு*
என்ற ஔவைப்பாட்டியின் முதுமொழிக்கு ஏற்ப *புதியன கற்போம்!*

நீங்கள் கற்ற
ஜோதிட ஞானத்தைப்பட்டைத் தீட்டிக் கொள்ளவும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் வாய்ப்பாக இந்த அறிவு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக்கனியை பறித்திடுங்கள்.

*வாழ்த்துக்கள்!*

நன்றி வணக்கம்!🙏

*ஸ்ரீமால் சிந்தைக்கூரியன்* *
*திரு.ஷண்முகானந்தம்*
*பொள்ளாச்சி*


குழு அன்பர்களின் பதிவு




அனைவருக்கும் காலை வணக்கம். ஜோதிட குருமாராகிய திருவாளர் சன்முகாநந்தம் ஐயா அவர்கள் பதிவுசெய்த ஜாதகத்தில்  அமெரிக்கா சென்றிருந்த காரனம் பற்றிய ஓர் ஆய்வு செய்தது. இது சரியாக உள்ளதா என தெரிவிக்கவேண்டுகிறேன்
நன்றி.
வணக்கம்
கா. முனியாண்டி
சிவகாசி🙏🙏🙏🙏










Ok. பலன்கள் சரியாக இருக்கிறது சார்.

விமான பயணம் மேற்கொள்ள கிரக ரீதியான காரணம் என்ன? என்பதையும் கூறவும்.
நன்றி

வணக்கம் சார்.
மேற்கன்டஜாதகர் விமானபயனம் மேற்கொண்ட காரனம்.
லக்னம்  நான்காம் அதிபதி புதன்  ஐந்தில் பூர்வீக புண்ணிய புத்திரயோகஸ்தானத்தில் அமர்ந்து  சாரம் தந்தவர் சனிபகவான்  ருணரோகஸ்தானாதிபதி சாரம் பெற்று பனிரன்டில் இருப்பதால்
உடல் ஆரோக்கயம் பாதிப்புஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு விமானத்தில் பயனம் செய்திருக்கலாம்..

சந்திரன் மனோகாரகன். ஐந்தில் விருச்சிக ராசியில் பயனம். ராகு சாரத்தில் இருப்பதால்  மனோதிடம்  சளி ஆஸ்துமா சைனஸ் பிரச்னை இருந்து  இருக்கலாம்.
குரு/ புதன்
குரு குழந்தைகுறிக்ககூடிய கிரகம்.
புதன் தாய்மமான் குறிக்கும் கிரகம். நரம்புமண்டலம் குறிக்கும்.
நான்காம் அதிபதி ஐந்தில். ஐந்தாம் அதிபதி நான்கில் பரிவர்தனை. குழந்தைசார்ந்தவிசயத்திற்கு மருத்துவசிகிச்சைக்காக அந்நியதேசம் சென்றிருக்கலாம்.
விருச்சிகம்  காற்றுராசி.
காற்றுக்கானகிரகம் புதன்.  நான்காமிடம் வண்டி வாகனம். சுக்ரன் காரகர். விமானதில்  பயனம். ஐந்தாமிடம் பூர்வீகம். பனிரன்டாமிடம் அந்நியதேசம்  
நன்றி வணக்கம்
கா. முனியாண்டி
சிவகாசி🙏🙏🙏


சார் ஒரு தவறு. புதனுக்கு சாரம் தந்தவர் செவ்வாய் என திருத்தி வாசிக்கவும்.
கிரகநிலை சந்திரன் துலாம் ராசியில்  பயனம் எனதிருத்திக்கொள்ளவும்.

அடுத்து தொடகூடியகிரகம்  சனி பகவான்.

  பாவகம் ரோகஸ்தானம்  ஆதலால்  நோய்சம்பந்தமான சிகிச்சை இருக்கலாம்.
நன்றி வணக்கம்

குருஜிக்கு வணக்கம்.

காலபுருஷ தத்துவம்
மிதுனலக்னம். லக்னம் நின்றநட்சதிர அதிபதி செவ்வாய்  பனிரன்டில்.
ஆறு/பதினொன்று அதிபதி.
ருணரோகசத்ரு அதுசார்ந்த லாபம்.

லக்னாதிபதி புதன்
பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் குருபகவானுடன்

