Wednesday, March 18, 2026

கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!

 28.6.17

*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!

*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!

Cine Songs

 இசை மதிப்பீடு:*

*தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசைக் காவியம் என்றால் மிகை ஆகாது.*

இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும்
ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.
ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக
MSV /TKR இரட்டையர் இசைத்திருப்பார்கள் !

அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர்
மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் :

அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .

முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார்

கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் –

தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .



மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :

என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ;

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி !

மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று
மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் !

இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்றால் மிகை ஆகாது.

இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.

இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து
கொண்டிருக்கின்றன இன்றளவும் !

தி எவர் ஹிட் சாங் !!

தி எவர் ஹிட் சாங் !!


(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.....
வஞ்சகன் கண்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.

இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன்
கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.

இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி
பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)

15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை
ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை
பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “

என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை
நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி

படித்து மகிழ்ந்தது: கேட்டு மகிழ்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Thursday, December 18, 2025

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை

 தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!


அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்


தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!


தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!


5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)


6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்

ஆறு பருவங்களையும்

(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!


12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்


இந்த 1, 5, 6, 12 க்குறிய  மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்


அதேபோல் 2ம் எண் 

இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)


3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்


4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்


எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்.

Thursday, December 11, 2025

சொர்க்கம் யாருக்கு?

 


சொர்க்கம் யாருக்கு?

https://youtube.com/shorts/Ya8O5e3Q6zI?si=_0Jqxb9gbdim8aVb

Wednesday, December 10, 2025

 *நீங்களும் உங்கள் லக்னமும்* 


கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் வெயில் கொடுமையில் வியர்த்து விறுவிறுத்து நின்று கொண்டிருந்தார்கள் 

வெயிலுக்கு இதமாக வரிசை அருகே கம்பி வேலிக்கு அருகே குளிர்பானம் தர்பூசனி துண்டு பழரசம் குளிர்பானம் என பல வியாபிரிகள் தங்கள் தொழிலில் மும்முரமாக இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து உழைத்து கொண்டிருந்தனர்


தூரத்தில் ஒலி பெருக்கியில்

*வரிசையில் வாருங்கள் யாரிடமும் தரிசனத்திற்காக பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்  காணிக்கையை கோவில் உண்டியலில் மட்டுமே செலுத்துங்கள் ....*

என்று பலமுறை இதையே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்


வாட்டசாட்டமான இருவர் மற்றும் அவருடன் இரண்டு பெண்களும் அனைவரையும் தள்ளிக்கொண்டு சென்றார்கள்   ஒரு பக்தரின் காலை மிதித்து   இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலேயே கொன்றுவிடுவதை போல் பார்த்து கொண்டிருந்தார்கள்


இங்க எதுக்கு வீன் விஷயங்களை பார்ப்பது கேட்பது என என்னுடன் வந்த என் ஜோதிட ஆசிரியர் இப்படி விளக்கினார்


எல்லா இடத்திலும் ஜோதிடம் உள்ளது நல்லா கவணிச்சிக்க தம்பி



ஒவ்வொருவர் ரியாக்ஷனையும் உத்து பாருப்பா எல்லோரும் ஒரே மாதிரி நடந்துக்க மாட்டாங்க


மிதித்தவனை பார்த்து 

*தம்பி வரிசையில் வாங்க பின்னாடி போங்க என்று சிம்ம கர்ஜனை செய்தாரே அவருக்கு லக்னத்தில் சூரியன் இருக்கும்*


*யோவ் அறிவில்லை குழந்தைகள் இருப்பது கண்ணில் தெரியல என கை ஓங்கினாரே அவர் லக்னத்தில் செவ்வாய் இருக்கும்*


*தம்பி பார்த்துபோப்பா வயசானவங்க இருக்காங்க இல்ல என வாஞ்சையாக பேசினாங்களே அவருக்கு லக்னத்தில் சந்திரன் இருக்கும்*

*யோவ் என்ன கொழுப்பா என கேட்டுவிட்டு மிதித்தவன் முறைத்ததும் அண்ணே உங்களை இல்ல இங்க பேசறேன் என சமாளித்தாரே அவருக்கு லக்னத்தில் புதன் இருக்கும்*

*போகட்டும் விடுங்கப்பா அவருக்கு என்ன அவசரமோ என்றாரே அவருக்கு லக்னத்தில் குரு இருக்கும்*

*இந்த அமளி துமளியிலும் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலை சீவிக்கொண்டு முன்னால் நின்ற பெண்ணை பார்த்துக்கொண்டே ஸ்டைலாக  நிக்கறாரே அவர் லக்னத்தில் சுக்கிரன் இருக்கும்*

*எங்க வந்தாலும் இவிங்க  தொந்தரவூ தாங்கலையே என மிக மெல்லிய குரலில் தனக்கு தானே பேசி நொந்து கொள்கிறாரே அவருக்கு லக்னத்தில் சனி இருக்கும்*

*டேய் யார்டா அது நாங்கள்ளாம் மனுஷனில்லையா எல்லாரும் சேர்ந்து தள்ளுங்க அவனை என  கூட்டம் சேக்கிறாரே அவர் லக்னத்தில் ராகு இருக்கும்*

*சரி விடுங்கப்பா என்னத்த கேட்டு என்னத்த செய்றது நம்ம நேரம் சரியில்லை என வேதாந்தம் பேசறாரே அவருக்கு லக்னத்தில் கேது இருக்கும்*

எனக்கு நிதானமாக எதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இரூந்தது நிதானமா யோசிக்கனும் என நினைத்து புன்னகைத்தேன்

நல்ல சுவாரசியமான விதத்தில் சொன்ன நம்ம ஜோதிட ஆசிரியருடன் கோவிலுக்கு வந்தது எவ்வளவு நல்லதாக போயிற்று என மனதில் சந்தோஷம்  


சிறுகதை ஆக்கம்

சுந்தர் சித்தூர் 🙏

தங்க நகைகள் வாங்க உகந்த நாள்

 



Monday, December 8, 2025

நீங்கள் ஜோதிடம் படிப்பவரா? அல்லது ஜோதிட ஆய்வாளரா!

 


நீங்கள் ஜோதிடம் படிப்பவரா? அல்லது ஜோதிட ஆய்வாளரா!


https://youtube.com/shorts/0Emz7cDSjaQ?si=EZkZ3cV8z9vjIx6H