குரு  புதன் மந்திர உபதேசம் ஆன்மிகம் ஜோதிடம் கல்வி வழிகாட்டுதல் அறிவுரை செய்தல்.
காலசக்ரதிற்கு  பாக்கியாதிபதி ஐந்தில்  சேவை தானதர்மம் அறிவுரை கூறுதல்.
ராசி கன்னிகா ராசி. அஸ்தம் நான்காம் பாதம்.
காலசக்கரத்திற்கு நான்காம் பாவகம்  கல்வி.
லக்னதிற்கு இரன்டாம் அதிபதி நான்கில். வாக்கு ஸ்தானம்  / பேச்சாற்றல் மூலம் வருமானம்.
நான்கில் சுக்ரன்  சூரியன் சந்திரன் ராகு.
சுக்ரன் அழகு கவர்ச்சி சுகபோக வாழ்க்கை வசதியான வீடு.
சூரியன் நிர்வாகம் தலைமை பண்பு அதிகாரம்.
சந்திரன் பயனம்  எப்போதும் இயங்குகின்றதன்மை.
ராகு பிரமான்ட வீடு மனை வாகனம்.
நான்கில் சூரியன்  நின்றது செவ்வாய் சாரம் செவ்வாய் பனிரன்டில்  .   தன் இருப்பிடம் விட்டு வெளிநாடு தொடர்பு குடியிருத்தல்..
நான்கில் சந்திரன்  சுயசாரம். பெறுவதால் சந்திரன் வேலையை புதன் தருவார்.
சந்திரன் இரன்டாம் அதிபதி யாவார்.
புதன் ஐந்தில் கலை  புத்தி ஞானம் சார்ந்த பாவகத்தில் உள்ளார்.
ஆக ஜோதிடகலை சார்ந்த வகையில் வருமானம்.
நான்கில் ராகு. பனிரன்டில் செவ்வாய்.
கல்வி வீடு வண்டி வாகனம் பிரமான்டம்.
ஐந்தாம் அதிபதி சுக்ரன் நான்கில். இரன்டாம் அதிபதி சந்திரன் சாரம்.
குழந்தை குடும்பம் குடும்ப உறுப்பினர்கள்    அனைவரும் தன்இருப்பிடத்திற்கு வெளிநாடுபயனம்.
ஐந்து நான்கு. நான்கு ஐந்து பரிவர்த்தனை
வெளிநாடு செல்லலாம். தாயகத்திற்கு திரும்பலாம்.
  ஆறாம் பாவகத்தில்  அட்டமாதிபதி பாக்கியாதிபதிசனி அமர்ந்து புதன் சாரம் பெற்று புதன் ஐந்தில் இருப்பதால்      நோய்கானகிரகம்  அட்டமாதிபதி சனி பகவான் புதன்சாரம் பெற்று புதன் ஐந்தில் இருப்பதால்  உடல் ஆரோக்யம் சார்ந்த பிரச்னை இருக்கலாம்.
ஆறாம் அதிபதி செவ்வாய் பனிரன்டில் சூரியன்சாரம் சூரியன் நான்கில். நோய்   அதிகநோய் சுகம் கெடும் விரையம் ஏற்படும்.
ஏழாம் அதிபதி குரு ஐந்தில் ராகுசாரம் ராகு நான்கில். நன்பர்கள் கூட்டாளிகள் வாடிக்கையாளர் மூலம்  தொழில் வருமானம் அதுசார்ந்த சுகம்.
தற்போது ஐந்தில் புதன் தசா. சுக்ரன் நான்கில்  இரன்டாம் அதிபதி நான்கில். 
பாதிக்கபடும் பாவகங்கள் 
ஐந்தாம் பாவகம்.
ஒன்பதாம் பாவகம் 
பதினோன்றாம் பாவகம்   பாதிக்கபடுகிறது.
ஐந்தில் புதன்/குரு  
பாக்கியாதிபதி  பித்திரு ஸ்தானம்
லட்சியம் எண்ணங்கள்  பாதிக்கபடுகிறது.
கிரக கோட்சாரத்தில் சூரியன் தந்தைக்கு காரககிரகம் லக்னத்தில்.
சுக்ரன் பாக்கியஸ்தானத்தில் விரையாதிபதி இருப்பதால்
தந்தைக்கு  விரையமாக இருக்கலாம்.
நன்றி

சுக்கிரன் யுவராஜா

குரு வணக்கம்🙏

தங்களுடைய ஜாதகத்தில் நடப்பது புதன் தசா, சுக்கிர புக்தி. தங்களுக்கு இந்த சுக்கிர புக்தியில் வெளிநாட்டு பயணம் ஏற்பட்டதற்கான காரணங்கள்:-

முதலில் புதன் தசா. லக்னம் மற்றும் நான்காம் அதிபதி புதன் ஐந்தில் அமர்ந்து அவர் ராகுவால் கிரகணம் அடைந்தாலும் பரிவர்த்தனை மற்றும் குரு சுக்கிர தொடர்பில் அந்த கிரகணம் ரத்தாகிறது. ஐந்தில் அமர்ந்த புதன் ஜாதகருக்கு நல்ல புத்தி, ஜோதிட ஞானம் போன்றவற்றை கொடுத்திருப்பார்.

ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு லக்கனாதிபதியாக அங்கே அமரும்பொழுது ஜாதகர் கலை இசை இலக்கியங்களில் அதீத ஈடுபாடு உடையவராய் இருப்பார். அதே சமயம் நான்காம் அதிபதியாய் அங்கே அமரும்பொழுது சுகம் மேம்படும். வீடு, வண்டி, வாகன யோக அமைப்புகள் ஏற்பட்டிருக்கும்.

ஆனாலும் ஐந்தாம் பாவகத்திற்கு நான்காம் பாவகம் விரைய பாவகம். அந்த வகையில் குழந்தைகளுக்குச் செலவு செய்யும் நிலை, பூர்வீகத்தை விட்டு செல்லக்கூடிய நிலை உண்டாகும்.

அந்தப் பூர்வீகத்தை விட்டு செல்லும் நிலையை புக்தி நாதன் சுக்கிரன் செயல்படுத்தினார்.

அவர் அங்கு நீசம் மற்றும் அஸ்தங்கம் மற்றும் கிரகணம் ஆனாலும் பரிவர்த்தனை மற்றும் குரு தொடர்பால் அவை ரத்தாகின.

இருந்தாலும் தான் நலிவுற்ற பலனை முதலில் ஜாதகருக்கு கொடுத்திருப்பார். சுகர் சம்பந்தமான உபாதைகள், சிறுநீர் பிரச்சனைகள், மனைவியின் தேக நலன் பாதிக்கப்படல் போன்றவை ஏற்பட்டிருக்கும்.

ஆதிபத்திய ரீதியாக நான்காம் பாவகத்தை பலப்படுத்தி ஐந்தாம் பாவகத்திற்கு விரையத்தை ஏற்படுத்திருப்பார்.

மேலும் மற்றொரு பாவகமான பன்னிரண்டாம் பாவகம் அது விரயத்தையும் கொடுக்கும் மற்றும் வெளிநாடு பயண வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஐந்தாம் பாவகத்திற்கு விரைய பாவகம் இயங்கி பூர்வீகத்தை விட்டு செல்லும் நிலை அதனுடன் பனிரெண்டாம் பாவகமும் இயங்கி இந்த வெளிநாட்டு பயணம் ஏற்பட்டது. அதாவது 12 ஆம் அதிபதி நான்கில் அமர்ந்து சுகமான பயணத்தை கொடுத்தார்.

பயணம் செய்த இரண்டு நாட்கள் அன்றைய கோச்சாரத்தில் தசாநாதன் புதன் மீது பயணங்களை குறிக்கும் சந்திரன் பயணப்பட்டார்.

மேலும் புக்திநாதன் சுக்கிரன் லக்னத்திற்கு ஒன்பதில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே நீண்ட தூர பயணம் ஏற்பட்டது.
அவர் லக்னத்திற்கு எட்டில் பயணப்பட்ட பொழுதே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்திருக்கும்.

மேலும் புக்திநாதன் சுக்கிரனுடன் பிறப்பு கால ஜாதகத்தில் இணைந்தவர்கள் சந்திரன் சூரியன் மற்றும் ராகு. ஆக அவர்களுடைய காரகத்துவமும் இணைந்து வெளிப்பட்டிருக்கும். பயணங்கள், மாற்றங்கள், நிர்வாக திறன், அந்நியர் தொடர்பு போன்றவை ஜாதகர் அனுபவிக்கும் நிலை.

இப்பொழுது சூரிய புக்தி. மூன்றாம் அதிபதி நான்கில். அவர் நிஷ் பலம் மற்றும் கிரகணம் அடைந்திருந்தாலும் குரு சுக்கிர தொடர்பில் அந்த கிரகணம் ரத்து.

ஆதிபத்திய ரீதியாக மூன்றாம் பாவகத்திற்கு வரவு ஸ்தானத்தில் அவர் இருக்கிறார். ஆக  வெளிநாட்டில் சிறு சிறு பயணங்கள், மாற்றங்கள், அண்டை அயலாருடன் நல்லிணக்கம் ஏற்படும். என்னதான் கிரகணம் ரத்து ஆகி இருந்தாலும் முதலில் நிஷ் பலம் மற்றும் கிரகணம் அடைந்த பலனை இந்த சூரியன் செய்வார். அந்த வகையில் தன்னம்பிக்கை சிறிது கெடக்கூடிய நிலை, முதுகுத்தண்டு வட உபாதை போன்றவை ஏற்பட்டு நிவர்த்தி ஆகிவிடும்.

மிக்க நன்றி குருவே🙏🙏🙏

இவன்
தங்கள் மாணவன்
K. யுவராஜா

வணக்கம் குருவே🙏

என் அறிவுக்கு எட்டியதை நான் இங்கே பதிவிட்டு இருக்கிறேன். தங்கள் ரிசல்ட் வரும் பொழுது நான் செய்த தவறை திருத்திக் கொள்கிறேன் குருவே🙏🙏🙏

திரு ஷண்முகானந்தம்

மிகச் சரியாகவே பலன்கள் எடுத்துரைத்து இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய காரணங்கள் பற்றி குறிப்பிடவும்.

குரு வணக்கம்🙏

12 என்பது வெளிநாட்டு பயணம். அதன் அதிபதி சுக்கிரன் நான்கில். நான்கு என்பது சுகம், வாகனங்களை குறிக்கும். நான்கில் அமர்ந்த சுக்கிரன், காரகத்தையும் பாவகத்தையும் இணைக்கும் பொழுது சொகுசு வாகனங்கள். அந்த வகையில் சொகுசு வாகனமான விமானப் பயணம் ஏற்பட்டது.

தசாநாதன் புதன் அமர்ந்திருப்பது காற்று ராசி. நடப்பு புக்திநாதன் சுக்கிரன் தற்பொழுது கோச்சாரத்தில் காற்று ராசியில் ஏரோநாட்டிக்கல் ஸ்பெசலிஸ்ட் ராசியான கும்ப ராசியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆக தங்கள் பிறப்பு கால ஜாதகம், தசா புக்தி, காரக மற்றும் ஆதிபத்திய பலன் மற்றும் கோச்சார நிலை இவையெல்லாம் தங்களுக்கு விமான பயணம் செய்ய நேரிட்டது குருவே🙏🙏🙏

Sorry
*விடுபட்ட பதிவு*

*Sukran*
*Kesavan ramasamy*


புதன் சுக்கிரன் பரிவர்த்தனை
சுக்கிரன் ஆட்சி போல் — லக்கினத்திற்க்கு 5–12 மிடம்
activate .
4 மிட சந்திரன் மேல் கேது கோத்சாரத்தில்
12 மிட செவ்வாய் மேல் குரு

5இல் புதன் உடன் குரு
இருப்பிடதை விட்டு புத்திர் உடன் கடல் தாண்டி வெளிநாடு தற்காலிக பயனம்
சுக்கிரன் 4<5  12 activate


Sukran Srividya Astro

[01/02, 10:21 pm] Sukran Sri Vidhya Astro:

குருவே துணை. புதன் தசா சுக்ர புக்தி .  புதன் சர ராசியில் இருப்பதால் வெளிநாடு செல்வம் வாய்ப்பு கிடைத்தது.

சுக்ரன் நீசம் பெற்று கிரகணம் மற்றும் அஸ் தங்கம் பெற்றுள்ளார். ஆனால் ஸ்தான பலமும் பரிவர்தனைமூலம் பலமும் பெற்றுள்ளார். அவர் சந்திரன் சாரம் பெற்றுள்ளார்.
அவர் களத்திரகாரகன் ஆகையால் மனைவியின் உடல் நலத்தில் திருப்தி யற்ற நிலை 2022 முதல் உண்டாகும்.

கோச்சாரப்படியும் சுக்கிரன் சந்திரன் சூரியன் மீது கேது செல்வதால் மனக்குழப்பம் , உடல் நல பிரச்சனைகள் இதயம் தலை முதுகு பிரச்சனைகள் வீடு வாகனம் மனைவி பணம் சம்பந்தப்பட்ட வகையில் சிக்கன நிலை உண்டாகும்.

12,5 க்குரியவர் சுக ஸ்தானத்தில்  ஆரோக்யம் சம்பந்தமாக விரையமாகும். பரிவர்த்தனை ஆதலால் 
வித்தை புத்தி தொழில் மேம்படும்.  5-4 குழந்தைகளுக்கு விரையம் என்றாலும் கல்வி சம்பந்தப்பட்ட வகையில் லாபமாகும்.

வெளிநாட்டு செல்லும் நேரம் அமைந்த விபரம்.
5 மிடத்து அதிபதி உடன் பூர்விகம் தந்தை காரகன்
சூரியன் உடன் ராகு இணைந்து வெளிநாட்டு பயணங்களை ஏற்படுத்தினார். கோச்சாரப்படியும் ராசிக்கு 9 ல் குரு அமர்ந்தும்
லக்னத்துக்கு 9 ல் சுக்ரன் அமர்ந்து அது காற்று ராசி ஆகி 9 ம் அதிபதியும் வாயு கிரகமாக அமர்ந்து விட்டதால் விமான பயணம் அமைந்தது.

நன்றி குருவே🙏

[01/02, 10:30 pm] Sukran Sri Vidhya Astro:

சுக்ரன் சந்திரன் சாரம் பெற்று 2022 முதல் பயணம் பற்றி ய சிந்தனைகளை தருகிறார்.

திரு ஷண்முகானந்தம் 
ஒரு சில விஷயத்தைத் தவிர்த்து மற்ற பலன்கள் சரியாகவே கணித்துள்ளீர்கள்.

*வாழ்த்துக்கள்* 👍🌷

*சிறப்பு ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் நாளை வெளிவரும்*


Tuesday, January 28, 2025

தை அமாவாசை 29/01/2025 புதன் கிழமை

 *

அமாவாசைகளில் முக்கியமானது தை அமாவாசை,  உத்ராயணத்து காலத்து அமாவாசையில் முதல் அமாவாசை இது

இந்த அமாவாசையினை பகவான் கிருஷ்ணரே போதாயண அமாவாசை என ஏற்படுத்தினார், மகாபாரதத்தில் இக்காட்சி உண்டு

பாண்டவர்களின் கடைசியானவனும் சாஸ்திரங்களில் தேர்ந்தவனுமான சகாதேவன் துரியாதனனுக்கு போரில் வெல்ல நல்ல நாள் பார்த்து  அமாவாசை நாளாக கொடுக்க பாண்டிருக்கு சிக்கலாயிற்று


அதை போக்க பகவான் கண்ணன் ஒருநாளைக்கு முன்பே தர்ப்பணம் தொடங்கினார், அதை கண்டு குழம்பிய தேவர்களும் தர்ப்பணம் கொடுக்க, சூரியனும் சந்திரனும் குழம்பி ஒருசேர வந்தனர்.


இருவரும் சந்தித்ததால் அந்நாள்தான் அமாவாசை என்றார் கண்ணன், தேவர்கள் குழம்பினர் அதனை தீர்க்க அவர்களை போதாயனரிடம் அனுப்பி தெளிவு பெற சொன்னார் கண்ணன்


போதாயன முனிவர் கண்ணன் தர்ப்பணம் கொடுத்த நாளே உத்திராயாண முதல் அமாவசை என புரியவைத்தார், அதுமுதல் தை அமாவாசை இந்நாளுக்கு மாறிற்று.


இதற்கு போதாயண அமாவாசை என பெயரும் உண்டு


இது தேவர்கள் தர்ப்பணம் செய்யும் காலம், மார்கழியில் விழித்தெழும் தேவர்கள் இந்த உத்ரயாண முதல் அமாவாசையில் தர்ப்பணம் செய்வார்கள்


அந்நேரம் எல்லா மாந்தரும் அதே கடமையினை செய்தால் பூரண பலன் கிடக்கும், இதனால் தை அமாவாசை மிக முக்கியமாகின்றது


இது ஆழ்ந்த அர்த்தமும் கொண்டது


எப்போதுமே அமாவாசை காலத்து தர்பணங்கள் எப்போதும் சிந்திக்கதக்கவை, ஏன் அமாவாசை திதியில் முன்னோர்களை வேண்டி நிற்கவேண்டும், என்றோ வாழ்ந்து சென்றவர்களை ஏன் தேடவேண்டும், வாய்ப்பு முடிந்தவர்களை மறுபடி நினைக்க அவசியமென்ன என்றால் அதற்கு ஆயிரமாயிரம் காரணம் உண்டு


பிரபஞ்ச இயக்கத்தின் தாத்பரியத்தை மானுடன் புரிந்து கொள்ள வேண்டி இந்துக்கள் விதித்த விதிகள் அவை


அமாவாசை எனும் சூனிய நாளில் ஏன் தர்பணம் செய்ய சொன்னார்கள் என்றால் ஒன்றுமில்லா இடத்தில் இருந்து, ஒன்றுமே இல்லா வெளியில் இருந்து எல்லாம்தொடங்கி ஒன்றுமே இல்லா சூனியத்தில் முடிகின்றது வாழ்க்கை என்பதை அறிய சொன்னார்கள்


அப்படியே இறை ரகசியங்களை, இறை தத்துவங்களை பிர்பஞ்ச பெரும் சக்தியினை அறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து கவனிக்க சொன்னார்கள்


ஆம்,முன்னோர்க்கு தர்ப்பணம் செய்வது என்பது இந்துக்களின் வழக்கமான ஒன்று, வேறு எந்த மதத்திலும் இல்லாத இந்த சிறப்பு இந்துக்களுக்குத் தான் உண்டு.


தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது எனப் பொருள்.


இறந்த முன்னோர்களின் ஆத்மாவினை திருப்தி செய்து அவர்களுக்கு வேண்டியன செய்தல் என்பது இந்துக்களுக்கு ரிஷிகள், முனிவர்கள் போதித்த வழிமுறை.


இங்கு ஏகப்பட்ட சூட்சுமங்கள் உண்டு. நுணுக்கமான அறிவியல் உண்டு, மிக அபாரமான ஆன்மீக தத்துவமும் உண்டு.


இறந்த முன்னோர்களுக்கு ஏன் தர்ப்பணம் கொடுத்து திருப்தி செய்யவேண்டும் என்றால் அங்கே தான் இந்துமதத்தின் அபாரமான ஞானமும் மறைபொருளும் தெரியும்.


ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் என ஐந்து சரீரங்கள் உண்டு. இதில் ஸ்தூல சரீரம் தவிர நாம் எதையும் பார்க்க முடியாது. இது போக, நான்கு வகையான சரீரங்களைக் கொண்டது தான் மானிட ஆத்ம அமைப்பு.


இதையே இன்னுமோர் வகையில் சொல்வார்கள்.


உடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் என்பார்கள்.


அதாவது காணும் உடலைத் தாண்டி நான்கு நிலைகள் உண்டு. கடைசி நிலைதான் பரம்பொருளில் கூடியிருக்கும் பெரும் ஆனந்தமான நிலை.


அந்தக் கடைசி நிலைக்கு ஒரு உயிர் செல்வதற்கு, இந்த முந்தைய நான்கு உடல்களையும் கடக்க வேண்டும். இந்த ஐந்து கட்டங்களிலும் ஒவ்வொரு வகையான தேவை அவர்களுக்கு அவசியம்.


மானிட உடல் அதாவது ஸ்தூல உடலுக்கு அன்னம் எனும் உணவு அவசியம். அதன் தாக்கம் இதர நிலைகளிலும் உண்டு. இந்த சூட்சும உடல் பிரபஞ்சத்தில் இருந்து சக்தியினை பெறுகின்றது.


சந்திரனில் இருந்து இந்த உடல் சக்திபெறுவதாக ஐதீகம். இதனாலே சந்திரன் இல்லா அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய வைத்தார்கள் இந்துக்கள்.


கிரகண காலத்தில் தர்ப்பணங்களின் முக்கியத்துவம் அதுதான், காற்று இன்றி ஸ்தூல உடல் வாழமுடியாது என்பது போல, சந்திர ஒளியின்றி ஆத்மாக்கள் நிம்மதிபெறமுடியாது.


அன்று அவர்களுக்கு மானிடர் கொடுக்கும் தர்ப்பணமே சக்தி கொடுக்கின்றது. இது ரிஷிகள் சொன்ன உண்மை.


இந்துக்களின் நாள்காட்டி சூரியனை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம். ஆனால் ஆன்ம தத்துவம் திதிகளைக் கொண்டது. அதன் அடிப்படை சந்திரன்.


இதனாலே ஒருவர் இறந்த திதி முக்கியத்துவம் பெறுமே அன்றி, அந்த நாள் முக்கியத்துவம் பெறாது. சந்திரன் ஒரு ஆன்மாவோடு எப்படி தொடர்பு பட்டது என்பதை இப்படி சூட்சுமமாக போதித்தார்கள் இந்துக்கள்.


முன்னோர்கள் ஸ்தூல உடலை விட்டு இதர உடல்களில் கண்ணுக்கு தெரியா நிலையில், ஆனால் சில தேவைகள் உள்ள நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து சக்தியூட்டி திருப்தி படுத்தவேண்டும் என்றார்கள்.


ஏன் எள்ளும், தண்ணீரும், காய்கறியும் சொன்னார்கள்?


இவை ஏன் குறிப்பிடப்பட்டது என்றால் புராண ரீதியாக ஒரு செய்தியினையும் இந்துமதம் சொன்னது.


"எள் விஷ்ணுவின் வியர்வையில் இருந்து வந்ததால் புனிதமானது" என்றது. எல்லா ஆத்மாக்களும் பரம்பொருளிடம் இருந்து வந்ததே, பரம்பொருளிடம் திரும்பி செல்கின்றது என்பதை குறிப்பால் உணர்த்த எள்ளை வைத்தார்கள். எள் எளிதில் முளைக்காது. அதுவும் நீரோடு மூழ்கி இருந்தால் எளிதில் முளைக்காது. அப்படி முந்தைய ஆத்மாக்கள் பிறப்பில்லா நிலையினை எட்ட வழிபடச் சொன்னார்கள்.


அதாவது, அந்த ஆத்மாக்கள் முக்தி அடைய, நற்கதி அடைய பிரார்த்திக்கச் சொன்னார்கள். எள் முக்கிய இடம் பெறுவது சூட்சும ரீதியாக நிறைய காரணங்கள் உண்டு. எனினும் தத்துவரீதியாக இதுதான். எள்முனை அளவு அவர்கள் பாவத்தால் வருந்தினாலும் நற்கதி அடைய பிரார்த்திக்கச் சொன்னதன் அடையாளம். எள் சூட்சும ரீதியாக சக்தி வாய்ந்தது.


ஆலயங்களில் அதன் தீபங்கள் எள் எண்ணெயில்தான் ஏற்றப்பட வேண்டும் எனும் வகையில், அதன் பிரபஞ்ச ஈர்ப்புசக்தி அதிகம். இதனால் அதை முன் நிறுத்தினார்கள் எள்ளும், நீரும், பூவும் வைக்கச் சொன்னார்கள்.

இந்த தர்ப்பணம் நாள்தோறும் கொடுக்கச் சொன்னார்கள். அதிலும் சந்திரன் இல்லா அமாவாசையில் முக்கியம் என்றவர்கள், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை என மூன்று அமாவாசைகளை முக்கியம் என்றார்கள்.


தை அமாவாசையில் வட மூலையிலும், ஆடி அமாவாசையில் தென் மூலையிலும் நிற்கும் சூரியன், புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பகுதிக்கும் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கும்.


இந்த தருணத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் முன்னோரை எளிதில் அடையும் என்பது ரிஷிகள் சொன்ன சாஸ்திரம்.


இங்கே ஏன் மூன்று அல்லது ஏழுதலைமுறை வரை நினைவில் வைக்கச் சொன்னார்கள். அதுவும் ஆண்கள்தான் செய்யவேண்டும் எனச் சொன்னார்கள் என்றால் அங்கேதான் இருக்கின்றது ரிஷிகளின் ஞானம்.


மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகக் கொடுப்பது உண்டு. சில அம்சங்கள் ஆதியில் இருந்து வருவதும் உண்டு


முன்னோர்களிடம் இருந்து பெற்ற இந்த மரபணுக்களை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்ல வேண்டியது, அதை வருங்கால சந்ததிக்கு கொண்டு செல்லுவது ஆண்கள் கடமை என்பதால் அவர்களாலே தான் அது முடியும் என்பதால் ஆண்களை முன்னிறுத்தினார்கள்.


அதே நேரம் பெண்கள் குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட, இடங்களில் தர்ப்பணம் செய்யவும் இந்துமதம் அனுமதித்தது.


ஏன் சில தலைமுறை பெயர்களை சொல்லச் சொன்னார்கள்?


ஒரு மனிதன் தன் எல்லா தலைமுறையும் அறிந்திருக்க முடியாது. அது சாத்தியமுமில்லை. ஆனால் சில தலைமுறையினை அறிந்திருந்தால் வந்த வழி தெரியும். பூர்வீகம் தெரியும். இச்சமூகத்துக்கு அவர்கள் என்னென்ன கடமைகள் செய்தார்கள் என்பதும் தெரியும்.


அப்படியே நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் தெரிய வரும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதாவது தெரிய வரும்.


இதனாலே சில தலைமுறைகளை நினைத்துப் பார்க்கச் சொன்னவர்கள், இன்னும் ஆழமாகச் சிந்திக்கச் சொன்னார்கள்.


மூன்று அல்லது ஏழு தலைமுறைக்கு முன் யார் மூலம், அதன் முன்னோர்கள் யார், அவர்கள் முன்னோர்கள் யார் என்பதை சிந்திக்க சொன்னார்கள்.


அப்படி சிந்திக்கும் போது மூல மரபணு ஒன்றே என்பதும், எல்லோரும் அங்கிருந்துதான் உருவானோம் என்பதும் தெரிய வரும்.


விஞ்ஞானம் இதனை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அதன் பரிணாம விதிப்படி தொடக்கத்தில் இருந்த ஒரு உயிரில் இருந்து தான் இங்கு எல்லாமும் தோன்றிற்று. மானிடனும் அதனில் இருந்து வந்தவனே என்கின்றது.

இதைத்தான் தர்ப்பணம் செய்யும் போதும் இந்துமதம் போதித்தது.


எல்லா மானிடரும் ஒரு மூலத்தில், அதாவது பரம்பொருளிடமிருந்து வந்தவர்கள் என்பதை அது சிந்திக்கச் சொன்னது, இந்த லோக மானிடர்கள் எல்லாரும் ஒரே மூலம் என்பதை யோசிக்கச் சொன்னது.


இந்த உலகமே, வாழ்ந்தவர்கள், இருப்பவர்கள், வரப் போகின்றவர்கள் எல்லோருமே ஒரே சக்தியில் இருந்து வந்தவர்கள் எனச் சொல்லிக் கொடுத்தது.


"அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்தில் உண்டு" என்பதை திதி தர்ப்பணங்களில் காட்டி நின்றது.

இதை ஔவையாரின் ஞானக்குறள் தெளிவாகக் காட்டும். பின் வரும் குறள்களின் தத்துவமே இந்த தர்ப்பண ஏற்பாடு.


"மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி

விண்ணகமே யாகுஞ் சிவம்"


பூமியில் பிறந்திருக்கும் உயிர்களுக்கெல்லாம், சிவம் தானே சீவனாகி விண்ணகத்தில் அதாவது இந்த உலகெங்கும் வியாபித்து இருந்து அவற்றைக் காக்கிறான்.


"வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்

ஆயுமிடந் தானே சிவம்"


காற்றாகவும், இப்புவியில் வாழும் அனைத்து ஜீவராசிகளாகவும் ஏனைய சடப்பொருட்களின் உட்பொருளாகவும் சிவமே விளங்குகிறதென்பதை ஆராய்ந்து தெளிக. உயிர்களின் உணர்வும் அவனே, உயிரும் அவனே, புணர்வும் அவனே, புலப்பும் அவனே.


"எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்

உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்"


இப்புவியிலுள்ள எண்ணிலடங்காத ஆண், பெண், அலியென்ற பேதமுள்ள அனைத்து உயிரினங்களிலும் எங்கும் பரவி, உடலில் நிறைந்து நிற்கும் சிவம்.


இதையே திருமூலர் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார்


ஆம், நாம் எல்லொரும் ஒரே குலம் என்றும், நாம் எல்லோருக்குள்ளும் இருக்கின்றோம், எல்லோரும் எல்லா ஆத்மாக்களும் எல்லா உயிர்களும் நம்முள்ளும் இருக்கின்றது என்பதையும் சொன்னார்கள்.


பரம்பொருளில் இருந்து வந்தவர்கள் நாமெல்லாம், அந்த பரம்பொருள் நம் எல்லோர் உள்ளும் இருக்கின்றது "அகம் பிரம்மாஸ்மி" எனபதைத்தான் தர்ப்பணத்தில் சொன்னார்கள்.


அந்த மூலத்தையும், அது 84 அம்சமாக நம்முள் இருப்பதையும், நாம் எதிர்கால சந்ததிகளுக்கு அதை, இறந்த முன்னோர்க்கு நன்றி சொல்லி, உலக இயக்கத்துக்காய் விட்டுவிட்டுச் செல்ல உறுதி ஏற்கச் சொன்னதுதான் தர்ப்பணம்.


அந்த நாளில் எல்லோரும் தங்கள் இறந்த முன்னோருக்காக தர்ப்பணம் கொடுத்தல் அவசியம். அது அவர்கள் ஆன்மாவினை வாழவைக்கும். அது எங்காவது, எந்த உயிராவது பிறந்திருந்தாலும் இந்த பலன் அவர்களுக்கு கிடைக்கும்.


சூரியன் முன்னால் செய்யப்படும் தர்ப்பணத்தில் அர்த்தம் உண்டு. சூரியனே எல்லா தலைமுறைகளையும் அவர்கள் வாழ்வையும் கண்டவர், யார் எங்கே என்ன வடிவில் இருக்கின்றார்கள் என்பதை அறிந்தவரும் அவரே.


உலக உயிர்க்கெல்லாம் உணவுக்கும் வாழ்வுக்கும் அடிப்படை சூரியனே.


அந்தச் சூரியனை நோக்கி செய்யப்படும் தர்ப்பணம் சரியான இடத்தில் ஆத்மாக்களுக்கு பயன்படும்.

அது ஐந்து வகை கோஷங்களையும் கடந்து ஆன்மா பேரின்ப நிலைக்கு செல்ல உதவி செய்யும்.

இந்துக்கள் ஞனம் பெரிது, அவர்கள் தாத்பரியம் பெரிது, அவர்கள் கண்டறிந்த உண்மை மிகப் பெரிது.

ஒவ்வொரு இந்துவும் "வசுதைவ குடும்பகம், லோகா சமஸ்தா சுகினோ பவந்து" என பிரார்த்தனையினை முடிப்பது உண்டு.


இது ஒரு ஸ்லோகத்தில் இருந்து வருவது.


"அயம் நிஜ பரோ வேதி கணனா லகுசேதஸாம்

உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம்"


அதாவது இந்த உலகில் யாரும் வேறு வேறு ஆட்கள் அல்ல, இங்கு வெறுப்பு விருப்பினை தாண்டி எல்லோரும் ஒரே குடும்பம், இங்கு எல்லோரும் ஒரே குலத்தவர் என்ற உண்மையினை உணர்தல் வேண்டும் என்பது அதன் பொருள்.


"லோகா சமஸ்தா சுகினோ பவந்து" என்றால் "எல்லா உலக மக்களும் நன்றாக இருக்க‌ட்டும்" எனப் பொருள். "சர்வே ஜனா சுகினோ பவந்து" என்றால் "எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும்" எனப் பொருள்


இதுதான் தர்ப்பணத்தின் அடிப்படை, திதி வழிபாட்டுக்கு எல்லாவற்றுக்கும் அடிப்படை.


ஆம், நாம் எல்லோரும் ஒரே பரம்பொருளில் இருந்து வந்தவர்கள், ஒரே குலம் எனும் பெரும் தத்துவத்தை சொல்லும் ஏற்பாடுதான் தர்ப்பணம்.


இதனாலே தர்ப்பணத்தில் தன் இறந்த முன்னோர்கள் மட்டுமல்ல, தன் குலம் மட்டுமல்ல, எல்லோருக்கும் வேண்டச் சொன்னார்கள்.


தர்ப்பணத்தில் சொல்லப்படும் அந்த வரி முக்கியமானது.


"எனது உறவினர் என்ற எந்த வகையான பந்தத்திற்கும் உள்ளாகாத, எனது கோத்ரப் பிரிவிற்கு உள்ளாகவும் வராத, எனக்கு முகம் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்த பூமியை விட்டுப் போயிருக்கின்றன.


அந்த ஆத்மாக்கள் அனைத்தும் சாந்தியடைய, மேல் உலகில் எந்த விதமான துன்பமும் அனுபவிக்காமல் இருக்க, மேலும் அவை புதிதாகப் பிறப்பெடுத்தாலும் அந்தப் புதிய வாழ்க்கையிலும் அனைத்து விதமான நன்மைகளையும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.


அந்த அனைத்து ஆத்மாக்களும் எள்ளும் தண்ணீரும் இறைத்து நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால்

திருப்தி அடையட்டும்.

திருப்தி அடையட்டும்.

திருப்தி அடையட்டும்."


ஆம், தன் மூதாதையருக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்காகவும் வேண்டி அவர்களுக்கும் எள்ளும் நீரும் இறைத்து எல்லோரும் ஒரேகுலம் எனச் சொன்ன மதம் இந்துமதம்.


அந்த ஞான ஏற்பாட்டின் முக்கிய நாள் மகாளய பட்சம், அந்த திதியும் தர்ப்பணமும் மகா முக்கியம்.

அன்று ஒரு இந்து, குடும்பத்து முன்னோர்களுக்காகவும், அப்படியே உலகின் எல்லா ஆன்மாக்களுக்காகவும் வேண்டிக்கொள்கின்றான், அவனின் வேண்டுதலாலே உலகம் நன்முறையில் இயங்குகின்றது.


ஒரு தலைமுறை பட்ட துயரத்தை அடுத்த தலைமுறை படாமல், அது கொஞ்சம் மேம்பட்டு வாழ்கின்றது என்றால், இந்த திதியும் தர்ப்பணமும் முக்கிய காரணம்.


இந்துக்கள் பலர் நாள் தவறாது, திதி தவறாது, முக்கிய நாட்கள் தவறாது கொடுக்கும் தர்ப்பணம் முக்கிய காரணம்.


இந்துக்களின் வழிபாடும் தர்ப்பணமும் அவர்களுக்கானது அல்ல, அது உலகத்து எல்லா மாந்தர்க்கும் எல்லா ஆத்துமாக்களுக்குமானது.


அந்த "வசுதைவ குடும்பகத்தின்" மகனாக உலக மாந்தருக்காக ஒவ்வொரு இந்துவும் தர்ப்பணம் கொடுப்பது கடமையாகின்றது, அதைத் தவறாமல் செய்தால் பெரும் பலன் வீட்டுக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் வரக் காண்பீர்கள்.


இந்தக் கால கட்டத்தில் இந்துக்கள் ஒரு பாரம்பரியத்தை பின்பற்றுவார்கள்.


அதாவது இந்துக்கள் நம்பிக்கைப்படி இந்த உலகில் ஆத்மாக்கள் பல பிறப்பெடுப்பார்கள், எல்லா உயிர்கள் வடிவிலும் வருவார்கள்.


அவர்கள் எந்த மனிதன் வடிவிலும் வரலாம், எந்த நிலையிலும் வரலாம். ஆணாக பெண்ணாக எந்த வடிவிலும் அந்த ஆத்மா வரலாம்.


இந்துக்கள் மரபுப்படி தானமும் தர்மமும் இதனால் அவசியம் என்றார்கள், அந்த ஆத்மாக்கள் எந்த வடிவாகவும் வரலாம், யாராகவும் இருக்கலாம். பலரில் ஒருவராகவும் இருக்கலாம் என்பதால் தான தர்மம் அவசியம்.


அன்னதானம், வஸ்திர தானம் அவசியம். இது முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும், நம் கர்மவினைத் தீரும், கடமையும் தீரும்.


இந்த முன்னோர் ஆத்மாக்கள் மனிதர்களாக வரவேண்டிய அவசியமல்ல, அவர்கள் எந்த உடலிலும் பிறப்பெடுத்து வரலாம்.


அவர்கள் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற வடிவிலும் பிறப்பெடுத்திருப்பார்கள், இதனாலே தர்ப்பண காலங்களில் பறவைகள் விலங்குகளுக்கு உணவிடச் சொன்னார்கள் இந்துக்கள்.


பெரும்பாலும் இந்த ஆத்மாக்கள் மானிடரை அண்டி வாழும் விலங்கு, பறவைகள் உருவில் வரலாம் என்பதால் பசுக்கள், காகங்கள், நாய்கள் போன்றவற்றுக்கு உணவளித்தல் பெரும் புண்ணியம்.


தைமாத அமாவாசை மகா முக்கியமானது


இந்த காலகட்டத்தில் முடிந்த வரைக்கும் எல்லா மானிடருக்கும், எல்லா உயிர்க்கும் முடிந்த உதவிகளை உணவாகவும், வ‌ஸ்திரமாகவும் கொடுத்தல் வேண்டும், நம் முன்னோரின் ஆத்மாக்கள் அதில் ஒரு வடிவமாக இருக்கலாம். அதை தவற விடக் கூடாது.


இந்துமதம் எனும் ஞானமதம் உலக மாந்தரையெல்லாம் சிவவடிவாக, தன் வடிவாக, தன் குடும்பமாக, கண்ட உன்னதமான மதம். அந்த மதத்தின் மகனாய் நின்று தர்ப்பணம் செய்தல் உலகில் யாருக்குமில்லா பெருமை.

நல்ல இந்து அதனை மறப்பதில்லை. அதனைச் சரியாகச் செய்பவனை முன்னோர் ஆத்மாவும், பிரபஞ்சமும் ஒரு காலமும் கைவிடுவதுமில்லை. எங்கோ, ஏதோ ஒரு வகையில் அதற்கான பலனை அவன் பெற்றுக் கொண்டே இருப்பான், இது சத்தியம். 


இது பிரம்ம ரிஷியாரின் மறுபதிவு.

#இன்று_தை_அமாவாசையில் #பித்ரு_லோகம்_செல்லும்_முன்னோர்கள், #இந்த_முறையில்_தானம்_கொடுங்கள்_தடைகள்_நீங்கும்.*

🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑

நம்முடைய வீட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்லும் விருந்தினர்களை வழியனுப்பி வைப்பது போல தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்லும் முன்னோர்களை நாம் மகிழ்ச்சியுடன் தர்ப்பணம் கொடுத்து வழியனுப்பி வைக்க வேண்டும். தை அமாவாசை நாம் கொடுக்கும் தானங்களின் மூலம் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.

🌑

*#முன்னோர்கள்_வருகை:* 

பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயான புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூலோகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனேயே தங்கி இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாத அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

🌑

*#தர்ப்பணம்:* 

தை அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபு. தை அமாவாசை இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி,கோடியக்கரை உள்ளிட்ட புனித தலங்களில் ஏராளமானோர் பித்ரு தர்பணம் அளிக்க தயாராகி வருகின்றனர்.

🌑

*#எள்ளும்_தண்ணீரும்:* 

நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட வேண்டும் அவசியம்.

🌑

*#பித்ரு_தோஷம்:*

 அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.

🌑

*#அன்னதானம்:* 

தை அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபட்டு தர்ப்பணம் செய்யலாம். அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் நமது கடன் பிரச்சினை நீங்கும் வறுமை நிலை மாறும். ஆடை தானம் கொடுத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும் நோய் பிரச்சனை நீங்கும். ஆயுள் அதிகரிக்கும்.

🌑

*#நோய்_தீர்க்கும்_தானம்:* 

குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தடை இருப்பவர்கள் அமாவாசை தினத்தில் தேன் வாங்கி தானம் கொடுக்கலாம். இதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும். கண் பிரச்சினை உள்ளவர்கள் தீபம், விளக்கு தானமாக கொடுக்கலாம். பார்வை கோளாறுகள் நீங்கும். கண் பிரச்சினைகள் நீங்கும். நெய் தானம் கொடுக்க தீராத நோய்கள் தீரும். பால், தயிர் தானமாக கொடுக்கலாம் கணவன் மனைவி பிரச்சினை தீரும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

தோஷங்கள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் நீங்க வெள்ளி தானமாக கொடுக்கலாம். காரிய வெற்றிக்கு தேங்காய் தானமாக கொடுக்கலாம். மனக்குழப்பங்கள் நீங்க பழங்களை தானமாக வழங்கலாம். இந்த தினத்தில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பதுடன் நம்முடைய பிரச்சினைகள் நீங்க தானம் கொடுக்கலாம். முன்னோர்களின் ஆசியுடன் சகல செல்வ வளமும் பெருகும்.

🌑

*#தடைகள்_நீங்கும்:* 

ஆடி அமாவாசை நாளில் பித்ரு லோகத்தில் இருந்து கிளம்பி வந்து கடந்த 6 மாத காலம் நம்முடன் தங்கியிருந்து ஆசி அளித்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து அவர்களை மகிழ்ச்சியுடன் பித்ரு லோகத்திற்கு வழியனுப்பி வைப்பதன் மூலம் தடைகள் நீங்கி நன்மைகளும் சுப காரியங்களும் நடைபெறும்.